“கமான்.. கமான்… ஜெஸ்ட் ஒன் மோர்.. கமான்..”
சன்னமான முணுமுணுப்போடு கையில் வைத்திருந்த ‘பா’ வடிவ கேம்பேட் மூலம் திரையில் தெரிந்த ஹெலிகாப்டரை மிக ஜாக்கிரதையாய் இயக்கி கொண்டிருந்த ஜென்சியின் வயது பதினைந்து..!!
கொடுக்கப்பட்ட நிமிடங்களுக்குள் வெளியே வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகுண்டுகளையும் ஒவ்வொன்றாய் ஹெலிக்காப்டர் மூலம் அடுக்கு மாடிகட்டிடத்தின் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே அந்த மிஷன்..!!
குறுகலான அறையில் வரிசையாய் ப்ளேஸ்டேஷன் இணைக்கப்பட்ட கணினிகளை நான்கு தடுப்புகளாக பிரித்து சிறிதாய் அமைக்கப்பட்டு இருந்த கேம் செண்டரில் இறுதியாய் இருந்த தடுப்பில் தான் ஜென்சியும் அவள் அருகில் அரும்பு மீசையில் விடலை பருவ ஜோவும் அமர்ந்திருந்தனர்.
மூன்றாம் கையாக அனைவருக்கும் ஸ்மார்ட் ஃபோன் முளைக்காத காலத்தில் இது போன்ற கேம் செண்டர்கள் பதின்வயது பிள்ளைகள் இடையில் மிகவும் பிரசித்தம்..!!
அங்கு விளையாட வந்தவர்களை காட்டிலும் உடன் வேடிக்கை பார்க்க வந்த சிறுவர்களே அதிகம்..!!
அப்படி நின்றவர்களின் கவனம் சிறிது நேரத்தில் ஜென்சியின் கணினி புறம் திரும்பியது..! ஏனெனில் அந்த மிஷனை முடிப்பது மிகவும் கடினம் என்பது தெரியும். அதில் அவள் கடைசி கட்டத்தில் இருப்பதால் ‘முடித்துவிடுவாளா..’ என்ற ஆர்வத்தில் அவளை சூழ்ந்திருக்க அதை அவள் கவனிக்கவே இல்லை.
பத்து நொடி மீதம் இருக்க கடைசி வெடியையும் பொறுத்திவிட்டு அவள் வெளியேறிய நொடி அந்த கட்டிடம் தரைமட்டமாகி ‘மிஷன் கம்ப்ளீடட்..’ என்று திரையில் மின்னியது.
அதனை கண்டதும் பெரிதாய் புன்னகைத்தவள்,
“யெஸ்..” என்று துள்ளாய் சொன்னபடி ஜோவிடம் ‘ஹைஃபை..’ கொடுக்க திருப்பியபோது தான் மற்றவர்களை கவனித்து ‘ஙெ..’ என்று அவள் விழிப்பதை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்திருந்தான் ஜோ.
“இந்த பொண்ணு நெஜமாவே கம்ப்ளீட் பண்ணிட்டா டா..”
“ஹே.. உனக்கு இதை ஜெய்க்க எதாவது ச்சீட் தெரியுமா.. எப்படி முடிச்ச..”
“நீ ஏற்கெனவே விளையாடி இருக்கியா.. இந்த அண்ணா சொல்லி கொடுத்தாங்களா..”
என அவர்கள் கேள்வியால் அவளை மொய்க்க தொடங்கவும் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் நெளிந்தவள் ‘காப்பாத்துடா யப்பா..’ என்று ஜோவை பார்த்தாள்.
அவள் நிலை உணர்ந்து,
“ஜென்சி.. வா.. வா.. டைம் முடிஞ்சுது.. கிளம்பலாம்..” என்று அவசரப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்ததும் வாய்விட்டு சிரித்தான்.
“ஹாஹா.. எங்க.. உள்ள முழிச்சியே.. ஒரு திருட்டு முழி.. அதே மாதிரி மறுபடியும் பார்றேன்.. இட்ஸ் ஸோ ஃபனி..”
என்று கூறி சிரித்தவன் தோளில் விளையாட்டாய் ஒன்று வைத்த ஜென்சியின் முகத்திலும் புன்னகையே..!!
ஆகாய நீலநிற லாங் ஸ்கர்ட்டில் அவளின் சுருள் முடி இருதோளிலும் சுருண்டு விழுக கழுத்தில் குறுக்களாய் மாட்டி இடைப்பக்கம் தொங்க விட்டிருந்த பேக்கின் வாரினை பிடித்துக் கொண்டு துள்ளலோடு ஜென்சியும்..
வெள்ளை டீஷர்ட்டின் மேல அணிந்திருந்த சிவப்பு நிற ஜெர்க்கினின் பாக்கெட்களில் கைவிட்டு அவளுக்கு ஈடாய் ஜோவும் அந்த கடைவீதியில் இறங்கி நடந்தனர்.
“கிண்டலா இருக்கா உனக்கு.. திடீர்னு அத்தனை பேர் சுத்தி நிக்கிறதை பார்த்து ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு.. நீ எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்க..”
“நீ ஜாலியா விளையாடுற.. எனக்கு டைம் பாஸ்ஸாக வேண்டாம்.. சரி.. எப்ப தான் நீயும் கவனிக்கிறன்னு பார்த்திருந்தேன்.. ஆனால் கடைசியா முடிச்சதும் தான் திரும்புற.. அப்படியே ஸ்க்ரீனை தாண்டி உள்ள போயிடுவியோ..”
என கேலியாய் சொன்னாலும் அதில் சிறு கண்டிப்பும் இருந்தது. அதை உணர்ந்து,
“இல்ல ஜோ.. அங்க எப்பவும் ஒரே கூச்சலா தான இருக்கும்.. அதான் கவனிக்கல.. இப்பவாவது தேவலாம்.. தனியா வந்தால் இன்னும் நொய் நொய்னு பேசிட்டே இருப்பானுங்க.. இரிட்டேட் ஆகும்.. அதான் நீ வந்தா மட்டும் உன்னையும் அழைச்சுட்டு வரது..” என்று அவள் சொல்லவும்,
“அடிப்பாவி.. அப்போ இதனை நாளா என்னை பாடிகார்ட் மாதிரி தான் வைச்சு இருந்தியா.. இது தெரியாம ஏமாந்திருக்கேன்..” என்று முறைக்க,
“ச்சே.. ச்சே.. நா எப்போ அப்படி சொன்னேன்.. எனக்குன்னு இருக்க ஒரே ஒரு ஃப்ரெண்ட் நீ தான்.. அதுவும் நீ எப்போவாவது தான் வருவ.. ஆனா அந்த ஒருநாள் தான் நான் உண்மையாவே ரொம்ப என்ஜாய் பண்ணுவேன்.. மத்த நாள் எல்லாம் ஒரே ஃப்ளைன் ஷீட் மாறி தான்..”
என்று சீரியஸாய் விளக்கம் கொடுத்தவளை கண்டு அவன் உள்ளம் கனிந்தது.
பக்கவாட்டில் திருப்பிய அவள் முகம் பார்த்து,
“ஹே.. லூசு… விளையாட்டுக்கு சொன்னா..அதுக்கு போய் சீரியஸா பேசுற..” மென்மையாய் கூறியவன்,
“அதென்ன ஒரே ஒரு ஃப்ரெண்ட்.. உன் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் உன்னுட்ட பேச மாட்டாங்களா.. அவங்களும் ஃப்ரெண்ட்ஸ் தான..” என்று வினவினான்.
“பேசுவாங்க தான் பா.. ஆனால் ‘என்ன..’நு கேட்டா என்ன..’ அவ்வளவு தான்.. ரொம்ப எல்லாம் யாரும் ஃப்ரெண்ட் கிடையாது..”
“அது ஏன் அப்படி..?? மும்பை வந்ததில் இருந்து இதே ஸ்கூல தான படிக்கிற..”
“ஆமா.. அதான் சொல்றேனே எல்லாருக்கும் என்னை தெரியும்.. பேசுவோம்.. ஆனா தேவைனா மட்டும் தான்.. அது என்னவோ நான் சாதாரணமா பார்த்தாலே முறைக்கிறா மாதிரி இருக்கும்போல என்னுட்ட பேசவே தயங்குவாங்க.. நானா போய் பேசலாம்னு பார்த்தால் எனக்கு ரெண்டு வார்த்தைக்கு மேல என்ன பேசுறது தெரியாம அக்வோர்டா இருக்கும்… ஸோ இதுவே பெட்டர்னு இருந்துட்டேன்…”
என்று சொன்னவளை ‘இதெல்லாம் ஒரு ரீசனா..’ என்பது போல் அவன் பார்த்து வைக்க,
“யூ ஸீ.. பீயிங் அன் இன்ரோவர்ட்… மத்த மனுஷங்களுட்ட தானா பேசி ஃப்ரெண்ட்ஸிப் ஏற்படுத்திக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல..”
என்று தோள் குலுக்கி இது தான் யதார்த்தம் என்பது போல் அவள் பேசவும்,
“அப்படியா.. அப்போ என் ட்வீட்டி மாதிரி ஒன்னு வாங்கி தரேன்.. அதை ஃப்ரெண்ட்டா வைச்சுகிறியா..” என்றான் நக்கலாய். ட்வீட்டி என்பது அவன் வளர்த்த காக்கடூ கிளியின் பெயர்..!
“அய்யோ வேண்டவே வேண்டாம்.. உன் ட்வீட்டியை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..?? உன் தோள்ல உட்கார்ந்துகிட்டு அது கொஞ்சி கொஞ்சி அழகா பேசுறது இன்னமும் நியாபகம் இருக்கு.. ஆனா அது இறந்துடுச்சுனு நீ சொன்னப்ப தாங்கவே முடில.. எவ்வளவு ஃபீல் பண்ணேன் தெரியுமா..! அதே மாதிரி நான் ஒன்னு வளர்த்து அதுவும் இறந்துபோச்சுனா என்னால சுத்தமா அக்செப்ட் பண்ணிக்க முடியாது..”
“எங்க தாத்தா அடிக்கடி சொல்வாங்க.. ‘எவ்ரி லைஃவ்ஸ் வில் டேஸ்ட் த டெத்..’நு.. அது மாதிரி அவங்கவங்க லைஃப் டைம் முடியும் போது போய் தான் ஆவணும்..”
என்று அவன் சொன்னாலும் ட்வீட்டியை பற்றி பேசியதால் அதன் நினைவில் அவள் வருந்துவது முகத்தில் தெரிந்தது.
“ட்வீட்டி போகும்முன்னாடி என்ன சொன்னுச்சு தெரியுமா.. நான் போனாலும் என்னோட இடத்துல ஜென்சி இருப்பா.. டோண்ட் வொரினு தான் சொல்லிட்டு போச்சு..”
அவளை திசை திருப்பும் பொருட்டு விளையாட்டாய் மிகைப்படுத்தி அவன் பேசி அதில் வெற்றியும் கண்டான். லேசாய் புன்னகைத்து,
“ஆஹான்.. நல்லா சொல்லுமே..” என்றவள்
“ஆனால் நான் ட்வீட்டி கிடையாது.. ட்வீட்டி பாவம்.. இன்னோசெண்ட்..!! அது மாதிரி அப்பாவியா உன்னையே சுத்தி வந்து நீ என்ன சொன்னாலும் கேட்டு திருப்பி அதையே சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. அஞ்சறிவு ஜீவனா மாறினாலும் அதுல சுப்பிரீயர் எதுவுவோ அதுவா இருந்து உனக்கே டஃப் தான் கொடுப்பேன்..”
என்று கண்சிமிட்டி குறும்பாய் சொன்னதில் சிரிப்போடு தலையசைத்து கொண்டான் ஜோ..
“சரிங்க.. மிஸ்.சுப்பிரியர்…!! இப்ப எனக்கு பசிக்குது.. எதாவது சாப்பிடலாமா..”
என்று கிண்டலாய் கேட்க அங்கே சாலையோரத்தில் இருந்த துரித உணவு கடைகளில் ஒன்றில் சென்று நின்றனர்.
தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிட தொடங்கிய சில நிமிடங்கள் சென்று,
“ஜென்சி.. உன்னுட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. அதுக்கு தான் முக்கியமா இங்க வந்தேன்..”
உண்டப்படி அவன் பேச்சை ஆரம்பிக்க, “என்ன.. சொல்லு ஜோ..” என்றாள் அவளும் சாதாரணமாய்..!!
“நான் அப்ராட் போறேன்.. இன்னும் ஒன் வீக்ல.. ஸ்டெடிஸ் காக..”
என்று அவன் சொன்னதும் அடுத்தவாய் உண்ண எடுத்த ஸ்பூன் அப்படியே நிற்க புரியாமல் அவனை பார்த்தவள்,
“நீ இப்பவும் காலேஜ் தானே படிக்கிற..”
என்று குழப்பமாய் கேட்டாள். ஏனோ அவன் ஒரு வாரத்தில் போய்விடுவேன் என்று சொன்னதும் தொண்டை அடைத்ததுபோல் இருந்தது.
அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்து,
“நான் இப்ப சேர போற யூனில ஸீட் கிடைக்கிறது கஷ்டம் ஜென்சி.. ஸோ அப்ளை பண்ணி இருந்தேன்.. அது கிடைக்குமா கிடைக்காதா தெரியல.. அதனால ஆப்ஷ்னலா இங்க இருக்க காலேஜ்லயும் சேர்ந்திருந்தேன்.. பை காட்ஸ் க்ரேஸ் எனக்கு ஸீட் கிடைச்சுடுச்சு.. ஸோ போறேன்..”
என்று விளக்கம் சொன்னவனுக்கு அவளிடம் முன்பே இதை பற்றி சொல்லவில்லை என்ற தயக்கமோ,அவள் கேட்டால் தன்னை பிரிய வருத்தப்படுவாளோ என்ற சங்கடமோ எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமாகவே கூற அதை மெல்ல உள்வாங்கிய ஜென்சிக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“ஹோ..” என்றவள் சற்று நேரம் கழித்து,
“எப்போ வருவ ஜோ..” என்று கேட்க
“ம்ம்ம்.. அது ஷுயரா சொல்ல முடியாது.. ஆகலாம் ஒரு நாலு அஞ்சு வருஷம்..”
என்று தோள் குலுக்களோடு ஜோ சொல்ல அதன்பின் அவள் எதுவுமே பேசவில்லை. சாப்பிட்டபின் தட்டை வைத்துவிட்டு பணம் கொடுத்து அங்கிருந்து கிளம்பும் வரையிலுமே அந்த அமைதி தொடரவே
“என்ன ஜென்சி.. ஏன் எதுவும் பேச மாட்டேங்கிற..” என்று ஜோ பார்க்க,
“இனி எப்போவாவது கூட வர மாட்டேல ஜோ..” என்று கேட்கவும் பதில் சொல்லமுடியாமல் முழிப்பது அவன் முறையானது.
ஆமோதிப்பாய் தலையசைத்தவன்,
“ஆனால் அதை நினைச்சு ஃபீல் பண்ணாத ஜென்சி.. படிச்சு முடிக்கிற வரை தானே.. அப்புறம் மறுபடியும் இங்க தான் வர போறேன்..” என்று சமாதானம் கூற,
“அப்போ உனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் வந்திடுவாங்க.. நீயும் ரொம்ப பெரியவன் ஆகிடுவ.. இப்ப மாதிரி பேச மாட்ட..”
என்று சோகமாய் அவள் சொல்லவும், “ஜென்சி..” அவள் கையை பற்றி கொண்டு,
“எத்தனை ஃப்ரெண்ட்ஸ் வந்தாலும் நீ எப்பவும் ஸ்பெஷல் தான்..” என்று தோழமையோடு சொல்லி அடுத்த நொடி அவன் மறைந்துவிட திகைத்தவள் சுற்றும் முற்றும் தேட எங்கும் இருளாய் இருக்கவும்,
“ஜோ..” என்று அழைப்போடு பட்டென்று எழுந்தமர முகமெல்லாம் வியர்வை பூத்திருந்தது.
சில நொடிகள் சென்றே கனவு என்றும் தான் தன் அறையில் உள்ளோம் என்பதனையும் உணர்ந்தவள் பெருமூச்சுடன் வேகமாய் துடிக்கும் நெஞ்சை நீவிக் கொடுத்து தன்னை சமன்படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் ஆனது.
கட்டிலில் இருந்தே கைநீட்டி டேபிளில் இருந்த அலைபேசியை எடுத்து பார்க்க அது நேரம் காலை 4 மணி என்று காட்டவும் மீண்டும் படுத்து உறங்க முற்பட்டாள். ஆனால் தூக்கம் தான் வரவில்லை.
எனவே சலிப்பாய் அமர்ந்த ஜென்சி முகத்தில் விழுந்த முடிகளை ஒத்துக்கி எழுந்து குளியலறை சென்று வந்தவள் வெளியே செல்ல தோன்றாமல் ஜன்னல் திரைசீலையை விளக்கி மும்பை மாநகரத்தில் அதிகாலை தோற்றத்தில் கண் பதித்து நின்றாள். மூளையோ,
“ம்ச்.. இந்த ஜோஷ்வா.. லவ் ஸ்டோரி சொல்லு.. லவ் ஸ்டோரி சொல்லுனு சொல்லி டார்ச்சர் பண்ணதுல இப்ப எல்லாம் அடிக்கடி பழைய நியாபகம் வருது.. அவன் என்ன பண்ணுவான்.. நேத்து ஜோ கால் பண்ணான் தானே.. அதனால கூட இந்த கனவு வந்திருக்கலாம்..” என அதன்போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தது.
அன்று மருந்துவமனை சந்திப்பிற்கு பின் ஒரு மாதம் ஓடியிருந்தது. அவன் காத்திருப்பேன் என்று சொன்னதையும் மீறி அங்கே போக கூடாது என்று பிடிவாதமாய் எண்ணியவள் அதனை கடையும் பிடித்தாள்.
“தான் கேட்டதும் சரி அவன் கேட்டதும் சரி இருவரின் மிகவும் தனிபட்ட விஷயம்.. அவனிடம் கேட்டபோது தோன்றவில்லை. பதிலுக்கு அவன் கேட்டபோது தான் ‘தன் பர்ஸ்னெல் விஷயத்தில் இவன் எதுக்கு நுழையுறான்..’ என்று கோபம் வர அதே தானே ‘நீயும் கேட்டாய்’ என மனசாட்சி இடித்ததில் தான் அது புலப்பட்டது.
அவற்றை பகிர்ந்துக் கொள்ளும் அளவு இருவருக்கும் இடையில் அடிப்படை நட்பு கூட இல்லையே என்று எண்ணியவளாய் இந்த பெயரற்ற உறவு தொடர கூடாது என்பதால் போக கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.
இந்த ஒரு மாதத்தில் தன் வேலையிலும் தங்கையின் உடல்நலம் பேணுவதிலும் மிகவும் பிஸியாக இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் ‘ஜோஷ்வாவை பார்க்க சென்று இருக்க வேண்டுமோ..’ என்ற முள் குத்திக் கொண்டே தான் இருந்தது.
அவன் ‘உடைஞ்ச கையோடும் காலோடும்..காத்திருப்பேன்..’ என்று சொன்னபோது அலட்சியமாய் சென்றவளுக்கு அந்த வரிகள் தன் எண்ணத்தில் ஆழமாய் ஒட்டிக் கொண்டதை உணரவே இல்லை.
லிசாவிற்கு மீண்டும் செக்கப் செய்ய சென்றபோது அவன் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான் என்று தகவல் மட்டும் கிடைக்க, ‘தன்னை பற்றி எண்ண நினைத்திருப்பான்..’ என்றும் தேவி
ஆனட்டி அவன் தனியா கஷ்டப்படுறத நினைச்சு எவ்வளவு
வருத்தப்பட்டாங்க.. அவங்களுக்காக ஆச்சும் ஒரு தடவ போயிருக்கலாம்..” என்றும் நெருடலாய் இருந்தது.
இப்படியே நாட்கள் ஓடியிருக்க நேற்று மாலை நேரத்தில் அழைத்த ஜோசஃப்,
“ஜென்சி.. உன்னுட்ட முக்கியமான சில விஷயம் பேசணும்.. நாளைக்கு மீட் பண்ண முடியுமா..?”
என்று தீடீரென கேட்கவும், “நாளைக்கா..?” என்று இழுத்தாள். அலுவலக வேலைகள் அவளை பின்னி இருப்பதால் திடீரென விடுப்பு எடுக்கமுடியாத நிலையில் இருந்தாலே தயங்கினாள்.
“ஆமா ஜென்சி.. பேசியே ஆகணும்.. ப்ளீஸ்..”
என தவிப்பாய் அவன் சொன்னபோது ஏனோ ‘அந்த விஷயம்..’ ஜோஷ்வா பற்றியதாக தான் இருக்கும் என்று உறுதியாய் தோன்றியது.
‘மறுபடியும் எதாவது ஜோஷூக்கு ஆபத்தோ.. இல்லை ஏற்கெனவே எதாவது நிகழ்ந்துவிட்டதா..’ என்று கற்பனை கட்டிய மனம் ஜோவுக்கும் தனக்கும் இடையில் பேச முக்கியமான விஷயம் ‘ஜோஷ்வாவை’ தவிர வேறு இல்லை என்ற கருத்திற்கு எப்பொழுதில் தொடங்கி மாறியது என்பது அவளே அறிந்திருக்கவில்லை.
“எங்க வரணும் ஜோ…” என்று கேட்டு தன் சம்மதத்தை கூற, “தேங்கஸ் ஜென்சி..வீட்டுக்கு வர முடியுமா..?? அது தான் சரியா இருக்கும்..”
என்று அவன் சொல்லவும் அதனை ஏற்றுக் கொண்டு அழைப்பை வைத்தவள் தற்போது மீண்டும் அந்த உரையாடலை நினைத்து பார்த்தாள்.
கனவும் நினைவும் என இரட்டையர்களை பற்றி சிந்தித்தபடி எவ்வளவு நேரம் நின்றாளோ அதிகாலையில் பனிபோர்வையோடு காட்சியளித்த சூழல்மாறி வெயில் ஏறத்தொடங்கிய பின்பே சுதாரித்து அங்கிருந்து நகர்ந்தாள்.
காலை பத்து மணி போல கிளம்பி மேத்தியூ பேலஸை அடைந்தவளை முதலில் வரவேற்றது அனீ தான்.
அவளோடு அவ்வளவாய் பரீச்சயம் இல்லாததால் ஜென்சி பேச தயங்க ஆனால் அனீக்கோ அப்படி எதுவும் இல்லை போலும்..!! மிகவும் இயல்பாய் பேசினாள்.
“எங்க கல்யாண டைம்ல உங்களுட்ட பேசவே முடில.. இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு சொன்னதில் இருந்து ஜோசஃபை விட நான் தான் ரொம்ப எக்சைட்டா இருந்தேன்..”
“அப்படியா..??”
என்று ஜென்சி ஆச்சரியமாய் கேட்க,
“ஆமா.. என் ஹஸ்பெண்ட் ரொம்ப புகழுற அந்த பொண்ணை பார்க்க தோணும் தானே..”
என்று கண்சிமிட்டி சொன்னவள் பேச்சில் எந்த உள்ளர்த்தமும் இல்லை.
அதை உணர்ந்து சிரித்தவள், “அது வஞ்சபுகழ்ச்சியா இல்லாத வரை சந்தோஷம்..”
என்று சொல்ல என ஜோசஃப் வரும்முன் இருவருக்கும் வா.. போ என்று பேசுமளவு வந்திருந்தனர்.
“அதுசரி.. அதுக்குள்ள ஃப்ரெண்ட் ஆகியாச்சா..”
“ஆமா.. நீங்க வந்து இன்ரோடியூஸ் பண்ணுவீங்கன்னு வெய்ட் பண்ணுவோமா.. ஆனால் நீங்க சொன்னா மாதிரி இல்லையே.. ஜென்சி ரொம்ப நல்ல டைப்பா தெரியுறாங்க..”
என்று குறும்பாய் அனீ சொல்ல, “என்ன ஜோ.. இப்படி எல்லாம் சொல்லி வைச்சு இருக்க..”
என்று அவளை ஒற்றி ஜென்சியும் பேச,
“சத்தியமா நான் ஒன்னும் சொல்ல ஜென்சி.. இவ வாலு… வேணும்னு எதாவது போட்டு கொடுத்து இருப்பா..”
என்று சொன்னவன் மனைவி புறம் திரும்பி செல்லமாய் முறைப்பதும் பதிலுக்கு கண்சிமிட்டி அவள் சமாளிப்பதும் பார்த்திருந்தவளுக்கு புன்னகை அரும்பியது.
“அழகான ஜோடி இவர்கள்..” என்று எண்ணியவளிடம் துளியும் பொறாமை இல்லை.. ஆனாலும் ஏதோ ஒரு மூலையில் துளி ஏக்கம் இருந்ததோ..!!
“அனீ ஒன்னும் சொல்லல.. நீ பாடிய புகழ் பாட்ட தான் சொன்னாங்க..” என்று புன்னகையாய் சொன்னவள்,
“ஆனால் உனக்கு தெரியுமா அனீ… ஸ்டேஸ் போய் படிச்சுட்டு வந்ததும் ஏதோ இங்லேண்ட் ராஜா மாதிரி ரொம்ப ஸீன் போட்டான்..!! என் பழைய நண்பன் அங்கேயே காணா போயிட்டானோன்னு சந்தேகமே வந்திடுச்சு.. அப்புறம் போக போக தான் மறுபடியும் பேச ஆரம்பிச்சான்..”
என்று ஜென்சி சொன்னதை கேட்டு அவன் அசடு வழிய என சில நிமிடங்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க பின்,
“நீங்க பேசிட்டு இருங்க.. நான் வரேன்..”
என்று கூறி அனீ எழுந்து சென்றதும் சின்ன மௌனத்திற்கு பின்,
“என்ன விஷயமா வர சொன்ன ஜோ..”
என்று கேட்க அவன் முகம் சட்டென்று சற்று சீரியஸானது.
“இங்க வேணாம்.. என் ஆஃபிஸ் ரூம்ல போய் பேசலாம்.. வா..”
என்று சொல்லி அவன் எழுந்துக்கொள்ள,
“அனீ வரேன்னு..” என்று அவள் இழுக்கவும்,
“அவளுக்கு தெரியும்.. வா..”
என்று சொல்ல என்னவென்று யோசனையோடே அவனோடு சென்றாள்.