“நானே ஓட ஓட விரட்டுவேன். நான் அவனை, மூணு வருசமா லவ் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? எத்தனை தடவை அவன் கிட்ட சொல்லிட்டேன் தெரியுமா? அவன் தான் எங்க அம்மா சொல்ற பொண்ணு தான் கல்யாணம் செஞ்சிப்பேனு சொல்லிட்டான்”
“ஓஹோ, நீ தான் அந்த அர்ச்சனாவா?”
“என்னை உனக்கு தெரியுமா? ஆதி உன்கிட்ட என்னை பத்தி சொல்லிருக்கானா? என்னை பத்தி உனக்கு எப்படி தெரியும்?”, என்று கண்களில் ஒரு வித மின்னலுடன் கேட்டாள் அர்ச்சனா.
“அதுவா நேத்து சீனி அண்ணா வீட்டுக்கு வந்தப்ப சொல்லுச்சு. அந்த லூசு அர்ச்சனா வந்து என்கிட்ட ஓ ன்னு அழுதானு. அதுக்கு மாமா அந்த அரை கிறுக்கை பத்தி எதுக்கு பேசுற? சரியான மெண்டல். விடு டா ன்னு சொன்னாங்க. அப்ப தான் தெரியும். ஆனா, நீ தான் அந்த அரை கிறுக்குனு, இப்ப தான் தெரியும்”, என்று சிரித்தாள் பஞ்சு.
அதில் அர்ச்சனா முகம் கருத்தது.
“உன்னை பத்தி, எங்க அத்தையும் சொல்லிருக்காங்க. ஆதி கூட ஒரு மேனா மினுக்கி சுத்திட்டு இருந்தா. அவளை ஆதி திரும்பி கூட பாக்க மாட்டான்னு. அந்த மேனா மினுக்கியும் நீ தானா?”, என்று சிரித்தாள் பஞ்சு.
“நீ ரொம்ப பேசுற? என்கிட்ட வச்சிக்காத. அடையாளம் தெரியாம அழிச்சிருவேன். நீ எப்படி டி அவன் கூட வாழலாம். அவன் யாரு நீ யாரு? உங்க ரெண்டு பேருக்கும், ஒரு சதவீதம் கூட ஒத்து வராது. அவனும் அவங்க அம்மாக்காக உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும், அவனுக்கு உன்னை எல்லாம் பிடிக்கவே செய்யாது”, என்று ஆணித்தரமாக சொன்னாள் அர்ச்சனா.
“ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?”, என்ற எண்ணம் பஞ்சுவின் மனதில் விதைக்க பட்டது. ஆனாலும் முகத்தை மாற்றாமல், “இப்ப சொன்னதை எல்லாம் நான் என் மாமா கிட்ட சொல்றேன். அவங்க முடிவு எடுக்கட்டும். அவங்க கிட்டயே கேப்போம் என்னை பிடிச்சிருக்கா? பிடிக்கலையான்னு?”, என்றாள்.
“என்ன விளையாடுறியா? இதை எல்லாம் எதுக்கு அவன் கிட்ட சொல்ல போற?”
“பின்ன சொல்லாம இருப்பேன்னு நினைச்சியா? சொன்னா தானே, உன்னை பத்தி தெரியும். ஏற்கனவே அரை கிறுக்குன்னு சொன்ன மாமா, அப்ப தான முழு கிறுக்குன்னு சொல்லுவாங்க. சொல்லாம இருக்குறதுக்கு நீ என்கிட்ட வாயை கொடுக்காம, மூடிட்டு இருந்துருக்கணும்”, என்று சொன்ன பஞ்சு அவனை தேடினாள்.
அவன், அவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.
“தேவை இல்லாமல் இவ கிட்ட வாய் கொடுத்துட்டோமோ? இப்ப நான் பேசினதை அவன் கிட்ட போட்டு கொடுத்துருவாளோ?”, என்று பயந்து போனாள் அர்ச்சனா.
இவர்களின் அருகில் வந்தவன் “என்ன ரெண்டு பேரும் மும்மரமா பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டான் ஆதி.
“அது அது…”, என்று இழுத்தாள் அர்ச்சனா.
“அது ஒன்னும் இல்லை மாமா. புது ஊர் பிடிச்சிருக்கானு உங்க பிரண்ட் கேட்டாங்க”, என்று சொல்லி விட்டு “எனக்கு மயக்கமா வருது மாமா”, என்று சொல்லி விழுவது போல நடித்தாள் பஞ்சு.
அவளை தாங்கி பிடித்த ஆதி, “ச்ச நீ அப்பவே முடியலைன்னு சொன்ன வர்ணா. நான் தான் பேசிட்டு இருந்ததில், நேரத்தை கடத்திட்டேன். மன்னிச்சிரு மா. வா இப்ப வீட்டுக்கு போயிரலாம்”, என்று சொல்லி விட்டு “வரோம் அர்ச்சனா. வா வர்ணா “, என்று கை தாங்களாக அழைத்து சென்று காருக்குள், அவளை அமர வைத்தான்.
அர்ச்சனாவுக்கு நன்றாக தெரியும். வர்ணா நடிக்கிறாள் என்று. “இவ்வளவு நேரம் என்கிட்ட பேச்சுக்கு பேச்சு சண்டை போட்டுட்டு இருந்தவ, இப்ப இப்படி எதுக்கு நடிக்கிறா?”, என்று புரியாமல் வெளியே நின்று காருக்குள், அவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து கொண்டிருந்தாள்.
கார் ஸ்டார்ட் பண்ணுவதில் கவனமாக இருந்தான் ஆதி. அவனை ஓர கண்ணால் பார்த்த பஞ்சு, இவர்களையே பார்த்து கொண்டிருந்த அர்ச்சனாவை பார்த்து “என் மாமாவையா, நீ விட்டுட்டு போகணும்னு சொல்ற? இப்ப இதை பார்த்து வயிறு எரி”, என்று நினைத்து கொண்டு, குனிந்திருந்த அவனை எழுப்பினாள்.
“என்ன வர்ணா? ரொம்ப முடியலையா? இப்ப போயிரலாம் சரியா?”, என்றான் ஆதி.
“அது இல்ல மாமா”, என்று சொன்னவள் அவன் கன்னத்தில், தன்னுடைய உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
அதிர்ச்சியில் சிலையாக இருந்தான் ஆதி.
பொறாமையில் பொங்கி கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவளை ஒரு பார்வை பார்த்த பஞ்சு, தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த ஆதியை பார்த்து “சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் மாமா”, என்று வெட்க பட்டு கொண்டே சொன்னாள்.
“ஆதி, முத்தம் கொடுக்குறா டா. சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு சொல்றா. இன்னைக்கு செம விருந்து போல”, என்று சந்தோசத்துடன் நினைத்து கொண்டு, “ம்ம் ம்ம் சீக்கிரம் போகலாமே”, என்று சொல்லி சிரித்து கொண்டே காரை கிளப்பினான்.
“ஒரு நிமிஷம் மாமா”, என்றாள் பஞ்சு.
“என்ன குட்டி?”, என்று பாசமாக கேட்டான் ஆதி.
“என்னது குட்டியா?”, என்று நினைத்தவள் அவனை எதுவோ ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்து விட்டு, “நீங்க எனக்கு வாங்கி தந்த மணி பர்ஸ் கீழ போட்டுட்டேன் மாமா. அதோ அங்க பாருங்க”, என்று அர்ச்சனா அருகில் கை காட்டினாள்.
“ஐயோ, நம்மளை பத்தி தான் எதுவோ சொல்றாளோ?”, என்று பயந்து போனாள் அர்ச்சனா.
“சரி, நான் போய் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு இறங்க போனான் ஆதி.
அவனை தடுத்தவள், “நீங்க எங்க போறீங்க? அதோ உங்க பிரண்ட் நிக்காங்களே. அவங்களை எடுத்து தர சொல்லுங்க”, என்றாள்.
“அதுவும் சரிதான். அர்ச்சனா அந்த பர்ஸ் கொஞ்சம் எடுத்து தாயேன்”
“கடைசியில் என்னை வேலைக்காரியா ஆக்கிட்டாளே”, என்று நினைத்து கொண்டு எடுத்து கொடுத்தாள் அர்ச்சனா.
ஒரு வழியாக, கார் அவர்கள் வீட்டு காம்ப்பவுண்டுக்குள் நுழைந்தது.
சந்தோசத்துடன் வீட்டுக்குள் சென்றான் ஆதி. ஒரு டாக்டராக எல்லாமே தெரிந்திருந்தாலும், அவனுடைய வாழ்க்கையின் முதல் அனுபவ பாடம் இது. கொஞ்சம் பதட்டமாக இருந்தது. தன்னையே நினைத்து சிரித்து கொண்டான்.
அவளை திரும்பி பார்த்தான். “எதுக்கு பார்க்கிறான்?”, என்று நினைத்து கொண்டு அவனும் அவளை பார்த்தாள்.
அவன் கண்களுக்கு, அப்படியே அழகாக தெரிந்தாள் பஞ்சு.
அவனை புரியாத பார்வை பார்த்து விட்டு, உள்ளே போனாள். வாயெல்லாம் பல்லாக பின்னே சென்றான் ஆதி.
எங்கேயாவது வெளியே போய் விட்டு வந்தால், நேரடியாக பாத்ரூம் சென்று குளித்து உடை மாற்றுபவள் இன்று நேரடியாக பெட்டில் போய், சம்மணம் போட்டு அமர்ந்தாள்.
“ஆதி, இன்னைக்கு உனக்கு செம லக்குடா. எப்படி நேரா போய் கட்டிலில் உக்காருறா? நீ தான் இன்னும் சொங்கி மாதிரி விலகி இருக்குற? சீக்கிரம் போய் வேலையை ஆரம்பி டா”, என்று தனக்குள் சொல்லி கொண்டான்.
மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து, அவளை நெருங்கினான் ஆதி.
அவனை ஒரு பார்வை பார்த்தவள், தன் தலையில் அவன் மாட்டி விட்ட கிளிப் கழட்டி தூர எறிந்தாள்.
அவள் பக்கத்தில் போன உடனே “வர்ணா”, என்று அழைத்தான்.
“என்ன மாமான்னு இப்ப குழைவா”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.
ஆனால், அவள் கேட்ட விதம் தான் மாறி இருந்தது.
அவனை பார்த்தவள் “என்ன?”, என்று கேட்டாள் அதுவும் ஆங்காரமாக!
அவள் குரலின் வித்தியாசத்தை உணர்ந்து, அவளை பார்த்தவன் திகைத்தான். அங்கே தலை முடியை விரித்து போட்டு கொண்டு, கண்களில் கொலை வெறியோடு அவனை பார்த்தாள் பஞ்சு.
“ஐயையோ என்ன ஆச்சு வர்ணா? எதுக்கு இப்படி முறைக்கிற?”, என்று அப்பாவியாய் கேட்டான் ஆதி.
“சும்மா தான், போய் அந்த கதவை சாத்திட்டு வாங்க மாமா”, என்று சொன்னாள் பஞ்சு.
“ஓ எனக்கு தான், அப்படி அவ கோபமா பாக்குற மாதிரி தெரிஞ்சிருக்கு போல? அவ ஆர்வமா தான் இருக்கா”, என்று நினைத்து கொண்டு கதவை பூட்டி விட்டு, மறுபடியும் வந்து அவள் அருகில் அமர்ந்தவன், அவள் கைகளை மெதுவாக தொட்டான்.
“அம்மா கிட்ட கல்யாணம் வேண்டாம்னு அடம் பிடிச்சது என்ன? இப்ப இவ்வளவு ஆர்வமா நெருங்குறது என்ன?”, என்று நினைத்து தனக்குள் சிரித்து கொண்டான்.
“எப்படி ஆரம்பிக்க?”, என்று நினைத்தவன் “சரி முத்தத்தில் இருந்து ஆரம்பிபோம்”, என்று நினைத்து “வர்ணா”, என்று அழைத்தான்.
“ம்ம்”
“கார்ல கொடுத்த மாதிரி ஒரு முத்தம் கொடேன்”, என்று சொல்லி விட்டு கன்னத்தை காட்டி கொண்டு நின்றான்.
மெதுவாக அவளும் நெருங்கி வந்தாள்.
“அவ இப்ப கன்னத்தில் முத்தம் கொடுப்பா. அப்புறம் உதட்டில், அப்புறம் அப்புறம் எல்லாம் ஆரம்பிச்சுரும்”, என்று நினைத்து கொண்டிருந்த ஆதி, அடுத்த நிமிடம் “ஐயோ அம்மா”, என்று அலறினான்.
ஆசையாக கன்னத்தை, முத்தத்திற்காக கொடுத்து விட்டு கண்களை மூடி காத்திருந்த ஆதி, சத்தியமாக நினைச்சு கூட பாக்க வில்லை, அவள் கடித்து வைப்பாள் என்று.
வலி உயிர் போனது. “ஏய் எதுக்கு டி, இப்படி கடிச்சு வச்ச?”, என்று கன்னத்தை தடவி கொண்டே கேட்டான் ஆதி.
கட்டிலில் இருந்து எழுந்த பஞ்சு, சேலையை இழுத்து இடுப்பில் சொறுவினாள்.
இழுத்து சொருகிய சேலையும், விரித்து போட்ட தலையுமாய் இருந்தவளை பார்த்து, கொஞ்சம் பயந்து தான் போனான். “ஒரு வேளை பேய் பிடிச்சிருக்குமோ?”, என்று நினைத்து கொண்டு அவளை தலை முதல் கால் வரை பார்த்தான்.
அப்போதும் சேலையை தூக்கி சொறுவியதால் அவள் கால்கள் அழகாக தெரிந்தது. “எப்படி கும்முனு இருக்கா? பாவி, இன்னைக்கு பாத்தா இப்படி பத்ர காளி மாதிரி நிக்கணும்?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
“இப்ப ரணகளமா ஆக போகுது, நீ கிளு கிளுப்பாவா யோசிக்கிற?”, என்று சிரித்தது விதி.
“இப்ப எதுக்கு டி சேலையை தூக்கி சொறுவிட்டு, ராட்சசி மாதிரி இருக்குற? இறக்கி விடு. ஒரு மார்க்கமா இருக்கு”, என்றான் ஆதி.
“சொறுவாமல் இருந்தா, என்னோட வேலையை ஒழுங்கா செய்ய முடியாதே”, என்று சொல்லி கொண்டே அங்கு இருந்த தலையணையை எடுத்தாள்.
“என்ன வேலை? தூங்குற வேலை தான? அதுக்கு தான டி ஆசையா வந்தேன். அதுக்குள்ள கடிச்சு வச்சு பயமுறுத்திட்ட. தலை வேற பாரு, களைச்சு போட்டு பேய் மாதிரி இருக்க. பயமா இருக்கு”, என்று பரிதாபமாக சொன்னான் ஆதி.
“தூங்கலாமே, அதுக்கு தான காத்துட்டு இருக்கேன்”, என்றவள் அந்த தலையணையை வைத்தே அவனை மொத்த ஆரம்பித்தாள்.
“ஏன் யா, இங்க நான் குத்து கல்லாட்டம் இருக்கேன். உனக்கு வெளிய ஒரு ஆளு கேக்குதோ?”, என்று கேட்டு கொண்டே அடித்து கொண்டே இருந்தாள்.
அவள் அடியை தடுத்தவன், “ஏய் நான் என்ன டி செஞ்சேன், எந்த ஆளு?”, என்று கேட்டான்.
“அந்த அர்ச்சனா பரதேசி தான். நான் இங்க மாமா மாமான்னு உன் பின்னாடியே சுத்துவேன். நீ என்னை கண்டுக்காம, அவ பின்னாடி சுத்துவியோ. அவ நல்லா இருப்பாளா?”, என்று பேசி கொண்டே அடித்தாள். ஒவ்வொரு வார்த்தைக்கும், அடியின் வேகம் கூடி கொண்டே இருந்தது.
“அர்ச்சனா இவ மனதை காய படுத்திருக்கா”, என்று புரிந்து கொண்டவன் “ஏய் வர்ணா, நிஜமாவே அவளை நான் திரும்பி கூட பாக்க மாட்டேன் டி. நம்புடி, இப்படி பஜாரி மாதிரி கத்தாதே”, என்றான்.
“முதலில் ராட்சசின்னு சொன்ன, அப்புறம் பேய் னு சொன்ன, இப்ப பஜாரினு சொல்ற. உனக்கு அவ மட்டும் தான் தேவதையா தெரியுவாளோ? இன்னும் நாலு வாங்கு”, என்று அடித்தாள்.
“ஏய் குட்டி மா, நீ தான் டி, இப்ப என் கண்ணுக்கு தேவதையா தெரியுற. அந்த ரம்பை, ஊர்வசி எல்லாம் தோத்தாங்க போ. அவங்களை விட நீ தான் அழகு”, என்று நல்ல புருஷனாய் ஐஸ் வைத்தான்.
“ஓஹோ! உனக்கு இந்த அர்ச்சனா மட்டும் இல்லாம, இன்னும் ரம்பை ஊர்வசி எல்லாம் இருக்காங்களோ? சொல்லுயா, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க”
“படிக்காத கழுதை, அவங்க எல்லாம் வரலாற்றில் வரும் தேவதைகள் டி”
“ஓ நான் படிக்காதவ. அதனால நான் பஜாரி பேய். ஆனா அவ தேவதையா? அதனால என்னை ஏமாத்திரலாம்னு பாத்தியா? இன்னைக்கு, அங்கனயே அவளை செருப்பை கழற்றி அடிக்கணும்னு தான் நினைச்சேன். அங்க இருக்குற எல்லாரும் என்னை தப்பா நினைப்பாங்கன்னு தான் ஒன்னும் சொல்லாம வந்தேன்”
…..
“என்ன பேச்சு பேசுறா? இது எல்லாத்துக்கும் நீ தான காரணம். நீ இன்னைக்கு என்கிட்ட செத்த. நாசமா போறவனே? உனக்கு என்னை பாத்தா எப்படி இருக்கு. அவளை மாதிரியே எனக்கு ஷாம்பு போடுறியா? அவளும் என்னை மாதிரி தான தலை சீவிட்டு வந்தா. அவளை பாத்து தான் சொன்னியோ? இப்படி சீவுனா தான் அழகா இருக்கும்னு. இல்லை நீ தான் அவளுக்கு சொல்லி கொடுத்தியா? போன உடனே பல்லை இளிச்சிட்டு வந்து நிக்குறா. உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா, நீயும் அவளை பாத்து ஈ னு இளிப்ப? “, என்று சரமாரியாக அவனை திட்டியவள், அடித்து கொண்டே இருந்தாள்.
“என்ன தான் படிச்சிருந்தாலும், பொண்டாட்டி கையில் அடி வாங்கி தான் ஆகணும் போல? பாக்க சாதுவா இருந்தா. இப்ப எப்படி வெளுத்து வாங்குறா?”, என்று நினைத்து கொண்டு “ஏய் வர்ணா, என்னோட விரல் கூட யார் மேலயும் பட்டது இல்லை டி. உன்னை கூட இன்னும் தொடலை. என்னை போய் இப்படி பேசலாமா? நான் உன் மாமா தான? பாவம் பாத்து விட்டுரு டி”, என்றான்.
“அப்ப கை கொடுத்த?”
“அது படிச்சவங்க அப்படி கொடுத்து பழகி விட்டுட்டாங்க டி.நீ பாத்த தான? வேற பொம்பளை டாக்டர்சும் கை கொடுத்தாங்களே?”
அடித்து களைத்து ஓய்ந்தவள், அந்த கட்டிலிலே அமர்ந்து குப்புற கவிழ்ந்து அழுதாள். அடி நின்ற சந்தோஷத்தில் “அப்பாடி அடிக்கிறதை நிப்பாட்டிட்டா”, என்று சந்தோச பட்டான்.
அவனை சுற்றி தலையணையில் உள்ள பஞ்சு, பறந்து கொண்டிருந்தது. அவன் தலை எல்லாம், வெள்ளை வெள்ளையாக பஞ்சு இருந்தது. “பஞ்சுன்னு பேர் வச்சு என்னை பஞ்சு பஞ்சா ஆக்கிட்டா. அடிக்கிறதை எப்படி நிப்பாட்டினா? ஓ தலவாணி பிஞ்சிட்டா? அதான் அடிக்கிறதை நிப்பாட்டிட்டாளா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
அவள் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள். “பக்கத்துல போனா, மறுபடியும் அடிப்பாளோ?”, என்று நினைத்து கொண்டே அவள் அருகில் சென்று அமர்ந்தான்.
“ஏய் வர்ணா, இங்க பாருடி செல்லம். உன் மாமா நல்லவன் டி”, என்று அவளை தொட்டான்.
நிமிர்ந்து அவனை பார்த்தவள், “இத்தனை நாள் என்னை இப்படி கொஞ்சிருக்கியா? அவளை பாத்த உடனே என்னை குட்டினு சொல்ற. இப்ப செல்லம்னு சொல்ற, போயா. அத்தை அப்பவே சொன்னாங்க. அடிக்கடி வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போயிறான். எப்ப என்ன செய்வான்னு பயமா இருக்குன்னு. கூட அந்த ராங்கி வேற சுத்துறானு. இப்ப தான தெரியுது”, என்று சொல்லி கொண்டே மறுபடியும் அவன் சட்டையை பிடித்தவள் “என் கூட குடும்பம் நடத்த துப்பில்லை, உனக்கு படிச்ச பொண்ணு கேக்குதோ?”, என்று கத்தினாள்.
காதல் மலரும்….