நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சாப்பிட்டு முடித்த கையோடு சஞ்சனா சாதனாவை அந்த தீபாவளி பார்ட்டி வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்தாள்.
“சாது ஆட் பண்ணிட்டேன். உன் ஐபோனை பாரு.” என்று சொல்ல சாதனா பார்த்தாள்.
அந்த குரூப்பில் இருந்த எண்களை பார்த்தாள்.
சில எண்களின் நேராக அவர்களின் பெயரும் இருந்தது. அதில் கார்த்திகா என்ற பெயர் இருக்கிறதா என்று தேடி பார்த்தாள். ஒரு எண்ணில் கார்த்தி என்ற பெயர் இருக்க அந்த எண்ணிற்கு தனியாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.
hai karthi. this is sanjana’s sister. Are you available tomorrow 6 pm to stop by Anjappar restaurant to check on the food taste? If yes, lemme know by tomorrow 5:30 pm.
குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு குழந்தை விஷாலுடன்
“குட்டி பையா, பட்டு பையா” என்று கொஞ்ச குழந்தை அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு சஞ்சனா
“சாது மெசேஜ் பண்ணியா?” என்று கேட்டாள்.
“பண்ணினேன். ஆனால் ரிப்ளை இல்ல.”
“அப்படியா? சரி வெயிட் பண்ணி பார்க்கலாம்.” என்று விட்டு அவரவர் அவரவர் அறைக்கு சென்றனர்.
கார்த்திக் சுகந்தன் இருவரும் ஒரு தமிழ் படத்தை பார்த்து முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
“படம் ரொம்ப நல்லா இருந்தது. இல்லடா?” என்று கேட்டான் சுகந்தன்.
“ஆமாண்டா”.
“தியேட்டரில் யார்கிட்ட பேசிட்டு இருந்த?”
“என்னோட ஃப்ரெண்ட்கிட்ட பேசிட்டு இருந்த.”
“உனக்கு நிறைய பிரண்டு இருக்காங்களா?”
“இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளில் உனக்கும் நிறைய பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க.”
“எங்கடா? இந்த குளிரில் யாருமே வெளிய வர மாட்டேங்கிறாங்க. அப்புறம் எப்படி தெரிஞ்சுகிறது கார்த்திக்?”
“நீ குளிர் காலத்துல வந்து இருக்க. அதனாலதான் இப்படி இருக்கு. சம்மர்ல வந்திருந்தா அதோ அங்க ஒரு பார்க் தெரியுது இல்ல, அந்த பார்க்ல நிறைய இந்தியர்கள் குடும்பத்தோட வந்திருப்பாங்க. குழந்தைகள் அந்த ஊஞ்சல், ஸ்லைட்ல விளையாடும்போது அம்மாக்கள் கும்பல் கும்பலா உக்காந்து பேசிட்டு இருப்பாங்க. அப்படி பேசி தான் இங்கே எல்லோரும் பிரண்டாவாங்க.
அப்புறம் காலையில் வாக்கிங் போகும்போது பேசி பழகி பிரெண்ட்ஸ் ஆயிடுவாங்க. நான் இதுக்கு முன்னாடி ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்தேன். அந்த அப்பார்ட்மெண்டில் நிறைய இந்தியன் இருப்பாங்க.
அது ஒரு பெரிய கேங்க். எல்லா லாங்குவேஜ் பேசுபவர்களும் ரொம்ப க்ளோசா பழகுவாங்க. எனக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சைனீஸ், இங்கிலீஷ் ஸ்பானிஷ் இன்னும் நிறைய லாங்குவேஜ் பேசுற பிரண்ட்ஸ் இருக்காங்க.”
“சூப்பர்டா. கூடிய சீக்கிரம் இங்கேயும் நமக்கு நிறைய பேர் கிடைப்பாங்க. அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நம்ம கம்யூனிட்டியில் தீபாவளி பார்ட்டி நடக்கப்போகுது.”
“அப்படியா டா?” என்று சுகந்தன் ஆர்வமாக கேட்டான்.
“ஆமாண்டா. ரொம்ப நல்லா இருக்கும். நீயே பாரு.”
“சரிடா பார்க்கலாம்.” என்றான் சுகந்தன்.
“இருவரும் பேசியபடி காரில் வீடு வந்து சேர்ந்தனர். காரை ஓட்டிக் கொண்டிருந்த கார்த்திக் எதையோ தேடினான்.
“என்னடா தேடுற?” என்று கேட்டான் சுகந்தன்.
“கராஜ் ஓபன் பண்ற ரிமோட்டை தான் தேடுறேன்.” என்று சொன்னபடி கைக்கு கிடைத்த ரிமோட் மூலம் கதவைத்திறந்து காரை உள்ளே விட்டு விட்டு இருவரும் இறங்கி உள்ளேயிருந்த வழி மூலம் வீட்டுக்குள் சென்றனர்.
சுகந்தன் தன் அலுவலகத்தில் அவனுடைய மேலாளர் முன்பு அமர்ந்து இருந்தான்.
அந்த அமெரிக்க மேலாளர்
“ஹாய் சந்தன்.” என்று அவனது பெயரை தவறாக உச்சரித்து விட்டு அதை சற்றும் உணராமல் அவனைப்பார்த்து சாதாரணமாக புன்னகைத்தார்.
அதனைக் கேட்ட அவனால்தான் புன்னகைக்க முடியாமல் முகம் மாறியது. அவன் முக மாற்றத்தை புரிந்து கொண்ட அவர்
“Wait! your name is sandan. Am I right?” (உங்கள் பெயர் சந்தன் நான் சரியாக சொல்கிறேனா?” என்று கேட்டார்.
“No Nicholas . its sukanthan!( இல்லை நிக்கலஸ். என்னுடைய பெயர் சுகந்தன்) என்றான்.
அவர் “suku (சுக்கு) என்று அவன் பெயரை சொல்ல முயற்சித்தார்.
ஆனால் முடியவில்லை.
‘ஆமா, என் பேரு சுக்கு, மிளகு, திப்பிலி.’ என்று மனதுக்குள் நினைத்து கடுப்பானான் சுகந்தன்.
எனினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அவன் பெயரை உச்சரித்து காட்டினான்.
I don’t think I would get it. can you write that for me? (எனக்கு அது புரியிற மாதிரி தெரியல. கொஞ்சம் எழுதி காட்டுங்க.) என்றார் அவர்.
சுகந்தன் எழுதி அதனை உச்சரித்து காட்டினான்.
வாயில் வரவில்லை என்றாலும் அதனை விடாமல் அவர் முயற்சி செய்த விதம் அவனுக்கு அவர் மீது மதிப்பை உண்டாக்கியது.
“Its ok. Nicholas, Call me suka. (பரவாயில்லை நிக்கலஸ். என்னை சுகா என்று கூப்பிடுங்கள்)” என்றான் சுகந்தன்.
“thats easy! ( இது எனக்கு சுலபம்தான்.)” என்றவர் அப்படியே கூப்பிட ஆரம்பித்தார்.
“This file has all the information about our new project. if you need more information, check out the emails, I just sent you. Here you go .( இந்த பைலில் எல்லா விவரமும் இருக்கிறது. உங்களுக்கு மேலும் விபரம் தேவைப்பட்டால் நான் உங்களுக்கு அனுப்பிய ஈமெயிலை பார்க்கவும். இந்தாருங்கள்.” என்றபடி ஒரு பைலை அவனிடம் நீட்டினார்.
அவர் கொடுத்த பைலை வாங்கிக்கொண்டு
“ஷுர்” என்றான்.
அதேநேரம் கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஒரு பெண்.
. வெள்ளை நிற ஷர்ட்டும் கருப்பு நிற கோட்டும் அதே துணியில் இருக்கமாக தைக்கப்பட்டிருந்த ஸ்கர்ட்டும் அவளுடைய மெல்லிய உடல் வாகுக்கு பொருத்தமாக அவளது வளைவுகளை அழகாக காட்டின.
கழுத்தில் ஒரு வைர பென்டன் மற்றும் காதில் அதே மாதிரி வைர கம்மல்கள் ஜொலித்தன.தங்க நிறத்தில் இருந்த அவளது நேரான கூந்தல் இடைவரை நீண்டு இருந்தன.
“ஹாய்” என்றபடி கையை ஆட்டிக் கொண்டு உள்ளே வந்தாள்.
“Meet ms Natalie” (இவங்க மிஸ் நேட்டலி.) என்று நிக்கலஸ் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“Hai I am Sukanthan.( நான் சுகந்தன்.)” என்று தன்னை அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான் சுகந்தன்.
“ஹாய்” என்று அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள் .
“Reach out to her if you need any more information.(உங்களுக்கு மேலும் விபரம் தேவைப்பட்டால் இவர்களை கேட்கவும்.) என்று நேட்டலியை காண்பித்து கூறினான்c நிக்கலஸ்.
“ஷுர்” என்றுவிட்டு தன்னுடைய நாற்காலிக்கு வந்தான் சுகந்தன்.
அந்த பைலை எடுத்து படித்து விவரங்களை சேகரித்து கொண்டிருந்தான்.
இன்னும் சில விபரங்கள் அவனுக்கு தேவைப்பட்டது. அதனால் அவனுக்கு வந்திருந்த இமெயில்களை எடுத்து திறந்து அதனில் தேடினான்.
ஆனால் அந்த விபரம் அவனுக்கு கிடைக்கவில்லை.
‘இப்ப என்ன பண்றது? யார் கிட்ட கேட்கிறது?’ என்று யோசித்த அவனுக்கு நேட்டலி ஞாபகம் வந்தாள்.
“சரி. அவங்க கிட்ட கேட்டுப் பார்ப்போம்.” என்று நினைத்தவன் அவளிடம் சென்றான்.
அவள் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
இவனைப் பார்த்ததும் போனை வைத்து விட்டு
“yes” என்றாள்.
“I need some more information on this. (எனக்கு இன்னும் சில விபரங்கள் தேவை.)” என்றபடி தன் கையில் இருந்த பைலை காண்பித்தான்.
அவள் “find more information in the email sent to you.
(உனக்கு வந்திருக்கும் ஈமெயிலை எடுத்து பாருங்க.)” என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து பார்வையை திருப்பி தன் வேலையில் ஆழ்ந்தாள்.
அவன் மீண்டும்.
“I just did. still, couldn’t find it. ( நான் இப்பொழுதுதான் அதில் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.)” என்றான்.
“ok. lemme send you few more links. (சரி நான் இன்னும் சில விபரங்கள் அனுப்புகிறேன்.)” என்று விட்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தாள்.
தன் நாற்காலிக்கு வந்த சுகந்தன் மற்ற வேலைகளை தொடர்ந்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவனுடைய ஈமெயில் திறந்து பார்த்தான். அவனுக்கு எதுவும் வரவில்லை.