அத்தியாயம் 5
“இன்னைக்கு போன உடனே அர்ச்சனா, என்னை பாக்க வந்தா டா. அவ உன்னோட பேப்பர் சப்மிட் பண்ண பாரின் போயிருந்தாள்ல. அந்த இடை பட்ட நாளில் நீ கல்யாணத்தை முடிச்சிட்டியாம். வந்த உடனே அவளுக்கு யாரோ சொல்லிருக்காங்க. என்கிட்ட வந்து ஒரே அழுகை. எனக்கு என்ன செய்யனே தெரியலை. அப்புறம் பாத்தா, கொஞ்ச நேரத்தில் டீன் என்னை கூப்பிட்டு விட்டாரு. ஏதும் பிரச்சனையோன்னு பயந்துட்டு தான் போனேன். ஆனா, உன்னோட கல்யாணத்துக்கு ஒரு பார்ட்டி நாளைக்கு அரேஞ் பண்ணிருக்காங்களாம் டா. அந்த ஐடியா கொடுத்ததே அர்ச்சனா தானாம். எனக்கு பெரிய சாக் டா”
“அவ கிடக்கா விடு பாத்துக்கலாம். சரி நீ சாப்பிட வா. வர்ணா சாப்பாடு எடுத்து வை”
“சரி மாமா”, என்று எழுந்து போன பஞ்சு “எதுக்கு அந்த அர்ச்சனா, மாமா கல்யாணம் செஞ்சது தெரிஞ்சு அழுதா?”, என்று தனக்குள் கேட்டு கொண்டாள்.
விடை தெரியாமல், அந்த கேள்வி உள்ளேயே அமிழ்ந்தது.
“சரி டா நாளைக்கு ஆறு மணிக்கு, பார்ட்டி. ரெண்டு பேரும் வந்துருங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் ஆதி.
அன்றைய நாள், எப்பவும் போல போனது. அடுத்த நாள் மாலை “கிளம்பு வர்ணா. போகலாம். நல்ல சேலையே கட்டிக்கோ. அப்புறம் நேத்து வாங்கி கொடுத்த ஷாம்பு போட்டு குளி சரியா? இன்னைக்கு சீயக்காய் வேண்டாம்”, என்று சொல்லி விட்டு கிளம்ப சென்றான்.
குளித்து விட்டு வந்தவன் திகைத்தான். அங்கே தலையில் எண்ணையை அப்பி வைத்து கொண்டு நின்றாள் பஞ்சு.
“ஏய் வர்ணா, நான் உங்கிட்ட என்ன சொன்னேன்? நீ என்ன செஞ்சு வச்சிருக்க?”
“இல்லை மாமா, ஷாம்பு போட்டு தான் குளிச்சேன். அதை நீங்க காய வைக்க சொல்லி தந்தீங்கள்ல? அதுல தான் காய வச்சேன். பாத்தா பேய் மாதிரி எல்லாம் பறந்துச்சு. சரி எண்ணெய் தேச்சா தான, ஒழுங்கா நிக்கும்னு நினைச்சு தேய்க்க போனேனா? எண்ணெய் கீழ கொட்டிட்டு மாமா. அது வீணா போயிரும்னு, என் தலைல தேச்சிட்டேன்”, என்றாள்.
“ஐயோ ஐயோ, இங்க வந்து தொலை”, என்று சொல்லி பாத்ரூம்க்கு அழைத்து சென்றான் ஆதி.
“என்ன மாமா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே போய் நின்றாள்.
“இப்ப உன்னை குளிக்க வைக்க போறேன். டிரஸ் எல்லாம் அவுரு”, என்று சொன்னான் ஆதி.
“ஆ”, என்று வாயை பிளந்து கொண்டு நின்றாள் பஞ்சு.
“என்னடி, ஆ னு வாயை பொளந்துட்டு நிக்குற? சீக்கிரம் வா நேரம் ஆச்சு. அங்க பெரிய பெரிய டாக்டர்ஸ் அப்புறம், என்னோட ரிசர்ச் டீம் எல்லாரும் இருப்பாங்க டி. கொஞ்சம் நல்ல மாதிரியா போகணும். உன்னை கிளம்ப சொன்னா, நீ ஒரு மார்க்கமா தான் எல்லாம் செய்வ? வா சீக்கிரம்”, என்று சொல்லி விட்டு அங்கு இருந்த ஷாம்பு டப்பாவை, எடுத்த ஆதி திகைத்தான். அதில் பாதியை காலி செய்திருந்தாள் பஞ்சு.
“குளிக்க வச்சு தான் ஆவேன்”, என்று பிடிவாதமாக நின்றான் ஆதி.
“சரி குளிக்க வை”, என்று அவன் முன்பு நிற்க, அவள் என்ன குழந்தையா?
“எப்படி இவனை, இங்க இருந்து போக சொல்ல?”, என்று நினைத்து கொண்டு “இல்லை மாமா, இன்னொரு தடவை நானே குளிக்கிறேன். நீங்க போங்க மாமா”, என்றாள் பஞ்சு.
“எதுக்கு மீதி டப்பா ஷாம்பையும் காலி பண்ணவா? நீ குளிச்சு கிளம்பி வந்ததை தான் நானும் பாத்தேனே! அந்த சேலையை கழட்டிட்டு வா. வேற சேலை மாத்திக்கலாம். சீக்கிரம் வா வர்ணா”
அப்படியும் அசையாமல் நின்றவளை “நீ சொன்னா கேக்க மாட்ட?”, என்றவன் அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் மேலேயே, போய் விழுந்தாள் பஞ்சு.
“இப்படி வந்து நின்னா, எப்படி குளிக்க வைக்க?”, என்று சொல்லி கொண்டே அவளை விலக்கி நிறுத்தியவன் பெட்ரூமில் இருந்த ஒரு ஸ்டூலை எடுத்து வந்தான்.
“ஹ்ம்ம் குளிக்கலாம்”, என்று தயாரானவன் “என்ன வர்ணா? நீ இன்னும் டிரஸ் கழட்டாம இருக்க? சீக்கிரம் கழட்டு”, என்றான்.
“நீங்க வெளிய போங்க மாமா, நானே குளிக்கிறேன்”, என்று அவளும் சொன்னாள்.
“நேரம் ஆகிருச்சு. இன்னும் உன்கிட்ட பேசி புரோஜனம் இல்லை”, என்று சொல்லி கொண்டே அவள் மேல் கை வைத்து, அவள் சேலை முந்தானையை இழுத்தான்.
“வேண்டாம் வேண்டாம்”, என்று கத்தினாள் பஞ்சு.
அவள் வாயை பொத்தியவன் “கெடுக்க போற வில்லன் கிட்ட இருந்து, தப்பிக்க ஹீரோயின் கத்துற மாதிரி கத்துற? யாருக்காவது கேட்டா, என்னை தான் தப்பா நினைப்பாங்க. வாயை மூடு வர்ணா”, என்றான்.
“சரி நானே கழட்டிட்டு குளிக்க வரேன்”, என்றவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, சேலையை கழட்டி அங்கு இருந்த பக்கெட்டில் போட்டாள்.
அடுத்து ஒவ்வொரு உடையாய் கழட்டியவள், பாவாடையை மேல வரைக்கும் தூக்கி கட்டி கொண்டு அவன் புறம் திரும்பினாள்.
அவள் செய்கையை அங்கு பார்த்து கொண்டிருந்த ஆதி, பித்து பிடித்தது போல நின்றான்.
இது வரைக்கும் எதுவும் யோசிக்காமல் இருந்தவன் முதல் முறை அவளை அந்த கோலத்தில் பார்த்து திகைத்தான்.
கண்ட மேனிக்கு, அவன் பார்வை அவள் மேல் அலைந்தது. தலை குனிந்த வாறே அவன் அருகில், மெதுவாக சென்றாள் பஞ்சு.
“ஊர்ல குளத்துல, இப்படி தான் தினமும் நானும், பூவும் குளிப்போம். அப்ப எல்லாம் ஒண்ணுமே தோணலை. இந்த மாமா முன்னாடி குளிக்க தான், ஒரு மாதிரி இருக்கு”, என்று மனதில் நினைத்து கொண்டு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் பார்வை போகும் திசையை அறிந்தவள், கைகளை மார்புக்கு குறுக்கே வைத்து கொண்டாள்.
அவள் செய்கைக்கு பிறகு தான், அவன் சுயநினைவை அடைந்தான். “ஆதி கண்ட்ரோல் கண்ட்ரோல். கண்டதையும் நினைக்காத. தலைக்கு ஷாம்பு போடு”, என்று மனதை அடக்கி கொண்டு வேலையை ஆரம்பித்தான்.
அவனுடைய ஒவ்வொரு செய்கையிலும், கொஞ்ச கொஞ்சமாக அவள் மனதில் மலர்ந்து கொண்டிருந்த காதல் குழந்தையை அம்மா குளிப்பாட்டுவது போல குளிப்பாட்டும் அவனுடைய செய்கையில், மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பித்தது.
“ஷாம்பு இவ்வளவு தான் போடணும். அள்ளி தட்ட கூடாது”, என்று சொல்லி கொண்டே அவள் தலையை கழுவியவன் வியந்தான். அதை அவளிடம் சொல்லவும் செய்தான்.
“ரொம்ப அடர்த்தியா இருக்கு வர்ணா உன் முடி. நீளமும் கூட. அப்படியே தலையை விரிச்சு போட்டு, ஒரு கிளிப் மட்டும் போட்டால் அழகா இருக்கும். இங்க நிறைய பொண்ணுங்க இப்படி தான் போடுவாங்க. அவங்களுக்கு அழகா இருக்கும்”
“எனக்கு பின்னுனா தான் மாமா பிடிக்கும்”
“அது நாளைல இருந்து பின்னிக்கோ. இன்னைக்கு நான் சொல்ற படி தான் வர!”, என்று சொல்லி கொண்டே லூசு தனமாய், அவளுக்கு சோப்பு போட சோப்பை எடுத்தான்.
முதலில் அவள் கழுத்தில் கையை வைத்தவனின் பார்வை, தன்னாலே கீழே வந்தது. “பொண்டாட்டின்னா ஒரு உரிமை வந்துரும் போல?”, என்று நினைத்து கொண்டவனின் கைகள் கொஞ்சம் கீழே இறங்கியது.
அவன் முகத்தில் உள்ள உணர்வுகளை படித்தவளுக்கு அடி வயிற்றில் பட்டம் பூச்சு பறப்பது போல இருந்தது.
“மாமா சின்ன பிள்ளைல இருந்து, நான் தான் மாமா சோப்பு போட்டு குளிச்சிருக்கேன். அதெல்லாம் எனக்கு குளிக்க தெரியும்”, என்று வெட்க பட்டு கொண்டே சொன்னாள் பஞ்சு.
“ஹி ஹி, ஆமால்ல? சரி சரி நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா. நான் வெளியே நிக்குறேன்”, என்று வெளியே போனவனின் உணர்வுகள் பேய் ஆட்டம் போட்டது மட்டும் உண்மை.
“எப்பா, எப்படி இருக்கா? இது தான் சனியனை தூக்கி பனியன்ல போட்டுக்குறது போல? இனி இவளை குளிக்க வைக்கிறேன்னு ரிஸ்க் எடுக்க கூடாது சாமி”, என்று நினைத்து கொண்டான்.
ஒரு வழியாக குளித்து வேற சேலை அணிந்தவளுக்கு, தலை துவட்டி அவனுக்கு பிடித்தது போல தலை சீவி, அவன் வாங்கி கொடுத்திருந்த கண்மை எல்லாம் போட்டு, பொட்டு வைத்து அவனே அழகு படுத்தி, அவனே ரசித்தான் அவளை.
“செமையா இருக்க டி வர்ணா. சூப்பரா உன் மாமா மேக்கப் போட்டுருக்கேன்”, என்று சொல்லி விட்டு அவனும் கிளம்பி வந்தான்.
அவன் அருகில், அமர்ந்து போவது ராணி போல உணர்ந்தாள் பஞ்சு.
இருவர் முகமும் புன்னகை மட்டுமே சுமந்திருந்தது.
அங்கே போய் இறங்கியவர்களை, அர்ச்சனா பொறாமை கண்ணுடன் பார்த்தாள். அடுத்த நொடி முகத்தை சரி செய்து கொண்டவள், அவனை நோக்கி வந்தாள்.
யாரையும் கவனிக்காமல், உள்ளே புது இடம் என்று பயந்து போய் அமர்ந்திருந்த பஞ்சுவை, கார் கதவை திறந்து கை பிடித்து வெளியே அழைத்தான் ஆதி.
அவனுடைய செய்கையில், அப்படியே சிலிர்த்தாள் பஞ்சு. அதே நேரம் அவன் செய்கை மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது அர்ச்சனாவுக்கு.
வர வைத்த சிரிப்புடன், அவனை நெருங்கிய அர்ச்சனா “கங்கிராட்ஸ் ஆதி”, என்று சொல்லி கை கொடுத்தாள்.
அவனும் கை கொடுத்தான். இப்போது பஞ்சுவுக்கு உள்ளுக்குள்ளே எரிந்தது.
மெளனமாக அர்ச்சனாவை கவனித்தாள் பஞ்சு. எதுவோ அவளுக்கு தவறாக பட்டது.
“இந்த பொம்பளை எதுக்கு என்னை ஒரு மாதிரி பாக்குறா? ஆளையும் மூஞ்சியையும் பாரு? கை வேற கொடுக்குறா? இந்த லூசு மாமாவும் கை கொடுக்குது பாரு! வீட்டுக்கு வரட்டும் இன்னைக்கு பேய் ஓட்டுறேன்”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள் பஞ்சு.
அடுத்து எல்லாரும், அவர்களை வாழ்த்தி பரிசுகள் கொடுத்தார்கள். அடுத்து விருந்தும் ஆரம்பமானது. எல்லாத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் பஞ்சு. சீனியும், ஆதி கூடவே சுத்தி கொண்டிருந்தான்.
“மாமா கிளம்பலாமா? எனக்கு இந்த சத்தம் எல்லாம் சேர்ந்து தலை வலிக்கிற மாதிரி இருக்கு”, என்று அவன் காதில் சொன்னாள் பஞ்சு.
“கொஞ்சம் பொறுத்துக்கோ மா. நமக்கு தான விருந்து. நாமளே முதலில் போனா நல்லா இருக்காது. கொஞ்ச பேர் கிளம்பிட்டாங்க. நீ கார் பக்கத்துல வேணும்னா நில்லு. நான் என்னோட சீப் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்”
“ஹ்ம்ம் சரி மாமா”, என்று சொல்லி விட்டு கார் அருகே நகர்ந்தாள் பஞ்சு.
அப்போது அவள் அருகில் வந்த அர்ச்சனா “ஏய் பட்டி காடு! என்று அழைத்தாள்.
“யார் அந்த பரதேசி?”, என்று சொல்லி கொண்டே திரும்பி பார்த்தாள் பஞ்சவர்ணம்.
“என்னது பரதேசியா? ஏய் ஒழுங்கா பேசு டி”, என்றாள் அர்ச்சனா.
“ஏய், அதுக்கு நீ முதலில் ஒழுங்கா பேசிருக்கணும்”, என்றாள் பஞ்சு.
“பட்டி காட்டில் பொறந்த நீ, என்னை எதிர்த்து பேசுறியா? உனக்கு எவ்வளவு திமிரு?”
“பொண்ணுங்களுக்கு திமிர் அழகு தான். அது ரசிக்கிறவங்க கண்ணை பொறுத்தது. அது உன்னை மாதிரி நொள்ளை கண்ணுக்கு எல்லாம் தெரியாது”
“என்ன இவ்வளவு பேசுற? நான் ஒரு டாக்டர் தெரியுமா? ஆமா நீ ஒண்ணுமே படிக்காதவளாமே! எப்படி தான் ஆதி, உன்னை போய் கல்யாணம் செஞ்சி குடும்பம் நடத்த போறானோ?”
“படிச்சா தான் குடும்பம் நடத்தணுமா? எங்க ஊர்ல பேச்சியம்மா மூணாம் கிளாசே தாண்டலை. ஆனா அவ அதுக்குள்ள நாலு பிள்ளை பெத்துட்டாளே எப்படி?”, என்று கேட்டாள் பஞ்சு.
“ச்சி ச்சி எப்படி கேவலமா பேசுற? உன்னை எல்லாம் ஆதிக்கு பிடிக்கவே செய்யாது. அவனுக்கு எல்லாம் என்னை மாதிரி பொண்ணுங்களை தான் பிடிக்கும். நீ இப்படி ஸ்டைலா டிரஸ் போட்டா கூட, அவனுக்கு நீ எல்லாம் செட்டே ஆக மாட்ட. அவன் ரேன்ஜ் என்ன தெரியுமா? ஒரு கேன்சர் ஸ்பெசலிஸ்ட். அவனுக்கு போய் இப்படி கூமுட்டை பொண்டாட்டி”, என்று சொல்லி சிரித்தாள் அர்ச்சனா.
“சரி இப்ப எதுக்கு என்கிட்ட வந்து, இதை எல்லாம் சொல்லிட்டு இருக்க?”, என்று கேட்டாள் பஞ்சு.
அவளுடைய கம்பீரமான பேச்சில், ஒரு நிமிடம் அர்ச்சனா திகைத்தாலும் அடுத்த நொடி “என்ன திமிரா பேசுற? ஒழுங்கு மரியாதையா, அவன் வாழ்க்கையை விட்டு ஓடிரு”, என்றாள்.
“நான் போகலைன்னா, என்ன பண்ணுவ?”