மனம் மயங்குதே
எபிசொட்-12
கங்கை அவனை பார்த்து ஆச்சர்யமாக பார்த்தாள். கங்கை அவனிடம் ,” சார் , நீங்க எவ்ளோ பெரிய பணக்காரர் ரொம்ப செல்வாக்கு நல்ல மனது வைத்துருக்கீங்க ஆனா தியா வந்து ஒரு அனாதை நாங்கள் எல்லாரும் அனாதை தான் . நீங்கள் எப்படி சார் அவளை மணக்க முடியும் உங்கள் செல்வாக்கு கெளரவம் எல்லாம் என்ன வாகும் அவளை மணந்து விட்டு பின் இந்த மாதிரி பிரச்சனைகள் யோசித்து அவளை விட்டுவிட்டால் என்ன செய்வது சார் ” . அஜய் அவளிடம் , ” கங்கை , நீ நினைப்பது சரி தான் , நீ இதுவரை பணக்காரன் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற மனதில் நினைத்து இருக்கிறாய் ஆனால் நான் அப்படி இல்லை நான் என் காதலுக்காக என்னவும் செய்வான். எனக்கு அவள் வேணும் அவ்ளோ தான் அவளும் என்னை காதலித்தால் பிரச்சனை இல்லை அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் அவளுக்கு கடைசி வரை ஒரு நண்பனாக இருப்பான் . அவளை உடலளவும் மனத்தளவும் நான் காய படுத்த மாட்டான் . எப்போதும் அவளுக்காக நான் இருப்பான் எந்த ஒரு பிரச்சனை என்னவாக இருந்தாலும் . நீங்க ரெண்டு பேரும் எனக்கு தங்கைகள் எனக்கு யாரும் இல்லை என்னுடைய கல்யாணத்துக்கு மணமகன் தங்கைகளாக இருக்க போறது நீங்க தான் , உங்களுடைய கல்யாணத்தையும் நான் நன்றாக செய்து முடிப்பான் . ” என்று அவளிடம் கூறினான் . கங்கா அவனிடம் ,” அண்ணா , தியா உங்கள காதலித்தால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆனா நீங்க நினைக்கிற மாறி அவள் இல்லை எப்போதும் நேர்மையாக இருப்பாள் . நீங்க பணக்காரன் என்று அவள் உங்களை கல்யாணம் செய்ய மாட்டாள் அவளுக்கு உங்கள் மேல் காதல் வந்தால் நீங்க ரொம்ப அதிஷ்டம் செய்தவர் . அவளை இதுவரை எத்தனையோ பேர் அவளை காதலிப்பதாக சொல்லிருக்கிறீரார்கள் ஆனால் அவள் யாரையும் நம்பவில்லை ஆனால் அவர்களை காயப்படுத்தவும் இல்லை மிகவும் பொறுமையாக புரியவைப்பாள் அவர்கள் இவளிடம் அவள் காதலிக்கும் நபர் தான் இந்த உலகில் மிகவும் குடுத்துவைத்தவர் தனக்கு அது இல்லை என்று மனம் கவலை படுவார்கள் அந்த அளவு ரொம்ப நல்லவள் . அவள் மிகவும் வெகுளி அன்புக்காக இன்றும் ஏங்குகிறாள் . அவள் காதலிக்கும் பையனை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்வாள் . அவளை பற்றி நன்கு புரிந்து கொண்டு அதன் பின் அவளிடம் காதலை சொல்லுங்கள் இல்லை என்றால் உங்கள் காதல் நிறைவேறாது . என்னால் முடிந்த உதவி கண்டிப்பாக பண்ணுகிறேன். இந்த விசியம் கார்த்திகாவுக்கு தெரிய வேண்டாம் அவள் உடனே தியா விடம் சொல்லிவிடுவாள்”. அவன் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான் . அவளிடம் நன்றி கூறினான் , அவளை பொய் உறங்க சொன்னான் . அவளும் பொய் உறங்க சென்றாள். பொழுது விடிந்தது அவர்கள் எல்லாரும் தூங்கி எழும்பினார்கள். அவன் சோபா வில் உட்காந்து பேப்பர் படித்து கொண்டிருந்தான். தியா தூங்கி எழுந்து வெளியே வந்தாள். அவன் அவளை பார்த்தான் . அவள் முகத்தில் மேக்அப் ஒன்றும் போடாமலே அவள் அழகாக இருந்தாள். அவள் அவனிடம் வந்து , ” குட் மோர்னிங் சார் , நான் காபி போட போரேன் உங்களுக்கு வேண்டுமா?”என்று வினவினாள். அவன் அவளிடம் , ” தியா ! இங்க தான் நிறைய பேர் வேலை செய்ய இருகாங்க நீங்க எதுக்கு கஷ்ட படனும்.” அவள் அவனிடம் , ” சார் , எத்தனை பேர் இருந்தாலும் நான் காபி போடு குடித்தால் தான் எனக்கு புடிக்கும் சாப்பாடும் நான் சமைத்தால் தான் எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் என் தோழிகளும் நான் காபி போட்டு தான் எழுப்புவேன் , சமையலும் நான் தான் செய்வென். அவர்கள் அதற்கு பதில் எனக்கு உணவு வாயில் கொடுப்பார்கள் பாசமாக நான் வெளியே எங்கு சென்றாலும் அந்த மாறி இல்லை வீட்டில் எப்போ இருந்தாலும் அவர்கள் தான் எனக்கு வாயில் தருவார்கள் . இன்னும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு கல்யாணம் ஆயிரும் எனக்கு யாரு வாயில் பாசமாக தருவார்கள் என்று வேதனை அடைந்தாள்”. அவன் அவளை நோக்கி , ” என்ன தியா இப்படி சொல்றிங்க , நீங்களும் கல்யாணம் பண்ணுவீங்க உங்கள் கணவர் உங்களுக்கு வாயில் தருவார்”. அவள் அவனிடம் ,” சார் , கிண்டல் செய்யாதீர்கள் , எந்த பையன் சார் இவ்ளோ பாசமா பார்க்க போகிறான் என்னை , அடிமை போல் நடத்தாமல் இருந்தால் போதும்” என்று கூறினாள். அவள் சொல்வது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் மனதுக்குள் நினைத்தான் அவள் எனக்கு தன் காதலை ஒத்துக்கொள்கிறாளோ அன்று இருந்து அவன் தான் அவளுக்கு வாயில் உணவு குடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான் .