அவன் அவளை தன் வீட்டுக்கு கூட்டிட்டு போக தயாரானான் . அவளை தன் காரில் அமர்த்தினான் . அவள் ரொம்ப மகிழ்ச்சியாக உட்காந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள் . அவள் அவனிடம் தன் அப்பா அம்மா எங்க என்று கேட்டாள் , அவனோ இருவரும் காதல் திருமணம் செய்ததால் அவர்கள் தங்களை ஏற்கவில்லை என்று பொய் கூறினான் . அவளும் சரி என்று வெளியே பார்த்து கொண்டு வந்தாள் . அவள் திடீர் என்று ஐஸ் வண்டி நிற்பதை பார்த்து அவனை வண்டியை நிறுத்த சொன்னாள். அவனோ கடுப்பானான் . என்ன வேண்டும் உனக்கு , நீ இப்போ தான மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துருக்க அதுக்குள்ள ஐஸ்கிரீம் ஏன் என்று கத்தினான். அவள் முகம் கறுத்தது. அவள் அவனை பாவமாக பார்த்தாள் . அவனுக்கும் அவளை திட்டிவிட்டோமே என்று மனம் கஷ்ட பட்டது அவளிடம் , ” அனன்யா , உனக்கு ஐஸ் கிரீம் வீட்டிலே செய்து தர சொல்கிறேன் நீ இங்கு சாப்பிட வேண்டாம் ” என்று அன்பாக கூறினான் . அவளும் சரி என்று கூறி தன்னை மன்னிக்குமாறு கூறினாள் . அவன் அவளை பார்த்து புன்னகைத்தான் . அவன் வீடு வந்தது . அவளை இறங்க சொன்னான் . அவளும் இறங்கினாள். வீடு வேலைக்காரி அவளுக்கு ஆரத்தி எடுத்து உள்ள கூட்டிட்டு போனாள். அவளிடம் வீட்டை சுற்றி காணித்தாள். அவன் அவளிடம் பொய் ஓய்வு எடுக்குமாறு கூறினான் . அவளும் சரி என்று போனாள். அவன் வேலைக்காரி இடம் அவளுக்கு என்ன ஐஸ் கிரீம் வேண்டும் என்று கேட்டு செய்து கொடுங்கள் என்று கூறினான் . வேலைக்காரி அவனிடம் அம்மா வை எந்த அறைக்கு அழைத்து போக வேண்டும் என்று கேட்டாள் . அவன் தன்னுடைய மனைவி தான தன்னுடைய அறைக்கே கூட்டிப்போக சொன்னான் . அவளும் கூட்டிட்டு போனாள் . அவன் அவனது பாதுகாவலரிடம் விசாரிக்க சொன்னான் அவளை பற்றி பெற்றோர் யார் என்று அவள் ஊர் எது வென்று . பின் அவன் அவனது அறைக்கு சென்றான் . அங்கு அனன்யா உட்காந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தான் . அவள் இவனிடம் ,” விக்ரம் , நான் கண்டிப்பா புடவை தான் உடுத்த வேண்டுமா வேறு உடை அணிய கூடாத , எனக்கு புடவை அணிய கஷ்டமாக இருக்கு ” என்றாள். அவன் அவளிடம் ,” அனன்யா ! நம்ம புதுசா கல்யாணம் ஆனவங்க அதனால உன்னுடைய உடை ஏதும் இங்கு இல்லை நம்ம கல்யாணம் கூட யாருக்கும் தெரியாது நாம பதிவு திருமணம் செய்தோம் அதனால நான் திடிர்னு புடவை தான் வாங்கி வர சொன்னேன் . கொஞ்ச நேரம் பொறுத்து இருங்கள் . நான் உனக்கு சுடிதார் டாப்ஸ் காட்டன் டாப்ஸ் வாங்க சொல்ரேன் கொஞ்சம் உனக்கு உடம்பு ஓரளவு சரி ஆனதும் உன்னை நான் கடைக்கு கூட்டிட்டு பொய் உனக்கு பிடித்த உடை வாங்கி தருகிறேன். ” என்றான். அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள் . அவனிடம் நன்றி கூறினாள் . அவளுக்கு ஐஸ் கிரீம் வந்தது அவள் சாப்பிட ஆரம்பித்தாள் . ஐஸ் கிரீம் அவள் வாய் முழுவதும் ஆனது அவள் சாப்பிடுவது குழந்தை போல் இருந்தது . அவன் குளிக்க சென்று குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தான் . அவள் வாய் முழுவதும் ஐஸ் கிரீம் அவள் கவனிக்காமல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அவன் அவள் அருகில் சென்றான் . அவள் வாயவே பார்த்து கொண்டிருந்தான் . அவள் அவனை பார்த்தாள் இவன் எதற்கு தன் வாயவே பார்க்கிறான் என்று . அவனிடம் அவள் ,” விக்ரம் ! உனக்கு ஐஸ் கிரீம் வேணுமா என் வாயவே பார்த்துட்டு இருக்க ” என்று கேலி செய்தாள். விக்ரம் அவளை பார்த்து , ” ஐஸ் கிரீம் வேணும் தான் ஆனா கப் இல் இருப்பது இல்லை உன் வாயில் இருப்பது ” என்றான் . அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு தெரிய வில்லை . என்ன சொல்கிறான் என்று விசாரித்தாள். அவன் சமாளித்தான் . ஒன்றும் இல்லை அவள் வாயில் ஐஸ் கிரீம் ஒட்டி உள்ளது துடைக்கும் மாறு துணி எடுத்து கொடுத்தான் . அவள் அவனிடம் ,” விக்ரம் ! என் கை முழுவதும் ஐஸ் கிரீம் உள்ளது என்னால் துடைக்க முடியாது , நீயே கொஞ்சம் துடைச்சு விடு ” என்று கேட்டாள் . அவனும் சலிக்காமல் துடைத்து விட்டான் . அவனுக்கு அவள் பேசுவதும் அவளது குரலும் குழந்தை தனமும் அவனுக்கு பிடித்திருந்தது .