இரு நாட்களாக சிறு மழைப்பொழிவுடன் இருந்த வானம் இன்று அமைதியாகி நிலவு, நட்சத்திரங்களுடன் சேர்ந்து விளையாடியபடி குளிர்ந்த தென்றல் காற்றை மட்டும் கொடுத்து.. சற்றுமுன் அந்த இடத்தில் முடிந்த கணபதிஹோமம் மற்றும் அன்னபூரணி கடையை அலங்கரித்து இருந்த பூக்களினால் உண்டான நறுமணத்தை அங்கு இருப்பவர்களுக்கு செலுத்தி மனதை இதமாக்கியது.
எழில்வேந்தன் இனிப்பகம் மற்றும் அன்னபூரணி உணவுபொருட்கள்.. இரண்டிற்கும் தனித்தனியாக வேண்டாம் என இப்போதே இருகடைகளுக்கும் சேர்த்து கணபதி ஹோமம் வேந்தனின் தாத்தா, பாட்டி அமர்ந்து சிறப்பாக செய்து முடித்துயிருந்தனர். வேந்தன், எழிலரசி இரண்டு வீட்டின் சார்பாக குறிப்பிட்ட சிலரும், கடை கட்டிடத்தை கட்டிய முக்கிய நபர்கள் மட்டுமே அங்குயிருந்தனர்.
ஹோமம் முடிந்தவுடன் இனிப்புகள் செய்யும் இடத்தில் எழிலரசி, வேந்தன் கைகளினால்ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கட்டிடத்தில் வேலைசெய்தவர்கள் மற்றும் இனிப்பகத்தில் வேலை செய்யப் போகிறவர்களுக்கும் என அனைவருக்குமான உடைகளை அனைவரின் சார்பாக கதிரவன், சந்துரு, முத்து, வேல்முருகனிடம்.. வேந்தன், எழிலரசியின் அப்பா, பெரியப்பா மூலம் கொடுக்கப்பட்டது. இதை அனைத்தையும் அவர்களுடன் சற்று தள்ளி தன்னவனின் கையை இறுக்கிபிடித்தபடி அககளிப்புடன் சிறுதுநேரம் நின்று பின் உட்கார வைத்து என எழிலரசியும்.. வேந்தனும் பார்த்திருந்தனர்.
வேந்தன் இன்னும் அவளை முழுமையாக அதிக நேரம் நிற்க, நடக்க விடவில்லை. ஆரம்பத்தில் முறைத்தவள் பின் அவனின் தன்மீது இருக்கும் அன்பு, காதலினால் தன் வலியை குறித்த பயம்.. எதை கொண்டும் அளக்க முடியாது என அவனின் அன்று அவனின் முத்தம், அழுகையில் அறிந்து கொண்டபின்.. அவனிடம் எந்த மறுப்பு பார்வையும் இல்லை. அதற்கான பரிசை அவளவன் தனிமை கிடைக்கும் சமயத்தில் அவனவளிடம் வாரி வழங்கிவிடுவான்.
எழிலரசி ராயல்புளூ சேலை அதில் மாங்காய்வடிவம் அதில் பல இடம் பெற்றுயிருந்தது. அதற்கு சிவப்புநிறம் நூல்வேலைபாடு அமைந்த பிளவுஸ். மெல்லிய அலங்காரம், அளவான மல்லிகைபூ, எமரால்ட் மற்றும் வெள்றை கற்கள் அதனுடன் முத்துகள் தொகுங்கும் ஆரமும், அதன் வடிவிலேயே தோடு அணிந்திருக்க.. அவளுடன் சிவப்பு அதில் புளூகலர் மெல்லிய கோடு போட்ட சட்டை, பட்டுவேஷ்டி கட்டியிருந்தான் அரசியின் வேந்தன்.
அதிகாலை ஹோமம் முடிந்து திறப்புவிழாவிற்கு இன்னும் சிலமணி நேரங்கள் இருப்பதால் ஹோட்டல் மாடியில் இருக்கும் ஏசி பகுதிகள் முழுவதும் சேர்கள் எடுக்கப்பட்டு அங்கு தரையில், சேரில் என அமர்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட இடத்தில் அனைவரும் அமர.. சிலர் படுத்தனர்.
” தனு நாம்ம இனிப்பு செய்ற இடத்திற்கு போய் பார்த்துட்டு வரலாமா?. ” வேந்தனின் மடியில் படுத்துயிருந்தவள் வேகமாக எழுந்து கேட்க.. அவன் பதில் சொல்லாமல் அவளை முறைத்தபடியே கால்களை பார்க்க.. அச்சசோ.. ” தனு நான் மெதுவா தான் எழுந்தேன். ”
” படு.. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் போகலாம். ”
‘ போலாமே ‘ என கண்களால் கொஞ்ச.. அதனை பார்த்தவன்.. நான் இருக்க சந்தோஷத்தில்!. இவ நார்மலா பார்த்தாளே நான் காலி.. இப்படி பார்க்குறாளே!. வேந்தா வேந்தா..
” சரிவா. ” முதலில் அவன் எழுந்து.. பின் அவளிடம் கைநீட்ட.. அவளிற்கு எப்போதும் தோன்றும் முதன்முதலில் கோயிலில் கைநீட்டிய நினைவு தான். அவனுக்கும் அதே தான். புன்னகையுடன் எழுந்து.. செய்யும் இடத்திற்கு சென்றார்கள்.
இவர்களின் அருகில் இருந்த சித்ராவிடம்.. ” அம்மா.. நீங்க ஏன் ஒருமாதிரி இருக்கீங்க. ஏன்அக்கா, மாமா இப்ப வரல?. அக்காவுக்கு நல்லா இருக்குல?. ” வசுந்தரா சாருலதா வீட்டில் இருந்து சுமதியுடன் வந்ததால் கேட்க.
” வினோ நல்லாயிருக்கா. டையா இருந்தா நான் திறப்புவிழா நேரத்திற்கு வா போதுனு சொன்னேன். அவ இருப்பதால் மாப்பிளையும் அங்கே இருந்துட்டார். கொஞ்சம் நேரத்தில் வந்துட்டுவா. ”
பின்ன ஏன் என்பது போல பார்க்க.. ” இல்ல வேந்தன் எழிலரசி கால் நினைத்து ஏன் இப்படி பயப்படுறான்?. அவ கால் தான் நல்லா சரியாகிடுச்சு. ஆனா அவள இன்னும் முத வாரம் பார்த்துக்கொண்டு போலவே பார்த்துகிறான். எழில் விஷயத்தில் மட்டும் அவன் நடவடிக்கை புசுசா இருக்கு. ”
இதனை கேட்ட வசுவிற்கு பார்த்தும், கேட்டும் சலித்துவிட்டது. வேண்டா வெறுப்பாக அவரின் கவலைக்கு பதில் கூறபோகையில்..
” சித்ரா இங்க வாம்மா. ” அவளின் பாட்டி அழைக்க.. அப்பாடா.. என சித்ராவுடன் வசுவும் அவருடன் சென்றாள்.
” சித்ரா தாலி செய்ய கொடுக்க.. விழா முடிந்தவுடன் போறிங்களா?. ”
” ஆமாம் அத்த.. திறப்புவிழா முடிந்த கொஞ்சம்நேரம் கழித்து நான், ராகவன் அண்ணா, லட்சுமி, வேந்தன், எழிலரசி போறோம். ”
” அவன் கண்டிப்பா எழிலரசியும் கூட வரனும் தான் சொல்லிட்டு இருக்கானா?. ”
சடங்கடத்துடன் ‘ ஆம் ‘ என தலையசைத்தார்.
” ம்.. இவன் பிடிவாதம் பார்த்தா சந்தோஷபடுவதா.. இல்ல கோபப்படுவதானு தெரியல. இவன பார்த்து மத்த பசங்க பிடிவாதம் பிடிக்காம இருக்கனும். ” என்ன அவரிடம் என்ன சொல்ல என சித்ரா பார்க்க..
” அம்மா.. ” அழைத்தபடி வேந்தன் வேகமாக அவர்கள் அருகில் வந்தவன்..
” ம்மா.. ஆசாரி இப்பவே நம்மள வர முடியுமானு அப்பாவிடம் கேட்டாறா.. திறப்புவிழாவிற்கு இன்னும் நேரம் இருப்பதால் அவரும் சரினு சொல்லிட்டாறா. உங்களுக்கு ஓகே தானே?. ”
” அதான் ஆசாரிக்கு சரினு சொல்லியாச்சு இல்ல. பின்ன சரியானு இப்ப கேட்குற. கிளம்புங்க. ” பாட்டிய கூறிய பின்னும் அம்மாவை பார்க்க.. ” ம். நாம்ம இப்ப கிளம்பலாம் டா. எழிலரசி?. ”
” கீழ இருக்கா. அம்மா நம்ம கூட அப்பா, மாமா, சக்கரவர்த்தி பெரியப்பா, அருள்அண்ணா அவங்களும் வராங்க. ”
” ம்.. சரிடா. நாங்க போய்யிட்டு வரோம் அத்த. ” பக்கத்தில் இருந்த வசுவிடமும் பார்த்துக் கூறிவிட்டு கிளம்பினார்கள்.
அனைவர் முன்னும் தங்கள் காதல் முழுவதும் கண்களில்.. ஒரு நொடி தன் துணைகளுக்கு உணர்த்தி.. உணர்ந்து.. இருவரும் அந்நிகழ்வை பார்த்தனர்.
தான் முதன்முதலில் வாங்கிய தங்ககாயின் மற்றும் வைரம்.. தன்னவளிற்கு சூடும் மாங்கல்யம் தான் என்று.. தான் வைத்துயிருந்ததை.. பிரகாதாம்பாள் கோயில் இறைவனிடத்தில் வைத்து பூஜை செய்து.. பின் வீட்டில் பூஜை அறையில் அம்மா, அப்பாவிடம் கொடுக்க.. அதை இப்போது இருவரின் பெற்றோர்களும் ஆசாரியிடம் கொடுக்கும் தருணத்தில்.. தான் இருவரும் கண்களால் காதல் மொழி பேசினர்.
ஆசாரியிடம் கொடுத்ததை அவர்கள் கண்முன்னே பிரிக்க.. பார்த்தவர்கள் ஒருநொடி அதிர்ந்தனர். தங்கம் எவ்வளவு இருக்கும்?. என உணர்ந்தார்கள்.. வைரம் எதிர்பார்க்கவில்லை. அனைவருமே அவனை பார்க்க.. அவனின் பார்வை முழுவதும் மனம் மகிழ்வுடன் தன்னவளின் கையை பிடித்துக்கொண்டு தங்கத்தை உருக்குவதை பார்ப்பதில் இருந்தது. பின்னர் அவர்களும் ஏதும் கூறமுடியாமல் இனிமையான பொன்னுருக்கல் நிகழ்வை!. பார்த்தனர்.
அவர்கள் செய்யும் முறையிலேயே தான் செய்ய போகிறார்கள் ஆனால் அதில் அவன் கற்களை பதிக்கும் படியான மாங்கல்யத்தை செய்யகூற.. அதனை அவரும் ஒப்புக்கொண்டார். ஆசாரியிடம் கூறிய வைத்ததை போல அவர் மொத்த காயினை உருக்கி அதில் இருந்து சிறிது மட்டும் எடுத்து கொடுத்தார். அதனை வாங்கி பத்திர படுத்திக்கொண்டான்.
பின் குறிப்பிட்ட நாளில் கொடுக்கப்படும் என தெரிவிக்க.. இப்போதைக்கு எதை பற்றியும் பேச வேண்டாம் என பெரியவர்கள் அமைதியாக வர.. இருவரும் கைபிடித்த படியே அரசி வேடிக்கை பார்க்க.. அவனவள் அவளை பார்த்து என அனைவரும் அமைதியாக ஒவ்வொரு மனநிலையில்.. இனிப்பகத்தின் முன் வேனில் வந்தனர்.
இனிப்பகத்தில் இறங்கிய பின்னர் அனைவரையும் புன்னகையுடன் பார்த்து அவரவர் தங்களுக்கு உரிய வேலை செய்ய போக.. அரசி தன்னவனை மேலே காண்பித்து ஒருபார்வை பார்க்க. ‘ முயல்குட்டி நான் என்ன நினைத்தா.. நீ என்ன நினைக்கிறா?. ‘
அவளை முறைத்து ‘ வா முயல்குட்டி ‘ என்ற லுக்கை காண்பித்து.. இனிப்பகத்திற்கான ஹோட்டல் ஆபிஸ் அறையில் நுழைந்தவன் கதவை தாழிட்டு.. ” முயல்குட்டி நான் என்ன நினைத்தா.. ” அரசியின் அருகில் அவளின் முகத்தை வேகமாக தாங்கி பிடித்து.. வேறு ஒன்றை நினைத்து செய்யப் போக..
அவனவள் கண்கள் கலங்கி அவனை பார்த்தாள். அவன் மகிழ்ச்சியை வேறு விதத்தில் தெரிவிக்க நினைத்தால்.. இவள் வேறு விதத்தில் காண்பித்தாள். அவனின் நோக்கம் தெரியும் ஆகையால் தன்னை பார்த்து அதிர்ந்து! ஒன்றும் கூறமுடியாமல் நிற்பவனை.. கால் உயர்த்தி அவனின் நெற்றியில் ஆரம்பிக்க.. பின் அந்தரத்தில் அவளவனின் இறுக்கிய அணைப்பில் இருந்தபடியே முகமெங்கும் முத்தம் பதித்து.. இறுதியில் இதழில் மென்முத்தம் பதித்தாள். கூடவே அவனும் கொடுக்க.. சிலநிமிடங்கள் பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்தது.
” ஐ லவ் யூ முயல்குட்டி.. ” அவளின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு கூற.. ” லவ் யூ தனுமாமா. ” என அவனின் கன்னத்தை பிடித்திழுத்து கூறினாள்.
பகலவன் இருதினங்களுக்கு பிறகு மக்களை காண வந்துவிட்டவரின் வெளிச்சத்தில்.. அந்த இருமாடி கட்டிடத்தின் தரைதளத்தில் இருக்கும் எழில்வேந்தன் இனிப்பகம் பலூன் அலங்காரத்துடன் திறப்புவிழாவிற்கு காத்திருந்தது.
அழைத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வந்துவிட.. வேந்தன் இருவரின் அம்மாச்சி, பாட்டிகளை ரிப்பன் கட்செய்ய வைத்து பெரியவர்களை முதலில் நுழைய வைத்து.. பின் தன் முயல்குட்டியின் கையை பிடித்து.. அவளின் விருப்ப இனிப்பக உலகத்திற்குள் நுழைந்தனர்.
கடை முழுவதும் மெரூன், ஆரஞ்சு வண்ணத்தில் உள் அலங்கரத்துடன்.. ஆரஞ்சு தங்க நிறம் கலந்த கலவையாக சுவரின் வண்ணம் இருக்க.. அங்குயிருக்கும் விளக்கியின் ஓளியில் சுவர்கள் மின்னியது. நிறைய இனிப்புகள் பெயருடன் வைத்திருக்க.. குறைந்த அளவிலான ஆனால் பிரத்தேக வகையான கார வகைகளும் பெரியவர்களின் அறிவுரையின் பெயரில் வைக்கப்பட்டு இருந்தது.
இனிப்பு, காரம் போன்றவைகளுடன்.. காலையில், மதியம் ராகி, கேழ்வரகு கூழ் போன்ற குடிக்கும் பானம், மாலை பருத்திபால், கருப்பட்டிகாபி, டீ, நாட்டுச்சர்க்கரை காபி,மசாலா டீ என இனிப்பு, காரத்துடன்.. உட்கார்ந்து சாப்பிடுவதற்காக நான்கு பேர் அமரக்கூட ஆறு டேபுள், சேர், இருவர் அமரக்கூடிய நான்கு டேபுள் சேர்களும்.. என வேண்டியவற்றை வாங்கி முன்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்த்து உட்காருபடியாக அமைக்கப்பெற்ற கண்ணாடியும் அருகில் இருந்தது.
தரைதளத்தின் இருகடைகளுக்கும் நடுவே ஆபிஸ் அறை.. அதனுள்ளே அரசிக்கு ஏற்றார்போலான ஓய்வு எடுக்கும் அறையும் இருந்தது. அழைப்பை மதித்து வந்தவர்கள் தேவையானதை கேட்டு வாங்கி இனிப்பகத்தினுள் சிலர், பக்கத்து கடையில் சிலர் என அமர்ந்தார்கள். சிலர் முழுவதையும் பார்வையிட சென்றார்கள்.
” வேந்தா.. கடையும், இனிப்பு எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு. ”
ஒரு இனிப்பை எடுத்து வேந்தனின் மாமா ராகவன்.. வேந்தனிற்கு ஊட்டி விட புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
” இந்த ஸ்விட்ஸ் எல்லாம் நீ கொடுத்த லிஸ்ட்டா இல்ல எழிலரசி கொடுத்தா டா?. ” எழிலரசிக்கு யோகா ஊட்டிவிட்டவாறே கேட்க..
” அதெல்லாம் சொல்ல முடியாது. கம்பெனி ரகசியம். ” அவளின் அருகில் மெதுவாக கூற..
அவனின் தோளில் அடித்து.. ” நான் ஈசியா கண்டுபிடித்து விடுவேன்.. பாவம் பொழச்சுபோ. ”
புன்னகையுடன் அடியேனின் நன்றிகள் பல.. என்பது நெஞ்சில் கைவைத்து காண்பித்தான்.
” வேந்தா இரண்டுமாதத்தில் எல்லாம் வேலையும் முடிந்துயிருக்கு.. செலவு ரொம்ப அதிகமாகி இருக்கும் போல?. ” சித்ரா முகத்தில் மகிழ்ச்சியுடனும்.. மகனிற்கு எங்கே அதிக செலவு வந்துயிருக்குமோ என்ற கவலையை மனதில் நினைத்தபடி கேட்க.
” செலவு அதிகமெல்லாம் இல்ல அம்மா. நான் பிளான் பண்ணியதை விட கம்மியா தான் வந்துயிருக்கு. ”
அப்படியா!. என மட்டும் சித்ரா பார்க்க.
” ஏன் அண்ணா.. அம்மாவிடம் விளக்கம் சொன்னா உன் கம்பெனி ரகசியம் வெளிய தெரிந்துவிடுமா?. ”
அம்மாவிடம் விளக்கம் கூறியிருக்கலாம்.. என சித்ரா மனதில் நினைப்பதை புரிந்து கேட்டாளா?.. இல்லை தனக்கு தெரியவேண்டும் என அம்மா பெயரை உள்ளிழுத்தாளா? அவள் மட்டுமே அறிந்தது.
அருகில் முக்கியமானவர்கள் மட்டும் இருக்க.. ” அப்படியெல்லாம் இல்ல. இதையெல்லாம் தாராளமா எல்லோருக்கும் சொல்லாம். ஆனா நானான சொல்லமுடியாது. இதை செய்தது அரசி. அவ சரி சொன்னாதான் நான் சொல்லமுடியும். ” தன்னவளை பார்த்தான்.
அவளோ ஏன்டா?. நான் என்ன உனக்கு குறை வைத்தேன். இப்படி தீடிர்னு மாட்டிவிடுற. என்ற பாச பார்வை பார்த்து யாரும் அறிய வண்ணம் முதுகில் கிள்ளி.. ” சொல்லு தனு. ” மெல்லிய குரலில்கூற.
அவன் முதுகில் ஏதோ கொசு கடித்தார் போல.. ” அரசி இங்க கொசு ஏதும் பார்த்த.. என் முதுகில் கடித்த மாதிரி இருந்தது. ” சாதாரணமாக அவளை போல மெல்லிய குரலில் புன்னகையுடன் கேட்க..
தன்னவளின் போடா என கண்கள் பதில் அளிப்பதை ஏற்று.. எதிரில் பார்த்தான். இதை பார்த்திருந்த அவர்களுக்கு அவன் அரசிக்கு பதில் கூறியது போல இருந்தது.
” ம்மா. இங்க ஆரம்பித்தது முதல்.. எல்லாம் வேலையும் இரண்டுவேளை ஆட்கள் போட்டு.. கட்டிடத்திற்கு தேவையான அளவு நாட்கள்விட்டு.. நான்கு மாதங்களில் முடியும் வேல இரண்டுமாதத்தில் முடித்திருக்கு.
கதிரவன் மூலமா கட்டும் பணியாட்களிடம் நாள் கணக்கு இல்லாம மாத கணக்கு வைத்து ஆரம்பத்திலே சம்பளம் பேசியும்.. அவங்க மாமாவிடம் இந்த கட்டிடத்திற்கு செங்கல், ஜல்லி, சிமிண்ட்,இரும்பு எவ்வளவு தேவையென்று விசாரித்து.. மெத்தாமா பேசி.. வாங்கி அவங்க இடத்தில், மில்லில் என்று வைத்துயிருந்தது. ”
” இது மாதிரியே கார்த்திக் மாமாவிடம், சந்துருவிடம், அப்பாவிடம் என எல்லாரிடமும் சரியான டீடைல்ஸ் வாங்கி மொத்தமா கிடைக்கும் இடத்திலே வாங்கி.. உடனே உடனே செய்ததால எதுவும் அதிகமாவே, வீண்ணாகியும் போகல. இந்த நேரத்திற்குள் முடிக்கனும் இருந்ததால எல்லோருமே சரியா நேரத்தில் செய்து கொடுத்து சீக்கிரமா கட்டிடம் வந்துவிட்டது. ” மெல்லிய புன்னகையுடன் கூறினான்.
“ம்.. மெத்தமா அரிசி, பருப்பு வியாபரம் செய்பவரின் பொண்ணு நிருபித்து விட்டாங்க. அப்படிதானே அண்ணா?. ” புகழ்ச்சியா?. இல்ல நக்கலா?. என்ற அறியா குரலில் மெல்லிய புன்னகையுடன் வசுந்தரா கூற..
ஒருநொடி அங்கு அமைதி நிலவியது. இவள என்ன பண்ணணுறது?. என்ற பார்வை யோகா விடுத்து.. எழிலரசியை பார்க்க..
அவள் யாரையோ தேடினாள். பின் வேந்தனை பார்க்க.. அவன் வசுவை ஏதோ புரியாத பார்வை செலுத்தி விட்டு.. தன்னவளை அறிந்து.. ” அரசி.. மாமா இங்கு வந்தவங்கள.. ஹோட்டலிற்கு சாப்பிட கூப்பிட்டு போயிருப்பாரு. ” அவள் சரி என அவனை பார்த்துவிட்டு.
வசுவிடம் திருப்பி.. ” வசுந்தரா நீங்க இப்ப சொன்னதை மறக்காம எங்க அப்பாவிடம் சொல்லிடுங்க. நானும், இன்பா அண்ணாவும் யார் அவர் மாதிரி இருக்கோனு சண்டை வரும். இன்பா அண்ணாவ.. எனக்கு தெரிந்து யாரும் சொன்னது இல்ல. நான் தான் முதலில் அவர் மாதிரினு பெயர் வாங்கிட்டேன். தேங்க்ஸ் வசுந்தரா. ” புன்னகையுடன் கூறி இன்பா பார்க்க..
அவன் புன்னகை புரிந்து தோள் அணைத்துக்கொண்டான். எப்போதும் காட்டும் முறைப்பு இல்லாமல் புன்னகையுடன் பார்த்தான் வேந்தன்.
சில நொடிகளிலேயே.. ” ம்.. போதும் போதும் ” அவனின் கையை தட்டிவிட.. விரிந்த புன்னகை செலுத்தியும்.. மற்றவர்களின் சங்கடத்தை மாற்றும் பொருட்டு.. ” மாமா கல்யாண சேலைக்கு டிசைன்ஸ் அனுப்பிட்டாங்களா?. ”
அவன் அம்மா, யோகாவிடம்.. ” மெசேஜ் அனுப்பியிருந்தனே.. எந்த டிசைன்ஸ் நல்லாயிருக்குனு.. பார்த்து செலக்ட் செய்து அனுப்பிட்டிங்களா?. ”
” இல்லடா. போனில் பார்க்க நல்லாயிருக்கு. ஆனா எழிலிற்கு நல்லா இருக்குமானு செலக்ட் பண்ணமுடியல. ”
” அக்கா உங்களை சேலை தான் செலக்ட் பண்ண சொன்னேன். அரசி நல்லாயிருக்கும்மா இல்லையானு நீங்க பார்க்க வேண்டாம். அந்த வேலையை நான் பார்த்துப்பேன். ” புன்னகையுடன் கூற..
அவனை முறைப்பு ” கொழுப்புடா உனக்கு. “ தன்னவள் கூறிய நினைவில் அவளை போலவே புன்னகையுடன்.. ” எங்க அக்கா?. ”
” ம்.. உன் வாயல தான். ” அவள் கூறியவுடன் டக் என்று அரசியை பார்த்து திருப்ப..
அவள் தனு தன்இதழை பிடித்து கூறுயதை எண்ணி.. வேந்தனையும் யாரையும் பார்க்காமல்.. சிரிப்புடன் சுற்றி சுற்றி பார்த்து.. தன் வெக்கத்தை மறைத்தாள்.
யோகா தொடர்ந்து.. ” நீ தானடா பார்த்து சொல்லுங்கனு.. எல்லோருக்கும் அனுப்பி வைத்த. சேலைய வாங்கினா.. யாருக்கு வாங்குறேமோ அவங்களுக்கு நல்லாயிருக்கானு பார்த்துதான் செலக்ட் பண்ண முடியும். ” தன் அருகில் இருந்த சித்ரா, சாந்தி மற்றும் இருக்கும் பெண்களை பார்த்து கூற..
ஆண்கள் யாரும் இல்லை அப்பாடா.. சேலை பற்றி ஆரம்பித்ததும் நிம்மதி கொண்டு.. ஆண்கள் வருகிறோம் என்ற பார்வையை செலுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
அருகில் காவ்யா, மேகா, மாலதி, பத்மா, சாந்தி, வித்யா, ராஜேஷ் உறுதி மாலை என்பதால் ரேவதி, தாமரை இருந்தனர். யோகாவுடன் ஆர்த்தி, இளமதி, சுரபி இருந்தனர். வேந்தனின் பேச்சை அனைவரும் கேட்டனர்.
” அப்படியேல்லாம் வேண்ணா. நான் ஹோட்டல் மாடியில் இருக்கும் டிவியில் எல்லோரும் சேர்ந்து சேலை பாருங்க. பொதுவா மணப்பெணுக்கு எந்த சேலை நல்லாயிருக்குனு.. உங்க போனில் இருந்து எனக்கு அனுப்புங்க. நான் அதில் இருந்து எனக்கு பிடித்ததை செலக்ட் பண்ணிக்கிறேன். ” அம்மாவை பார்த்துகூற..
” சரி டா நாங்க பார்க்கிறோம். அதல யாருக்காவது ஏதாவது சேலை பிடித்தா அதையும் நெய்து தருவாங்க தானே?. “
யோசிக்காமல்.. ” கிடைக்கும் தான். ஆனா ம்மா இதெல்லாம் மணப்பெண்ணுக்கான சேலை. கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும். அப்படியிருந்தும் பிடித்துயிருந்தா எனக்கு அவங்களுக்கு பிடிச்ச சேலையையும் சேர்த்து அனுப்ப சொல்லுங்க. அரசிக்கு எடுக்காத சேலையா இருந்தா. அதன் பின் நான் அந்த சேலை டீடைல்ஸ்சும் அவங்க போன் நபர் அனுப்பி வைக்கிறேன். மற்றது அவங்களே பேசிக்கட்டும். ” அவன் கூற கூற சித்ரா முகத்தில் மாற்றம் வந்தது.
” அது என்ன எடுக்காத சேலை?. நீ மாற்றி எடுக்க மாட்டாயா?. விருப்பவர்களிடம் முடியாதுனு சொல்லுவியா?. இல்ல நானே யாருக்காவது எடுத்தா முடியாதுனு சொல்லுவியா டா. ” மெதுவாகவும்.. அதேசமயம் கடுமையாகவும் கேட்டார்.
” கண்டிப்பா சொல்லுவேன் ம்மா. இது எங்க கல்யாணத்திற்கு அரசிக்கு என்று ஸ்பெஷலா டிசைன் பண்ணது. அதில் இருந்து எனக்கு பிடித்ததை நான் செலக்ட் பண்ணணும். நீங்க தான் எனக்காக மாத்திகனும்.
இல்ல யாருக்கு எடுக்கிறீங்களோ.. அவங்களுக்கு என்று தனியா டிசைன் பண்ணி வாங்கிக்களாம். நான் எக்காரணத்தை கொண்டும் மாற்றிக்க மாட்டேன். ” பிடிவாதமான குரலில் அவரைவிட கடுமையாக கூற..
தான் கேட்ட பிறகும்.. எதற்கும் எல்லாவற்றிக்கும் மீண்டும் மீண்டும் தன் பேச்சிற்கு மறுப்பும், அதில் பிடிவாதமும் இருப்பதால்..” வேந்தா நீ எப்ப இப்படி சுயநலமா மாறின?. ”
தன் மகன் வேந்தன் செய்வதில் கடந்த சில நாட்கள் மட்டும் எடுத்துக்கொண்டு… இத்தனை வருடங்களாக செய்த எதை பற்றியும் யோசிக்காமல் கூற..
வேந்தன் எழிலரசி அதிர்ந்து பார்க்க.. யோகா, சாந்தி, சுரபி, ஆர்த்தி, இளமதி கலக்கத்துடன் பார்க்க.. மற்றவர்களோ மனதில் இருப்பதை கூறியது போல மனதில் புன்னகையும்.. வெளியில் சாதாரணமாக பார்த்தனர்.
முதலில் நிகழ்காலத்திற்கு வந்த எழிலரசி யோகாவிடம் திரும்பி.. ” அண்ணி.. தனுஅண்ணா.. மாடியில் லாப்டாப்பில் இருந்து.. டிவியில் இப்ப கனெக்ட் வச்சுருவாங்க. எல்லாம் பார்த்து.. நாம்ம ஸ்கூலுக்கு போகனும் இல்ல. அதுக்குள்ள அனுப்பிவிடுங்க. இந்திரன் மாமா தனியா நிக்கிறாங்க நாங்க போறோம். ”
தன்னவனின் கையை அழுத்தி பிடித்து வேகமாக திரும்பபோக.. ” அரசிசி மெதுவா திரும்பு. ” அப்போதும் அக்கறையுடன் கூற..
அவனை முறைத்து ” எனக்கு தெரியும் தனு. வாங்க. “
இரு என அவளை நிறுத்தி.. ” அக்கா வினோவும் ஸ்கூலுக்கு வரேனா. மாமாவிடம் கேட்டு.. அதன்பிறகு கூப்பிட்டுவாங்க. இல்லனா அவரையும் கூட வரச்சொல்லுங்க. ” பதில் அளிக்கவும், பதில் எதிர்பாராமலும் தன் அரசியுடன் அவளின் பின்னால் சென்றான்.
” என்ன சித்ரா இப்படி கேட்டுவிட்ட? ”
அவர் எதையும் யோசிக்காமல்.. ” பின்ன என்ன அக்கா. அவன் எல்லாவற்றிலும் இப்படிதானு பிடிவாதம். காலையில் மாங்கல்யத்திற்கு அவன் தான் தங்கம் கொடுப்பேன்னா.. சரினு விட்டா.. அதோட வைர கல்லும் கொடுக்குறான். ” அவரை பேசவிடமால்..
” நம்ம முறையில் வைரமும் போடுவாங்க சித்ரா. அவங்க அவங்க விருப்பத்தை பொருத்து பண்ணுவாங்க. இது அவன் கல்யாணம். என்னமோ மற்றவர்களின் கல்யாணத்தில் இதுதான் வேண்டும்.. இப்படி தான் செய்வேனு.. சொன்ன மாதிரி பேசுற. ”
” நீங்கதான் அண்ணி.. புசுசா பேசிட்டு இருக்கீங்க. ஒருவீட்டில் ஒரு மருமக வைரதாலியும், ஒருமருமக தங்கதாலியும் போட்டா நல்லாயிருக்கும்மா சொல்லுங்க. ”
” மாலதி.. இது ஒன்னும் யாரும் போடல. அவன்தான் எல்லாம் பண்ணுறான். “
அவரை பேசவிடாமல்.. ” அதான் அண்ணி இப்ப பிரச்சனையே. ” அவர் அடுத்து பேச வர..
” அத்த உங்க பேச்சை இத்தோட நிறுத்திக்கோங்க. வேந்தனுக்கு தெரியும் எது பிரச்சனை வரும்.. வராதுனு. எதையும் யோசிக்காம பண்ணமாட்டான். ”
ஆர்த்தியிடம் திரும்பி.. ” வாங்க நாம்ம சேலைய பார்த்து அனுப்பனும். அவங்க எல்லாம் சேலைய பொறுமையா பார்த்து அனுப்பானா அனுப்புவாங்க. இல்ல அமைதியா இருப்பாங்க. நாம்ம அடுத்து ஸ்கூலுக்கு போகனும். ” தாய் சாந்தியை உடன் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
கோபமாக சொல்லும் யோகாவை பார்த்து.. அங்கு வந்த சுந்தரம்.. ” ஏன் யோகா பொண்ணு இப்படி கோபமா போகுது?. ” காவ்யா தன் அப்பாவிடம் நடந்ததை மேலேட்டமாக கூற..
மற்றவர்களை பார்த்து.. ” போனில் இருப்பதை பார்த்து அனுப்புங்க. சித்ரா என் கூட வாம்மா. ”
அவர் கூட்டிச் சொல்லும் போதே வேந்தனை எழிலரசி சொன்ன இடத்தில் பார்க்க.. அங்கு இல்லை. ரவிந்திரன், ராகவன் மட்டுமே இருக்க.. கணேஷ், சுமாமிநாதன் அவர்கள் சற்று தள்ளியிருந்தனர்.
நேராக அவர்களிடம் சென்றனர்.. ” கணேஷ் அண்ணா.. நீங்க ராகவன் அண்ணாவிடம் பேசிட்டீங்களா?. ” சித்ரா புரியாமல் நின்றாள்.
” இல்ல சுந்தரம். அண்ணா மாமா கூடவே இருக்கார். இனி அழைத்தவர்கள் அதிகம் இருக்கமாட்டாங்க. கொஞ்சம் நேரம் பார்க்கலாம். ”
சித்ராவை பார்த்தவர்.. ” என்ன சித்ரா பையன் கடை திறந்து இருக்கான்.. சந்தோஷமா இங்க நிக்காம எங்க போய்யிருந்த?. வேந்தனும் அந்த பொண்ணும் எங்கேயே கிளம்பிட்டாங்க. மாமா மட்டும் தான் இருக்கார்.
வசு எங்க?. அவளையும் நிக்க சொல்லு. கடைய பற்றி தெரிந்துக் கொள்ளட்டும். அந்த பொண்ணு பார்.. அப்பா, அண்ணா கூட இருந்து இந்த கடைய எப்படி விவரமா சொந்தகாரங்க மூலமாவே கட்டிமுடிச்சு.. தான் தான் கடை ஓனர் என்று இருக்கா. வசு வேந்தனிடம் சண்டை பேசுறாளே ஒழிய அண்ணா கூட இருந்து எதையும் கத்துக்கல. வினோ அவ வயசில் பாங்க் எக்ஸாம் எழுதி வேலைவாங்கிட்டா. ”
” வசுதான் கேப்பஸ்சில் செலக்ட் ஆகிட்டாள்ள?. ”
“சித்ரா. அதில் செலக்ட் ஆகி என்ன பண்ண?. படிப்பு முடிந்து ஒருவருடம் தான் வேலைக்கு போகமுடியும். கல்யாணம் முடிந்து இங்கதானே இருக்கனும். அதனால இனி நேரம் கிடைக்கும்போது வேந்தனிடம் ஏதாவது கத்துக்க சொல்லனும். சரி நீ ஏன் டல்லா இருக்க? “
சித்ரா கூற வருவதற்குள் சுந்தரம் காவ்யா கூறியதை கூற.. சித்ராவை பார்த்து.. ” ம்.. எனக்கு வேந்தன் நடவடிக்கை பற்றிய சில கேள்வியெல்லாம் இருக்கு. நான் இன்னைகே மாமாவிடம்.. அண்ணா மூலம் பேசலாம் என்று இருக்கேன். ”
” என்னுடன் வாம்மா. ” அவர்களிடம் இருவர் மட்டும் சென்றனர்.
” மாமா அழைத்தவங்க எல்லாம் வந்துட்டு கிளம்பியாச்சா?. ”
” ம்.. அழைப்பின் பெயரில் வந்தவங்க கிளம்பியாச்சு. எல்லாம் தொடக்க நாளிற்காக அதிகாலை வந்ததால நாளையில் இருந்து தான் முழுநாள் ஆரம்பிக்கனும். அதனால கடையில் இருப்பவர்களும் நாம்மளும் கிளம்ப வேண்டியது தான். ”
” ஹோட்டல் கூட இன்னைக்கு மதியம் வரைக்கும்தானா?. இல்ல.. ”
” இன்னைக்கு ஹோட்டல் வெளிஆட்களுக்கு கிடையாது. இங்க அழைப்பில் வந்தவர்களுக்கும், இங்க வாங்க வருபவர்களுக்கு மட்டும்தான். “
கணேஷ் கேள்வியில் ஏதோ மறைந்துயிருப்பது போல இருக்க ராகவன்.. ” என்ன கணேஷ்?. என்ன ரவியிடம் தெரிந்துக்கொள்ள வந்துயிருக்க?. ”
தன் அண்ணா கண்டுகொண்டதை நினைத்து அதிர்ந்தாலும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நினைத்து..
மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. நான் மட்டும் இல்ல அண்ணா.. சுந்தரம், சுமாமிநாதனும் சேர்த்து. எங்களுக்கு மாணிக்கம் மாமா, ரவி மாமாவிடம் சில விஷயங்கள் இன்னைகே கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் அண்ணா. அதான் எங்க பேசலாம்?. ” இருவரையும் பார்த்து கேட்டார்.