மதுரையின் மாசி மாத வெயிலின் உக்கிரத்தை தனித்து A/C யின் குளுமையுடன் வீரேஷின் வெள்ளை Bentley Bantayga சீறி பாய்ந்து பறந்து கொண்டிருந்தது. காரின் வேகத்துக்கு இடு கொடுக்கும் படி காரில் ஒடும் பாடல்களும் என வீரேஷும், சுதர்ஷனும் கோவிலில் இருந்து கிளம்பியிருந்தனர். கோவில் தரிசனம் முடித்து வீரேஷும், சுதர்ஷனும் நேராய் வீரேஷ் தங்கிருக்கும் ஹோட்டல் மரியாட்டிற்கு (Hotel Marriot) சென்று கொண்டிருந்தனர்.
மதியம் அவர்கள் கல்லூரியில் உடன் படித்த நண்பன் ஆரம்பித்திருக்கும் உணவகத்திற்கு செல்வதாய் முடிவு. எப்பொழுதும் தொழில், தொழில் முறை சந்திப்புகள், கான்பரன்ஸ்(conference) என்று பரபரப்பாய் சுலன்று கொண்டிருந்தவர்களுக்கு நண்பர்களுடன் செலவிடும் இந்த நாள் அவர்களுக்கு மிக பெரிய அழுத்த நிவாரணி(stress reliever.). அதனால் ஏதொ ஒரு காரணத்திற்காக அல்லது காரணம் ஏற்படித்தியாவதுவருடம் ஒரு முறையேனும் சந்திப்பதை வாடிக்கையாக்கிருந்தனர். வழக்கத்திற்கு மாறாய், சுதர்ஷனும் அமைதியாய் வர வீரேஷின் மனதெல்லாம் கோவிலயே சுற்றிக்கொண்டிருந்தது.
வீரேஷிற்கு, மனம்முழுதும் மீன் கண்கள் வியாபித்து இருந்தாலும் ஏதொ ஒருவித பதட்டமும், பரபரப்பும் அவனுடன் ஒட்டிக்கொண்டது போல் மனது நிலையில்லாமல் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.மீன்விழியாளின் விழிகள் மனதில் நங்கூரம் போட்டது போல் பதிந்திருந்தாலும் அவனால் இன்னும் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை.
பதின்பருவ பையன் போல் மனது ஒரு நிலை இல்லாமல் பரபரத்து கொண்டிருப்பது அவனுக்கே வெகு ஆச்சர்யமாய் இருந்தது. அவன் பார்க்காத பெண்கள் இல்லை,கல்லூரி காலம் முதல் இப்பொழுது வரை அவனாக ஒரு பெண்ணை பற்றி அதிகம் சிந்தித்தது இதுவே முதல் முறை. கல்லூரியிலும்சரி, லண்டனில் படிக்கும் பொழுதும் சரி அவனின் மற்ற நண்பர்கள் காதலியுடன் டேட்டிங் என்று செல்லும் பொழுதும் ஒரு சின்ன சிரிப்பொடுக் கடந்துவிடுபவன் இன்று இருக்கும் இந்த துள்ளல் இதற்க்கு முன் அவன் அறியாதது.
முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தவனை ஒரு அயலானை பார்ப்பது போல்பார்த்துக்கொண்டிருந்தவன், “டேய் போதும் ! எந்த உலகத்துல உலா வந்தாலும் சரி, நீ ஒட்டுற வேகத்திற்க்கு கண்ணை மட்டும் பூலோகத்தில் குறிப்பாய் மதுரயில வை. எங்க வீட்டிற்கு நான் ஒரே பையன்.” என்று கடுப்பாய் கூற.
பின்னே தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் அவன் வாய் என்னும் வானொலியை மூடாதவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் இவன் கனவுலகத்தில் மிதந்தபடி வந்தால் கடுப்பாகாமல் என்ன செய்வான்.
“கூல்டா…நான் கூட தான் ஒரே முதல் பையன், உன்னை போலவா பயப்படறேன்! ” என சட்டென நிகழ்காலத்திற்க்கு வந்தவன், ஒரு நொடியில் தன்னை சமாளித்து அவனுக்கு சலைத்தவன் இல்லை என்று நிருபித்தான்.
இன்னும் தன்னிடம் இவன் வாயை திறந்து ஒன்றும் சொல்லாதால் கோவிலில் நடந்ததையும் இப்பொழுது அவன் செயல்பாடுகளையும் கண்டும் காணாதவானாய், “மச்சி, இன்னுமாடா இந்த வசனத்தை வச்சு ஒப்பேத்திக்கிட்டு இருக்க.” என்று தலையில் கையால் தட்டி நொந்துகொள்ள,
“உன்னால் இதை யுஸ் பண்ணமுடியலைன்னு ஒனக்கு காண்டு மச்சி!” என்று தன் வெர்சாஸே(versace) கூலர்சை கலட்டி கண்ணடிக்க
“ஹைய்யோ.. ராஜா, அதன் ராயல்டியை நீயே வச்சுக்கோ! கஷ்டகாலம், இதே வசனத்த நீயும் காலேஜ் காலத்துல இருந்து சொல்லிட்டு இருக்க!”
“டேய், எப்பொவா இருந்தாலும் அது தான்டா உண்மை. சரி, நம்ம க்ரிஷ் என்னதாண்டா ஆனான்! அவனும் காலையில் வருவதாக தான் சொல்லி இருந்தான் இன்னும் ஆளையும் கானோம், போனையும் கானோம்! Call him, let us find whether we need to pick him on the way!” என்று வாண்டடாக வந்து சிக்க
“அவன் ரூம்க்கு வந்துடேன்னு சொல்லி இப்போ தானடா போண் பண்ணான்.இப்போ தானே பேசினேன்… காதையும் எங்கையாவது விட்டுட்டு வந்துடியா என்ன?” என்று ‘காதையும்’ என்பதில் அழுத்தி கேட்க்க
அதை கவனிக்காதவன் போல், “ஓ! நல்லது! Let us go get changed and head to the restaurant then!” அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹோட்டல்மரியாட்டைஅடைந்தவன்வண்டியைவெலடிடம் (valet) விடுத்து
அறைக்கு சென்று வேஷ்டி சட்டையை மாற்றி ஹாக்ஷ்டன் ஜீன்ஸும் (hoxton jeans) சிகப்பும் வெள்ளையுமாய் கோடு போட்ட க்ரு–நெக் டி–சர்டுமாய் (crew neck t-shirt) கிளம்பியவன் கிருஷ் மற்றும் சுதர்ஷன் சகிதம் அவர்களின் நண்பன் ஆரம்பித்திருக்கும் ஹோட்டலிற்கு கிளம்பினான். மற்ற நண்பர்களிடம் தாங்கள் டாக்ஸியில் கிளம்பிட்டதை சொல்லி அரை மணி நேரத்தில் ஹோட்டலில் சந்திக்கலாம் என்றும் எப்பொழுதும் போல் அவனின் திட்டமிடல்களை கவனித்துக்கொண்டான்.
அவர்கள் ஹோட்டல் வந்து அடைந்ததும் அனைத்தையும் மறந்தவனாக நண்பர்களுடன் அரட்டையும், சிரிப்புமாய் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் என்று கல்லூரி காலத்தின் மிச்சத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர். கல்லுரி முடித்து 7 வருடங்கள் ஆனாலும் வருடம் தவராமல் எதோ ஒரு காரணம் கொண்டு சந்திப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தினால் தொடர்பு விட்டுபோகாமல் இருக்க வாட்ஸாப், facebook, skype என்று பல வழிகள் இருந்தாலும் நேரில் சந்திக்கும் பொழுது பேசுவதற்கு விஷயங்களா இல்லை?
கல்லூரியில் அனைவருக்கும் ‘டெரராக’ இருந்த ஆசிரியர் இப்பொழுதும் கல்லூரி அலுமினி மீட்டில் செய்த அட்டகாசம் முதல், கல்லூரியின் கனவு நாயகியாக வழம் வந்த பெண்களிடம் இவர்கள் செய்த வம்புகள் வரை பேசி சலிக்க காரணகாரியமா இல்லை?
அனைவரும் பேசி கொண்டிருக்க திடிரென்று சுதர்ஷன் வீரேஷிடம் மெதுவாய், “டேய் மச்சான், சொன்னதும் திரும்பிடாத, மெதுவாய உன் இடது பக்கம்திரும்பிப்பார்!” என கிசுகிசுக்க,
வலது கையால் தலையயைய் கோதிக்கொண்டே திரும்பியவன்ஒரு நிமிடம் கண்சிமிட்ட மறந்தான். அங்கே கோவிலில் பார்த்த ‘ஸ்விட்’ தனது தோழிகள் புடை சூழ வந்து கொண்டிருந்தாள்.
சட்டேன திரும்பியவன் முயன்று முகத்தை சரி செய்தபடி, “என்னடா, சும்மா!!!” என்று தோள்களை குழுக்கி கண்ணடித்தவன், மனதினுள், இரண்டாவது முறை இரண்டு மணி நேர வித்தியாசத்தில் ! உன் காட்டில் மழை தான் போ! என்று கூச்சலிட, ‘is this universe trying to convey something to me?!’ என்று எண்ணியபடி அரை வினாடி திரும்பி பார்க்க
அவனின் முக மாற்றங்களை கவனித்து கொண்டிருந்தவன் “மச்சான், ரொம்ப ஒவரா போற மாதிரி தெரியுதே! நீ தானான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!”
“நம்புடா! நானே தான்.” என்று கூறியவன், திரும்பவும் திரும்ப சொல்லிய மனதை அடக்கியவனாக தன் நண்பர்களை நோக்கி திருப்பினான்.
“நான் சொன்னது பலிச்சிடும் போல இருக்கேடா?!”
“என்னது?!”
“நீ விழுந்தா தலைக்குப்புற தான் விழுவேன்னு நான் சொன்னது!”
“உன் வாக்கு பலித்துவிடும் போல தான் இருக்குடா.” என்று எந்த வித சமாளிப்பும் இல்லாமல் நேரடியாக ஒப்புக்கொள்ள
அதே நேரம் அவர்களின் மேஜையில் இருந்து நான்கு மேஜைகள் தள்ளி இருந்த மேஜயில் இரண்டு பெரிய மேஜைகளை சேர்த்து 14 பேரும் மொத்தமாய் அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு சென்று அவர்களும் இங்கு நேராய் வந்திருந்தனர்.
அவர்கள் உடன் படிக்கும் மாணவர்கள் இந்த உணவகத்தை ஆஹோ ஓஹோ என்று புகழ, இன்று எப்படியும் இங்கே வந்தே தீருவது என்று முடிவு செய்திருந்தனர். வந்தால் சுற்றி எல்லோரும் ஆண்களாய் இருக்க இவர்களை தவிர ஒரே ஒரு பெண் மட்டும் அதுவும் அவளின் ஆண் நண்பனோடு! பார்வையைய் சுழலவிட்ட வென்முகில், “என்னது நம்மை தவிர ஒரு பொண்ண கூட கானோம்…இது பசங்களுக்கான ஹாங்க் ஒட்(hang out) ஸ்பாட்டா என்ன??!”
“ஆமாம் வென்ஸ்,கிட்ட தட்ட அப்படி தான்…நம்ம ஷர்மிலும் மற்ற பசங்களும் இதை ஓவரா புகழ்ந்து தள்ளினாங்க.. சரி என்ன தான் அப்படி சிறப்புன்னு பார்த்துடலாம்ன்னு காலையில் ரிசர்வ் செய்தேன்.”
“கோவிலுக்கு கிளம்புடீன்னா பாலாஜி காத்திருப்பர், இல்லைனா தூக்கிடுவோம்ன்னு வசனம் பேசவேண்டியது,ஆனால் முதல் ஆளா சாப்பாட்டுக்கு மட்டும் ரிசர்வ் செய்திருக்க… உன்னையேல்லாம் !!!” என்று முறைக்க
“பாலாஜி புரிஞ்சுப்பார், ஆனால் என் குட்டியுண்டு வயிறு புரிஞ்சுக்குமா? வயிரே, வயிரே இன்னைக்கு கண்ணுக்கு திவ்யமா பாலாஜிய பார்த்தாச்சு கண்ணு மனசெல்லாம் நிறஞ்ச மாதிரி நீயும் நிறஞ்சுக்கோன்னா, கத்தி கூப்பாடு போடாது!!” என்று நீட்டிமுளக்க
“உன் வாய் தான்டீ உன்ன வாழவைக்குது!!!” என்று சொல்லியபடி அலைபேசியை எடுக்க இரண்டு மிஸ்டுகால்களை பார்த்ததும், “போச்சு,அம்மா இரண்டு தடவை கூப்பிட்டு இருக்காங்க, எடுக்கலைன்னதும் டென்ஸன் ஆகிருப்பாங்க. இரு நான் பேசிட்டு வந்துடுறேன்.” என்றபடி அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியே வந்து ஒரு ஓரமாய் நின்று தன் அம்மாவிற்கு அழைத்தாள்.
“ஸாரிம்மா, கோவிலுக்குள் போகும் பொழுது சைலண்ட்ல மாத்தினேன். மாற்ற மறந்துட்டேன். ”
“”
“சாப்பிட வந்திருக்கோம்மா!”
“”
“ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா. நான் ஹாஸ்ட்டல் போய்ட்டு உங்களுக்கு கூப்பிடறேன்.” என்று அலைபேசியை அணைத்தவள் அவர்கள் மேஜைக்கு திரும்பும் பொழுது அவர்களின் இடதுபுரம் இருக்கும் மேஜையில் இருக்கும் ஒரு பையன் ஏதொ சத்தமாய் சொல்ல ஒரு நிமிடம் நின்றவள் யார் என்று புரியாமல் தன் இருக்கைக்கு திரும்பினாள்.
இவற்றையெல்லாம் நிழற்படம் போல் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும்(வீரேஷ்) உணவகத்தில் இருக்கும் மற்ற சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை. பெண்கள் வந்ததில் இருந்து திரும்பி திரும்பி பார்ப்பதற்கு சங்கட பட்டவன் மெதுவாய் வென்முகில் நேருக்கு நேராய் தெரியும் இடத்திற்கு மெதுவாய் மாறி இருந்தான். அவனின் உள்குத்து தெரிந்த ஒரே ஆள் சுதர்ஷனுக்கோ இவனின் அடாவடியை நினைத்து ஒரு பக்கம் சிரிப்பாய் இருந்தாலும் அவனின் வேகத்தை நினைத்து சிறிது யோசனையாகவும் இருந்தது.
வந்ததில் இருந்து பார்த்தும் பாராமலும் அவளின் முகத்தில் தெரியும் உணர்ச்சிக்களை அவதானித்துக்கொண்டிருந்தவன், இதுவரை இருந்த இலகுதன்மை மாறி அலைபேசியில் பேசும் பொழுது தெரிந்த பதட்டம் கலந்த படபடப்பு என்று அவளின் ஒவ்வொரு அசைவையும் தெவிட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தான்.
அவள் திரும்பி வரும் பொழுது யாரொ ஒருவன் வேகமாய் வர கடைசி நேரத்தில் சடாரேன்று நகர்ந்தவள் சுவரோடு ஒட்டி நின்று நிதானித்தாள். அவன் செல்லும் பொழுது திரும்பி பார்த்து ‘ச்ச’ என்று தலை அசைத்து செல்ல அவள் மனதினுள் ‘வேனும்னே மொதுர மாதிரி வந்திருப்பானோ? சரி பார்க்கலாம்’என்று எண்ணியபடி தோழிகளோடு சென்று அமர்ந்தாள்.
அவர்கள் உணவு வந்ததும் அனைவரும் வந்திருந்த உணவை பகிர்ந்து உண்டு கலாய்த்து, உணவு மற்றும் ஹோட்டலின் டெகோரை விமர்சித்து என்று ஒரு வழியாய் உணவு முடித்து கை கழுவும் இடத்திற்கு செல்லும் பொழுது அந்த ஆண் நண்பனுடன் வந்திருந்த பெண் மேல் ‘அந்த ஒருவன்’ மொதி செல்ல கொஞ்சம் தள்ளி சென்று “சாரி” என்றவன் அவனின் நண்பர்களுடன் கலந்தான்.
சற்று தள்ளி நின்று இதை கவனித்தவள், எதுவும் பேசாமல் நேராய் மேலாளர் இருக்கும் மேஜைக்கு செல்ல இதை எல்லாம் கவணித்தாலும் இது எதோ எதெட்சையாய் நடந்தது போல் தான் மற்றவருக்கும் இருந்தது.
மேலாளரிடம், நடந்ததை கூற அவரோ, “சரிமா நான் கவனிக்கிறேன். நீங்க போங்க” என்று முடிக்க பார்க்க,
“இல்லை சார், நீங்க cctv இருக்குதுல்ல அதை பாருங்க!” என்று வம்படியாய் நின்றாள்.
அவரோ, முதலாளி இருக்கும் பொழுது எதற்கு தேவை இல்லாத பிரச்சனை நாமே முடித்து அனுப்பிவிடலாம் என்று பார்த்தால் விடாது போலவே என்று நினைத்தபடி
“நான் தான் சொல்றேன்லம்மா, நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்.”
அவள் அசையாமல் நிற்கவும், “சரியான இம்சைங்க,பெரிய ஜான்சி ராணினு நினைப்பு, பசங்களா இருக்குற கடைக்கு எதுக்கு வருதுங்களோ! ” என்று முனுமுனுத்தபடி திரும்ப அப்போழுது கடையின் முதலாளியும் வீரேஷின் நண்பனும் ஆன பாலாஜி அங்கே வர “Any problem miss?”
“நீங்க?” என்ற வென்முகில் குழப்பத்துடன்
“என் கடை தான் சொல்லுங்க”
அங்கே நடந்தை சுருக்கமாய் சொல்லியவள் தான் cctvஃபுடேஜை(footage) பார்க்க சொல்லியதையும் அதற்க்கு அவரின் விமர்சணத்தையும் சொல்லியவள், “Is this place meant only for boys? Do you treat your customers differently?” என்று கண்களில் கோபம் தெரிக்க கேள்வி எழுப்ப,
“Certainly not! வாங்க போய் பார்க்கலாம்” என்று அங்கே இருந்த அறைக்கு அழைத்து செல்ல அப்பொழுது “என்ன ஆச்சு மச்சி” என்றபடி வந்தான் வீரேஷ். அவனை அமைதியாய் இருக்கும் படி கண்களால் ஜாடை செய்தவன் அவள் சொன்னதை பார்க்க, அவள் இதற்கு முன் தன்னிடம் நடந்ததையும் பார்க்க சொன்னாள். அதோடு மட்டும் அல்லாது, அந்த ஒருவனின் நண்பன் இதை தனது கைபேசியில் விடியோ எடுத்திருப்பதாய் அவள் கூற ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “சரி நீங்க பே(pay) பண்ற மாதிரி பண்ணிட்டு உங்க டேபிலுக்கு போங்க நான் போய் பேசுறேன்.”
அவள் சந்தேகமாய் பார்க்க, “பிலிவ் மீ! உங்களுக்கு எதுவும் பிரச்சனை ஆகவேண்டாம்னு தான் சொல்றேன்.” என அவள் மேஜைக்கு செல்லும் வரை காத்திருந்தவன் மேலாளரிடம் எதோ பேசியபடி வர மெதுவாய் அந்த டேபிலுக்கு சென்றவன், போனை கையில் சுலற்றியபடி அட்டகாசமாய் சிரித்துக் கொண்டிருந்தவனிடம் இருந்து போனை பறித்தவன் வேகமா விடியோவை பார்க்க, வென்முகில் சொன்னது போல் விடியோ ஸ்லொமோஷ்னில் (slow motion) படமாகி இருந்தது.
“இதை அப்படியே கொண்டுபோய் போலிஸிடம் கொடுத்தா நேரா கம்பி தான்” என்றபடி அவனின் அலைபேசியை எடுக்க “சாரி சார் சாரி சார், எதோ விளையாட்டிற்கு பண்ண போய் இப்படி ஆகிடுச்சு ” என்று பம்ம ஆரம்பித்தனர். அதை அப்பொழுதே அழிக்க, நண்பனின் கையில் இருந்த அலைபேசியை வாங்கி அதற்கு எதுவும் பெக–அப் (backup) இருக்கா என்று பார்த்து அதையும் டேலிட் செய்தான் வீரேஷ்.
அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தவன், கிளம்பிக்கொண்டிருந்த வென்முகிலில் மேஜைக்கு சென்றான், “sorry for what happened! Glad you brought it to my attention. அப்பறம், இது பசங்களுக்கான் இடம் மட்டும் இல்லை.. எல்லொருக்குமான இடம் தான். எப்படியோ அப்படி ஒரு ப்ரண்டிங் ஆகிடுச்ச. Will take care!I hope you enjoyed the food!”
“No problem! Food and ambience was great! I enjoyed the quirky decors as well.” என்றுசிரித்தபடிகூறியவள்கிளம்பஆரம்பித்தனர்.
இவற்றையேல்லாம் பாலாஜியின் அறை வாயிலின்அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் , ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்ற வீரேஷின் மனதில் இது வரை இருந்த பரபரப்பு குறைந்து மனது குத்தாட்டம் போடத்துவங்கியது! மேலும் ஸ்விட்ல் இருந்து ஸ்விட்டிக்கு ‘பெயர்‘ உயர்வு அளிக்க மறக்கவில்லை.
ஓய்…
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
ஹேய்… ஏய்… ஹெய் ஏய் ஏய்
காலையில் வண்டியில் வரும்பொழுது கேட்ட பாடல் காரணகாரியங்களோடு மனதிற்குள் மறு ஒளிபரப்பாக அவள் செல்லும் வழி பார்த்து மெய் மறந்து நின்றான் மயக்கும் புண்ண்கையோடுமாயவன்.