அவனின் திடீர் இந்த இதழ் முத்தத்தால் அதிர்ந்தாலும் அவளின் காதலன் தானே என்று அவளும் அதற்கு இசைத்து கொண்டு இருந்தாள், அதே வேளையில் திடீரென்று வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டதில் இருவருவின் இதழ்கள் தனியாக பிரிக்கப்பட்டு, முகத்தில் அச்சம் பரவியது.
வெளிய கதவு தட்டிக்கொண்டு இருப்பது யாரென்று இருவர்கள் அறியவில்லை,
“அச்சச்சோ, யாருனே தெரில, மாட்டிக்கிட்டோம் நாம இப்போ என்ன பண்றது, விடாம தட்டிகிட்டே இருக்காங்க, “என்று சீதா பயத்தோடு கூற, ராமோ ” ஆமா இப்போ வந்து என்ன பண்றதுனு கேளு, என்னைய வேற ரூம்க்குள்ள கூடாந்துட்ட, நாணும் நீ முத்தம் தான் கொடுக்க போறியோன்னு ஆசை பட்டு இங்க வந்து இப்படி மாட்டிகிட்டு முழிக்கிறேன், ஒருத்த முத்தம் கூட கொடுக்கவே இல்லை டி நீ “என அவன் கூறியதும்,
“அச்சோ ராம் செத்த நாழி கம்முனு இரேன், நீ அப்படி கதவு ஓரமா நின்னுட்டு இரு, நான் கதவை திறந்ததுக்கு பொறவு யாராவது உள்ள வந்த ஒடனே நீ சத்தமே வராம நைசா வெளிய ஓடிப்போயிடு சரியா,”என்று முகத்தில் வழியும் வியர்வையோடு கூறியவளை இமைக்காமல் பார்த்தான் ராம்.
“அச்சோ உனக்கு வேற வேலையே இல்லையா, அப்படி பார்க்காத ராம், எனக்கு வேற ஹார்ட் பீட் ரொம்ப துடிக்கிது, ப்ளீஸ் நான் சொன்ன மாதிரி செய் “என்றவள் அவனின் கையை பிடித்துக்கொண்டு கதவுவோரத்தில் நிற்க வைத்து விட்டு முகத்தில் வழிந்த வியர்வையை தாவணியின் முந்தானையால் துடைத்து விட்டு கதவை திறந்தாள் சீதா.
வெளியே நின்று இருந்தான் அவளின் அண்ணன் சேதுபதி,”ஏய் குட்டிபிசாசு கதவை திறக்க உனக்கு எம்புட்டு நேரம் ஆகும், ஆமா கதவை சாத்திகிட்டு உள்ள என்ன பண்ணிட்டு இருந்த நீயி, என்ன முழிப்பு ஏதாவது தப்பு பண்ணியா “என்று சீதாவை நோக்கி கேள்விகள் அடுக்கினான் சேதுபதி.
தமையனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று முழித்து கொண்டிருந்தாள் சீதா.
“அது வந்து அண்ணே, உள்ள வந்து பேசுவோமே நீ ஏன் வெளியே நின்னுட்டு இருக்கற, டிரஸ் பேக் பண்ணனுமா, ராதாவோட ஒருத்த கல்வைச்ச ஜூமிக்கி காணோமாம், ஒரு பவுனு கம்மல் அண்ணே அது, அதான் கதவை தொறந்து வுட்டு தேடனா போறவங்க எல்லாரும் இங்க வந்து என்ன தேடற பாப்பா ன்னு கேட்டு அவங்களும் தேடி, அது அவங்க கையில கிடைச்சா எடுத்துனு போயிடுவாங்க அண்ணா அதான், அப்படி கதவை மூடிட்டு தேடறேன் “என்றவளை வினோதமாக பார்த்தான் சேதுபதி.
“சரி தேடறது இருக்கட்டும், அதுக்கு ஏன் கதவை தட்டின ஒடனே திறக்கல, உடனே திறந்து இருந்தா நாணும் உன்கூட சேர்ந்து தேடி இருப்பேன்ல, “என்றவனிடம் “அய்யோ அண்ணே இப்போ ஒன்னும் நான் சொல்லமாட்டேன் நீ தாராளமா கீழ குனிஞ்சி தேடு, இல்லைன்னா பாத்ரூம்ல கூட போயி தேடு,”என்றாள் சீதா.
“எதே பாத்ரூம்லையா, அடியேய் குட்டிபிசாசு, நீ என்கூட பொறந்த பாவத்துக்கு பாத்ரூம்ல போயி தங்கத்தை தேடணும் ன்னு தலை விதியா எனக்கு, அப்படியே கன்னத்துல ஒன்னு அப்புன வச்சிக்கோயேன், செவந்து போயி ரத்தம் கட்டிக்கும், இந்தா என்ன ஆனா ஊனா கண்ணுல அருவி கொட்டுது, சரி சரி அழாத நான் போயி பாக்குறேன் “என்றவன் பாத்ரூம் உள்ளே செல்ல, சீதாவும் ராம் நின்று இருக்கும் திசையை நோக்கி கையை அசைத்து போ ஓடிப்போ என்ற வாயசைவால் அவனை துரத்த, அவனின் கெட்ட நேரமோ என்னவோ அவளின் அண்ணன் சேதுபதி இதை பார்த்துவிட்டான்.
டேய் நில்லு என எட்டி அவனின் சட்டையின் காலரை பிடித்தவன், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி அருகில் நிற்கும் தங்கையை பார்த்தான்.
“டேய் ஏலேய் யாருலே நீயி, இங்கன என்னலே பண்ணிட்டு இருக்கறவன், எந்த வூருலே நீயி?, ஒரு பொம்பள புள்ள தனியா இருந்தியாலே, இதுதான் சாக்குனு சட்டுபுட்டுன்னு ரூமுக்குள்ள வந்து ஒளிச்சிட்டு கிடைக்குறவன், உன் வாயை தொறந்து சொல்லுலே அங்க என்னலே என் பாப்பாவ பாக்குறவன், இங்க பாருலே “என்று அவனின் பின் கழுத்தில் கையைவைத்து கொண்டு கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, ராமோ சிறிதும் பயமில்லாது,
” முதல கழுத்துல இருந்து கையை எடுங்க, அப்புறம் உங்க கேள்விக்கு பதில் சொல்றேன் “என்றவனை மேலிருந்து அளந்து கொண்டே அவனின் பின் கழுத்திலிருந்து கையை எடுத்தான் சேது.
சேதுவின் அருகில் நின்று இருந்த சீதாவை பார்த்தவன், அவளை நோக்கி புருவத்தை மேலே தூக்கி “என்ன சீதா சொல்லிடவா, “என்றவனை முறைத்து பார்த்தாள் சீதையவள்.
“டேய் அங்கன என்னடே பார்வை வேண்டி கிடக்கு கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுலே, அவ கிட்ட என்னலே பேச்சி உனக்கு கேள்வி கேட்டது நானு என்னைய பார்த்து பதில் சொல்லுலே “என்று அவனை அதட்டினான் சேது.
“சொல்றேன் உண்மையை சொல்லனுமா இல்லை பொய் சொல்லனுமான்னு நீங்க சொல்லுங்க,”என்றவனின் மீது வினோதமாக ஒரு பார்வை வைத்தான் சீதாவின் தமையன்.
“அய்யோ அண்ணா நீ வா, நமக்கு நேரமாச்சு எல்லாரும் தேடுவாங்க இந்தா இந்த பையை நீ தூக்கிக்க, “என கீழே குனியும் போது அவளின் தாவணி சொருவலையில் இருந்து கீழே விழுந்தது சாவி கொத்து. அது அதே அறையில் ராதாவை மயக்க வைத்து கட்டிலுக்குள் அடியில் கிடத்தும் போது கீழ விழுந்த கோமளத்தின் சாவி கொத்து தான் அது.
அந்த சாவி கொத்தை எடுத்து அண்ணனிடம் கொடுத்தவள் “அண்ணா இது இந்த ரூமுல கிடந்துச்சி, நான் தான் எடுத்து வச்சிருந்தேன் யாரோடியதுன்னு எனக்கு தெரில, நீ வாண்ணே வெளியே போயி யாரோட சாவி ன்னு கேட்டு அவங்ககிட்டையே கொடுத்துப்புடுவோம் “என அவளின் தமையணை திசை திருப்பி கொண்டுவந்து நின்றாலும், அவளின் மனதை கொள்ளையடித்தவன் வெளியே சென்றால் தானே , அவளால் சேதுவிடமிருந்து தப்பிக்க முடியும்,
ஆனால் ராமோ அண்ணன் தங்கையின் உரையாடலை கேட்டு நின்ற இடத்திலே நின்றுக்கொண்டு இருந்தான்.
“ச்சே இவன் வேற வெளியே ஓடுறானா பாரு, அண்ணனை சமாளிக்கவே கஷ்டம் அப்பனே முருகா என்ன எனக்கு இப்படி சோதனை கொடுக்கற, தயவுசெய்து இவனை போக சொல்லு ” என்று மனதில் அந்த பழனியண்டாவரிடம் கோரிக்கை வைக்க, அதை அங்கு சிலையாய் அருள்பாலிக்கும் முருகனுக்கு கேட்டது என்னவோ, அவரும் விதியை நினைத்து இதழ்களை விரித்து புன்னகை ஒன்றை வெளியிட்டார்.
“இந்தா டா நீ இன்னும் கம்முனு கிடக்க நானு கேட்ட கேள்விக்கு பதிலே வரல, ஒழுங்கா உண்மையான பதில் சொல்லு யாருல்லே நீயே?” என்ற சற்று சத்தமாகவே கேட்டான் சேது.
“சொல்றேன், நான் உங்க பக்கத்து ஊரு, என் பேரு ராமகிருஷ்ணன்,சீதாவ நான்…..நானு லவ் பண்றேன் “என்றதும் தான் தாமதம் சேதுவின் ஐந்து விரல் தடங்கள் தெரிந்தது ராமின் கன்னத்தில்…
அண்ணன் இப்படி கையை ஓங்குவான் என்று எதிர்பாராத சீதாவும் அதிர்ச்சியில் நிற்க, ராமோ கன்னத்தை தாங்கிக்கொண்டு பேச்சற்று
நின்று கொண்டிருந்தான்.
“ஏலேய் என்னலே சொன்ன, என்ற தங்கச்சியை லவ்வு பண்றியாலே, ஏன்லே நீ என்ன ஜாதி, என்ன குலம், ஏதும் தெரியாத எப்படிலே தைரியமா வந்து என்கிட்டயே என் தங்கச்சியை லவ்வு பண்றே ன்னு சொல்லுறவன்,”என்றவனை நோக்கி கோபக்கனல் வீசினான் ராமகிருஷ்ணன்.
“என்ன ஜாதி குலம் என்னானு கேட்கரிங்களா, நாணும் உங்க ஜாதிதான், ஆமா நீங்க எந்த காலத்துல இருக்கீங்க, ஆமா நான் தெரியாமதேன் கேட்குறேன், நீங்க ஒரு அழகான பொண்ணை பார்த்தவுடனே புடிச்சி போயி,உங்களுக்கு லவ்வுன்னு ஒன்னு வந்தா அதுலயும் ஜாதிகுலம்லாம் பார்த்துதான் லவ்வு பண்ணி கல்யாணம் பண்ணிப்பிங்களா “என்றவனை பார்த்து திகைத்து நின்றாள் சீதா.
“அச்சச்சோ இன்னக்கி இவன் அடிவாங்காம ஓயமாட்டான் போலயே, அட எடுப்பட்டபயலே வாயை மூடிட்டு சும்மா இரேன்டே, முதல வெளியே ஓடிப்போயி இருந்தா இன்னேரம் இந்த இடமே காலியா கிடந்து இருக்கும்,தேவையில்லாம இங்கன நின்னுட்டு கியாதி பேசுறான், அப்பனே முருகா என்ன இது? இவனை போவசொல்லு முதல இங்கிருந்து “என்று மனதில் ராமை வசைப்பாடி கொண்டும் முருகனிடம் வேண்டிதலை வைத்துக்கொண்டு அமைதியாக மனதில் மன்றாடினாள் சீதா….