இரவை பகலாக மாற்றும் முயற்சியில் அந்த திருமண மண்டபத்தின் வண்ண வண்ண மின் விளக்குகளும் அலங்காரங்களும் தீவிராமாய் உழைத்துக் கொண்டிருக்க அந்த பொழுதை இன்னும் இரம்மியமாக்க உற்றாரும் உறவினரும் கூடியிருக்க கோலாகலமாய் நடந்துக் கொண்டிருந்தது இரு ஜோடிகளின் வரவேற்பு நிகழ்வு..!!
வொய்ட் & வாயலட் தீம்மில் அமைக்கப்பட்டு இருந்த மேடை அலங்கார பின்னணியில் உறவுகளின் வாழ்த்துகளை விரிந்த புன்னகை மாறாமல் பெற்று நின்றனர் மணமக்கள்..!!
வெள்ளை கற்கள் பதித்து கருநீல வண்ண கனமான வேலைப்பாடுகள் கொண்ட லெஹாங்கா அணிந்து அதற்கேற்ற நகைகள் பூட்டி மணபெண்ணிற்கான பிரத்யோக மேக்கப்பில் தேவலோக பெண்ணாய் சக்திஸ்ரீ மின்ன அதே நிற சூட்டில் புன்னகை மன்னனாய் நின்றிருந்தான் ஆரியன்.
அவர்களுக்கு சற்று தள்ளி கார்த்திகேயன் – மேக்னா தம்பதியும் அதே போல் மெரூன் வண்ண காம்பினேஷனில் அவர்களுக்கு சற்றும் குறையாத வசீகரத்தோடு நின்றிருந்தனர்.
ஒரே மேடையில் தங்கள் பிள்ளைகளை பார்த்து நின்ற திரு – ரம்யாவிற்கு அத்தனை மகிழ்ச்சி..!! முன்பு எப்படியோ இப்பொழுது சக்தி தங்கள் வீட்டு பெண்ணாகவே மாறிய பின்னர் அவர்களுக்கு துளியும் வருத்தம் என்பதே இல்லை. வம்பிற்கென்று எதாவது கேட்பவர்களுக்கு கூட இன்முகமாகவே பதில் சொல்லும் அளவு மன நிறைவோடு இருந்தனர்.
சொந்த பந்தங்கள் நட்புகள் என கூட்டம் அதிகரிக்க அவர்களை உபசரித்து கவனிக்க என நேரம் ரெக்கை கட்டி பறந்தது.
கெளதம் மேடையேறி வாழ்த்த வந்தபோது சக்தியிடம் ஜாடையில் ஏதோ கேட்க அவளும் ஆர்வமாய் தம்ஸப் காட்டவும் இறங்கி செல்ல அவர்களை கவனித்து,
“என்ன டி..”
என காதை கடித்த ஆரியனிடம் அங்கே பார் என காட்டினாள்.
ஆர்கெஸ்ட்ரா குழுவிடம் சென்று மைக்கை வாங்கி கொண்ட கெளதம் தன் கிட்டாரையும் எடுத்துக் கொண்டு,
“ஹே கைஸ்..” என அவர்கள் கவனத்தை தன்புறம் திருப்பி,
“திஸ் இஸ் ஃபோர் யூ மேக்னா.. ஹேப்பி மெரீட் லைஃப்..”
என்று கூறி அவளுக்கு மிகவும் பிடித்தது என சக்தி குறிப்பிட்ட பாடலை வாசித்து ஸ்வேதாவோடு பாட இதனை எதிர்பாராத மேக்னாவிற்கு மிகுந்த ஆச்சர்யம் தான். முகத்தில் சந்தோஷம் தாண்டவமாட அவன் முடித்ததும் குஷியாய் நன்றி சொன்னவள் இதெல்லாம் தன் அண்ணியின் வேலை என உணர்ந்து,
“ஸோ ஸ்வீட் ஆஃப் யூ அண்ணி..”
என குதூகலமாய் சொல்ல பதிலுக்கு கண்சிமிட்டினாள் சக்தி.
கெளதம் பாடி முடித்தபின் மேக்னாவின் தோழிகள் சூழ்ந்துக் அவனை பிச்சு எடுத்தது அவன் தப்பி ஓடியது எல்லாம் தனி கதை..!!
“ரொம்ப பிடிக்குமோ..?”
தோழிகளின் அட்டூழியங்களை கண்டு சிரித்துக் கொண்டிருந்த மேக்னாவிடம் கார்த்திக் கேட்க,
“என்ன பிடிக்குமா..?”
முதலில் புரியாமல் பார்த்தவளுக்கு,
“வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி பில்டப் கொடுத்தானே அவனை தான்..”
என்று கொஞ்சமாய் தீய்ந்த குரலில் கார்த்திக் சொல்லவும் புரிந்துவிட வந்த சிரிப்பை அடக்கி,
“ஆமான்னு சொன்னால் என்ன பண்ணுவீங்க கார்த்திக்..”
என குறும்போடு கேட்க முகத்தை சுருக்கி,
“என்ன பண்ணுவேன்.. ஒன்னும் பண்ண மாட்டேன்.. இதுக்காக கிட்டார் எல்லாம் கத்துக்க முடியாது..”
என்று பெருமூச்சு விட்டதில் பொங்கி வந்த சிரிப்பு அவன் அடுத்து,
“ஆனால்.. கூட பாடின அந்த பொண்ணு க்யூட்ல..” என சொன்னதில் நின்று போக மாலை மறைவில் பட்டென்று கிள்ளி வைத்தாள்.
வருவோர்களிடம் பேசும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் ஆரியன் பார்வை சக்தியையே வட்டமிட பொறுத்து பொறுத்து பார்த்தவள்,
“என்ன ஆச்சு உனக்கு..” என குரலை தாழ்த்தி அதட்டவே முனைந்தாள் ஆனாலும் சிரிப்பு வந்து தொலைத்தது.
தானும் பெரிதாய் புன்னகைத்த ஆரியன்,
“இந்த முகத்தை தான்.. நம்ம கல்யாணத்து அப்போ தேடி தேடி கிடைக்காமல் ஏமாந்து போனேன்.. இப்போ கண்ணே எடுக்க முடியல..”
என்று ஆசையாய் பார்க்க,
“அன்னைக்கு எனக்கு சரியா தப்பான்னு எக்கசக்க குழப்பம்.. நம்ம மேல எல்லாருக்கும் கோபம்.. வாழ்த்த நின்னவங்களை விட விதியேனு நின்னவங்க தான் அதிகம்.. அந்த மனநிலைல என்ன முயற்சி பண்ணியும் என்னால சந்தோஷப்பட முடியல ஆர்யா.. நௌ ஸி.. எங்கேயும் ஹேப்பினஸ் மட்டும் தான்.. எங்க அப்பார்ட்மென்ட் பேமிலிஸ் கூட எனக்காக வந்திருக்காங்க.. எல்லாரோட பிளெஸ்ஸிங்ஸ் கிடைக்கிறது எவ்வளவு சந்தோஷம் ல.. ஐம் வெரி வெரி ஹேப்பி..”
என்று உற்சாகமாய் சொன்னவள்,
“இதை தவிர..” என தன்னையே சுட்டிக் காட்டி விழிக்களை உருட்டினாள்.
அதற்குள் யாரோ அருகில் வந்துவிடவும் அவர்களிடம் பேசி நன்றி கூறி கிப்டை பெற்றுக் கொண்டு அவர்கள் நகர்ந்ததும்,
“ஏன்..”
அவனும் இப்போது தான் பார்ப்பது போல் மீண்டும் அவளை தலை முதல் கால்வரை பார்வையால் அலசி வினவினான். ஒருவர் பின் ஒருவர் வந்துக் கொண்டே இருந்ததால் பேச்சு நின்று நின்று தொடர்ந்தது.
“நிற்க முடியலடா.. அப்படியே பிடிச்சு இழுக்குது.. ஆசையா தான் எல்லாம் செஞ்சுக்கிட்டேன்.. ஆனால் நேரம் ஆக ஆக முடியல.. மேக்கப் வேற ரொம்ப ஓவர்ரா தான் இருக்கா மாதிரி ஒரு ஃபீல்.. எங்க பார்த்ததும் ‘ப்பா.. யார்ரா இந்த பொண்ணுனு..’ முழிப்பியோனு நினைச்சேன்.. நல்ல வேளை அப்படி நீ பார்க்கல.. சரி சொல்லு நான் அழகா இருக்கேனா..”
படபடவென மூச்சை பிடித்து புலம்பியத்தில் தன்னை போல் அவனுக்கு சிரிப்பு வந்தது.
“அதானே.. என் பொண்டாட்டியாவது புலம்பாம இருக்கிறதாவது..”
“கொல்லாதடி என்ன.. என் மனசே கண்டபடி ஓடுது.. அப்புறம் மேனர்சாச்சும் மண்ணாச்சும்னு உன்னை இங்கேர்ந்து தூக்கிட்டு போய் எவ்வளவு அழகுன்னு ஆராதிச்சு தான் காட்டுவேன்..”
என சன்னமாய் சொன்னதும் அவளின் கன்னங்கள் செம்மையுற வாயோ கப்பென்று பூட்டிக் கொண்டது.
அதன்பின், “சக்தி.. சக்தி.. சக்தி..” என்ற அவனின் எந்த மாடுலேஷன் அழைப்புக்கும் ‘உம்..’ தவிர வேறு பதில் இல்லை. தன் பேச்சின் தாக்கம் அவளையும் பிடித்துக் கொண்டது என உணர்ந்தவன் அவளை திசை திருப்ப,
“ஹே.. அங்க பார் உங்க அம்மாவை..”
என்று காட்ட அங்கே சின்ன வாண்டுகளிடம் சிக்கி திணறும் யாமினியை கண்டதும் மற்றது மறந்து சிரித்து விட்டாள்.
“அச்சோ.. பாவம் அம்மா..”
“சின்ன பசங்க தானே.. ஏன் இந்த முழி முழிக்கிறாங்க..”
“அவங்களுக்கு சின்ன பசங்களை ஹெண்டில் பண்ணவே தெரியாது ஆர்யா.. வாய் ஓயாம பேசினாலே டென்ஷன் ஆகிடுவாங்க… இப்ப எதுவும் சொல்லவும் முடியல அவங்களால..”
“ஹாஹா.. உங்க அம்மாக்கு இப்படி ஒரு வீக்னெஸ் இருக்குனு தெரியாம போச்சே..”
என்று அவனும் நகைக்க அங்கே யாமினிக்கு உதவியாய் விஷாகன் வந்து விட்டார். என்ன பேசினாரோ அந்த வாண்டுகள் அனைத்தும் ஆர்ப்பாட்டமாய் ஏதோ கூறி ஓடிவிட்டனர்.
தன் ஈகோவிற்காக பிஸியா சண்டை போட்டத்தில் அவங்க இடையில் இருந்த ரிலேஷன்ஷிப்பை மறந்துட்டாங்க.. வருஷங்கள் ஆனா பின்னாடி எப்படி அதை நேர் படுத்திக்கிறதுனு தெரியாம தவிக்கிறாங்க…”
ஆரியன் சொல்லவும் புருவம் சுருங்க,
“ஈகோ தாண்டி ஏதோ இருக்கு ஆர்யா.. இல்லைனா எதுக்கு அப்பா வேற ஒருத்தவங்களை..”
என அதற்கும் மேல் சொல்ல பிடிக்காமல் நிறுத்தினாள்.
அவள் கேள்விக்கு சமந்தமே இன்றி,
“உங்க அம்மா ரொம்ப ஷார்ப்.. எதுவா இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு இரண்டு தான்.. அப்போ இந்த தலையை சுத்தி மூக்கை தொடுற உன்னோட மைண்ட் செட் எங்க இருந்து வந்து இருக்கும்னு யோசிச்சு இருக்கேன்.. இப்போ உங்க அப்பா கூட பழகின அப்புறம் தான் புரிஞ்சுது.. மாமா உன்னோட ஓல்ட் வெர்ஷன்னு..”
கேலி செய்கிறானா என்று யோசிக்கும் படி சீரியஸாக சொல்ல தோளில் இடித்து,
“கொஞ்சம் புரியுறா மாதிரி தான் சொல்லேன் டா..”
என அவள் பொறுமை இழந்து கடிக்கவும்,
“உங்க அப்பா வேற யாரையும் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல.. பொய் சொல்லி இருக்கார்..”
என்று அசால்ட்டாய் சொலலிவிட கண்கள் ஸாசராய் விரிய அவனிடம் முழுதாய் திரும்பி,
“உண்மையாவா..” என்று வியக்கவும் அவன் பதறி,
“யம்மா தாயே.. ஊரே நம்ம தான் பார்க்குது.. இங்க வைச்சு எல்லாம் கதை சொல்ல முடியாது..”
என்று சொல்ல,
“எனக்கு தலையே வெடிச்சுடும்.. எப்படி சொல்ற.. அப்பாவே சொன்னாரா.. நிஜமாவா..?”
என அவள் துடிக்க ஏன்டா ஆரம்பித்தோம் என்றானது ஆரியனுக்கு..!!
“ஆமா நிஜம் தான்.. அவர் ஏதோ நினைச்சு செய்ய எல்லாமே வேற மாதிரி போயிடுச்சு.. இதை பொறுமையா கூட பேசலாம்.. இப்ப கொஞ்சம் அமைதியா இருடி..”
கெஞ்சி கொஞ்சி ஒருவழியாய் ஆரியன் தப்பிக்க அச்சமயம் இங்கே நின்ற யாமினி விஷாகனிடமும் அதே விவாதம் தான் நடந்துக் கொண்டிருந்தது.
எதார்த்தமாய் ஏதோ சொல்ல போய் இந்த சிறுவர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடிய யாமினி விஷாகனை கண்டதும் தான் நிம்மதியானார்.
அவர் நயமாய் பேசி அவர்கள் கூட்டத்தை கலைத்து விட்டதும்,
“தேங்க்ஸ்.. எங்க என்னை மீறி கத்திடுவேனோன்னு நினைச்சுட்டே இருந்தேன்..”
என்று யாமினி நன்றியோடு சொல்ல பதிலாய் தோள் குலுக்கி புன்னகைத்து அருகிலே நின்றவர் எதுவும் பேச முனையவில்லை.
“இதென்ன கேள்வி.. சொல்லாம எத்தனை நாள் இருக்க முடியும்.. நாமளா சொல்லறது தான் மரியாதை..”
“ஒன்னும் தேவையில்லை யாமினி.. இதை இப்படியே விடு..”
“எப்படி..? அவங்க முன்னாடி எல்லாம் நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாத மாறியே நடிக்கணுமா.. டிவோர்ஸ் கேட்கும் போது தெரியல.. ஆனால் மத்தவங்க கிட்ட சொல்ல மட்டும் என்ன அவமானம்..?”
என்று கோபமாய் யாமினி கேட்க விஷாகன் முகமும் சிவந்தது.
“நான் ஒன்னும் டிவோர்ஸ் கேட்கல..”
“அப்புறம் கேட்டது யாரு.. நானா..??”
“ஆமா நீ தான்.. நான் சொல்ல மட்டும் தான் செஞ்சேன்.. ஆனால் கேஸ் போட்டு அதை அஃபிஷியலா மூவ் பண்ணது நீ..”
அவரை வினோதமாய் பார்த்த யாமினி,
“ஸோ வாட்ஸ் தி டிஃப்ரென்ஸ்.. எப்படியும் டிவோர்ஸ் தேவை உங்களுக்கு தான் விஷாகன்.. இன்னொர் கல்யாணம் பண்ணிக்கணும் இல்லையா..”
பல்லை கடித்து சொன்னவரிடம் இயலாமை கலந்த கோபமே பிரதானமாய் இருந்தது. இத்தனையும் அருகில் நின்று பார்த்தால் கூட ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்பது போல் சாதாரணமாக தான் தெரிந்தது.
‘கல்யாணமே பண்ணிக்க போறது இல்லை.. ” என்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் திகைத்து சில நொடிகள் நின்றுவிட்ட யாமினி,
“ஏன்.. என்னாச்சு.. அந்த பொண்ணும் உங்க எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லையா..??? டோன்ட் வொரி விஷாகன்.. வயசு ஆனாலும் உங்க ஸ்டேட்டஸ் இன்னமும் நிறைய பேரை கவரலாம்.. கீப் ட்ரையிங்..”
“கொஞ்சம் நிறுத்துறீயா.. ஏன் இப்படி பேசியே மனுஷனை வதைக்கிற யாமினி.. நான் எப்பவுமே யாரையும் கல்யாணம் பண்ணிக்க நினைக்கல.. ஒரு கல்யாணம் பண்ணி நான் பார்த்தே இந்த ஆயுசுக்கும் போதும்..”
“அப்போ நீங்க சொன்னது..”
“சுத்த பொய்.. போதுமா..”
அவரையே நம்ப முடியாத திகைப்பில் பார்த்து யாமினி,
“என்ன காரியம் பண்ணி இருக்கீங்க புரியுதா விஷாகன்.. வயசுக்கு தகுந்த செயலா இது..?? பொய் சொன்னேன்னு ஈஸியா சொல்றீங்க.. இதனால் எத்தனை குழப்பம்.. சக்தியை இப்படி ஒரு முடிவை நோக்கி தள்ளி இருக்கீங்க.. ஆரியன் நல்லவராக இருக்க போய் ஒன்னும் இல்ல.. இதுவே யோசிக்காமல் ஒரு தப்பான குடும்பத்திலோ இல்லை வேற தவறா எதுவும் நடந்திருந்தாலோ உங்களால் என்ன பண்ணி இருக்க முடியும்..”
என்று ஆத்திரமாய் பேசியவர் அதனை ஏற்க முடியாமல் தலையை கையில் ஏந்தி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். இதனால் அவருக்கும் தான் எத்தனை மன போராட்டம்..!!
யாமினி எதிரே தானும் அமர்ந்த விஷாகன்,
“உன் கவனத்தை என் பக்கம் திருப்ப தான் அப்படி ஒரு பொய் சொன்னேன்.. சக்திக்கு இதை பத்தி தெரியாமலே எல்லாவற்றையும் சால்வ் பண்ணிடும் யோசனையில் நான் இருந்தால் ஊருக்கு முன்னாடி இதை சக்திட்ட போட்டு உடைச்சு சிக்கல் ஆகினது நீ தான் யாமினி..
நான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டால் கூட ‘நோ ப்ராப்ளம்’ என்ற உன்னோட அட்டிட்டியூட் என்னை அதுக்கு அப்புறமும் உண்மையை சொல்ல விடலை.. ஆனால் இதுக்கு சக்தி இப்படி செய்வான்னு நானும் எதிர்பார்க்கவே இல்லை.. ஆரியன் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால தான் நான் எதையும் தடுக்கலை.. இல்லைனா சக்தியோட பாதுகாப்பிற்காக அவளே சம்மதிக்கலைனாலும் வேற நாடு கடத்தி அவளை பத்திரப்படுத்த கூட தயங்கி இருக்க மாட்டேன்.. ஸீ இஸ் மை டாட்டார் டூ.. என் பொண்ணு மேல எனக்கும் அக்கறை இருக்கு யாமினி..”
தன் தரப்பை அழுத்தமாய் எடுத்து வைக்க ஒருவரை ஒருவர் முறைப்பதிலே நேரம் ஓடியது.
“நீங்க சொல்ற ரீசன் உங்களுக்கே சில்லியா தெரியலையா..?? இத்தனை வருஷ கல்யாண வாழ்க்கையில் நாம சேர்ந்து இருந்த காலம் ரொம்பவே கம்மி விஷாகன்.. ஒருவர் இல்லைனா ஒருவர் இருக்கவே முடியாது என்ற அளவு நமக்குள்ள நெருக்கம் இல்ல..
அப்புறம் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னால் மட்டும் நான் என்ன செய்வேன்னு நினைக்கிறீங்க.. உங்க கிட்ட இதை எதிர்பார்க்கல.. எனக்கு நீங்க டிவோர்ஸ் கேட்டப்ப இருந்ததை விட பல மடங்கு கோபம் இப்ப தான் வருது..”
நீண்ட மௌனத்தின் பின் வாய் திறந்த யாமினி அவரை மேலே எதுவும் சொல்ல விடாமல் எழுந்து சென்று விட்டார்.
மேடையில் நின்றிருந்த சக்திக்கு நேரம் செல்ல செல்ல உண்மையிலே மயக்கம் இழுக்க முயன்று தன்னை கட்டுப்படுத்தி நின்றிருந்தாள்.
ஃபோட்டோ ஷூட் தொடர்ந்து நடக்க அவளுக்கு முடியவில்லை என்று புரிந்துக் கொண்ட ஆரியன் பாதியிலே முடித்துக் கொண்டு அவளை அழைத்து வந்து விட்டான்.
“இதை எல்லாம் கழட்டிட்டு கொஞ்சம் நேரம் போய் படுத்து தூங்கு சக்தி.. நிறைய வேலைல.. அந்த அசதியா இருக்கும்..”
என்று தேற்றி அவளை அறைக்கு அனுப்பி வைத்தபின் மீண்டும் இவர்களோடு கலந்துக் கொள்ள எல்லாம் முடிந்து மண்டபம் அமைதியாகவே நடு இரவை தாண்டி இருந்தது.
வேலை செய்பவர்களை தவிர மற்ற எல்லோரும் உறங்கி இருக்க தான் தங்கியிருந்த அறையில் ஓய்வாக அமர்ந்த ஆரியன் சக்தியை தான் யோசித்து இருந்தான்.