‘மாமா டைம் ஆச்சு’ என்று வெள்ளை வேட்டி சட்டை சகிதம் வெளியில் நின்று யாருடனோ பேசிக்கொண்டு இருந்த அதிர்துடியனை விஷ்ணு அழைத்திருந்தான்.
‘ஒரு நிமிஷம்’ என்று மறுபுறம் இருந்தவரிடம் கூறி திரும்பியவன்,
“வரேன்டா நீ பசங்களை கார்ல உட்கார வை” என்றவன் மீண்டும் அழைப்பில் கவனம் செலுத்த அதே நேரம் பட்டுபுடவை சரசரக்க மல்லிகை பூக்கள் மணக்க வெளியில் வந்து அவனை தேடி கொண்டிருந்த மனையாள் அவன் விழி வட்டத்தில் பட்டு அவனை அசரடிக்க எப்போதும் போல அவளில் சொக்கி நின்ற அதிர்துடியனோ அவன் ரசனையை தடை செய்த அழைப்பை துண்டித்து கைபேசியை பக்கவாட்டில் வைத்து சுவரில் சாய்ந்து நின்றான்.
அவன் விழிகளோ ரசனையுடன் அவள் மீது படிந்திருக்க அதேநேரம் அவனருகே வந்தவள், ‘ஏங்க கிளம்பலாமா..??’ என்றிட கிறங்கடிக்கும் அவள் சுகந்தத்தில் மூச்சை ஆழ்ந்து எடுத்து விட்டு நெஞ்சை நீவிக்கொண்டவன்,
‘முதலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செல்வதாக தான் தீர்மானித்து இருந்தனர் பின் ஏன் இப்படி ..??’ என்று புரியாமல் யாழி பார்க்க,
விஷ்ணுவும் அதையே கேட்க, ‘ஒரு சின்ன பூஜை இருக்குடா அதை முடிச்சிட்டு வந்துடுறோம்’ என்றிட யாழியோ தெறித்த விழிகளுடன் தூக்கி வாரி போட அவனை பார்த்திருந்தாள்.
‘பிளைட்க்கு டைம் ஆச்சே மாமா ஒன் ஹவர் முன்னாடி இருக்கணுமே ..’
“ப்ச் அதான் இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல இருக்கேடா நாங்க வந்துடுறோம்” என்றவனை நெருங்கிய யாழி,
‘என்னங்க என்ன பேசிட்டு இருக்கீங்க..?? இப்போ என்ன திடீர் பூஜை..?’ என்று அடிக்குரலில் கேட்க,
‘நல்ல விஷயம் செய்யும் முன்ன பூஜை பண்ணிட்டு போறது நல்லதுன்னு என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவாடி’ என்று கண்ணடிக்க யாழியோ அவஸ்த்தையுடன் அவனை பார்த்தவள்..,
“அய்யா சாமி தெரியாம சொல்லிட்டேன் விடுங்களேன் டைம் ஆச்சு கிளம்பலாம்” என்றிட,
அவனோ ‘முடியாது’ என்பதாக அடமாக நின்றான்.
அவன் உறுதியை கண்டவள், ‘சரி சொல்லுங்க இப்போ என்ன நல்ல விஷயம்..?? எதுக்கு திடீர் பூஜை..??’
“இதோ நாம எல்லாரும் தமிழ்நாட்டுக்கு சேர்ந்து போக போறோமேடி இதுவும் ஒரு நல்ல ஆரம்பம்தானே..??”
‘எப்படி ..??’
‘எப்படியும் ஊருக்கு போன பிறகு உன் தம்பிக்கு பொண்ணு பார்க்கணும் எல்லாம் பொருந்தி வந்தா நிச்சயம் கல்யாணம்ன்னு எத்தனை நல்ல விஷயம் இருக்கு அதுக்கு முன்னாடி பூஜை பண்ணிட்டு போனா எல்லாமே இன்னும் நல்லதா சிறப்பா நடக்குமே யாழி..?? என்று அவளையே திருப்பி கேட்டு வாயடைக்க செய்திருந்தான்.
‘இல்ல பூஜைன்னு சொன்னீ…’ என்று அவன் முடிக்கும் முன் பதறிக்கொண்டு வந்த யாழி,
“டேய் மாமா சொன்னா உடனே செய்ய கத்துக்கோ முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு நாங்க சீக்கிரம் வந்துடுறோம்’ என்று அவனை வழியனுப்பி விட்டு திரும்பியவள்,
‘அநியாயம் பண்றீங்க நீங்க..?? ஏற்கனவே உங்களால அத்தை கிட்ட என் மானம் போச்சு இப்போ என் தம்பி கிட்ட, என்று நாசி விடைக்க அவனை பார்த்தவள்,
‘எதுக்கு இப்படி பண்றீங்க..?’ என்று சிணுங்க,
“நான் என்னடி பண்ணேன்..?? நீ தான் பட்டு புடவையோடு முன்னாடி வந்து நின்னு பூஜை பண்ணுங்கன்னு சொல்ற …” என்றவனிடம் கட்டுபடுத்த முடியாத சிரிப்பு..
‘ஏதே நானா…???’ என்று அதிர்ந்து போனவள் ‘ஏங்க ப்ளைட்க்கு டைம் ஆச்சு’ என்றாள்.
‘எனக்கு அதெல்லாம் தெரியாது உன்னை பூஜையப்போ மட்டும் தான் புடவை கட்ட சொல்லி இருக்கேன்… அப்படி புடவை கட்டினா அன்னைக்கு பூஜை இருக்குன்னு உனக்கும் நல்லா தெரியும் அப்புறம் ஏன்டி கட்டின ..?? அதுவும் ஊருக்கு போகும் போது ..’ என்று அவன் கேட்க யாழிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை..
பின்னே இப்போதெல்லாம் பெரும்பாலும் வெள்ளை வேட்டி சட்டையில் அத்தனை கம்பீரமாக இருப்பவனுக்கு பொருத்தமாக இருக்க வேண்டி அவனோடு சேர்ந்து செல்லும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் புடவை கட்டுவதை யாழி வழக்கமாக்கி கொண்டிருக்கிறாள்.
அப்படி புடவை கட்டும் சமயங்களில்எல்லாம் அன்று இரவு தான் பூஜை இருக்கும் ஆனால் இன்று இப்படி ஊருக்கு செல்வதை சாக்கிட்டு பேசுவான் என்று அவள் எங்கே எதிர்பார்த்தாள்…??
‘என்னங்க பிளைட்க்கு டைம் ஆச்சு’ என்று யாழி பாவமாக அவனை பார்க்க,
‘அதெல்லாம் நேரம் இருக்குடி கியூக்கா சின்ன பூஜை பண்ணிட்டு கிளம்பிடலாம்’ என்று அவளோடு வீட்டினுள் சென்றவன் பிளைட் டேக் ஆப் ஆக இருபது நிமிடம் முன் மனைவியோடு ஏர்போர்ட் வந்து ப்ளைட்டில் ஏறி அமர்ந்திருந்தான்.
‘ம்மா நீங்க மட்டும் புது ட்ரெஸ்’ என்று பிள்ளைகள் தாயை பார்க்க,
அவளோ அவஸ்த்தையோடு அதிரலை தூக்கி மடியில் வைத்து கொண்டு, ‘புடவையில ட்ராவெல் பண்ண கொஞ்சம் கஷ்டமா இருக்கும்ன்னு சுடிதார் மாத்தினேன் செல்லம்’ என்று சமாளிக்க பார்த்தாள்.
குழந்தைகளோ ‘அப்போ எனக்கு.. எனக்கு..’ என்று அவர்களுக்கும் உடை மாற்ற சொல்லி அடம் பிடிக்க அதை கண்டு சிரித்த கணவனை முறைக்கவும் தவறவில்லை.
அன்று காதணி விழா நல்லபடியாக முடிந்திட பட்டுப்புடவையை மாற்றி வேறு லேசான புடவைக்கு மாறி குழந்தைகளை உறங்க வைத்து விட்டு அவர்களுக்கான பாலோடு வந்தவளிடம், “ரெண்டு குழந்தை பிறந்த பிறகும் கலெக்டர் மேடம் இன்னும் போட்டோஷூட்க்கு ஒத்துக்க மாட்டேங்குறீங்களே…” என்று அதிர் வம்புக்கிழுத்திருந்தான்.
அவனை முறைத்தவள், ‘ஒரு சின்ன புள்ள தெரியாம ஏதோ சொல்லிடுச்சே விடுவோம்ன்னு இல்லாம அதையே வச்சு இத்தனை வருஷமா ஓட்டி எடுத்தா எப்படி..??’ என்று பாலை ஊற்றி அவனிடம் கொடுக்க,
குடித்து முடித்தவன், ‘முடியாதுடி இது என் பொண்டாட்டியோட நீண்ட நாள் ஆசை , அதை கூட நிறைவேத்தலைன்னா நான் என்ன புருஷன்..??’ என்றான்.
‘ஏங்க அதி, அதிரல்க்கு நாலு வயசாகிடுச்சி அதான் அடுத்த குழந்தை..’ என்றவளை இடையிட்டு,
‘ப்ச் யாழி நமக்கு ரெண்டு குழந்தைங்க போதும்’ என்றான்.
‘ஆனா நீங்க தானே மூணு வேணும்ன்னு கேட்டீங்க..??’ என்று அவளும் விடாப்பிடியாக நிற்க
‘ஏய் அது அன்னைக்கு நீ ஒன்னு போதும் சொல்லவும் சும்மா சொன்னேன்டி., நிஜமா இல்ல’
‘உண்மையாவா…??’
“ஆமாம்மா இப்போ எல்லாம் பொதுவாவே ஒரு குழந்தையோட நிறுத்திடுறாங்க அதனால் எந்த உறவோட அருமையும் தெரியாம தனியா வளரக்கூடிய குழந்தைக்கு ஒரு கட்டத்துல பினான்ஷியல் ஆஸ் வெல் ஆஸ் மாரல் சப்போர்ட்க்கு கூட யாரும் இல்லாம போயிடுறாங்க…”,
‘சிலருக்கு ஏதாவது காரனங்களால ஒரு குழந்தை தான்னு ப்ராப்த்தம் இருக்கும் அது நாம ஒன்னும் பண்ண முடியாது ஆனா பலர் இங்க காரணமே இல்லாம் ட்ரென்ட் அது இதுன்னு ஒரே குழந்தையோடு நிறுத்திடுறாங்க அன்னைக்கு நீயும் இப்படி பேசவும் தான் அப்படி சொன்னேன்’.
‘அப்போ உங்களுக்கு மூணாவது குழந்தை வேண்டாமா..??’
‘வேண்டாம்டி’
‘நிஜமா..??’
‘ஆமா’ என்றவனை யாழி விழி அகலாமல் பார்க்க,
‘இப்போ என்னடி வேணும் உனக்கு..?? என்றவன் அவள் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு,
“ஓகே வேணும்ன்னா உனக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்குறேன்..!! உனக்கு அதுக்கு ஓகேன்னா நாம மூணாவது குழந்தை பெத்துக்கலாம்”.
விளையாட்டுக்கு சொல்லி இருந்தாலும் கணவனின் ஆசைகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அவன் மீதான பித்தத்தில் யாழி ‘என்னதுங்க..?’ என்று ஆவலோடு கேட்க,
‘அதான் சொன்னேனேடி பீச் தீம்ல போட்டோஷூட் எடுக்குறதா ப்ளான் பண்ணி இருக்கேன்.. அதுக்கு நீ ஒத்துக்கோ போட்டோஷூட் முடிச்ச கையோட மூணாவது குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிடலாம்…’ என்று அவன் கூற யாழியின் முகம் சுருங்கி போனது.
‘போங்க எனக்கு ஒன்னும் வேண்டாம்’ என்று முகம் திருப்ப,
‘ஆனா எனக்கு வேணுமே !!
‘என்னது..??’
‘போட்டோஷூட் அதுவும் பீச் பேக்ரவுண்ட்ல…’ என்றதுமே
‘இப்போ நீங்க சும்மா இருக்க போறீங்களா இல்லையா..??’ என்று அவன் புஜத்தில் யாழி கிள்ளி வைக்க,
‘முடியாதுடி, உனக்கு ஸ்விம்சூட் கூட ரெடி’ என்றான் அட்டகாசமான சிரிப்போடு,
‘என்னங்க…’ என்று அதட்டல் அவளிடம்.
‘என்ன.. ன்னன்ங்க ..?? பிரஸ்ட் நைட்ல பொண்டாட்டியை அழவிட்ட புருஷன்னு ஏற்கனவே எனக்கு கெட்ட பேர்… இப்..’
‘யார் சொன்னா..??’
‘நீதான் !! மறந்துட்டியா..??’
‘ப்ளீஸ்ங்க’
‘போடி முடியாது.., அன்னைக்கு நீ அதோட நிறுத்தி இருந்தா பரவால்ல டிவோர்ஸ் அது இதுன்னு எவ்ளோ பேசின…’
“அச்சோஓஓஓ ப்ளீஸ் தெரியாம சொல்லிட்டேன் சாரி சாரி சாரி… போதுமா..?? இத்தோட இந்த டாபிக் விடுங்களேன்..” என்று அவள் கெஞ்ச..,
‘எப்படிடி விட சொல்ற அதெல்லாம் முடியாது.., என் பொண்டாட்டியை டைவர்ஸ் வரை கூட்டிட்டு போன போட்டோஷூட் என் வாழ்க்கையில மறக்க முடியாது.., கண்டிப்பா பீச்ல இல்லாட்டியும் அட்லீஸ்ட் ஸ்விம்மிங் பூல்ல ஸ்விம்சூட்டோட ….’ என்றவன் அட்டகாசமாக சிரிக்க,
‘ப்ளீஸ்’ என்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டவள் ‘ப்ளீஸ் சும்மா இருக்க மாட்டீங்களா..??’ என்றதற்கு அவன் ‘இல்லை’ என்பதாக தலையசைக்கவும்,
அவன் மீசையை பிடித்திழுத்து முத்தமிட்டவள், ‘என் செல்லம், தங்கம், வெல்லம், பட்டு, புஜ்ஜி’ என்று கொஞ்ச..,
‘ஒன்னும் வேணாம் போடி.., ஐ வான்ட் போட்டோஷூட் அதுவும் இப்பவே.., இல்ல நான் கோர்ட் போவேன் இன்னைக்கே உன்னை டிவோர்ஸ் பண்ணுவேன்’ என்று அதிர் அடவு கட்ட..,
‘யோவ்..’ என்ற அதட்டல் யாழியிடம்,
‘ஏய் என்னடி..??’ என்று அவன் திகைத்து போய் பார்க்க,
‘என்ன என்னடி நானும் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் அடங்கவே மாட்டியாயா நீ..??’
‘ஏன்டி ஒரு கலெக்டர் பேசுற பேச்சா இது..’ என்றவனின் முகம் புன்னகையில் விகிசித்தது.
‘அப்போ நீங்க பேசுறது மட்டும் ஒரு மினிஸ்டர் பேசுற பேச்சா..??’ என்று கேட்க அதற்கும் அவனிடம் அட்டகாசமான சிரிப்பு..!!
********************************************
அவன் சிரிப்பை கண்டு ‘சிரிக்காதீங்க’ என்று அவள் இதழ்களை சுழிக்க
‘வெளியே தான்டி மினிஸ்டர் இங்க உன் புருஷன்..! புருஷன் பேச்சு இப்படி தான் இருக்கும்’ என்று அவள் மடியில் சரிந்து படுத்தவன் அவளை இழுத்து கொஞ்சி சுழிந்த இதழ்களில் அழுத்தமாக முத்தமிட,
‘அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா..??’ என்பதாக அவனை பார்த்தவள்,
“நானும் வெளியே தான் கலெக்டர் இங்க உங்க பொண்டாட்டி மட்டுமே..!! அப்போ என் பேச்சும் இப்படி தான் இருக்கும்..” என்று அவளும் சளைக்காமல் மடியில் கிடந்தவனை முத்தமிட்டு வேக மூச்சுக்களோடு பிரிய,
அதிரோ புன்னகையுடன் ‘நாட் பேட் !!’ என்றதும் அவன் சீண்டல் புரிந்த யாழி,
‘போங்க நீங்க..’ என்று அவன் மார்பில் முகத்தை மறைத்தாள்.
அவன் முகம் மறைத்த கூந்தலை மெல்ல விலக்கி கொண்டே, ‘ஆமா ஏன்டி யோவ்வோட நிறுத்திட்ட இந்த வாடா போடா எல்லாம் இல்லையா..??’ என்றிட,
அவளோ ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
‘ஏன்..??’
‘இது என்னங்க கேள்வி..??’
‘கேள்வி கேட்டா பதில் சொல்லி பழகுடின்னு எத்தனை முறை சொல்ல..??’
‘திரும்ப என்னை சிக்க வைக்க கேட்கலையே’ என்று யாழி முன்ஜாக்கிரதையாக அவனை பார்க்க,
அதான் ஏற்கனவே சிக்கிட்டியே..!! என்று அவள் இடையில் படர்ந்திருந்த கரத்தை புன்னகையோடு சுட்டி காண்பித்தவன், ‘சரி நீ பதில் சொல்லு’ என்றான் .
‘எதுக்கு அனாவசியமா நான் ‘டா’ சொல்லணும்..??’
‘உன் புருஷன் தானேடி உனக்கு இல்லாத உரிமையா..??’
‘உரிமை இருந்தா மரியாதை இல்லாம பேசனும்ன்னு என்ன கட்டாயம்..?? எப்படி என் மரியாதை உங்க கையிலயோ அதே போல உங்க கௌரவம் என் கையில ..!! என் புருஷனை புதுமை, சுதந்திரம் என்ற பெயரில் மத்தவங்க எதிரில் நானே தாழ்த்தவோ விட்டு கொடுக்கவோ மாட்டேன்’
‘சரி வெளில வேண்டாம் ஆனா இங்க கூப்பிடலாமே, நாம தானே இருக்கோம்’
அவனையே பார்த்திருந்தவள், ‘ஹ்ம்ம் கூப்பிடலாம் !! ஆனா இப்போ எனக்கா யோவ் சொல்ல தோணின மாதிரி இருக்கணுமே தவிர கட்டாயமா இல்லை’ என்றவள் எழுந்திட முற்பட,
“சரி ‘டா’ தான் முடியாதுன்னு சொல்லிட்ட அட்லீஸ்ட் பாரஸ்ட் நடுவுல ஆதிவாசி தீம் ஓகே வாடி… ட்ரெஸ் செலவு மிச்சம்’ என்று திரும்ப தொடங்கி அவன் அடக்கமாட்டாத சிரிப்புடன் கண்ணடிக்க ,
‘உங்களை..’ என்று அவனை தள்ளிவிட்டு நகர்ந்தவள்,
“நானும் பொறுமையா இருக்கலாம்ன்னு பார்த்தா ஓவரா பேசிட்டு போறீங்க.., இப்படியே பேசிட்டு இருந்தீங்க கண்டிப்பா இன்னைக்கு நைட் பூஜை கட்” என்றிட,
‘என்னது’ என்று அதிர் எழுந்தமர,
‘ஆமா இன்னைக்கு மட்டும் இல்ல இன்னும் ஒரு வாரம் கட், நான் இப்பவே ட்ரெஸ் சேன்ஜ் பண்ண போறேன்’ என்று அவள் கிளம்ப சட்டென அவள் முந்தானையை பிடித்திழுத்து தன்னோடு கட்டிக்கொண்டவன்,
‘ஏய் இதென்னடி அநியாயம்..??’ என்று கேட்க,
‘உங்களை விடவா..??’ என்று அவன் நெற்றி முட்டியவள் ‘சொன்னா சொன்னது தான்’ என்றாள் திடமாக.
“செல்லாது செல்லாது நாளை மறுநாள் சட்டசபை கூட்ட தொடர் ஆரம்பிக்குது சோ கண்டிப்பா இன்னைக்கு ஆறுகால பூஜை இருக்கு” என்றவன் புரண்டு சென்று மேஜை இழுப்பறையில் இருந்து பெட்டியை எடுத்து..,
‘இதுல உனக்கு பட்டு புடவையும் இருக்கு கோ கெட் ரெடி’ என்றிட,
‘போங்க முடியாது !! ஆறு இல்ல அறுபது கால பூஜை பண்றதா இருந்தாலும் எனக்கு வேண்டாம்…, கல்யாணம் ஆகி ஆறு வருஷமாக போகுது இன்னமும் ஒரு பச்ச பிள்ளை புரியாம பேசின பேச்சை வச்சிட்டு எப்படி ஓட்டி எடுக்குறீங்க.., இதெல்லாம் ஒரு மினிஸ்டர்க்கு அழகா..?? போங்க’ என்று அவள் முறுக்கி கொண்டு விலகினாள்.
‘ஏய் எங்க போற..??’ என்று அவள் கை பிடித்து தடுத்தவன்,
‘சரி மினிஸ்டரை விடு நாளைக்கு உன் புருஷனுக்கு பர்த்டேடி அறுபது இல்லைன்னாலும் அட்லீஸ்ட் ஸ்பெஷலா அர்த்தஜாம பூஜை செய்ய மாட்டியா..??’ என்று அவன் இதழ்களுக்குள் புன்னகைக்க ,
விழிகள் விரிய அவனை பார்த்தவள், “அச்சோ சாரி சாரி சாரிங்க….” என்று உடனே அவனை கட்டிக்கொண்டு முகமெங்கும் முத்த மழை பொழிந்தவள்,
“சாரிங்க நிஜமாவே ஒரு வாரம் முன்னமே பசங்க கிட்ட உங்க பர்த்டே வருதுன்னு சொல்லிட்டு இருந்தேன் காலையில் கூட நியாபகம் வச்சி இருந்தேன் ஆனா இப்போ நீங்க பண்ணின கலாட்டால சுத்தமா மறந்தே போயிட்டேன்” என்றிட,
‘ஹே எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகுற எனக்கு உன்னை தெரியாதா..?? நானே சில நேரம் ஆர்பாட்டம், கூட்டம் அது இதுன்னு மறந்துட்டாலும் எப்பவும் உன்னோட வொர்க் ப்ரெஷர் மறக்காம என்னை சாப்பிட சொல்லி உன் மெசேஜும் காலும் வந்துடுமே’ என்று அவளை அணைத்து கொண்டான்.
சில நிமிடங்களுக்கு பின் தன் அணைப்பில் பாந்தமாக அடங்கி இருந்த மனைவியின் உச்சியில் இதழ் பதித்து, “சரி இனி செல்பி, போட்டோஷூட் பத்தி பேசல அட்லீஸ்ட் ஹனிமூன் வித் போட்டோகிராபர் ” என்று அவன் மறுபடி சீண்டிட அதில் யாழியின் முகம் கோபத்தில் சிவக்க தொடங்கியது..
அவள் சிவப்பை கண்டு அசராமல் இன்னுமே யாழியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தொடர்ந்த அதிர் , ‘கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் என்னை ஹனிமூன் போகவிடாம…’ என்று உல்லாசகுரலில் பேசிக்கொண்டு செல்ல ,
‘உங்களை…’ என்று தள்ளி விட்டு யாழி கீழிறங்க பார்த்தாள்,
அவனோ விடாமல் அவளை சுழற்றி படுக்கையில் இழுத்து போட்டு தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன்,
‘கோபமா..??’ என்றிட,
‘இல்லையா பின்னே..?’ என்ற முறைப்பு மனைவியிடம்.
‘சரி சரிடி இனி அதை பேசலை’ என்று அவள் இமைகளில் முத்தமிட்டவன் அவள் இதழ்களையும் மென்மையாக தீண்டி,
‘உனக்கு ஒன்னு தெரியுமா..??’ என்றான்.
‘என்ன ..??’
‘எனக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்காங்க’ என்றான் தீவிர குரலில்
‘எனக்கு ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு மாதிரின்னு சொல்லிகிட்டாலும் உன்னை விட எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்’
‘ஹாஹான் அப்புறம்’
‘இப்பவும் கோபம் வரலையா..?’
‘நான் தான் முடிக்க சொன்னேனே..??’
‘she is the cutest wife ever !! அவ அளவுக்கு யாரும் என்ன சிரிக்கவும் ரசிக்கவும் வச்சதில்ல தெரியுமா..?? ‘ என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அவனை தள்ளிக்கொண்டு அவன் மீது ஏறி அமர்ந்தவள் அவன் பேசாத வகையில் தாடையை அழுத்தமாக பற்றி,
‘சொல்லிட்டே இருக்கேன் அதை மறந்துடுங்கன்னு ஆனா அடங்கவே மாட்டீங்களா…?? நான் பூஜைன்னா என்னன்னு தெரியாம பேசினேன்னா நீங்களும் என்னை பேச விட்டு பேச்சை வளர்த்து எந்த அளவுக்கு என்னை பேச வச்சி இருக்கீங்க..??’ என்று அவன் கீழிதழை கடித்து வைக்க அவனோ அவன் வசம் வந்த இதழ்களை விடாமல் வதைத்த பிறகே விட்டான்.
திணறிய மூச்சுக்களுடன் தன் மார்பில் சாய்ந்திருந்தவளிடம், “நிஜமாவே யாழி சம்டைம்ஸ் ஏதாவது ப்ரேஷரோட நம்ம ரூம்க்கு வரும்போது எல்லாம் என்னையும் அறியாம நம்ம பிரஸ்ட் நைட் நியாபகம் வந்துடும் அதுவும் நீ பூஜை பண்ண போறீங்களான்னு கேட்டது, உனக்கு நான் புக்ஸ் ப்ரெசென்ட் பண்ணதும் நீ ஷாக் ஆனது, படிக்க சொன்னதுக்கு பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொன்னது, ஸ்விம்மிங் முன்ன என்னை கூட்டிட்டு போய் பூஜை பண்ணது எல்லாமே செம கியூட் இப்போலாம் அந்த கியூட்னஸ் ரொம்ப மிஸ் பண்றேன் ஆனா அதை விட உன்னோட போல்ட்னஸ் அதிகமா அட்மைர் பண்றேன், உன்னோட டிசிஷன் மேகிங் முன்ன விட இப்போ ரொம்பவே பக்காவா இருக்கு.. வெரி ஷார்ப்..!!” என்று பாராட்டியவன்,
‘எப்படி இருந்த என் பொண்டாட்டி இப்போ இப்படி மாறிட்டாடி ஐ ஆம் வெரி ப்ரவுட்..!!’
‘இந்த போல்ட்னஸ் எல்லாமே உங்களால தானே..!! இப்பவும் யோசிக்கிறேன் எப்படி நாம அப்படி லூசா இருந்திருக்கோம்ன்னு’
‘யாரு லூசு..??’
‘நான் தான்..!!’
‘நீயா..?? அடிப்பாவி எல்லாத்துக்கும் மேல அன்னைக்கு எனக்கு பூஜை பண்ண தெரியுமா தெரியாதான்னு கேட்டியே ஒரு கேள்வி நானே ஆடி போயிட்டேன்டி.. நிஜமாவே தூக்கி வாரி போட்டுடுச்சி.. என்..’ என்றவனின் வாயை பொத்தியவள்,
‘அச்சோ வேண்டாம் ப்ளீஸ் திரும்ப ஆரம்பிக்காதீங்க போதும் நிறுத்துங்க’ என்றவளின் கெஞ்சல்களுக்கு எல்லாம் மதிப்பளிக்காமல் அவள் கையை அகற்றியவன்,
‘எப்படிடி என்னை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்ட..?? அது கூட பரவால்ல அதுக்கு நீயே ஒரு பதில் சொல்ல வந்த பார்த்தியா..?? அல்டிமேட் !! அன்னைக்கு முழுசா சொல்லாம போயிட்ட எங்க இப்…’ என்றவனை அதற்கு மேலும் பேச விடாமல் அவனிதழ்களை அழுத்தமாக அவசரமாக சேர்ந்த அவன் மனையாள் அவன் மோக ராகங்களுக்கு இணையாக புதுராகம் இசைக்க தொடங்கி கணவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக தொடங்கி இருந்தாள்.
இருவேறு எண்ண அலைவரிசை கொண்ட மனங்கள் காதல் எனும் புள்ளியில் இணைந்து வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் மனமெனும் வீணையின் புதுராகமாகினர்.
அவர்கள் கொண்டாட்டம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்தி விடைபெறுவோம்.