அவள் அவனை சந்திக்க வந்தாள். அவளிடம் அவன் , ” நீங்க யாரு , எதற்காக என்னை பார்க்க வந்திருக்கீங்க ” என்று கேட்டான் . அவள் அதற்கு , ” வணக்கம் சார் , என் பெயர் ப்ரீத்தி , நீங்கள் இலவசமாக புதிய பல்கலைக்கழகம் திறக்க போவதாக தகவல்கள் இருக்கிறது , அதை பற்றி உங்களிடம் நேரலை பேசுவதற்காக பத்திரிகைகளில் இருந்து வந்துள்ளேன். ” என்று அவள் கூறினாள். அவன் அதற்கு தான் நேரலை வர முடியாது தனக்கு வேலை இருக்கிறது என்று கூறி அவளை போக சொன்னான் . அவளும் சரி என்று வெளியே போக இருந்தாள். அரவிந்த் உடைய அம்மா அந்த பெண்ணை கூப்பிட்டு ” நீ ரொம்ப அழகா இருக்க , உனக்கு திருமணம் நடந்து விட்டதா ” என்று அவளிடம் கேட்டாள். அவள் அதற்கு , ” ரொம்ப நன்றி , எனக்கு இன்னும் கல்யாணம் ஆகா வில்லை” என்றாள். இதை கேட்டதும் அவளுக்கு மகிழ்ச்சி அவளிடம் தன் மகனை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று வினவினாள் . ப்ரீத்திக்கு குழப்பம் , அவளுக்கு என்ன சொல்வது என்று அவளுக்கு தெரிய வில்லை . அவள் அவனது அம்மாவிடம் , ” எனக்கு யாரும் இல்லை , எனக்கு கல்யாணம் செய்வதற்கு பிரச்னை இல்லை ஆனால் உங்கள் மகனுக்கு விருப்பமா என்று கேட்டு நாளைக்கு முடிவு சொல்லுங்க ” என்று கூறி விடை பெற்றாள். அவனது அம்மா அவனிடம்,” நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ அப்போ தான் நீ நினைத்த மாதிரி உன்னுடைய பல்கலைக்கழகம் திறக்க முடியும் , இனி முடிவு உன் கையில் ” என்று கூறினாள் . அவனது அப்பாவும் ,”உன் அம்மா சொல்வதை போல் செய்யவேண்டும்” என்று கட்டளை இட்டார் . அவனும் வேறு வழி இன்றி ஒப்பு கொண்டான் . அவன் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான் என்ன வென்றால் , தன்னால் கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்ல முடியாது அந்த பெண் நினைத்தால் முடியும் அல்லவா அவளிடம் பேசி பார்க்க வேண்டும் என்று நினைத்தான் . அவளுக்கு போன் செய்தான் அவளிடம் , ” ப்ரீத்தி நான் அரவிந்த் பேசுகிறேன் உங்களை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறினான் ” அவள் அவனிடம் , ” சார் , நான் எங்க வர வேண்டும்” என்று கேட்டாள் . அவனும் ஒரு காபி ஷாப் வர சொல்லி சொன்னான் . அவளும் சரி என்று மாலை அங்கு வந்தாள் . அவனும் வந்தான் . அவளிடம் அவளை கல்யாணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை இதை அவனால் அவனது பெற்றோருக்கு தெரிவிக்க முடியாது என்றும் கூறினான் . அவள் அவனிடம் , ” சார் , நான் ஏற்கனவே உங்க அம்மா விடம் விருப்பம் தெரிவித்து விட்டேன் , இதுக்கு மேல் என்னால் ஒன்றும் பண்ண முடியாது . பேசாமல் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் , உங்களுக்கு நல்ல மனைவியாக நான் இருபேன், இப்படி ஒரு வாழ்க்கை நினைத்து பார்த்தாலும் எனக்கு கிடைக்காது , என்னால் முடிந்த சந்தோசத்தை நான் உங்களுக்கு தருவேன்” என்றாள் . அவன் அவளிடம் ,” இந்த கல்யாணம் வேண்டாம் சொல்ல உனக்கு எவ்ளோ பணம் வேண்டும்” என்று கேட்டான் .அதற்கு அவள் , ” சார் , உங்களை கல்யாணம் செய்தால் முழு பணமும் எனக்கு தான் நான் எதற்கு உங்களிடம் பணம் வாங்கணும் என்று திமிராக பேசினாள். அவனுக்கு ஓரளவு புரிந்தது அவள் தன்னை பணத்துக்காக தான் கல்யாணம் செய்ய சம்மதித்தாள் என்று , அவனுக்கு மிகவும் வருத்தம் இவளை கல்யாணம் செய்து விவாகரத்து பண்ணாலும் பத்தி சொத்து அவளுக்கு போகும் அவள் இதை எல்லாம் செய்ய விடுவாளா என்று அச்சம் கொண்டான் , ஆனால் அவனுக்கு வேற வழி இல்லை அவளை திருமணம் செய்து ஆகா வேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கு . அவளுக்காக அவன் கனவை இழக்க போகிறானா இல்லை அவளை கல்யாணம் செய்யாமல் தப்பிக்க போகிறானா ? .