அமுதங்களால் நிறைந்தேன்…
10
தாமோதரன் வீடு வர வர… லிங்காவின் எண்ணமே மேலோங்கி இருந்தது… ஏதோ விளையாட்டு பையனாய் தெரிந்த முகத்தினுள் இத்தனை.. தொழில்நுட்ப சாயலா… முக்கியமாய்.. அங்கு… நிற்கும் சரக்குகளை.. அந்த பையரின்.. கம்பனி லேபிளை, பிரித்து விட்டு.. வேறு ஒரு கம்பனிக்கு.. அதே நாட்டில்… அனுப்ப வேண்டும்.. என சொல்லியது மிகவும் கவர்ந்தது தாமுவை. அதை பற்றியே சிந்தித்த படியே வந்தார் மனிதர்.
தாமோதரனுக்கும்… சாரங்கனுக்கும்.. கட்சியிலும் சரி, வெளியிலும் சரி நல்ல பெயர்தான்.. ஆனால், அவர்கள் சறுக்குமிடம் அந்த சாதி ஓட்டுதான். சாரங்கன் சிறு வயதில் சற்று கடினபட்டுதான் இந்த கட்சி, பதவி.. என வந்தார்.
எனவே, சாதி வகையில் அவருக்கு செல்வாக்கு மிகவும் குறைவு.. எனவேதான்.. சத்தியமூர்த்தியை பார்க்கும் போதெல்லாம் தோன்றும்.. என்ன பணம், அரசியலில் பதவி.. வைத்திருந்து என்ன.. மரியாதை என்பது.. தனிதான் என.
அதனாலேயே, அவரை நெருங்க நினைப்பார். ஆனால், அவர் எட்டியே இருந்தார் இத்தனை நாட்களாக. இப்போதும் அவர் பற்றி தெரியாது.. ஆனால் லிங்கா… சட்டென.. தங்களை நெருங்குவதாக எண்ணம்… தாமுக்கு. அதனை பயன்படுத்தவும் நினைக்கிறார்… எனவே அன்றைய நாள் முழுவதும் லிங்காவின் வேலைகளியே சிரமேற்கொண்டு செய்தார் எனலாம்.
@$@$@$@$$@$@$
காவ்யா அரவிந்த் முதலில் வந்தனர்.. அதன் பின்னர்தான்… வீட்டு பெண்கள் வந்தனர்.. அன்று அப்படியே ஆர்ப்பாட்டமாய் சென்றது நாள். வீடு ஏதோ புதுகலை கொண்டது போல் இருந்தது காமாட்சிக்கு.
அடுத்தநாள் தீபாவளி. கொண்டாட்டமாகவே இருந்தது. குறிப்பாக லிங்கா, தீபக்குடன் சேர்ந்து காசை கரியாக்கினான்… என சொல்லாம். அப்படியொரு வம்பு தீபக்குடன், சிறுவனுக்கு தகுந்தவாறு மூர்த்தி, மத்தாப்பூ.. ஊசி வெடி.. துப்பாக்கி… ரோல் கேப்.. சங்குசக்கரம்.. என ஏதோ நிறைய வாங்கியிருந்தார் தீபக்கின் தாத்தா.
தீபக்குக்கு வாங்கிய வெடி எல்லாம்.. லிங்காவே வெடித்து தீர்த்தான். காலையிலேயே அந்த போர்ட்டிகோவில் அமர்ந்து கொண்டு.. கையில் பிடித்த படியே அந்த முழு அட்டைபெட்டியின் பட்டாசுகளையும்… பாம்பு மாத்திரை வரை, தீர்த்திருந்தான் லிங்கா.
[the_ad id=”6605″]
அருகில் தீபக் இருந்தான்தான்.. ஆனால், எல்லாவற்றையும் இவனே பிடுங்கி, பிடுங்கி.. வெடித்து விட்டான். தீபக் அழவே தொடங்கிவிட்டான்.. அவனை சமாதானம் செய்தே தீபாவளியின் பகல் பொழுது கரைந்தது வீட்டினருக்கு.
பின்னர், மாலையில் கடைக்கு, தீபக்கையும் அழைத்து சென்று… இன்னும் நிறைய அவன் வெடிப்பது போல் வாங்கி தந்தான் லிங்கா. அம்மு, முதலில் பயந்தாலும்.. பின்னர் சித்தப்பாவின் கையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
மறுநாள் தீபக்கிற்கு விடுமுறை… எல்லோரும் காலையில் உணவு முடித்து இலகுவாக அமர்ந்திருக்க.. லலிதா பொதுவாக “த்த… நான் ஒரு ரெண்டுநாள் எங்க வீட்டுக்கு போயிட்டு வரவா..” என்றாள்.. தயங்கிய படியேதான் கேட்டாள்.
லலிதாவிற்கு இந்த இரண்டு நாளும்.. என்ன செய்தும் தன் மனநிலை மாறவேயில்லை.. அன்று ஷாப்பிங் சென்ற போதும் ஏதும் பெரிதாக ஆசைப்பட்டு வாங்கவில்லை.. குழந்தைகளுக்கு அளவாய் துணிகள் மட்டும்தான் வாங்கினாள். மற்றபடி எல்லாம் இந்த முறை காமாட்சிதான் வாங்கினார்.
லலிதா.. தன் மகளுக்கு தண்ணீர்.. பால் கொடுக்க அமர்ந்து கொண்டாள்.. இல்லை, தீபக்குடன் ப்ளே செக்க்ஷன் சென்று அமர்ந்து கொண்டாள். இப்படியாக எங்கோ வெறித்த பார்வையும், பயமுமாகதான் அமர்ந்திருந்தாள். கூட வந்த மாமியாருக்கு அது தெரிந்தது தான்… எனவே ஒவ்வொன்றாக லதாவிடம் சொல்லி சொல்லி வாங்கினார்.. அவளையும் உடன் இழுத்து சென்றார்.. ஆனாலும் ஓட்ட மறுத்தாள் லதா.
தீபாவளியிலும் பெரிதாக நாட்டமில்லை.. குழந்தைகள் ஓடுவதால்.. தானும் அவர்கள் பின் ஓடினாள்.. இன்றும் அப்படியே.. காலையிலிருந்து எதையோ செய்து கொண்டிருந்தவளுக்கு… தலை வலிப்பது போல் இருந்தது.. இளாவின் பார்வை வேறு அவ்வபோது தன்னை தொட்டு தொட்டு மீண்டாலும்.. அவனிடம் முழுதாக நெருங்க முடியவில்லை.. அதற்காக தள்ளியும் வைக்க முடியவில்லை… அந்த நிலை மனதில் ஒரு அழுத்தத்தை தர… மேலும் ஒன்றுமே நடக்காதது போல் எத்தனை நாள்.. இருப்பது.. அது ஒரு அழுத்தத்தை தர… ஓய்ந்து போய், வார்த்தையால் கேட்டே விட்டாள்… இப்போது.
முதல் அதிர்ச்சி இளாக்குதான்… ஏதும் சொல்ல முடியாதவனாக தலை தாழ்ந்து அமர்ந்திருந்தான். மூத்த தம்பதிக்கு தன் மருமகளின் நிலை புரிகிறது.. ஆனால், தலை தாழ்ந்த மகனை நினைக்கையில் என்ன செய்வது என தெரியவில்லை.. அமைதியாக இருந்தனர்.
லலிதா மீண்டும் “போயிட்டு வர்றேனே.. எ… என்னமோ.. மாதிரி இருக்கு” என சற்று கரகரத்த குரலில் சொல்ல..
இளா ஏதும் சொல்லாமல் “ம்மா.. நான் கொஞ்சம் படுக்கிறேன்” என சொல்லி மேலே சென்றான். இந்த ஆறு வருட வாழ்வில் என்றும் தங்களின் நிலையை மற்றவர்களுக்கு… வீட்டு உறுப்பினர்களே.. ஆனாலும்.. அவர்களுக்கு கூட தெரியவிட்டதில்லை.. இளா தம்பதி. இன்று.. எல்லாம் தலைகீழ்.. என்னை பார்.. என் வாழ்வை பார்.. என தங்களின் நிலை, தம் மக்கள் வரை… தெரிவதை விரும்பவில்லை இளா.. எனவே, ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டான்.
மூர்த்தி இதை கவனித்து, பிள்ளைகளையும் கவனித்து “ லலிதா… இதென்ன நீ கேட்கணுமா.. எங்க கிட்ட… நீ, போயிட்டு வாம்மா… அம்முவ மட்டும் தூக்கி போ.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வா.. தீபக் இங்க இருக்கட்டும்… நைட் அழுதா… உன்னை கேட்டால் வேண்ணா.. நான் கொண்டு வந்து விடுறேன்… நல்லா ரெஸ்ட் எடுத்து… வா… “ என்றார் சற்று சத்தமாக.
லலிதா “சரி மாமா… பாண்டி அண்ணாவ மட்டும் இருக்க சொல்லுங்க… நான் கிளம்பி வரேன்” என்றாள்.
லலிதா கிட்சென் செல்லவும் பின்னாடியே சென்ற மாமியார் “என்ன லதா.. என்ன ஆச்சு… ஏதாவது சொல்லிட்டானா… “ என்றார் சிறு குரலில்.
லலிதாக்கு என்ன சொல்லுவது.. என தெரியவில்லை “ஐயோ இல்ல அத்த, நான்தான்.. உடம்பு முடியலை… அதான்… தூக்கமே வரமாட்டேங்கிது.. அதான். அவர் ஒன்னும் சொல்லல அத்த..” என்றாள் பொறுப்பாக.
இப்போதுதான் ஆசுவாசம் ஆனார் மாமியார்.. காமாட்சி “சரி.. உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு.. இரண்டு நாளில், நம்ம வீட்டுக்கு… திரும்ப வந்திடனும்… புரியுதா.. நம்ம வீட்டுக்கு… சரியா..” என்றார் கொஞ்சம் கனமான குரலில்.. லலிதா ஹாலில் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன் என சொன்னதை மனதில் வைத்து சொன்னார்.
லலிதாவும் “சரி த்த…” என்றாள் பொறுப்பாக.. லலிதா, தன் அம்மா வீட்டுக்கு செல்லும் போது.. எப்போதும் இளங்கோவிடம், மட்டுமே சொல்லுவாள். அவள் செல்லும், அன்று காலையில் தான், எல்லோரிடமும் சொல்லுவாள்.. எப்போதும்.
பொதுவாக தீபக்கின் விடுமுறை தினங்களில் சென்று விடுவாள் அங்கு. காமாட்சி.. பெரிதாக இது போன்ற விழையங்களை கவனிப்பதில்லை.. ‘சொல்லிட்டு போனால் சரி’ என அமைதியாகி விடுவார்…
ஏதாவது விருந்து, விழா என்றால் மட்டும் சத்தமிடுவார்… ‘தெரியாதா.. முன்னாடியே சொல்லமாட்டியா.. நாங்க அவ்வளோ தூரம் எப்படி போறது.. ‘ என சற்று சத்தம் போடுவார். மற்றபடி.. சரிதான் போயிட்டு வரட்டும் என்றிருந்து விடுவார்.
ஆனால், வந்துவிடுவேன் என சொல்லி சென்ற, தினங்களுக்குள் சரியாக வந்துவிட வேண்டும் எப்போதும்.. வரவில்லை எனில் இளாவை படுத்தி விடுவார்.. நீ போய் அழைத்து வா.. என.
பத்து நாட்களுக்கு மேல்.. லலிதாவை அங்கு தங்கவே விடமாட்டார்.. அம்மு பிறந்த போதே.. நேரே இங்கே வந்து விட்டனர்.. அதன்பின் நாற்பது நாள் கழித்துதான் லலிதா அம்மா வீடு சென்று… இரண்டு மாதம் இருந்து வந்தாள்.
அத்தோடு.. சரி.. பெரிதாக எங்கும் செல்லவில்லை இந்த ஆறு மாதங்களில் லலிதா. அம்முக்கு தண்ணி மாறும்.. தீபக்கின், பள்ளி.. தேர்வு.. என வரிசையாய் ஏதேதோ காரணங்கள். எனவே எல்லாம் சேர்ந்தது லலிதாக்கு.. இதோ.. கிளம்ப, மேலே சென்றாள்.
இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிற்றூர்தான் லலிதாவினது.. எனவே ஒரு மணி நேர பயணம் அவ்வளவே..
மேலே சென்ற இளாக்கு அவளை அங்கே அனுப்ப மனதேயில்லை.. ஏதோ அவள் அருகில் இருப்பது அவனுக்கு அப்படி ஒரு அமைதியை தந்தது. ஆனால் இப்போது இவள் அங்கு செல்கிறேன் என்றது.. ஆவி பிரிந்த ப்ரேதமாக உணர்ந்தான் இளா..
மெல்ல தங்களின் அறையை நடையால் அளக்கத் தொடங்கினான்.. இளா ‘என்ன சொல்ல முடியும் அவளிடம், என்னை தெரியாதவளா.. சொல்லி புரியவைக்க. நான் செய்தது தவறுதான்.. அதற்காக இப்படியா.. என்னை தனியே விட்டு போவது.. என்னிடம் கேட்க கூட இல்லை… என்ன சொல்லுவது அவளிடம்.. இப்போ வேண்டாம்… அடுத்த வாரம் போ… ச்சு.. போடி… ‘ என ஏதேதோ எண்ணம் மெல்ல மெல்ல.. எழ ‘எல்லா இடத்திலும் நான் தோற்றுவிட்டேன்.. எங்கும் நான் சரியில்லை…’ என எண்ணம் வந்தது இளாக்கு.
[the_ad id=”6605″]
லலிதா மேலேறி வந்தாள்… தன் கணவன் அங்கும், இங்கும் நடப்பதை உணர்ந்தாள்.. ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது ஆனால், பேச தோன்றவில்லை.. ஏதோ அழுத்தம்.. ‘பேக்’ எடுத்து, பெண்ணுக்கும்.. தனக்கும் உண்டான துணிகள், தேவையான பொருட்கள் எல்லாம்.. எடுத்து வைக்க தொடங்கினாள்.
இளா, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.. ‘என்கிட்டே கேட்காம போற…’ என கேட்க வேண்டுமென எண்ணம்… ‘இப்போ எதுக்கு போற..’ என கேட்கணும் போல் இருந்தது.. அதை விட வெட்கத்தை விட்டு இறுக்கி அணைத்து.. ‘சாரி.. சாரி..’ என பலமுறை சொல்லி முகமெங்கும் இதழ் பதிக்கும் வெறி கூட வந்தது.. இளாக்கு. ஆனால், அவளின் முகமும், அதில் தெரியும் ஒதுங்கும் பாவமும்.. இது எல்லாவற்றிற்கும் தடா சொன்னது அவனிடம்..
எதுவும் செய்ய முடியாமல்.. தன்னவளின் நம்பிக்கையை எப்படி மீட்பது என தெரியாமல்.. ஆறு வருடம் என்ன வாழ்ந்தேம்.. என புரியாமல் விழி பிதுங்கி நின்றான் இளா..
லலிதா, எல்லாம் எடுத்து வைத்தாள்.. இளா உணரவேயில்லை அதை.. மெல்ல தன்னை தயாராக்கிக் கொண்டாள்.. கிளம்பிவிட்டாள்.. வெளியே செல்லும் போது “வரேன்ங்க…” என்றாள்.
இளா, தன்னிலிருந்து வெளியே வந்து அவள் முகம் பார்த்தான்.. இன்னும் சோர்வுதான்.. தெரிந்தது.. அதைவிட பயம் தெரிந்தது கண்ணில்.. அமைதியாக “என்ன சொல்லணும் நான்..” என்றான் எந்த பாவத்தையும் முகத்தில் காட்டாது..
லலிதாக்கு, கணவனின் இந்த அமைதி ஏதோ செய்ய “ஒரு ரெண்டு நாள் தானே…” என்றாள்.. தன் குற்றத்தை உணர்ந்த குரலில். இந்த செயலை முன்பு செய்திருந்தால் கணவன் மனம் அமைதியாகி இருக்குமோ என்னவோ.. இப்போது சொல்லவும்… எகிறி குதித்தது… முரணாக… இளா “ஏன், அங்க போறேன்னு கூட என்கிட்டே சொல்லலை.. ம்…” என்றான் பொறுமையாக சண்டையில்லா குரல்தான்.. ஆனால், சின்ன எதிர்பார்ப்போடு வந்ததோ..
ஆனால், மனையாள்.. தன்னுள் உறுத்திய விழையத்தை.. உணர்ந்தாள்.. இப்போது அவனை பார்க்காமல் “நீங்க அன்னிக்கு.. என்கிட்டே எதுவும் சொல்லல… வரல… நான் ஏதுமில்லைன்னு, சொல்லிட்டீங்க… தானே..” என்றாள் ஏக்க குரலில்.. அழுகையில்லை.. ஏக்கம் மட்டுமே.. மனைவியானவளின்… அதிக பட்ச எதிர்பார்ப்பு. அதை அப்பட்டமாக சொல்லாலும், கண்ணாலும் சொன்னாள் லதா.
இளாவின், நிலை வேறே அப்போது. இப்போதும் வேறுதான். ஆனால், ‘சொல்லி இருக்கணுமோ.. தீர்வு தருவாளோ மாட்டாளோ.. அவளிடம் பேசி இருக்கலாமோ.. எனக்குதான் எல்லாம் தெரியும்.. என இருந்து விட்டேனோ..’ என மனம் நினைக்க..
லதா “அ.. அப்போ.. நான் மட்டும் ஏன் சொல்லணும்…” என்றாள். இளா இந்த பதிலில் அமைதியாகிவிட்டான்.. அவனின் கண் முன்.. மனையாள் வெளியே சென்றாள் ஏதோ முனு முனுப்புடன்.. ஆனால், அவன் காதில் விழவில்லை இளா “என்ன சொன்ன” என்றான் தன்னை மீட்டுக் கொண்டு.
லதா “ம்… உங்களுக்கு இந்த சின்ன விஷயத்துக்கே கோவம் வருதே… எ.. என்னை நீங்க எப்படி மதிச்சீங்க.. என் கூட எப்படி வாழ்ந்தீங்கன்னு… அ.. அன்னிக்கு நீங்க செய்ததே நிருபிச்சிடுச்சி.. நான் எதுவும் இல்லை உ… உங்க வாழ்க்கையில் ன்னு.. நான்தான் ஏதோ… ச்சு.. விடுங்க.. மணியாச்சு… நான் வரேன்” என்றவள் கிளம்பிவிட்டாள்.
இளாக்கு, அவளின் முணுமுணுப்பு மிகவும் பிடித்தது.. சொல்லிவிட்டாள்.. அதுவே போதும்.. அமைதியாக ஏற்பதை விட… என்ன நினைக்கிறாள் என சொல்லுவது பரவாயில்லையாக இருந்தது.
இளா “சாரி…” என்றான் சின்ன குரலில்.. அவனை அறியாமலே வந்தது..
லலிதா அவனை முறைத்தாள் “வரேன்” என சொல்லி கிளம்பிவிட்டாள்.
@$@$@$@$@$@$@$@$@$
லிங்கா, காலையில் தவறாமல் ஜாகிங் செய்ய தொடங்கியிருந்தான்.. லிங்காவை கண்டவுடன்.. தாமு தன்போல் தன் மகளிடம் விடை பெற்று… இவனுடன் வந்து சேர்ந்து கொள்வார்.
நாட்கள் ஒன்று இரண்டு என நகர்ந்தது… தீபக் கூட லலிதா இல்லாமல் பள்ளி சென்றான். ஆனால், இளாக்குதான் ஒன்றும் நகரவில்லை. இப்போதுதான்.. சற்று வீட்டுக்கு வெளியே நடக்க தொடங்கியிருந்தான்.
மகனின் அருகிலேயே இரண்டு நாள் படுத்திருந்தான்.. அவனுடன் நிறைய பேசினான்… வீட்டு பாடம் சொல்லித்தந்தான்… இப்படி நிறைய… கொஞ்சம் கொஞ்சமாக.. இந்த இடத்தில் தன்னவளை தேடியோ, நிரப்பியோ கொண்டிருந்தான் கணவன். ஏனோ அலுவலகம் செல்ல தோன்றவில்லை இளாக்கு.
காமாட்சிக்கு கூட பயம்… எங்கே மகன் வீட்டிலேயே அமர்ந்து கொள்வானோ என.. ஆனாலும், ஏதும் கேட்க கூடாது என கணவர் சொல்லியிருப்பதால் அமைதியாக இருந்தார்.
காவ்யாக்கு, அம்மு இல்லாமல், என்னோவோ போல் இருந்தது.. அடிக்கடி போன் செய்து “எப்போ வருவீங்க அண்ணி” என கேட்டபடி இருந்தாள் இந்த இரண்டு நாளும்… ஆனால், இளா லலித்தாக்கு போனே செய்யவில்லை, அதே போல்தான் அவளும், கணவனுக்கு அழைக்கவில்லை..
லிங்காவின் ஆலோசனைகள் எல்லாம் சரியாக இருந்ததுதான். ஆனால், பணம் என்பது மட்டுமே பிரச்சனையாக இருந்தது..
இளா இன்னும் அலுவலகம் வரவில்லை… தொழில் இப்போது முற்றிலும் லிங்காவின் பிடிக்கு சென்றது. ஆனால், ஒன்றிலும் மாற்றமில்லை.. எல்லாம் ஆங்காங்கே நின்றது. அந்த அமைச்சரிடம் செல்லவில்லை.. சரக்கும் நகரவில்லை.. அப்படியே அந்த வாரம் சென்றது.
எனவே லிங்கா மீண்டும் தாமோதரனிடம் உதவி கேட்க நினைத்தான்.. மேலும் அவரை தவிர இப்போது வேறு வழி இருப்பதாக தோன்றவில்லை அவனுக்கு.
அத்தோடு.. லிங்கா, தாமுவிடம்.. சற்று நெருக்கி வருகிறேன் என்ற எண்ணத்தையும் விதைக்க நினைத்தான்.. எனவே அவரை கையாள்வது அவனுக்கு எளிதாக இருந்தது.
மறுநாள் காலையில் லிங்கா எப்போதும் போல… ஜாக்கிங்க செல்ல.. தாமுவும் வந்து சேர்ந்து கொண்டார்… லிங்கா தான் கேட்க நினைத்ததை கேட்டான்.. தயக்கமே இல்லாமல் “அங்கிள்… நான் ஒரு உதவி கேட்பேன்… தப்பா நினைக்கமாட்டீங்களே…” என்றான்.
தாமு சிரித்தபடியே … “சொல்லு ப்பா..” என்றார் வாஞ்சையாய்..
லிங்கா “அந்த ஸ்டாக் கிளியர் பத்தி சொல்லி இருந்தேன்ல்ல.. அதுக்கு கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றீங்களா..” என்றான்.
தாமு சிரித்தார் “லிங்கா, இது உன்னோட கம்பெனி, நான் எப்படி.. இதில் இன்வெஸ்ட் செய்ய முடியும்…” என்றார்.
லிங்கா வெட்கத்தை விட்டு “சரி கடனா கொடுங்க… “ என்றான்.. லேசான சுணங்கியதோ முகம்.. ப்பா.. பணம் என்பது யாரையும் மாற்றும் போல…
தாமு “ம்………. அப்படியா” என்றார்.
லிங்கா “ஏன் அங்கிள்… எங்க மேல நம்பிக்கை இல்லையா” என்றான்.
“ம்.. அப்படியில்ல… எனக்கு என்ன ப்ராப்பிட்…” என்றார் சிரித்த படியே…
லிங்கா பண கணக்கு சொன்னான் வேண்டுமென்றே… “எங்க ப்ரோபிட் ல, பாதி தரன்… எனக்கு எங்க அப்போவோட… சொத்தை மீட்டால் போதும்” என்றான் இறங்கிய குரலில்.
“ச்சு…. இல்ல… இல்ல, லிங்கா… எனக்கு சொத்துக்கு என்ன பிரச்சனை.. பணமிருக்கு… வேற..” என்றார்.
லிங்கா அமைதியாக நின்றான்… எல்லாம் தெரிந்தும் நின்றான். அதற்காக உள்ளுக்குள் தயாராக இருந்தும்… அமைதியாக நின்றான்.
லிங்கா “சொல்லுங்க அங்கிள்.. வேறு என்ன…” என்றான்.
[the_ad id=”6605″]
தாமு “பேசாம.. எனக்கு மாப்பிளையாகிடு… உனக்கு எல்லாம் செய்கிறேன்…” என்றார்.
லிங்கா “என்ன அங்கிள் கிண்டல் செய்றீங்களா…” என்றான் கோவமாக
தாமு “ம்கூம்… யோசிச்சு சொல்லு… உனக்கு இந்த பணத்தை, நான் இல்லைன்னாலும்.. இன்னொருத்தர் தருவாங்க. அதேதான்.. எனக்கும் நீ இல்லைன்னாலும் யாரோ ஒருத்தர் உதவி செய்வாங்க. இந்த தரம், நாங்க அமைச்சர் ஆகிடுவோம்..
ஆனா, நான் கேட்பது உறவு… என் மகள், காலம் முழுதும் வாழ்வதற்கான உறவை தேடுகிறேன்.. அது உங்க வீட்டில் கிடைக்கும்ன்னு நம்புகிறேன்.. உன்னை மட்டும் வைத்து சொல்லவில்லை.. உன் குடும்பத்தையும் சேர்த்து சொல்லுகிறேன்… யோசிச்சி சொல்லு…” என்றார்.
தாமுக்கு இந்த யோசனை என்னமோ, அங்கே.. லிங்கா வீட்டுக்கு, தான் சென்று வந்த நாளில் தொடங்கியதுதான். தன் பெண்ணை ஒரு கௌரவமான இடத்தில் கொடுப்பது என்பது.. ‘எல்லா பெண் பிள்ளைகளை’ பெற்றோரின் கனவு.. அதேதான் தாமுவிடமும்.
இந்த தொழில், நட்டம்… என்பதெல்லாம் இப்போதிய நிலை… அதையும் லிங்கா சமாளிப்பான்’ என்ற நம்பிக்கை அவனின் பேச்சின் மூலமே கண்டு கொண்டார்… இது எல்லாவற்றையும் விட… லிங்காவின் குடும்பம்.. கௌரவம், அந்தஸ்த்து இது எல்லாம் அவரின் முன்னே விஸ்வரூபமாக நின்றதே…
மேலும், எப்படி இருந்தாலும் இருக்கும் சொத்து எல்லாம், பெண்ணுக்குத்தான். அதை, நல்ல இடத்தில் சேர்ப்பது என்பது.. நல்லதுதானே என எண்ணம்… எனவே சிந்தித்த படியேதான் இருந்தார்… இந்த நாட்களில்.
இன்று லிங்காவே வந்து… இப்படி என கேட்கவும்.. தன் ஆசையை சொல்லிவிட்டார்… இனி அவன் பாடு… என எண்ணம் தாமுக்கு.
இதை கேட்ட லிங்காவின் முகம்.. சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டது… இருந்தும் கேட்டான்.. “ஏன் அங்கிள், உறவாக முடியலைன்னா… செய்ய மாட்டீங்களா” என்றான்.
தாமு… “தெரியலை.. லிங்கா. என் மனசில், இந்த ஆசை.. எண்ணம் வந்த பின்… உன் பதில் முக்கியம் லிங்கா… யோசிச்சி சொல்லு…” என்றார்.
இவர்கள் திருமணம் பேசவில்லை… பிசினஸ் பேசினர்.. அதுதானே உண்மை. ஆனால், இதெல்லாம் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்ட நிகழ்வு என்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமலேதான் நிகழ்கிறது எங்கும்.
லிங்கா “ம்.. பை அங்கிள்” என்றான், திரும்பி நடந்தான்… மனமெல்லாம் மத்தள சத்தம்தான்… ‘என்னால்.. முடியாதது என்ற ஒன்று உண்டா… நான் ராஜா.. நான் ராஜா.. எங்கேயும்… நான் ராஜா…’ என சத்தமில்லாமல் பாட்டு ஓட… தனது வண்டி எடுத்து வீடு வந்தான் லிங்கா.