அமுதங்களால் நிறைந்தேன்…
12
அம்மா வீடு வந்த லதாக்கு.. இங்கே இருப்பே கொள்ளவில்லை.. அங்காவது வேலை இருக்கும், அப்படி… இப்படி… என அமரவே நேரமிருக்காது.. சுற்றிலும் அவளை தனியே விடாது மனிதர்கள் இருப்பார்கள்.. ஏதோ, பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இங்கு அப்படி அல்ல… அழகான சின்ன வீடு… நிறைய தோட்டம்.. என அவளை சீண்டுவார் யாருமில்லை. பிள்ளையையும்.. இப்போது அம்மா, அப்பா.. அக்கம் பக்கம் வீடு… என பார்த்துக் கொள்ள. லதாக்கு தன் கணவன் நினைவே முழுவதும்.
என்ன செய்வது.. ஏதோ கோவம்.. ஆற்றாமை.. வந்துவிட்டாள். ஆனால், மனமெல்லாம் அங்குதான்.. ‘மாத்திரை சாப்பிட்டாரோ என்னமோ.. புது ரத்தம் வேற ஏற்றியிருக்கு… ஏதும் அலர்ஜியாகிட கூடாதே…’ என கணவனை குறித்துதான் கவலையே.. மகன் கூட பின்னுக்கு போய்விட்டான்.
ஆனால், மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு… எதுக்காவது என்னை கூப்பிடுவாரோ… என்ன தேடுவாரோ.. என எதிர்பார்ப்பு.. அப்படி தோன்ற லதாவின் கண்கள் கலங்கியது.. ‘அதான் இல்லையே.. எதிர்பார்க்க கூடாது நீ’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
தன் அத்தை அழைத்த போது கூட ஏதோ.. மனதில் வருத்தம்… கணவன் ஒரு போன் செய்யவில்லையே என… எனவேதான்.. ‘அத்த பீரியட்ஸ் முடிந்து வரேன் அத்த’ என்றதே… தன் கணவனை பார்க்கும் ஏக்கம் இந்த முறை ஏனோ.. அதிகமாக இருந்தது அவளுக்கு. ஆனாலும்… ஒரு வீம்பு.. அவனிடம்.. ‘ஒரு போன் கூட செய்யல.. நான் ஏன் சொன்ன நாளில் வரணும்’ என ஒரு வீம்பு.. எனவே இருந்து கொண்டாள்.
‘நாம்தான் வந்தோம்… யாரும் நம்மை அனுப்பி வைக்கவில்லை..’ என்ற எண்ணமெல்லாம் காணாமல் போனது.. லதாக்கு. ‘ஏன் ஒரு போன் செய்து.. பேசமாட்டாரா..’ என எல்லா கோவமும் கணவன் மீது ஏறியது.
ஆக.. பொதுவாக சொல்வார்களே.. ‘தனக்கு என்ன வேண்டும் என உனக்கே தெரியாது.. ‘ என பெண்ணை பார்த்து சொல்லுவார்களே அந்த நிலையில் இப்போது லலிதா.
ஆக.. இந்த ஐந்து ஆறு நாட்களாக லதா… காரணமில்லாமல் கணவன் மீது கோவத்தில் இருக்கிறாள்.. பாவம் அது கணவனுக்கே தெரியாது.
இன்று, அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது… லதாக்கு. கூடவே கணவன் நினைவும் வந்துவிட்டது… ஒரு போன் செய்யலை… கிளம்பியே ஆக வேண்டும்… இரண்டுநாள் என்றது.. நீண்டு கொண்டே சென்றுவிட்டது… இனி நாள் கடத்த முடியாது… பீரியட்சும் முடிந்து விட்டது.. நானே செல்ல வேண்டும்…’ என ஒரு பெருமூச்சு வந்தது அவளிடம்.. எழவே தோன்றவில்லை.. அப்படியே படுத்திருந்தாள்.. பெண்ணும்.. தன் அம்மாவுடன் உறங்கியிருந்தாள்.. எனவே வெறுமையாக இருந்தது லதாக்கு.
[the_ad id=”6605″]
ஆனால், மனதில் ஏதோ அழுத்தம்… ‘அவனுக்கு நான் முக்கியமில்லை..’ என்ற எண்ணமே இன்று காலையிலிருந்து அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அத்தோடு ‘இதென்ன… காதல் திருமணமா… ஏன் இப்படி அவன் மேலே பித்து பிடிச்சு நிற்கிற.. ரெண்டு பிள்ளைகள் வேற இருக்கு… இன்னும் என்ன… ’ என தன் மனதை தானே, அடக்கி அடக்கி வைக்க.. அது கண் வழி… அருவியை பொழிந்து கொண்டே இருந்தது.. ஏனோ தீரவேயில்லை அது.. மெல்ல எழுந்து குளிக்க சென்றாள்.
குளித்து வந்தவள்.. தன் தந்தையிடம்.. “ப்பா… எப்போ கூட்டி போறீங்க…” என்றாள்.
பெற்றோருக்கு இப்போதுதான் நிம்மதி… எப்படியோ எல்லாம் சரியானால், சரிதான் என எண்ணி “போலாம் டா… வெயில் தாழ போலாமா…” என்றார்.. பொறுமையாக. அதுவரை பேத்தி உடனிருப்பாளே அந்த ஆசை அவர்களுக்கு.
அப்போதே போன் அழைத்தது லதாக்கு. இப்பவும் ஒரு எதிர்பார்ப்பு தன் கணவனோ என.. ஆனால், தன் அத்தை அழைத்திருந்தார்.. எடுத்தவுடன் “லதா, டைம் முடிஞ்சிதா… இன்னிக்கே வந்திடு டா… உன் கொழுந்தன் என்ன என்னவோ சொல்றான்… எங்களுக்கு ஒன்னும் புரியலை…” என என்றுமில்லாமல் இன்று படபடத்தார் மாமியார்.
லதா “என்ன த்த என்ன ஆச்சு…” என்றாள் வீட்டு மருமகளாக.
அவருக்கு தாங்கவில்லை “என்னத்த சொல்ல.. என்ன நடக்குதுன்னே புரியலை.. இதுல நீ வேற அங்க இருக்க.. லிங்கா, வந்து.. யாரையோ விரும்பறேன்னு சொல்றான்…
எப்படி காவ்யா கல்யாணம் நடக்கும்ன்னு தெரியலை… எனக்கு பயமா இருக்கு…
உன் மாமா.. என்னவோ பண்ணுடான்னு ஈஸியா சொல்றாரு… எனக்கு ஒன்னும் புரியலை.. வா… வந்து பேசலாம்.. எப்போ வர…” என்றார். எதற்கும் அவ்வளவு எளிதில் பதறமாட்டார் தன் மாமியார் என தெரியும் லதாக்கு. கூடவே, தான்.. இங்கே வந்ததையும் சொல்லவும்.. சற்று சங்கடம் வர… “இல்ல த்த… கிளம்பிட்டேதான் இருக்கேன்.. அப்பா கூட்டி வரேன்னு சொன்னார், தோ வந்திடுவோம் அத்த… வந்து பேசிக்கலாம்…” என்றாள் பொறுப்பான குரலில்.
லதாக்கு அதற்குமேல் இருப்பு கொள்ளவில்லை… தன் தந்தையிடம் வந்தவள் “ப்பா.. ஒருமணி நேரத்தில் கிளம்பலாமா… தீபக் வரதுக்குள்ள போயிடலாம்” என்றாள்.
லதாவின் அம்மா “யாருடி போனில்.. இப்படி பறக்கற…” என்றார்.
“அத்தைதான் ம்மா… ஏதேதோ… சொல்றாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. நான் போயிட்டு உங்களுக்கு பேசறேன்… டிபன் வேண்டாம்மா… சாதம் வைச்சிடுங்க…” என்றவள் துணிகளை எடுத்து வைக்க சென்றாள்.
லதாவின் அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லை.. ‘ஆ.. எங்க கிட்ட சொன்னா என்ன பண்ணிடுவோம்… அங்க போய் பேசுறாளாம்..’ என முனங்கியபடியே உள்ளே சென்றார், கொஞ்சம் பெருமிதமாக கூட இருந்தது அன்னையாக அவருக்கு. மகள்… ஒரு வீட்டின் மருமகளாக மாறும் நேரம் போல… இது.
லதா பரபரப்பாக கிளம்பினாள்… இப்போது போன் அடிக்கத் தொடங்கியது.. மீண்டும் காமாட்சிதான். ஏதோ, அங்கிருந்து வாங்கி வர சொன்னார்.. ‘சரி த்த…’ என கேட்டு வைத்தாள். அதை வாங்குவதற்கு.. தன் அப்பாவை அனுப்பி வைத்தாள்.
அங்கே…. இளங்கோ மேலே சென்றான்… ‘லிங்கா.. அலுவலகம் செல்ல வேண்டும்’ என மேலே வந்ததே.. ஒருமாதிரி.. குற்றவுணர்வாக இருந்தது… இளாக்கு. நாம் செய்து கொண்டிருந்த வேலை.. இப்போது ‘உன்னால் முடியாது.. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லுவது போல.. இருந்தது அவனுக்கு.
வீட்டில் யாரும் ஒன்றும் சொல்லவில்லை.. ஏன் பரிதாப பார்வை கூட பார்க்கவில்லை.. ஆனால், தவறு செய்தவனல்லவா… கூடவே, கொஞ்சம் நல்லவன் வேறு.. அதான்.. தன்னை தானே.. கீறி கொண்டான்.. ரணமாக வலிக்க தொடங்கியது..
தனது அறையில் இருந்த ஈஸி சேரில் அமர்ந்தான்… முன்னும் பின்னும் ஆடியது அவனது மனது போல… அந்த ஆசனமும். காலையில் இப்படி அவன் சோர்ந்து இருந்ததே இல்லை… எத்தனை பரபரப்பாக இருப்பேன்.. என மெல்ல கடந்த காலம் ஓட.. கண்மூடிக் கொண்டான்… இளா.
நேர்மையான அறிவு கொண்டவன்… இறங்கி வேலை செய்யும் துணிவும் கொண்டவன்.. அது தோற்கும் போதும்.. என்ன ஆகுமோ.. என எண்ணி குறுக்கு வழி போகாமல்.. தன்னை தானே அழித்துக் கொள்ள நினைத்த நல்லவன்… எனவே, அன்று நடந்த எல்லாம் படம் போல கண்ணில் ஓடியது.. கண்களை திறந்தான் இளா.. எதிரில் தீபக்கின் போட்டோ.. ஒரு வயதாக இருக்கும் போது எடுத்த போட்டோ.. மீண்டும் ஏதோ குற்ற உணர்வு.. ஓட… மனம் இயல்பாய் தன்னவளை தேடியது.. ‘எங்கடி போன.. இப்போன்னு பார்த்து… இப்போதான் நான் வீட்டில் இருக்கேன்… இப்போ போய் அம்மா வீட்டுக்கு போயிருக்க… ச்சு..’ என உள்ளம் பிசைய தொடங்கியது..
இத்தனை நாள்.. இல்லை, வருடங்களில்.. அவன் தேவைக்கு அவள் இருந்தாள்.. என்றும் அவன் தனிமையை உணர்ந்ததே இல்லை.. இந்த வெறுமையையும்தான்.
[the_ad id=”6605″]
எதற்கும் இளா பெரிதாக அலட்டியதில்லையே.. லிங்கா, சொல்லுவது போல. எனவே இன்று.. மனம் தேடியது… எதையோ ஒன்றை.. அவள், கைபிடித்துக் கொண்டால்… என் தலை கோதுவாளே.. எப்போது நான் வருவேன்… என.. விழித்தே இருப்பாளே… இன்னிக்கு எங்கடி போன… கவனிக்கலையோ உன்னை, ச்சு.. வந்திடேன்.. ப்ளீஸ்..’ என முதல் முதலாக மனம் தேடியது தன்னவளை. என்ன முயன்றும்.. கைகள் போனை தேடியது இளங்கோக்கு.. ‘அவளாக வரட்டும்.. நான் அவளை மிகவும் படுத்திவிட்டேன்’ எனதான்.. இத்தனைநாள் நினைத்திருந்தான். ஆனா, இன்று.. அவளின் தாக்கம் அதிகமாகியது… போல.. தன்போல கைகள் போனை எடுத்தது…
லதாக்கு இப்படியே நேரம் செல்ல… மீண்டும் லதாவின் போன் ஒலிக்க தொடங்கியது.. லதாவின் அம்மா.. தன் பேத்தியை கையில் வைத்தபடியே… தன் மகளை குறு குறுவென பார்த்தார்.. ‘இப்போ என்ன குண்டோ..’ என. அதை பார்த்த லதாக்கும் சிரிப்பு வர.. தன் போனை சார்ஜிலிருந்து எடுத்தாள்… பார்த்தால் தன் கணவன்.. கண்களில் ஏதோ மின்னியது.. போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.. இவள் எடுக்கவில்லை.. இன்னும் அம்மா தன்னை பார்ப்பதை பார்த்தவள் “அவர்தான் ம்மா… நீ போ” என்றாள் மென்மையான குரலில்.
இரண்டாம் முறையும் அழைத்தான் இளா… சட்டென எடுத்தாள் மனையாள் “ஹலோ…” என்றாள். அந்த பக்கம் பேசவேயில்லை.. அவளின் எதிர்பார்ப்பான ஹலோ அவனுள் மெல்ல இறங்கியது.
“என்னடி… அப்படியே விட்டுட்டு போயிட்ட…” என்றான் கெத்தான குரல்தான்.. ஆனால்… உள்ளே ஏதோ இருந்தது போல… லதா அமைதியாக இருந்தாள்.
கணவனே “ஏன், தேடுவேன்னு தெரியாதா….” என்றான் மீண்டும். இன்னும் அமைதிதான் மனையாளிடம்.. உடலெல்லாம் தளர்ந்து.. மனத்தின் அழுத்தமும் தளர்ந்தது… கன்னத்தில் வெம்மை படர்ந்தது.. இன்னும் பேசவில்லை.. லதா.
இளா “நான் காரெடுத்து வரவா..” என்றான்.
“ஐயோ… கையில் காயம் இன்னும் ஆறலை… அதுக்குள்ள வேண்டாம்.. கிளம்பிட்டோம்ங்க வந்திடுவோம்…” என்றாள்.. மெல்லிசையாய்.. அப்படிதான் தோன்றியது இளாக்கு.
“ஓ… எப்போ வருவ… ஏன் இத்தனை நாள்..” என்றான் கொஞ்சம் அதிகார த்வனிதான்.
இப்போது லதாவின் குரல்.. கெத்தாகியது.. “ம்.. சும்மாதான்…” என்றாள்.
“என்ன சும்மா… உனக்கு தெரியாதா… தப்பி பிழைச்சி வந்த புருஷன விட்டு போறோமேன்னு தோணலையே உனக்கு… ம்…” என்றான்.
லதா “நானும் ஏதாவது சொல்லுவேன்.. அப்புறம் சண்டைதான் வரும்…” என்றாள்.
“என்ன சொல்லு, பார்த்துக்கலாம்” என்றான் திமிராய்.
“நீங்க கூடத்தான் இப்படி.. குழந்தைகளோட…” என சொல்ல… சொல்ல..
இளா, இளகி பதமானான் “சாரி… சாரி… அது ஏதோ பிஸினஸ் சிக்கல்.. அந்த நேரத்தில் புரியாம…ச்சு… காலமெல்லாம்… அது என்னை குத்திட்டே இருக்க போது லதா… ப்ளீஸ்… நீயும் ஏதும் சொல்லாத டி..” என்றான்.. யாசகனின் குரலில்.
அவளும் இடைமறித்தாள் “இல்ல… இல்ல… நான் ஏதும் சொல்லலைங்க… நீங்க சொன்னதுக்கு கேட்டேன், அதுவும் சும்மா கேட்டேன்… அதெல்லாம் நீங்க சங்கடபடாதீங்க… யார் என்ன சொன்னாலும்.. ஒருவகையில் எனக்கு அது ப்ரௌட் மொமண்ட்தான்… என் ஹப்பி… ஜெம்… உண்மையான ஜெம்… இந்த அரசர்கள் எல்லாம் சொல்லுவாங்கல்ல.. சொன்னதை செய்ய முடியலைன்னா… ஏதோ.. தீ வளர்த்து.. அதில் குதிச்சி உயிர் விட்டுடுவாங்கள்ள… அதே மாதிரி… நீங்க… ப்பியூர்… ரொம்ப ப்பியூர் இளா நீங்க…” என்றாள் லேசான கரகரத்த குரலில்..
இப்போது முற்றிலும் அவன் உடைந்தான் “லதா…….. தேங்க்ஸ் டா… தேங்க்ஸ்…” என்றான் அவ்வளவுதான் அமைதிதான்.. பேச்சே வரவில்லை.. இளாக்கு, தன் கையை.. அந்த சேரின் கை பிடியில் தட்டிக் கொண்டிருந்தான்.. எனவே பட் பட் என சத்தம் மட்டும் கேட்டது…
லதா “என்னங்க… என்ன.. என்ன…” என்றாள் பதட்டமாக..
இளா சுதாரித்தான் “லவ் யூ டா… சாரி… லதா… சாரி.. என்ன சொல்றது தெரியலை… லவ் யூ…” என்றான் மீண்டும் மீண்டும்.
பின் சுதாரித்து “எப்போ வர.. சீக்கிரம் வா… நம்ம நைட் வெளிய போறோம் அதுக்கு தகுந்த படி.. கிளம்பி வா…” என்றான் அதட்டலாக.
லதா “ஹலோ என்ன மிரட்டுறீங்க… அப்புறம் நாளைக்குதான் வருவேன்..” என்றாள் திமிராக.
“ம்.. இப்போ நீ கிளம்பல… அடுத்த அரை மணி நேரத்தில்.. மாமாக்கு போன் செய்திடுவேன்… நீங்க வரீங்களா இல்ல நான் வரவா என கேட்டு.. பார்த்துக்க..” என்றான்.
லதா “ம்… ஓ.. அப்படி போகுதா…” என்றாள்.
இளா “ஏய்.. இப்போதான் சரியாவே போகுது.. வந்து சேருடி..” என்றான் கிறங்கிய குரலில்.
“சரி.. பை…” என சொல்லி மனையாள் போனை வைத்தாள். அதன்பின் கால் தரையில் இல்லை லதாக்கு.. “ம்மா.. அப்பா எங்க… கூப்பிடுங்க… மணியாச்சு, சாப்பாடு ரெடியா இருந்தா கொடுங்க இல்ல வேண்டாம்.. எனக்கு மணியாச்சு… அம்மு.. வா…” என அடுத்தடுத்து.. கட்டளைகள்தான்… எல்லோருக்கும்.
இந்த பெண்கள் இப்படிதான் போல… பிறந்தநாளுக்கு திருமணநாளுக்கு.. ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் போதும், அங்கே ஆர்டர் கேட்கும் போதும் அனிச்சையாய் தன் கணவனின் முகம் பார்க்கும் பெண்கள்தான் இவர்கள்.. தனக்கு வேண்டியதை சொல்ல தெரியாதவர்கள் அல்ல.. அப்போதாவது என் மனம் படித்திருக்கிறாயா.. என்னை தெரியுமா… என்ற சின்ன ஆசைதான்.. அவர்களுக்கு. ஆனால், அந்த குறிப்பை எந்த கணவனும் படிப்பதேயில்லை போல… நல்ல வேலை.. இளா தப்பித்தான்.. போல… இப்போது தெளிந்த முகத்துடன் கீழே வந்தான்.
[the_ad id=”6605″]
“கவிதை வரியின் சுவை…
அர்த்தம் புரியும் வரை…
கங்கை நீரின் சுவை…
கடலில் சேரும் வரை…
காதல் சுவையொன்று தானே…
காற்று தீரும் வரை…”
#$#$#$#$#$#$#$#$#$#$#$#
இளா, தன் அன்னையை பார்த்தான் “ம்மா.. இப்போதான் கிளம்ப போறாளாம் லதா.. சொல்ல சொன்னா..” என்றான்..
அன்னையும் “அப்படியா சரிப்பா” என்றார் ஒன்றுமே தெரியாதவராக.
காலை உணவு உண்டான்.. இளா.
லிங்கா அப்போதுதான் கீழே வந்தான், இளா “என்ன டா.. இவ்வளோ நேரமாச்சு.. இன்னும் கிளம்பல… ஏன் என்னாச்சு” என்றான் தம்பியின் இறுகிய முகம் பார்த்து…
லிங்கா “ஒண்ணுமில்ல… எனக்கு ஒண்ணுமில்ல.. கிளம்பறேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
காமாட்சி “சாப்பிடு டா” என்றதெல்லாம் காதில் வாங்கவில்லை லிங்கா.. காரிலேறி சென்றுவிட்டான்.
காமாட்சி “என்னவோ போ.. ஒன்னும் புரியலை… சுத்தி சுத்தி என்னமோ நடக்குது டா… யார் கண்ணோ பட்டிடுச்சி… “ என்றார்.
தலைமகன் தெளிந்தான் “ம்மா.. என்ன நீயே இப்படி பேசற… ஒன்னும் ஆகல… நமக்கு நல்ல நேரம் வந்திருக்கு… அதான் எல்லாம் கூடி வருதுன்னு நினை.. அவன் கல்யாணம் செய்துக்கிறேன்னு தானே சொல்றான்…
எனக்கு அவன் வயதில் கல்யாணம் பேச ஆரம்பிச்சிட்டீங்க… அதான் உங்களுக்கு தெரியலை…
அந்த பொண்ணு குடும்பமும், நல்ல குடும்பம்… நல்ல மனுஷங்க… சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கனும்மா..
லதா வரட்டும், நானும் அவளும் போறோம்.. ஜோசியரை பார்க்க… எப்போ நாள் நல்லா இருக்குன்னு பார்த்திட்டு வர்றோம்…” என்றான், ஆனால் தன் அன்னையின் முகம் இன்னும் தெளியாததை கண்டு…
அவனே “காவ்யா கல்யாணம் பத்தி நினைக்கிறியா… ம்மா, அதுக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு.. முதலில் பெண் எடுக்கிறோம்.. அப்புறம் பாரு… காவ்யா கல்யாணம் ரொம்ப ஜோர்ரா நடக்கும்… ஏன் ம்மா, இவ்வளோ கவலை… இரண்டு பசங்க இருக்கோம்… உனக்கு… சும்மா கலக்கிட மாட்டோம்…” என்றான் திடமான குரலில்.
அன்னைக்கு ஒரு திடம் வந்தது.. ‘ஆமாமில்ல.. என் பையன் என்ன, தெரு தெருவா.. சுத்திட்டா இருந்தான்.. விரும்பறேன்னு வந்து சொல்றான்.. அப்போ நான்தானே செய்யணும்…’ என சின்ன புன்னகை கூட வந்தது அவரின் முகத்தில்.. கூடவே கணவனை நினைத்து பயமும் வந்தது “இளா, அப்பா டா..” என்றார் கலங்கிய குரலில்.
“ச்சு.. என்னம்மா செய்றது… அவருக்கு அவர் நினைக்கிறதுதான் சரி… இது அவர் காலம் இல்ல ம்மா… ம்…. பொறுமையா பேசலாம்…” என்றான்.
அன்னை “பொறுமையா பேசுங்க டா… அவர்தான் டா எல்லாம்… அவர்ட்ட, ஒரு வார்த்தை கேளு.. ‘ஜோசியர் நம்பர் கொடுங்கப்பா.. எப்போ போகலாம்.. என்ன…’ அப்படின்னு கேட்டு செய் டா… இன்னும் எந்த அதிர்ச்சியும் அவருக்கு வேண்டாம்… பொறுமையா பேசுங்க ரெண்டு பேரும்… காவ்யா கல்யாணம் வரைக்கும்.. அமைதியா இருங்க… எந்த பிரச்சனையும் இழுத்து விடாதீங்க…” என்றார்.. கவலையில் ஆரம்பித்த குரல்… கண்டனத்தில் தான் முடிந்தது அன்னைக்கு.
வீட்டு இல்லத்தரசிக்கு, கணவன்… பிள்ளை… பேரன்… என எல்லோரும் வேண்டும்.. அதுவும் சந்தோஷமாக வேண்டும்.. யாரின் மனமும் நோகக் கூடாது, அதே சமயம் சண்டையும் வர கூடாது… ப்பா… இவர்களின் பேராசைக்கு அளவே இல்லைதானே.
இளா மெல்ல தலையை அசைத்து எழுந்து கொண்டான். தன் மனைவியை எதிர்பார்த்து.