லிங்காவை, அவ்வபோது லதா இளா இருவரும் அழைப்பர்… ‘வா டா… உன் மாமனார் ஹோட்டல் பார்த்திருக்கிறார்… எங்களை கூப்பிட்டார் பார்ப்பதற்கு, நீயும் வா…’ என அழைப்பான் இளா. அதன்பின் ‘உன் ப்ரண்ட்ஸுக்கு சொல்லனுமா… இன்னும் நீ யாருக்கும் சொல்லல… கூப்பிடு டா எல்லோரையும்…’ என சொல்லுவான்.
ஆனால் லிங்கா ‘எல்லாம் நீ பார்த்து செய்திடு ண்ணா.. இந்தா நம்பர்…’ என முடித்துக் கொண்டான். அத்தோடு, அலுவலகத்திலேயே கிடக்கிறான்.. கொஞ்சமும் நகரவில்லை.
அன்று இரவே இளா போனில் அழைத்துதான் கேட்டான் லிங்காவிடம் “என்ன டா… என்ன செய்யற… ஏதாவது பிரச்சனையா… ஏன் ஒரு மாதிரி இருக்க…” என கேட்டேவிட்டான் அண்ணனாக.. தன் தம்பியின் மாற்றம் பிடிபடாமல் இருப்பதால்.. கேட்க…
லிங்கா “ஒண்ணுமில்ல… இப்போதான் எல்லாம் சரியா போகுது… நீ டென்ஷன் ஆகாத” என்றான்.
இளா விடாமல் “அந்த பொண்ணுகிட்ட பேசுறியாடா… உண்மைய சொல்லு லிங்கா அந்த பெண்ணை பிடித்திருக்கா… இல்ல, வேற எனக்கு தெரியாம ஏதாவது செய்யிறியா..” என்றான்.
லிங்காவிடமிருந்து இப்போது கோவமே பதிலாக வந்தது “என்ன நீ… அப்பாவ விட மோசமா… என்னை, கேள்வி கேட்கிற… எல்லாம் எனக்கு தெரியும்…” என்றான் பட்டென… போனையும் வைத்து விட்டான் இளாக்கு இப்போதுதான் பயம் பற்றிக் கொண்டது. அன்று இரவு முழுவதும் தம்பியின் எண்ணமே மனதில்… எல்லாம் சரியாக செல்ல வேண்டுமே… என எண்ணம் இளாக்கு.
நாளை நிச்சயம் என்ற நிலையில்… இதோ இப்போது பதினோரு மணிக்கு சரியாக அலுவலகம் வந்துவிட்டான் லிங்கா… பார்த்த இளா “டேய்… ஏன் டா… இப்படிதான் நாலு நாளா… செய்யற…. நல்லா ரெஸ்ட் எடுத்து வரலாம்மில்ல… என்ன இப்போ, நான்தான் இருக்கேன் இல்ல…முகமே சோர்ந்து போயிருக்கு… நாளைக்கு… பங்க்ஷன் இருக்கு… லிங்கா… எப்படி இருக்க பாரு நீயி…” என கடிய.
லிங்கா அமைதியாக சென்று, தன் சீட்டில் அமர்ந்து கொண்டான்… GMம்மிடம் தொடர்ந்து ஏதோ இண்டர்காமில் பேச தொடங்கினான் இரண்டுநாள் கோவம்.. தன் அண்ணனும் தன்னை சந்தேகிகிறானா என்ற கோவம் எனவே வேலையை பார்த்தான் லிங்கா.. பின்தான் தன் அண்ணனை பார்த்தான்…
[the_ad id=”6605″]
இன்னும் இளா முறைத்த படியே அமர்ந்திருக்க… லிங்கா லேசாக சிரித்தான்.. லேசாக… ‘உனக்காக சிரிக்கிறேன்’ என்பதாகதான் இருந்தது அது. பின் “இல்ல ண்ணா… நீங்க எனக்காக… அப்பா அம்மா கிட்ட பேசி.. எவ்வளோ செய்யற… நான் இத கூட செய்ய மாட்டேனா… நம்ம வேலையைதானே பார்க்கிறேன்.. பயப்படாத… ” என்றான் அதே மில்லிமீட்டர் புன்னகையில்..
இளா.. “இல்ல.. டா… நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத… “ என ஏதோ சொல்ல..
லிங்கா “இல்ல ண்ணா… நான் நல்லா இருக்கேன்… எனக்கு ஒண்ணுமில்ல… நீ டென்ஷன் ஆகாத… நீ போ… அண்ணியும் காவ்யாவும் வெயிட் பண்றாங்க.. வெளிய போகனும்மாம்… நீ போ… மணியாச்சு” என்றான் அண்ணனை பேச விடாமல். அதற்கு தக்க… லதாவிடமிருந்து அழைப்பு வந்தது இளாக்கு.. எனவே ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டான் இளா.
நிச்சய நாளும் விடிந்தது… முக்கியமான நபர்கள் மட்டும் அழைத்திருந்தனர்… பெரிய கைகள் இருவரும் என்பதால்.. பெரிய ஹோட்டலில் நிச்சயம்.. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு என தாமு தடபுடல் செய்துவிட்டார்.
விழா தொடங்கும் நேரம் வந்தது.. இன்னமும் லிங்கேஷ்வர் வரவில்லை.. இப்போதுதான் வீட்டிலிருந்து கிளம்புகிறான் லிங்கா. அவனின் வீட்டினர் எல்லோரும் வந்துவிட்டனர் ஹோட்டலுக்கு. இவன் இப்போதுதான் கம்பெனியிலிருந்து வந்து, கிளம்பி.. வந்து கொண்டிருக்கிறான்.
காமாட்சி.. லதா, காவ்யா என வீட்டு பெண்கள் எல்லோரும் அந்த ஹோட்டலில் உள்ள அறையில் இருக்க… சக்தியை… கூட்டி வந்தார் சரஸ்வதி. சக்திப்ரியாவை… இப்போதுதான் பார்க்கின்றனர்.. எல்லோரும்.
சரஸ்வதியுடன் எல்லோரும் பேசியிருந்தனர்.. அதனால் நல்ல அறிமுகமிருந்தது பெண்களுக்குள். எனவே சரஸ்வதி அழைத்து வந்தார்.. பெண்ணை இங்கு.. சபையில் சற்று தடுமாற்றம் இல்லாமல் இருக்குமே என எண்ணி.
காமாட்சி, லதாவிடம் சொல்லி… தன் கணவரை அழைத்து வர செய்தார்…
மூர்த்தியும் வந்தார்.. எதையும் காட்டா பாவமாகதான் இருக்கிறார் இன்று. எல்லோருடனும் நன்றாக பேசியபடியே இருக்கிறார் மூர்த்தி. அதுவே வீட்டு மனிதர்களுக்கு நிம்மதி.
எனவே, தன் கணவர் வரவும்… காமாட்சி முறையாக சக்தியை அறிமுகம் செய்து வைக்க.. சக்தியும் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்க.. என அழகான சின்ன.. சின்ன… நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருந்தது.
[the_ad id=”6605″]
மூர்த்தி வெளியே சென்றார்… கீழே ஹாலுக்கு.. வருகிறவர்களை கவனிக்க… மெல்ல மெல்ல பேச்சு பெண்களிடம் சென்று கொண்டிருந்தது…
இளா, அரக்க பறக்க அறையினுள் வந்தான்… சக்தி இருப்பது தெரியாமல். வரும் போதே சத்தம் “லதா … போன் பண்ணுடி அவனுக்கு… என்ன டி பண்றான் இன்னும் வராம… டைம் ஆச்சு… நல்ல நேரம் வந்திடுச்சி.. இவன இன்னும் காணம்… படுத்துராண்டி… தாமு அங்கிள் என் முகத்தை முகத்தை பார்க்கிறார்…” என சொல்லிய படியே வர… சக்தி சத்தம் கேட்டு எழுந்து நின்றாள் அனிச்சையாய்.
இளா திரு திருவென விழித்து “சாரி… சாரி..” என சக்தியிடம் சொல்லி.. தன் மனைவிடம் “போன் பண்ணு அவனுக்கு…” அடங்கிய குரலில் சொல்ல…
இளா, மீண்டும் சக்தியிடம் “நீ உட்காரும்மா…. ஏதாவது குடிச்சியா” என முறையாக வரவேற்றான் இளா… சற்று இலகுவாகி.
காவ்யா சிரித்தாள்… அவளோடு சேர்த்து.. அம்முவும் சிரிக்க.. எல்லோர் முகத்திலும் ஒரு புன்னகை.. சக்தி திரு திருவென விழித்தாள்… இளாவின் ஜாடையில், யாரென புரிந்தாலும்… யாரும் அறிமுகம் செய்யாததால் விழிக்க… தொடங்கினாள் சக்தி.
லதா “உன் வுட்பியோட… அண்ணன்… என்னோட வீட்டுகாரர் கிரேட் இளங்கோ… இவரை… டென்ஷன் பண்றதுதான்… உன் ஆளுக்கு பிடிச்ச வேலை…” என சிரித்தபடியே அறிமுகம் செய்தாள் தன் கணவனை.
சக்தி சிரித்த படியே வணக்கம் என கை கூப்ப… இளாவும்… “ வாம்மா… “ என வரவேற்பாய் தலையசைத்து… “ அதெல்லாம்… ஒண்ணுமில்ல மா… சும்மா இவங்க கலாட்டா பண்றாங்க… “ என சொல்லி, மீண்டும் தலையசைத்து சிரித்த படியே வெளியே சென்றான்.. இளா.
பின்னாடியே லதா.. சென்றாள். கூடவே மகன் இன்னும் வரவில்லை என்பதால்.. காமாட்சியும் செல்ல… அங்கு மூவர் மட்டும்தான் இருந்தனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. அப்படியே அம்முவையும் கை நீட்டி அழைத்துக் கொண்டிருந்தாள் சக்தி.. புதிதாக இருப்பதால்… அவளை பார்ப்பதும், சிரிப்பதுமாக காவ்யாவிடமிருந்தே விளையாடிக் கொண்டிருந்தாள் அம்மு.
அப்படியே நேரம் சென்றது.. பத்து நிமிடம் சென்று சக்தி “நான் வரேன் காவ்யா… அங்க பார்க்கலாம்..” என சொல்லி கிளம்ப…
பட்டென கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் லிங்கா.. சக்தியும் அம்முக்கு பை சொல்லிய படியே திரும்ப… கதவு.. சக்தி, கை வைக்கும் முன்பே தன்போல் திறந்து கொண்டது… இவள் பயந்து பின்வாங்கி… விழ போக…
சட்டென கதவு திறந்த லிங்கா.. ஒரெட்டு முன் வைத்து… அவளின் கையை பிடித்துக் கொண்டான். சக்தியும் பயந்து போய் அவனின் கையை பற்றிக் கொண்டாள். சக்திக்கு உச்சபட்ச மின்சாரம் பாய்ந்த நிலை… ஓரு வாரமாக எதிர்பார்த்து.. பார்த்து.. பூத்து போன கண்களுக்கு… இனிமையாக காட்சி தந்தான் லிங்கா… வேட்டி சட்டை… சகிதம் வந்திருந்தான்… நிமிர்த்தி வாரிய கேசம்.. இறுகிய முகம் கூட இப்போது சற்று பதட்டத்திலும் அழகாக தெரிய.. சக்தி, மெல்ல கைகளை உருவிக் கொண்டாள் அவனிடமிருந்து. இப்போது.. அதில் இன்னும் தடுமாற…
அவனுக்கு ஏதும் தோன்றவில்லை போல… சட்டென காவ்யாதான், கதவருகில் என நினைத்து திட்ட “அறிவில்ல…” என வார்த்தை வந்து விட்டது அவனுக்கு.. அதன் பின்தான் யாரென புரிய… மெல்ல தன் கையை விடுவித்துக் கொண்டு… தலை கோதி நின்றான்.
இப்போது சக்தியின் நிலை பார்த்து, காவ்யா… “ஐயோ அண்ணி..” என சொல்லி சக்தியை பின்னாலிருந்து தாங்க… ப்பா.. சக்தி சுதாரித்தாள்…
லிங்காக்கு அப்போதுதான், அவள் கையை விட்டதை உணர்ந்து.. “சாரி.. சாரி…” என சொல்ல… சக்தி தலையசைத்து… வெளியே செல்ல போக..
காவ்யா “இருங்க அண்ணி… “ என சொல்லி அமர வைத்தாள். கைகளை பிசைந்து கொண்டு குனிந்து அமர்ந்தாள் சக்தி… பதட்டம்… வெட்கம்… ‘அவன் முன்னாடி இப்படி விழ போனியே’ என பரபரப்பு எல்லாம் சேர… அமர்ந்திருந்தாள்.
லிங்காக்கு எப்படியோ, சக்திக்கு எல்லாம் காதலே… அவனை ஏதோ ஆராய்வதாக நினைத்து எல்லாம், பார்த்து.. பார்த்து.. யோசித்து.. யோசித்து.. தன்னுள், நிறுத்தி நிதானமாகவே அனுமதித்துக் கொண்டாள்.. சக்தி. எனவே கண்ணெல்லாம் காதல்தான். அது அழகாக தடுமாறி.. செம்மை நிறங் கொண்டு… அமைதியாக அமர்ந்திருந்தது.. ஏதாவது சொல்லுவானோ.. பார்ப்பானோ என..
[the_ad id=”6605″]
ம்… லிங்காவும், சக்தியை பார்த்தட படியே அம்முவை தூக்கிக் கொள்ள… அவளின் எல்லாம் சற்று தள்ளி நின்றது.
காவ்யா தண்ணீர் கொடுத்தாள்.. “கொஞ்சம் இருங்க அண்ணி… ஏதோ தடுக்குது… உட்காருங்க…” என சொல்லி கை பிடித்துக் கொண்டாள்.
லிங்காக்கு இங்கே இருக்க முடியவில்லை… ஏதோ ஒரு அசகௌரியம்… அந்த AC அறையில் சின்னதாக மூச்சு முட்ட தொடங்கியது… அவனின் கணக்குகளில், வட்டம்… சதுரம்… எல்லாம் சரியாகதான் வந்திருந்தது.. ஆனால், அதற்காக விடையாய்… சக்தி.. அதுவும், நெருங்கி.. நெருங்கி… நிச்சயம் வரை வந்ததும்… மூச்சு முட்டியது போல அவனிற்கு… லிங்கா “நா… நான் வெளிய இருக்கேன்…” என தன் வேட்டியை ஒருகையால் தூக்கி பிடித்துக் கொண்டு.. மறுகையில் அம்முவை பிடித்து கொண்டு நகர..
சக்தி “இல்ல… நா… நான் எங்க ரூம்க்கு போறேன்” என சொல்லி உடனே எழுந்து கொண்டாள்.
அம்மு இப்போ “ப்..ப்..பை..” என மிழற்ற.. முழு பூரிப்பிலும், பதட்டத்திலும் இருந்த சக்தி.. மெல்ல லிங்காவின் கையிலிருந்த அம்முக்கு, அழுத்தி முத்தம் ஒன்று வைத்தாள் “பை… பை… அம்மு” என்றாள் ஆசையாக.
அதுவும் சிரித்தபடியே “ம்…. ப்ப… பை…” என மிழற்றிற்று குதூகலமாய்…. இதை பார்த்த லிங்காவின் முகம் கடுகடுப்பை காட்டியது… உடனே அம்முவை காவ்யாவிடம் கொடுத்து… ‘தான்’ வெளியேறினான்.
சக்திக்கு மீண்டும் உள்ளுக்குள் இடறியது….
“நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே…
கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே…
நானுனை காணும் வரையில் தாபத நிலையே…
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே….”