அமுதங்களால் நிறைந்தேன்…
15
லிங்கா நேரே… மேலே அறைக்கு வந்துவிட்டான்… மேலே செகண்ட் ப்ளோரில் பெரிய ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விழா.
இவன் அறையிலிருந்து வெளியேறியது.. சக்திக்கு ஒருமாதிரி சங்கடத்தை தர… காவ்யா அதனை கவனித்து… வேறு ஏதோ ஊகித்துக் கொண்டாள்… ‘அண்ணன் ‘தான்’ இருப்பதால்… பேசவில்லை போல, சக்தி அண்ணியிடம்’ என நினைத்துக் கொண்டு… “அண்ணி… அண்ணனுக்கு ஏதோ டென்ஷன்… நீங்க வாங்க… நான் உங்க ரூமில் வெயிட் பண்றேன்…” என சொல்லி அம்முவுடன் சக்தியின் அறைக்கு சென்றனர்… மூவரும்.
லிங்கா.. தன்னை தானே நொந்து கொண்டான்.. ‘என்ன முயன்றும்… அவள் அம்முக்காக என அவன் அருகில் வந்ததை அவனால் ஏற்கவே முடியவில்லை.. பட்டென ரசகுல்லா நினைவுதான் வந்தது.. அதை தொடர்ந்து ஏக்கமும் வந்தது… ‘இது நான் ஆசைப்பட்டதாக இருந்திருக்க கூடாதா…’ என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை..
ஆனால், ‘நிதர்சனம்.. என்ன!’ என.. சக்தியின், முகம் ஆசையோடு தன்னை பார்த்த போது உணர்ந்தவனால்.. இயல்பாக இருக்க முடியவில்லை.. முகம் இறுக்கத்தை கொண்டது.. அப்படியே வெளி வந்துவிட்டான்.
சற்று நேரம் அங்கிருந்த.. காரிடரின் மூலையில் உள்ள மயங்கும் மாலையின் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. ‘இது, எங்களுக்காக நடக்கிறது.. நான் சொல்லி நடக்கிறது.. அதன்.. தாக்கத்தை ஏற்க வேண்டும்…’ என மனதில் உருபோட்டுக் கொண்டான்.
கூடவே அந்த கண்கள்… சக்தியின் கண்கள்… ஆசையாக தன்னை நோக்கிய கண்கள்.. அதை உள்வாங்கவே முடியவில்லை அவனால்… ‘அவள் உன்னுடைய பொன்மகள்… அவள் இல்லைன்னா… இந்த நேரம்… உன் கம்பெனி.. இல்லை…’ என அவனின் மூளை அவனின் காதோரம் கத்தியது.
ஆனால் மனம்… ‘அவ, பாவம்.. அவளுக்கு ஒன்னும் தெரியாது… நீ அவள பார்க்கவில்லை என்றால் கூட பராவாயில்லை.. ஆனால், பொன்… பணம்… அதனால் அவளிடம் அன்பாக இருக்க வேண்டும் என நினைக்காதே..’ என மற்றறொரு.. காதோரம் கதறியது.. மனம்.
லிங்காவிற்கு நடப்பதை ஏற்க.. பழைய நினைவு விடவில்லை. வேண்டாம் என ஒதுங்கி நிற்க வரும்காலம் விடவில்லை.. எனவே தலை நிறைய குழப்பமாகவும்.. முகம் முமுதும் இறுக்கமாகவும் அங்கிருந்து நகர்ந்தான்.
[the_ad id=”6605″]
கீழே விழா நடக்கும் இடத்திற்கு வந்தான்… சாரங்கன்தான் முன்னில் நின்றார்… யாரோ ஒருவரிடம் பேசியபடி. லிங்கா வரவும்… முதலில் வந்து வரவேற்றார்… “வாங்க மாப்பிள்ளை… வாங்க..” என சத்தமாக அழைக்க…
தாமு வந்தார் “வாங்க வாங்க மாப்பிள்ளை” என ஆர்ப்பாட்டமாக… கையில் வெள்ளி தட்டில்… சந்தன குங்குமம்… வைத்துக் கொண்டு அவர் நிற்க… சரஸ்வதி வெள்ளி குடுவையில் பன்னீர் தெளிக்க… சாரங்கன், லிங்காவின் கை பிடித்துக் கொண்டிருக்க… எல்லோர் முகத்திலும், சிரிப்புடன்.. லிங்காவை அந்த சின்ன மேடை நோக்கி அழைத்து சென்றனர் பெண் வீட்டார்.
லிங்காவின் குடும்பம் மொத்தமும்… இங்கே, ‘இப்போ வந்துடுவான்.. தோ வந்துட்டான்’ என சொல்லி நிற்க… வந்தவன் சத்தமில்லாமல் மேலே சென்றதால்… யாருக்கும் தெரியவில்லை… இப்போதுதான், அனைவரின் வரவேற்பை ஏற்று.. வந்து கொண்டிருந்தவனை இளா ‘வெட்டவா.. குத்தவா..’ என பார்க்க… வந்தவன்… தன் குடும்பத்தை பார்த்து.. அவர்களுடன் நின்றான்… தாமுவிடம் “தோ வரேன் மாமா…” என அழகாக, உறவை சொல்லி அழைத்து அனுப்பினான். அவரும் சென்றார் அந்தப் பக்கம்…
லிங்கா இப்போது தன் வீட்டாரோடு அமர்ந்து கொண்டான்.. லதா “என்ன மாப்பிள்ளை சார்… கொஞ்சம் சிரிங்களேன்…… ஏன் டென்ஷன் “ என்றாள் அமைதியாக. கூடவே “ஏன் சாமிகிட்ட செயின் வைச்சிருந்தோமே போட்டுக்கலையா.. கழுத்தில் ஒண்ணுமில்ல போல…” என்றாள்.
லிங்கா அதற்கும் அமைதியாக இருந்தான், பதிலே சொல்லவில்லை.
இளா “ஏன் டா லேட்…” என கடிய…
லதா “ஏங்க உங்க செயின கழற்றி கொடுங்க… உங்க தம்பிகிட்ட…” என சொல்ல.. இளா.. தன் தம்பி, கேள்விக்கு பதில் சொல்லாததால்.. முறைத்த படியே தன் செயினை கழற்றி கொடுத்தான்.. லிங்கா ஒன்றும் சொல்லாமல் வாங்கி போட்டுக் கொண்டான்.
அதற்குள்… சாரங்கன், மூர்த்தியின் அருகே வந்தார் “நேரமாச்சுங்க சம்மந்தி.. ஆரம்பிக்கலாமா….” என்றார். மூர்த்தி தலையசைத்து.. தன் அங்காளி பங்காளி… மாமா மச்சான் என எல்லோரையும் அழைக்க சென்றார்…
அப்போதுதான்… அரவிந்த்… வீடும் வர… அவர்களையும் அழைத்து வந்தார் மூர்த்தி. கூடவே தாமு சரஸ்வதி தம்பதியும் அவர்களை அழைத்தனர்.
அடுத்து பெண் வீட்டின் சுற்றம் எல்லோரையும் அழைத்து வந்தனர்…
இப்படியாக எல்லா சுற்றமும் வந்து மேடையில் எதிரெதிரே அமர… நல்ல நேரத்தில்… பெண் மாப்பிள்ளை மணவறையில் அமர்த்தப்பட்டு.. நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டனர் இருவீட்டு பெரியவர்களும்.
அதன்பின்.. காமாட்சி தன் மருமகளுக்கு ஒரு வைர தோடும் மூக்குத்தியும் அணிவித்தார். இருவருக்கும் நலுங்கு வைத்தனர் இரு வீட்டு பெரியவர்களும்… பின்தான் மோதிரம் மாற்றும் நிகழ்வு..
லிங்காக்கு அது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தது… முகத்தில் இறுக்கம் மட்டும் அப்படியே இருந்தது, அது கூட ஒரு அழகை தர… தோரணையாக அமர்ந்திருந்தான் லிங்கா. அந்த வேட்டி சட்டையும்… அவனின் பரந்த மார்பில்… மலர் அணிகலனாக வீற்றிருந்த தாமரை மாலையும்.. கையில் ஒரு ப்பள்ட்டின.. கடாவும்.. அவனை ராஜாவாகவே காட்டியது.. இதையெல்லாம் ஆசையாக சக்தி அவ்வபோது திரும்பும் சாக்கில் கண்டு, கர்வம் கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஆனால், அவளை இவன் பாசாங்குக்காக கூட திரும்பி பார்க்கவில்லை… பச்சை வண்ண பட்டு கட்டி… அவர்கள் போட்ட வைர தோடு ஜிமிக்கி காதில் மின்ன… தாமரை மாலையுடன்… கை நிறைய வளையலுமாக… இன்னொரு தாமரையென… அமர்ந்திருந்தவளை ரசிக்கும் மனநிலையில் இல்லை போல லிங்காக்கு.
பெரியவர்கள் மணமக்களை எழ செய்து… மோதிரத்தை கையில் கொடுத்தனர்… ஏதோ ஆங்கில நாவல்களில் வருவது போல… லிங்கா தன் கண் பார்த்து… மெய் உருகி.. என் விரல் பிடித்து… அதன் மென்மை உணர்ந்து.. கண்ணசைத்து… ஆசையாக மோதிரம்மிட்டு… அத்தோடு சேர்த்து முத்தமும் இட்டு… என கனவும் பூரிப்புமாக.. சக்தி நிற்க…
லிங்கா… அவளின் கை பிடித்த தடம் தெரியாமல் மோதிரத்தை போட்டு… இல்லை, அணிவித்து விட்டிருந்தான்.
சக்தி ‘ஆச்சா… அவ்வளோதானா… போட்டுட்டானா…’ என கண்ணில் நீர் நிரம்ப நிமிர்ந்து பார்க்க… அவன் சபையில் யாருக்கோ வணக்கம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
ஏதோ… தள்ளி நிறுத்திய உணர்வு… சத்தமில்லாமல் அடிவாங்கிய உணர்வு… ‘என்னை பிடித்திருக்கிறது…’ சொன்னாரே… ஓ… எல்லோரும் முன்பும் காட்ட கூடாதா…. என பெருமூச்சு வந்தது சக்திக்கு..
[the_ad id=”6605″]
இள மனம் எங்கும் யாரையும் நெருங்காத.. தூய்மையான மனம்தான் சக்தியினது.. வருபவனும் தன்போல் இருக்க வேண்டுமென எண்ணவில்லை.. ‘இனி…’ என்ற எதிர்பார்ப்போடும் ஆசையோடும் வந்தாள்.. இது தவறும் அல்லவே. ஆனால், எல்லாம் வேறாக நடக்க… ஒன்றும் பிடிபடவில்லை அவளுக்கு.
அதற்குள்… காவ்யா “அண்ணா, கை காட்டு… அண்ணி போடனும்மில்ல….” என சொல்ல…
இவள் புறம் திரும்பி, கையை இயந்திரமாய் நீட்டினான்… லிங்கா. சக்தி அவனின் கையை தன் அருகே இழுத்துக் கொண்டாள்.. ஏனோ ஒரு கோவத்தில் சட்டென இழுத்தாள்… லிங்கா அனிச்சையாய் அவளின் முகம் பார்த்தான்.. மோத்திரத்தோடு சேர்ந்து பிசு பிசுப்பாய்… ஏதோ ஒன்று, அவனின் விரல்கள் உணர்ந்தது… காதல் கொண்ட பெண்ணின் கண்ணீர்.
லிங்கா என்பவன் எதுவுமே புரியாதவன் இல்லையே.. சட்டென “ஹேய்… சக்தி…. ரிலாக்ஸ்…” என்றான் அங்கேயே, சிரித்த முகமாக.. எல்லோருக்கும் கேட்கும் குரலில்தான். அது, அவனுக்கு… எப்படியோ, சக்திக்கு… உச்சி குளிர்ந்து போனது… இன்னும் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது… பின்னால் திரும்பி.. கண்களை துடைத்துக் கொண்டாள். பின் சிரித்தபடியே… அவனுடன் நின்றாள் புகைப்படமெடுக்க. லிங்கா அவளின் கைகளுடன் தன் கையை பிணைத்துக் கொண்டான்.. அந்த நிமிடம் அதை வரமாக ஏற்றாள் சக்தி.
“இதுதானா… இதுதானா…
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா.. இவன்தானா…
மலர்சூட்டும் மணவாளன்..
மணவாளன் இவன்தானா…”
தம்பதிகள் பெரியவர்களை நமஸ்கரித்து… மேடையிலிருந்து இறங்க… லிங்கா பொறுப்பாக அவளின் கைகளை பற்றிக் கொண்டான். கொஞ்சம் சுதாரித்திருந்தான் லிங்கா. மோதிரமும்… கண்ணீரும் ஏதோ சொல்லியதோ… இல்லை, அவனுக்காய் தோன்றியதோ… அவளின் கையை விடவில்லை. அப்படியே எல்லோருடனும் பேசியபடியே நின்றனர் மணமக்கள்.
கூட்டம் கொஞ்சம் குறைந்து ஃபோட்டோ ஷூட் என வந்து நின்றனர்… போட்டோ க்ராஃப்ர்ஸ். லிங்கா இப்போதும் சுதாரித்து தலையசைத்து மறுத்துவிட்டான். அவள் மேல், ஒட்டி… உரசி.. காதலாக பார்த்து… இப்படி எல்லாம் தன்னால் இப்போது நிற்க முடியும் என தோன்றவில்லை அவனுக்கு… ‘எல்லாம் கல்யாணத்தில் பார்த்துக்கலாம்’ என்றான் அவர்களிடம். சக்திக்கு முகமே வாடி போனது.. அதை பார்க்கவில்லை லிங்கா.
சற்று ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அவளின், கையை விட்டான் லிங்கா. சக்தி பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை போல… இவனின் இந்த செய்கையில் அமைதியாகிவிட்டாள்.. தான் நினைத்தது எல்லாம் பொய் என அவளே தனக்குள் சொல்லிக் கொண்டாள். அன்பு… முழுமையான அன்பு அவளிடம் இருக்கையில்… அவனின் எந்த செய்கையும் அவளை பாதிக்கவில்லை போல… இயல்பாய் அவனின் அண்மையை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.
லிங்காவின் நண்பர்கள்.. என உள்ளூரில் இருந்தவர்கள் வந்திருந்தனர். சக்தியின் தோழிகள் என எல்லாம் உள்ளூர் மக்களாக இருக்க… ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தனர் மணமக்களுடன் அமர்ந்து..
காவ்யா.. அரவிந்த்… பேசியபடியே ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர். லதா பார்வையால் கிண்டலாக பார்த்துவிட்டு… நகர்ந்துவிட்டாள்.
லிங்காவின் வீட்டில் எல்லோரும் உண்ண வந்தனர்… இப்போது லிங்கா நண்பர்களுடன் பேசிய படியே வெளியே சென்றுவிட்டான்…
சக்தி தன் தோழிகளுடன் இருக்க… சக்தியை, லதா உண்ண அழைத்தார்.. “அவர் க்கா..” என்றாள்…
லதா “ம்…. கூப்பிட்டாச்சு… வருவாரா தெரியலை… ப்ரண்ட்ஸ் கூட இன்னும் பேசி முடியலை.. நீ வா” என கூற.. சக்தியின் கண்கள் தன்னவனையே தேடியது…
லதா “சரி… நீ போய் கூப்பிடு… தீபக்குக்கு தூக்கம் வந்திடுச்சு… நான் அவன் கூட போறேன்” என சொல்லி சென்றாள்.
இவளோ, லிங்காவின் அருகில் கூட செல்லவில்லை.. தோழிகளும் ஒவ்வொருவராய் கிளம்பினர்… நேரம் சட்டென கடந்தது போல இருந்தது சக்திக்கு.
மணி ஒன்பதரை… விருந்தினர் எல்லோரும் கிளம்பியிருக்க… மாப்பிள்ளை வீடும் உண்டு வந்திருந்தனர்.. லிங்காவும்தான் உண்டு வந்திருந்தான். சக்தி கண்ணெதிரிலேயே அவன் இருந்தான் போல், இருந்தது.. ஆனால், சட்டென உண்டேன் என வந்து விட்டான் லிங்கா…
எல்லோரும் விடை பெரும் பொருட்டு… தாமு, சாராங்கன் சரஸ்வதி என எல்லோருடனும் பேசிக் கொண்டிருக்க.. லிங்காவும் அங்கே நின்றான். சக்தி அப்போதுதான் வந்தாள்..
லதா “சாப்பிட்டியா… சக்தி” என பொதுவாய் கேட்க…
“இல்ல க்கா… இவங்க கூட போலாம்ன்னு…” என சொல்ல.. லிங்காவின் முகம் சிறுத்து போனது.. ‘ஐயோ என்ன டா… என்ன, பண்ணி வைச்சிருக்க’ என தோன்ற…
லதா “போய் சாப்பிட்டு வாங்க” என்றாள் லிங்கா உண்டது தெரியாமல்.
லிங்கா சக்தியிடம் “வா… இவ்ளோ நேரமா வெயிட் பண்ணியா.. சொல்லவேணாமா… வா…” என இயல்பாய் கை பிடித்து அழைத்து சென்றான் பேசியபடியே..
சக்தி தன் கையை உருவிக் கொண்டாள்… லேசான கோவம்… உள்ளே பஃபே முறை.. அவளின் தட்டில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான்…
சக்தி “நீங்க…” என்றாள்.
“நான் சாப்பிட்டேன், நீ உன் ப்ரிண்ட்ஸ் கூட சாப்பிடுவேன்னு நினைச்சு விட்டுட்டேன்… இந்தா… இது நல்லா இருக்கு..” என ஒரு ஸ்வீட் வைத்தான்.
லிங்கா “ம்.. சாப்பிடு….” என்றான்.
[the_ad id=”6605″]
சக்தி அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர.. தானும் அவளுடன் அமர்ந்தான்.. பெரிதாக யாரும் இல்லை… லிங்கா “ஏன் வெயிட் பண்ற…. சாப்பிட்டிருக்கலாம் நீ…” என்றான் குறையான குரலில்.
சக்திக்கு அவன் முதல் முதலில் தன்னுடன் பேசுகிறான் என்பதே நிறைவாக இருந்தது… அமைதியாக “ம்… “ என்றாள்.
லிங்கா அவள் அமைதியாக இருக்கவும்… ரொம்ப அமைதி பேசமாட்டா போல… நாம்… பேசலாமா என எண்ணி, சக்தியை யோசிக்க விடாமல்… தானே பேசினான்… “இங்க பார் சக்தி… இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் என்னை எதிர்பார்க்காதே…” என பெரிதாக பொறுமையாக தொடங்க.
சக்தி நிமிர்ந்து அவனை பார்த்தாள்… அன்று போல இன்றும் அவளின் கண்கள் பேசியது…
லிங்கா தன்போல “என்ன” என்றான்.
சக்தி “இல்ல, இன்னிக்குதானே நம்ம என்கேஜ்மெண்ட்… சோ, என்னை நீங்க கூப்பிடுவீங்க சாப்பிடன்னு நினைச்சேன்…” என்றாள் அலட்டாமல். கூடவே “உங்க வீட்டில் எல்லோரும் வெயிட் பண்றாங்க… நீங்க கிளம்புங்க… நான் சாப்பிட்டுக்கிறேன்…” என்றாள் கண்ணில் மட்டும் ஏதோ பாவம்.. முகம் சிரித்தபடியே இருந்தது.
லிங்கா “அப்படியில்ல… நா… நான்” என ஏதோ சொல்ல… சக்திக்கு அவனின் தடுமாற்றம் ஏதோ நிம்மதியை தந்தது… ‘நான் ஆசையாக நிற்க… கண்டு கொள்ளவிலை… இப்போது வந்து… பெரிய லெக்சர் கொடுக்கிறான்… போடா…’ என உரிமையாய் தோன்ற.. அதுதான் கண்ணில் வந்தது அவளுக்கு.. அதை படிக்கும் அளவு லிங்கா தேறவில்லையே… எனவே தடுமாறினான்.. கூடவே கோபம்… ‘எப்படி.. இப்படி… என்னிடம் பேசலாம்… நான் அதற்குள்ளா… அவளின் கணவனாகிவிட்டேன்… அது எப்படி சட்டென.. முகம் காட்டுவாள்.. என்னிடம்’ என தோன்ற “சக்தி… என்ன பேசற…” என அன்னிய தன்மையாக குரல் வெளிப்பட்டது… லிங்காவிடமிருந்து..
சக்தி பயந்து போனாள்.. ‘அவசரப்பட்டு தப்பா ஏதாவது பேசிட்டோமோ என தோன்றியது… “இல்ல… நீங்க.. போங்க…” என ஏதோ சொல்ல… காவ்யா “அண்ணி…” என அரவிந்துடன் வந்தாள் அங்கு.
சக்தியின் முகம் சோர்ந்து இருப்பதாக காவ்யாக்கு தெரிந்தது… மேடையில் முறையான அறிமுகம் ஆகிவிட்டது அரவிந்த் குறித்து… இப்போது காவ்யா, தனியாக அழைத்து வந்திருந்தாள்…
பார்த்ததும் சக்தி “வாங்கண்ணா… சாப்பிட்டீங்களா…” என்றாள் உடனே வீட்டு பெண்ணாக.
அவரும் “ஆச்சுங்க… உங்களை டிஸ்ட்டர்ப் பண்ணலையே…” என்றான் லிங்காவையும் பார்த்தபடியே.
லிங்கா “அப்படி இல்ல அரவிந்த்… “ என பேச… சக்தி உண்ணும் வரை நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் ஹாலுக்கு வந்தனர்… இவர்கள் மூன்று குடும்பம் மட்டும் இருந்தது… எல்லோரும் சொல்லிக் கொண்டு விடை பெற்றனர்.
லிங்கா அவளின் பக்கம் கூட திரும்பவில்லை..
சக்தியும் அவனை பார்த்து பார்த்து… உள்ளுக்குள் உடைந்து போனாள்.. ஒரு கட்டத்தில்… கோவம் வர… ‘நீ போடா…’ என விட்டுவிட்டாள்.
தீபக் உறங்கியிருந்தான்.. அம்மு.. லிங்காவின் கையில் இருக்க… சக்தி “அம்மு பை…” என சொல்லி அவளை வா… என அழைக்க, அது இப்போது சக்தியிடம் வந்தது.
சக்திக்கு ஏக குஷி… காவ்யாவிடம் தன் போனை கொடுத்து… தன்னையும் அம்முவையும் படம் பிடிக்க சொன்னாள்… காவ்யா “நீயும் வா ண்ணா…” என லிங்காவை அழைக்க… இப்போது சக்தி “நீ எங்களை மட்டும் எடு… காவ்யா” என்றாள் லிங்கா புறம் திரும்பாமல்.
லிங்கா “நீ எடு… நான் காரெடுத்து வரேன்..” என சொல்லி நழுவிவிட்டான். சக்திக்கு ‘போடா… போ…’ நிலைதான்… ஒன்னுமே புரியல உலகத்துல… என்னமோ நடக்குது மர்மமா இருக்குது….’ என உள்ளுக்குள் பாட்டே பாடிக் கொண்டாள்…
லிங்காவை அவளால் எந்த வட்டத்துக்குள்ளும் கொண்டு வர முடியவில்லை… மோதிரம் போடும் போது கண்டுக்கல.. சாப்பிடும் போது… கூப்பிடல… சாப்பிடல சொன்னா… கை பிடிச்சு கூடவே வர…. நான் கோவப்பட்டு நீங்க போங்கன்னு சொன்னா… பெரிய லெக்சர் தர வர…. இப்போ… கூட திரும்பி பார்க்கம போற… நான் போட்டோ எடுக்க சொல்றேன்… நீ தள்ளி நிக்குற… உன் தங்கை வான்னு சொன்னா… அப்படியே நிக்குற….. அப்போ, அப்பா பொய் சொன்னாரா.. இல்லை, நீ பொய் சொன்னியா… என்னை பிடிக்குதுன்னு.’ என சரியான பாதையில் அவளின் சிந்தனை செல்ல… நீடித்த குழப்பத்தினை வழித்துணையாக கொண்டு வீடு வந்தாள் சக்தி.
[the_ad id=”6605″]
இளா லதா.. பிள்ளைகள் என ஒருகாரில் செல்ல… லிங்காவுடன், காவ்யா பெற்றோர் என சென்றனர்.
லதா தன் கணவனை கேள்வியாக கேட்டு குடைந்து விட்டாள் “ஏன் உங்க தம்பி முகமே சரியில்ல… நிச்சயத்தன்னிக்கு அந்த பிள்ளையோட சாப்பிட கூட மாட்டாரா… தெரியாதா… அவருக்கு. இதுல… நீங்க என்னமோ அந்த பெண்ணை விரும்பறான்னு சொல்றீங்க… உண்மையா இந்த பெண்ணா அது… அதவிட உங்க தம்பி விரும்பினாரா…. உண்மைய சொல்லுங்க” என்றாள் படபடப்பாக.
இளாக்கு கண்ணை கட்டியது… இப்போதுதான் தன் மனையாளுடன் நல்லுறவு கொண்டு… நிறைந்த வாழ்க்கை வாழ்கிறான்… எனவே, அவளிடம் எதையும் மறைக்க தோன்றவில்லை.. கூடவே, தன் தம்பியின் எல்லா ரகசியத்தையும்… மனைவியே ஆனாலும், அவளிடம் பகிர… தோன்றவில்லை… எனவே, எல்லா குடும்பஸ்தன் போல.. இளாவும்… சமாளிக்க தொடங்கினான் “லதா ம்மா… நீ எல்லாத்துக்கும்… நாலு பக்கம் யோசிக்கிற… லிங்காக்கு ஆபிஸ் டென்ஷன்.. வேற ஒண்ணுமில்ல… கல்யாணம் ஆனா உடனே… பாரு.. நம்மள கண்டுக்க மாட்டான்… அவன்… “ என சிரித்தான். லதாவின் முகம் இன்னும் தெளியவில்லை.
இளா “லதா…” என சத்தமாக அழைத்தான்.
“ம்….” என்றாள் மனையாள்.
இளா “என்ன டி…” என்றான் பொறுமையான குரலில்..
லதா “என்ன சொல்றது… எதுவும் பிரச்சனை இல்லையே…” என்றாள் சின்ன குரலில்.
“ச்சு… அதெல்லாம் இல்லை டா… அதையெல்லாம் மனதில் போட்டுக்காத… ரிலாக்ஸ்… “ என்றான் இளா.
“இந்த மல்டிகலர் ஸாரி உனக்கு சூப்பரா இருக்கு… டா… நீயும் நானும் சேர்ந்து எடுத்த போட்டோ வரட்டும்… வால்ல மாட்டுற மாதிரி பெருசா போட்டுக்கலாம்…” என அவளின் கன்னம் தொட… கொஞ்சம் அமைதியானாள் லதா… இருந்தும்.. மனமெல்லாம் அந்த சின்ன பெண்ணிடம் நின்றது.