எனவே ‘காலையிலிருந்து நேரம் பார்த்திருந்தாள்… எப்போது மணி பத்தாகும்’ என.. எனவே காவ்யாக்கு அழைத்துவிட்டாள்.. நம்பர் கேட்க..
காவ்யா “ஏன் அண்ணி, உங்களுக்கு அண்ணன் போனே பண்ணினது இல்லையா…” என்றாள்.. சக்திக்கு அவளின் விசாரணை த்வனி தெரியவில்லை “ம்கூம்… “ என்றாள் சாதரணமாக.
மீண்டும் சக்தியிடம் “நீங்க எப்போ அண்ணன பார்த்தீங்க… உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க” என்றாளே பார்க்கலாம்… சக்தி, தெறித்து விட்டாள்.. “ஐயோ காவ்யா.. நான் லவ் எல்லாம் பண்ணல…” என்றாள்… அனிச்சையாக. காவ்யாக்கு அதுவே போதுமானதாக இருந்தது… ‘அப்பா சொல்ற மாதிரி அண்ணன் ஏதோ பண்றான்..’ என எண்ணி சிரிப்புதான் வந்தது தங்கைக்கு…
அதற்குள்.. சக்தி “ஏன் காவ்யா நம்பர் தரமாட்டியா… “ என கேட்க..
காவ்யா “ஐயோ, அண்ணி… உங்களுக்கு இல்லாததா… நான் மெசேஜ் பண்றேன் அண்ணி.. அண்ணன், இங்கதான் இருக்காங்க.. இப்போ இதிலேயே பேசுங்க… அவருக்கு உடம்பு சரியில்லை…” என தன் அண்ணணை முறைத்து… போட்டு கொடுத்து.. அப்போத்தான், போன் பேசி வந்த, தன் அண்ணனிடம் “இந்தா… போன், உனக்குத்தான்..” என சொல்லி நீட்டியவள் சென்றுவிட்டாள்.
லிங்கா யாரென பார்க்க அண்ணி2 என மின்னியது… லிங்காக்கு அண்ணி2 வா… “ஒரு சக்தியைத்தான் அப்படி போட்டிருக்காளா…’ என இப்போதுதான் தோன்ற “ஹலோ..” என்றான் அசால்ட்டாக.
சக்திக்கு மூச்சடைத்து.. நேற்றே… ஒரு முறை சேர்ந்து போட்டோ எடுத்திருக்கலாம் என நினைத்திருந்தவள் மனம்.. இந்த குரலில் இன்னும் அதிகமாகியது போல… “ஹலோ… நா.. நான் சக்தி” என்றாள்.
“ம்… என்ன” என்றான் இன்னும் அவனின் வட்டத்தில் அவளை உள்ளே விடாமல்.. ஆசை மனம் கொண்ட சக்திக்கு ஏதோ போலானது.
“இல்ல சும்மாதான்… உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு.. என்னாச்சு… “ என்றாள் சாந்தமான குரலில் உரிமையாய் கேட்க…
லிங்காக்கு அது இரிட்டேட் ஆனது போல “எனக்கு ஒண்ணுமில்ல… வேற…” என்றான் கட் அண்ட் ரைட்டாக.
எப்படி பேசினாலும்.. சக்தியால் அவனை நேருங்கவே முடியவில்லை… ஏன், அவனின் சுற்று வட்ட பாதையில் கூட செல்ல முடியவில்லை அவளால்.. அப்படியொரு சூரியனாய் தகிக்க தொடங்கினான் அவளிடம்.
சக்திக்கு நேற்று போல் இன்றும் சின்ன கோவம் வந்தது… கூடவே ஆசை.. காதல், ஆற்றாமை… எல்லாமும் வந்தது. ஆனால், இது எதையும் அவனிடம் காட்ட கூடிய நெருக்கத்தில் அவன் இல்லை என்ற எண்ணமும் வர.. சக்தி அமைதியானாள்…
லிங்கா, நேற்றைய கதையாய் “சும்மா.. சின்ன, சின்ன.. விஷயத்துக்கு.. என்னை கேள்வி கேட்க்காத.. எனக்கு பிடிக்காது…” என்றான்.
[the_ad id=”6605″]
சக்தி “சாரி…” என்றவள் போனை வைத்துவிட்டாள்… ‘புல் ப்ளாங்…’ என சொல்லுவது போல சக்திக்கு எல்லாம்.. கருப்பு நிறத்திலேயே தெரிந்தது மூடிய கண்களில் அவளுக்கு.
சரஸ்வதி… ஏதோ கேட்டது கூட காதில் விழவில்லை அவளுக்கு… அவரும் விட்டுவிட்டார். வேலைகள் ஏதும் ஓடவில்லை.. என்ன செய்வது… என புரியவில்லை… இந்த லிங்காவின் பேச்சில்… அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
ஆனால், அங்கு லிங்காக்கு அப்படியொரு… ஆனந்தம்… சக்தி தன் பேச்சை கேட்டு போனை வைத்தது. ‘எப்போதும் அதென்ன… என்னை கேள்வி கேட்பது… என்னை தொற்றிக் கொள்ளவது… சும்மா நொய்யு… நொய்யுன்னு… சின்ன பிள்ளை மாதிரி.. நிச்சயம் ஆனா, கையை பிடிச்சிக்கிட்டே சுத்தனுமா… போடி…’ என திமிராகவே நினைத்தான்…
அத்தோடு தாமு வேறு.. அந்த அப்ரூவல் பற்றி சொன்னது நினைவு வர… ஒரு குஷி வந்தது… அவனுள்… இரவு மனம் சொன்னது போல… ‘எதையும் நினைக்காத… எல்லாம் சரியா போகும்…’ என்ற எண்ணம் வர, ஆமாமில்ல எல்லாம் சரியாதான் போச்சு…. என தோன்ற… வாயில் இந்த பாட்டை.. விசிலடித்தபடியே அலுவலகம் கிளம்பினான்.
“ஏய்… நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்…
ஹேய்… நான் சொன்னபடி… நிக்காம சுழலும்….
உள்ளார எப்போதும் ஹு…. லால.. ஹூ லாலாதான்…” எனத்தான்.
சாரங்கனும், தாமுவும்.. காலையிலேயே கட்சி அலுவலகம் சென்றுவிட்டனர். அத்தோடு, சாரங்கனின் இருப்பிடம் அங்கேயே டவுனில் உள்ள வீட்டில் இருக்கும். அவரை பார்க்க, வருவோர்.. போவோர் நிறைய இருப்பர்… எனவே, இந்த வீட்டில்.. கட்சி நடைமுறை எப்போதும் இருக்காது.
நேரம் சென்றது தாமு மட்டும் வந்தார். பெண் ஷோபாவில் சுருண்டு படுத்திருந்தாள்… சத்தமில்லாமல் தன் மனைவியிடம் சென்று ‘என்ன, சண்டை போட்டியா..’ என கேட்டு, ‘இல்லை’ என தெளிந்து வந்தார் பெண்ணின் அருகில். “என்ன டா…” என்றார் வாஞ்சையாய்…
சக்தி, எழுந்து அமர்ந்து அவரின் தோள் சாய்ந்து கொண்டாள்.. லிங்கா பேச்சின் தாக்கம் இன்னும் தீரவில்லை… எனவே, தந்தை கேட்டதும் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது “ஏன்.. டா.. தங்கம்… என்னாச்சு” என்றார் பதறியவராக.
சக்தி கண்களை துடைத்தபடியே “ஒண்ணுமில்ல பா.. எனக்கு இவ்வளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமா…” என்றாள்.
தாமு சிரித்தபடியே “அப்படி இல்ல டா… நல்ல இடமா உன்னை கரை சேர்த்துட்டா… எங்களுக்கு நிம்மதி பாரு… அதான்… பார்த்தில்ல.. எப்படி ராஜாவாட்டம் மாப்பிள்ளை… அவங்க குடும்பத்தில் எல்லோரும் மரியாதை தெரிஞ்சவங்க டா… மனுஷங்க நல்லவங்களா கிடைக்கிறதுதான் கஷ்ட்டம்… உனக்கும் சரியான வயது… ஏன் என்னாச்சு… இப்படி அழுகிற… பயமா..” என்றார்.. அவளின் ஒரு கேள்விக்கு எல்லா பதிலையும் சொல்லி…
சக்தி “இன்னும் என் படிப்பே முடியலையே… நான் மேல படிக்கணும் ப்பா…” என்றாள் சிறுபிள்ளையாய்… தைரியமெல்லாம் எங்கோ சென்றுவிட்டது போல.
“ம்… அவ்வளோதானே டா… அப்பா பார்த்துக்கிறேன் அதெல்லாம். அவங்க அதுக்கெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க… நீ எவ்வளோ வேணா படி… நீயே… உன் மாமனார் கிட்ட சொல்லு… அவரே படிக்க வைப்பார்… ரொம்ப நல்ல மனுஷங்க டா…” என்றார் மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை சொல்லி.
சக்திக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை “எனக்கு இப்போ கிளாஸ் இருக்காமாம்… என் ப்ரண்ட்ஸ் எல்லோரும் வந்திட்டாங்களாம்.. நான் நாளைக்கு அங்க போகணும்… சரியா” என்றாள்… எங்கேயோ பார்த்தபடியே தன் வளர்ப்பு தகப்பனின் தோள் சாய்ந்த படியே கேட்டாள்.
தாமு “என்ன டா இப்படி சொல்ற.. இனி போக வேண்டிய கட்டாயமில்லைன்னு சொன்ன… நான் வேண்ணா.. போன் செய்து பேசவா… hodகிட்ட பேசவா…” என்றார் போனை கையில் எடுத்தபடியே…
[the_ad id=”6605″]
“அப்பா… ப்ளீஸ்… இது எனக்குதான் யூஸ்புல்லா இருக்கும்.. அதான் கேட்கிறேன்… அவங்களுக்கு இதில் ஒன்னும் பிரச்சனையில்லை… நீங்க போன் பண்ண வேண்டாம்… நான் போயிட்டு வரேனே… “ என்றாள் மீண்டும்.
தாமு “கல்யாணம் இன்னும் இருவது நாளில்… தெரியுமில்ல… உனக்கு தேவையானது எடுக்கனும்.. நகை உனக்கு, என்ன பிடிக்குமோ வாங்கனும்.. நீ கிளம்பிட்டா எப்படி டா…” என்றார் குரலில் அதே வாஞ்சைதான்.
ஆனால், மகளுக்கு தான் சொல்லி கேட்கவில்லை என்றதும் முகம் சிவந்தது.. எப்போதும் ஊட்டி வாசம்தான் சக்தி… ஐந்தாம் வகுப்பில் கொண்டு சேர்த்தனர்… கல்லூரிக்கு கூட இங்கு வரமாட்டேன் என்றுவிட்டாள் பெண். அவளுக்கு இந்த சூடு ஒத்துக் கொள்ளாது… இங்கே வந்தாலே.. முகத்தில் அவ்வப்போது கொப்பளம் வந்துவிடும்… இப்போதும் அப்படிதான் வலது பக்க கனனத்தில் அந்த கொப்பளத்தின் சிவப்பும்.. இப்போது தன் தந்தை முடியாது என்று சொன்ன கோவமும் சேர்ந்துக் கொண்டது.. முகம் மெல்லிய ரோஸ் வண்ணம் கொண்டது பாவம்.. மேலும் இது லிங்காவின் வார்த்தையோடு.. ஒப்பிட்டு கொண்டது… எனவே ஒரு வீம்பு வந்தது அவளிடம்.
எனவே மகள் கொஞ்சலை விடுத்து, அதிகாரத்தை எடுத்தாள் “அதென்ன பெரிய விஷயம்… நீங்க பார்த்து எல்லாம் எடுங்க… புடவைக்கும், நகைக்குமா நான் வேணும்… ச்சு போங்க ப்பா….
நீங்க சொன்னீங்கன்னு, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்… இப்போ நான் கேட்கிறேன்.. படிக்க போறேன்னு, நீங்க விடலைன்னா எப்படி…” என்றாள் சத்தமாக.
மகளதிகாரம் தோற்றதாக சரித்திரம் இல்லையே.. அதற்கு இந்த வளர்ப்பு தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன… அவரும் தோற்றார்… “சரி டா… சரி டா… மாப்பிள்ளைகிட்ட சொல்லிடு… எப்போ போகணும்” என்றார் அமைதியான அடங்கிய குரலில்.
சக்தி “நாளைக்கு காலையில் கிளம்பறேன் ப்பா…. அப்போதான், கீழ சீக்கிரமே வந்திடுவார்… பிரகாஷ் அண்ணன். இல்ல, நைட் லேட் ஆகும்… சொல்லிடுங்க பிரகாஷ் அண்ணா கிட்ட… பத்து மணிக்கு கிளம்பலாம்…” என்றாள்.
தாமு “ஏதாவது வாங்கனும்மா… டா…. எப்போ போற… வண்டி எடுக்க சொல்லவா…” என்றார்.
[the_ad id=”6605″]
“ம்… சின்ன வண்டி போதும் ப்பா… நானே போய்கிறேன்… அம்மா கூட..” என்றாள் அவளும். தோழிகளுக்கு ஏதாவது வாங்கி செல்வாள்… எனவே அப்படி சொன்னாள். அதை தொடர்ந்து இன்னும் பேச்சு சென்றது தந்தை மகளுக்குள்.
யார் வேண்டுமானாலும் நம்மை புறக்கணிக்கலாம்.. ‘தந்தை’ என்ற வார்த்தை கூட நம்மை அலட்சியம் செய்யாது போல.. அப்படிதான் இருந்தார் தாமு சக்தியிடம். அவள் முகம் எந்த நிலையிலும் வாட விட்டதேயில்லை. இப்போதும் வேண்டுமானால்.. இது அவசரமாக தெரியலாம்.. ஆனால், திருமணம் என்ற பந்தத்தில்… லிங்காவின் குடும்ப அமைப்பு… தாங்கள் இல்லை என்றாலும், தன் மகளை காத்து நிற்கும் என்ற எண்ணமே தாமு என்ற வளர்ப்பு தந்தையின் கணிப்பு.
“பருவங்கள் மாறிவர…
வருடங்கள் ஓடிவிட…
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..
எழுதிடும் உன் விரலில்…
சிரித்திடும்.. உன்னிதழிலில்…
கடமையின் கவிதைகளை கண்டு கொண்டேனே….”