அமுதங்களால் நிறைந்தேன்…
16
லிங்கா வீடு வந்ததும்… நேரே மேலே சென்றுவிட்டான்.. ‘அப்பாடா ஒரு வேலை முடிந்தது..’ என்ற நிலை அவனுக்கு. அவளிடமிருந்து தப்பித்த உணர்வு… ‘எங்கும் கேள்வி கேட்கவில்லை.. அதற்கு டைம் இல்லை.. நல்லவேளை’ என எண்ணினான்.. அதுதான் அவன் உள்மனம் எண்ணியது.
நாளைக்கு யாரை பார்க்கணும், எங்க பேமெண்ட் பண்ணனும்… என அதிலேயே சிந்தனை சென்றது லிங்காக்கு. அப்படியே எதிலிருந்தோ தப்பித்து வந்தவன் போல் அமர்ந்து கொண்டான்.. தனது அறையில், சற்று நேரம்.
பின்தான், உடைமாற்றி.. வந்து அமர்ந்தான்.. ஆசுவாசமாக… பெருமூச்சு எழுந்தது.. உறங்கலாம் என படுக்க… மீண்டும், அந்த வால் ஹேங்கிங் அவன் கண்ணில் பட்டது… எப்போதும் போல ‘ஏன், நான் நினைச்சது நடக்கல’ என அதில் தீவிரமான ஆராய்ச்சிக் கொண்டது மனம்.
‘நான் இங்க.. இன்னும்.. அவளை நினைத்துக் கொண்டிருக்கிறேனோ…. அவளுக்கு அப்படி ஏதும் இருக்காதோ.. அவளுக்கு எந்த உறுத்தலும் இல்லையோ..’ என முதல் முதலாக ஆற்றாமையில் ஆரம்பித்த எண்ணம் ஆவேசம் கொண்டது.
அதே ஆவேசத்துடன், தனது போன் எடுத்து… அவளை தேட… அவளும்.. அவளின் ஹப்பியும் உள்ள புகைப்படம் சிக்கியது.. இதில் இன்ஸ்ட்டாவில் ப்ளூப்பர்ஸ் வேறு.. இருவரும் சேர்ந்து. எல்லாம் வானவில் போல வண்ணமயமாய் இருந்தது.. சற்று முன் தன்னிடமிருந்து தள்ளி சென்ற… புது பெண்ணின் நினைவு வந்தது…
லிங்காக்கு வெறுத்தே போனது… ‘அவள் மேல் தப்பில்லை.. நான்தான் தப்பு… அவள் எப்போதும் சரிதான், எங்கும் என்னை சேர்க்கவேயில்லை… நான்தான் வழிந்து.. குழைந்து.. அய்யோ…’ என தன் கைகளை பார்க்க… முதல் முதலில் கோவம் வந்தது லிங்காக்கு… என்னுடையவள் என எண்ணி தான் செய்த செயல் எல்லாம் நினைவு வந்தது.. கூடவே விட்டு போன ஆவேசமும் வந்தது… எழுந்து சென்று, ஓங்கி அந்த வால் ஹேங்கிங்கின் மேல் குத்த…. அது அத்தனையையும் வாங்கிக் கொண்டு.. இன்னமும் ஆடிக் கொண்டிருந்தது சிரித்தபடியே..
அந்த ஆட்டம் அவனுள்… நிலையில்லாமல் சுழல தொடங்கியது… அவளுடன் தான் சென்ற நிமிடங்கள்.. பழகிய நாட்கள்.. வழிந்த பேச்சுகள் எல்லாம் நினைவில் வந்தது… ஆண் மகனாக முதலில் வெட்கமே வந்தது… லிங்காக்கு.
அது கோவத்தை கொடுக்க… ஒரு பெண் இத்தனை தெளிவாக… ‘நீ எனக்கு நண்பன்தான் என சொல்லியும், எப்படி அவளை உரிமையுடன் பார்த்தாய்.. பேசினாய்.. பழகினாய்..’ என கேள்விகள் தனக்குள்ளே கேட்க… பதில் என்னமோ காதல் என வந்தது… ஆனால் அந்த பதிலை அவனாலேயே ஒத்துக் கொள்ள முடியவில்லை… எவ்வளவு யோசித்தும் அவனை அவள்… காதலாக பார்த்தேயில்லையே… என இப்போதுதான் அது புரிந்தது.. இரு உள்ளம் நேசித்தல் தான், காதல் என்றால்… அப்போ என்னுடையது’ என எண்ண… லிங்கா சோர்ந்து போனான்… தன்னுடையது முழு முட்டாள்தனம் என சோர்ந்தே போனான்…
[the_ad id=”6605″]
அந்த வால் ஹேங்கிங், மீண்டும்… மீண்டும்… அவனை கேவலமாகப் பார்ப்பதாக தோன்ற.. அதை எடுத்துக் கொண்டு மொட்டைமாடி சென்றான்.. சுவற்றி இரண்டு முறை அதை, விசிறி.. விசிறி.. அடிக்க.. எல்லாம் தெறித்து சிதறியது.. அவனின் கோவமும்… அதனுடன் சேர்த்து சிதறியது போல.. தூக்கி அப்படியே கீழே போட்டான் அதை.
சுவற்றி சாய்ந்து அமர்ந்து கொண்டான்… மதம் அடங்கிய யானையாக தலையை கையினால் கோதிய படியே அமர்ந்திருந்தான்.
வெறித்து பார்க்க இருளான வானம்… அதை கொண்டாட.. விட்டு போன காதல்… கேட்பார் யாருமில்லா இடம்…. அனலாக தகித்த தன் மனதை யாரிடமும் திறக்க முடியா நிலை… என லிங்கா அமர்ந்திருந்தான்.
வெட்கமாக இருந்தது. வேண்டாம்.. வேண்டாம்.. என ஒருத்தி சொல்லி.. தான் அவளிடம் கொண்ட.. உரிமைக்கு தன்னை தானே வெறுத்து ஓய்ந்து அமர்ந்தான் லிங்கா..
மணி ஒன்று… அடுத்தும் ஒரு அரை மணி நேரம் சென்றது… ஐப்பசி மாத குளிர் காற்றும் அவனை அசைக்கவில்லை… மெல்ல மெல்ல.. சுய நினைவு வந்தது போல… அப்படியே படுத்துக் கொண்டான்.. கண்கள் மட்டும் விழித்தே இருந்தது.
மீண்டும் மீண்டும்.. தன் சுயம் தொலைத்த நினைவு வந்ததே தவிர… காதல் என்ற பொருள் வரவில்லை… அந்த சின்ன நேரத்தில், மனம் சொன்னது.. ‘விட்டுடு.. இங்கேயே விட்டுட்டு… எதையும் நினைக்காதே.. உன் வேலையை மட்டும் பார்… எல்லாம் சரியாகிடும்…’ என ஏதோ உள்மனம் ஆறுதல் சொல்ல… அதை கண்மூடி ஏற்றான். எந்த நேரத்திலும்.. ‘நமக்கு, நாம்தானே துணை’ அமைதியாக விழி மூடினான் அங்கேயே…
மறுநாள் எப்போதும் போல இயல்பாக சென்றது. இளா இன்று நேரமே கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டான்.. தன் அம்மாவிடம் “லிங்காவ பொறுமையா வர சொல்லும்மா” என சொல்லி சென்றான்.
லிங்காக்கு சூரியன் வந்து சுட்ட பிறகுதான் விழிப்பே வந்தது.. மெல்ல கண் திறந்து, பூலோகம் தான்.. தன் வீட்டு மொட்டை மாடிதான்.. என நினைவு வந்து, கீழே தன் அறைக்கு வந்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் லிங்கா.
சரியாக எட்டு மணிக்கு… போன் அழைக்க தொடங்கியது.. அவனின் வருங்கால மாமனார்தான். போனை.. பார்த்தான்.. ஆப் செய்து தூங்கிவிட்டான்..
ஏதோ எழ முடியவில்லை… உடலெல்லாம் வலி… மனதின் அசதி, உடலில் தெரிந்தது போல.. அப்படியொரு உறக்கம் லிங்காக்கு.
லிங்கா இன்னும் காணோமே என வீட்டு பெண்மணிகள் புலம்ப தொடங்கினர்.
காவ்யா அப்போத்தான் தன் போனில், அரவிந்தும் தானும் எடுத்துக் கொண்ட போட்டோசை பார்த்துக் கொண்டிருந்தாள். அம்முவும் லதாவும்… தண்ணியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. குழந்தையை குளிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள் லதா.
மணி பத்தாக… காமாட்சி “காவ்யா… ஈஷ்வர எழுப்பு… ஏன் இவ்வளோ நேரம் தூங்கறான்… போடி, பார்த்து வா” என மேலே அனுப்பினார்.
காவ்யா வந்து லிங்காவை எழுப்பி கீழே வந்தாள்.
லிங்காவும் பசிப்பது போல் இருக்கவும்… குளித்து கீழே வந்தான். ஆனால், உடல்… ‘நான் சரியில்லை’ என சொன்னது… தலை பாரமாக இருந்தது.. உடல் கணக்க தொடங்கியது… போல, வந்தவன், அப்படியே ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக் கொண்டான் சிறு பையனாக.
அதன்பின் அன்னை.. புலம்ப தொடங்கினார்.. “நேற்று.. நில்லுடா.. சுத்தி போடறேன்னு சொல்ல சொல்ல… மேலே போயாச்சு… எங்க பேச்சை எப்போதான் கேட்ப்பியோ… பாரு, இப்போ நீதான் அவஸ்தை படற…” என சொல்லிய படியே… கஷாயம்… டிபன்… என எல்லாம்.. கொடுத்து “மேலே போய் படு டா” என சொல்லிக் கொண்டிருக்க… இருக்க… காவ்யாவுக்கு போன்.. சக்தியிடமிருந்து.
[the_ad id=”6605″]
லிங்கா தன் அன்னைக்கு பதிலாக “இல்ல மா… நான் ஆபீஸ் போகனும்… “ என ஒற்றை காலில் நிற்க… எல்லோரின் முகமும் அதிருப்தியை காட்டிக் கொண்டிருந்தது.
இப்போது சக்தி அழைக்கவும்… காவ்யா “இரு அண்ணி கிட்ட சொல்றேன்.. எங்க உன் போன்… நீ எடுக்கலையா” என சொல்லிய படியே.. சக்தியின் போனை எடுத்தாள்.
லிங்காக்கு அண்ணி என்றதும்… சக்தி நினைவு வரவில்லை.. லதாவிடம் சொல்லுவாள் என எண்ணி.. அமைதியாக இருந்தான்… இன்னும் சக்தி என்பவள், பிம்பமாக கூட வரவில்லை அவனுள்.
அப்போது லிங்காவின் போனும் இசைக்க தொடங்கியது…
லிங்கா, யாரென பார்க்க… தாமு அங்கிள்தான்.. “ஹலோ மாமா… சாரி, அப்போவே கூப்பிட்டீங்க.. போல… எனக்கு கொஞ்சம் முடியலை, அதான் தூங்கிட்டேன்.. சொல்லுங்க மாமா…” என்றான் பொறுப்பாக.
தாமு அவனின் உடல்நலம் பற்றி விசாரிக்க தொடங்கினார்.. கூடவே ஒரு நல்ல செய்தியும் சொன்னார்… ‘அந்த அப்ரூவல் கிடைத்துவிட்டது… உங்க என்கேஜ்மெண்ட்க்கு எங்களோட கிப்ட் மாப்பிள்ளை…’ என்றார் ஆர்ப்பாட்டமாக சிரித்தபடி.
லிங்கா துள்ளலாக “தேங்க்ஸ் மாமா… தேங்க்ஸ்..” என ஏதோ பேசியபடியே வெளியே சென்றான்.
காவ்யா, இங்கு சக்தியுடன் ஆர்வமாகப் பேசத் தொடங்கினாள்.. “சொல்லுங்க அண்ணி.. எப்படி இருக்கீங்க… “ என கேட்க.
சக்திக்கு நிம்மதி.. அவன்தான் நன்றாக பேசவில்லை.. இவர்களாவது பேசுகிறார்களே என நிம்மதி “ம்.. குட் காவ்யா… என்ன பண்றீங்க” என்றாள் பொதுவாக.
சக்தி போன் செய்ததே… லிங்காவின் நம்பர் வாங்க.. அன்று மெசஞ்சரில் நம்பர் அனுப்பி இருந்தாள் சக்தி.. ஆனால், லிங்கா பார்க்கவில்லை. அதனால் சக்திக்கு போன் செய்யவில்லை லிங்கா. இன்னும் லிங்காவின் நம்பர் தெரியவில்லை அவளுக்கு.
தன் தந்தையிடம் லிங்காவின் நம்பர் கேட்க சங்கடம்.. எனவே ஏதாவது காரணம் சொல்லி காவ்யாவிடம் நம்பர் வாங்கலாம் என போன் செய்திருந்தாள் சக்தி.
சக்தி அமைதியாக இருக்கவும் காவ்யா “ஏன் அண்ணி” என கேட்டாள்
[the_ad id=”6605″]
“இல்ல, உ.. உங்க அண்ணன் நம்பர் தரியா” என்றாள்.
கவ்யாக்கு என்னடா இது… என தோன்றியது.. “ஏன் அண்ணி, உங்ககிட்ட இல்ல” என்றாள்.
“இல்ல… நேத்து வாங்க மறந்துட்டேன்.. அதான்…” என்றாள் தயங்கிய குரலில். காவ்யாவை விட சிறியவள் சக்தி.. முறைக்குத்தான் அண்ணி… எனவே பெரிதாக சத்தம் வரவில்லை காவ்யாவிடம் சக்திக்கு..
நேற்று பெரிதாக தள்ளி நின்று போட்டோ எடுத்ததெல்லாம், வீடு போகும் வரை கூட தாங்கவில்லை அவளுக்கு… ஒரு போட்டோவாவது சேர்ந்து எடுத்திருக்கலாம் என மனம் அடித்துக் கொண்டது புது பெண்ணுக்கு.
இன்று காலையில் தன் தந்தையிடம் கேட்டு விடவே நினைத்தால் சக்தி.. ஆனால் இனி என்ன கேட்பது தன் தந்தையிடம் ‘அவர் விரும்பி கேட்டாரா.. இல்லை, நீங்கள் விரும்பி கேட்டீர்களா…’ எனவா கேட்க முடியும்… இல்லை சண்டைதான் போட முடியுமா.. எனவே அமைதியாக இருந்தாள். அத்தோடு சேர்த்து வெட்கம் வந்தது பெண்ணுக்கு.. எது எப்படியோ.. எனக்கு அவரை பிடித்திருக்கிறது… நிச்சயமும் முடிந்து விட்டது… பார்த்துக்கலாம்.. என தோன்றியது சக்திக்கு.