சக்தி… மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு கிளம்பி… தனது கல்லூரிக்கு சென்றாள். அவர்கள் தோழிகள் நான்கு பேர் சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர்.. எனவே சமையலுக்கு ஆட்கள் உண்டு.. எனவே ‘இன்று தான் வருவதை சொல்லி, சென்றாள்’.
தாமு கிளம்பும் போதும் கேட்டார் “மாப்பிளைக்கிட்ட சொல்லிட்டியா டா” என. மையமாக தலையசைத்து.. கிளம்பினாள் பெண். இந்த புறக்கணிப்பை அவளால் தாளவே முடியவில்லை… அதற்காக அவனை வெறுக்கவும் தெரியவில்லை சக்திக்கு. என்ன செய்வது தன்னை எப்படி நிலைப்படுத்துவது என தெரியாமல்தானே இந்த பயணம்… அதுவும் தொடங்கியது.
அன்று போல் இன்று அவன் நீக்கமற நிறைந்து இல்லை… வானத்தில் சாம்பல் நிற மேகமாக… அங்காங்கே இருந்தான் அவளுள்.
ஆனால், இந்த தனிமையான பயணத்தில் எப்போதும்.. தோழிகள்.. ரெகார்ட்ஸ்… படிப்பு… ஐஸ் கிரீம்… ஊர் சுற்றுதல்.. என எண்ணி செல்பவளுக்கு… இன்று புதிதாய், அவன் மட்டுமே நிறைந்து இருந்தான்… தவிர்க்க… நினைத்தாலும் முடியவில்லை.. மேலும், இது இயல்புதானே.. களங்கமில்லா கன்னியின் மனதில்… வீட்டில் இருப்பவர்கள்.. இது உன் கணவன் என ஒரு உறவை விதைக்கையில்.. அது வளரத்தானே செய்யும்.. எனவே வளர்ந்தான் போல அவளுள்.
“தனி உலகினில் உனக்கென நானும்…
ஒரு உறவென எனக்கென நீயும்…
அழகாய் பூத்திடும் என் வானமாய்..
நீயே தெரிந்தாயே…
உன் விழி இனி எனதென கொண்டேன்..
என் உயிர் இனி நீயென கொண்டேன்…
நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே…..” என காரில் பாடல் கதறிக் கொண்டிருந்தது.
இருந்தும்… அறிவின் சொல்லை கேட்டு… ஒதுங்கிக் கொண்டாள்… ஒருவன் தன்னை புறக்கணிக்கும் போது, சென்று சென்று பேச பிடிக்கவில்லை சக்திக்கு. நடப்பது நடக்கட்டும்… என எண்ணம் வந்தது எனவே அவனை தொந்திரவு செய்யாமல் இருந்து கொண்டாள்..
ஆனால், கல்லூரி சென்ற சக்திக்கு… அங்கிருந்த இளமை பட்டாளம் அவளை மொய்க்க தொடங்கியது.. ‘என்ன, என்ன… சொல்லு, சொல்லு…’ என கேட்க தொடங்க… ‘அப்படியே போகுது ப்பா… சொல்லிக்கிற மாதிரி ஸ்பெஷல் எதுவும் இல்லை..’ என சொல்லி சொல்லி சமாளித்தாள் சக்தி. கல்யாண கனவுகளுக்கும், கலாட்டாக்களுக்கும்… இளமையில் தனி இடமுண்டுதானே.
ஆனால் லிங்கா… எப்போதும் போல இருந்தான். அத்தோடு, தன் அறையில்… அந்த சுவற்றின் வெற்றிடம் ஏதோ நிம்மதியை தந்தது… அவனுக்கு.
தன் அறைக்கு வரும் போதெல்லாம்… சற்று ரிலாக்ஸ்சாக உணர தொடங்கினான். முன்பு அழுத்திய அவள்.. இன்று அழுத்தவில்லை… நகர்ந்திருந்தாள் போல… இல்லை, இவன்தான் அவளை சுமந்திருந்தான் இத்தனை நாள். இப்போதுதான் இறக்கி வைத்திருக்கிறான்.
ஆனால், அதை உணராமல்… இவன் வேலையை மனதில் இருத்திக் கொண்டான்.. ஏனோ சக்தியை மனதில் ஏற்ற இன்னும் மனம் வரவில்லை போல அவனுக்கு..
ஒருத்தி பின்னால்.. நாயாய், பேயாய் சுற்றி.. அவள் ஏமாற்றினால்.. இல்லை, நான் ஏமாந்தேன் ஏதோ ஒன்னு.. நடந்திடுச்சு, ‘விருப்பம்’ என்ற பெயரில். அது அத்தோடு முடியட்டும்.. விட்டுடு… லிங்கா. என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
அவ்வபோது காவ்யா ஏதாவது கேட்பாள் சக்தி பற்றி… இல்லை வீட்டில் யாரேனும் சொல்லுவர் அவளை பற்றி. அப்போதெல்லாம்.. சக்தியை நினைத்து சங்கடப்படுவான் லிங்கா.. ஆனால், தன்னுடைய கருத்தில் உறுதியாய் இருந்தான்… ‘திரும்பவும்.. ஒருத்தியை மனதில் ஏற்ற கூடாது நான்.. திருமணம் என நடந்தால்… தன்போல் வாழ்க்கை செல்ல போகிறது. இதில் காதல்.. நேசம்.. என ஏதோ பெயரை வைத்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள கூடாது.. எல்லோரும் வாழறாங்கள்ள… என்ன இப்போ… சரியாகிடும்..’ என தனக்கு தானே முடிவெடுத்துக் கொண்டான்.. அதை செயல்படுத்த தடையும் இல்லையே… அவனுக்கு. எனவே சக்தியை பற்றிய செய்திகளை.. கேட்டுக் கொண்டான்.. பதில் சொல்லவில்லை அவ்வளவுதான்.
ஆனால், அதற்காக.. அவளிடமிருந்து வரும் உதவியை.. அதான் பெண் வீட்டாரிடமிருந்து வரும் உதவியை மறுக்கவில்லை அவன்.
லிங்கா, இப்போது தயக்கமே இல்லாமல் தன் மாமானாரிடம் பேசவும் பண பரிவர்த்தனை செய்யவும் பழகியிருந்தான். அவரும்.. எள் எனும் முன் எண்ணையாய் நின்றார்.
காலையில் ஜாகிங்கில் பார்ப்பவன்.. பின் போனிலும் தாமுவை பற்றிக் கொள்வான். சக்தியை மட்டும் தனக்குள் அனுமதிக்க மாட்டானாம். எல்லாமே அவனுக்கு சாதகமாக நடக்கிறதா… நடத்திக் கொள்கிறானா… புரியவில்லை.
[the_ad id=”6605″]
@#$@#$@#$@#$@#$@#$@#$@#$
லிங்காவின் திருமணத்தில் இளா லதா தம்பதிதான் பிஸி… எல்லாம் அவர்கள் பொறுப்பானது. தாமு எல்லாவற்றுக்கும் இளாவைதான் அழைத்து பேசினார்.
கோவிலில் திருமணம்.. பெரிதாக ரிசப்ஷன் என முடிவு செய்யப்பட்டது. எனவே எல்லாவற்றிற்கும் இளா லதாதான் முன் நின்றனர்.
நாட்கள் வேகமாகத்தான் சென்றது.. எங்கும் தங்கு தடையில்லை.. பத்திரிகை வைக்க… தொடங்கினர்.
காமாட்சி துணிமணி எடுக்க, சரஸ்வதியை அழைத்து பேசினார்.. “அண்ணி, எப்படி இருக்கீங்க… எங்க வீட்டு பொண்ணு எப்படி இருக்கா… நாளை மறுநாள் நாள் நல்லா இருக்கு அண்ணி… முகூர்த்த புடவை எடுத்திடலாம்… நீங்க என்ன சொல்றீங்க… ” என பொறுப்பாக நாள் சொன்னார் லிங்காவின் அம்மா.
சரஸ்வதியும் “எல்லோரும் நல்லா இருக்கோம் அண்ணி, எங்க… சக்திக்குத்தான், அவ காலேஜ்லிருந்து வர சொல்லிட்டாங்க… ஊட்டி போயிட்டா அண்ணி.
எல்லாம் நம்மை பார்த்து எடுக்க சொல்லிட்டா… நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி செய்துக்கலாம் அண்ணி” என்றார்.
ஆகவே எல்லாம் பெரியவர்கள் பொறுப்பானது. எனவே இது போன்று எந்த நிகழ்வுக்கும் லிங்காவும் சக்தியும் வரவே இல்லை, சந்திக்கவேயில்லை. இது பெரியவர்களுக்கு கண்ணில் படவில்லை.. நாட்கள் குறைவு என்பதால், ஆற அமர எல்லோரும் கலந்து பேசி.. வேலைகள் செய்ய நேரமில்லையே… அவரவருக்கு அவரவர் வேலை சரியாக இருந்தது. எனவே இந்த ஒட்டா தன்மை விலகலானது.. சக்திக்கு லிங்கா என்பவன் வீம்பு பிடித்தவன்.. திமிர் பிடித்தவன் என்பதாக மனதில் பட தொடங்கியது.
காமாட்சி தம்பதி புடைவ, நகை வாங்க.. தாலி செய்ய கொடுக்க.. குலதெய்வ கோவில் செல்ல… முக்கிய அழைப்பு விடுக்க.. என செல்ல. இளா லதா தம்பதி பத்திரிகை அழைப்பு, கோவில் வேலைகள், பந்தல், வரவு செலவு என அதில் பிஸியாக… காவ்யாதான் பிள்ளைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்.
லிங்கா என்பவன் அந்த மில்லை விட்டு நகரவில்லை.. இரவு எப்போது வருகிறான்.. காலையில் எப்போது செல்கிறான் தெரியாது யாருக்கும்.. சில நேரங்களில் அங்கேயே தங்கிக் கொள்ளவும் பழகியிருந்தான் லிங்கா. ஆயிற்று.. அந்த ஆர்டர் ரீவொர்க் முடியும் தருவாயில் உள்ளது. தூத்துக்குடி செல்கிறது. எனவே அவன் வேலை அவனுக்கு இருக்க, எல்லோரும் கிட்ட தட்ட பறந்தனர்.
இந்த எந்த பரபரப்பும் இல்லாமல்.. தன் உலகில் ஒரு ஜென் நிலையில் சக்தி… பெண்ணின் கல்யாண கனவுகள் எல்லாவற்றையும் வெளியே வராமல் ஒழித்து வைக்கவே அவள் தனக்குள் போராடிக்கொண்டு… வெளியே ஒன்றுமே நடவாதது போல, நடமாடிக் கொண்டிருந்தாள்.
சரஸ்வதி தொட்டதற்கெல்லாம் போன் செய்தார் “என்ன கலர் ரிசப்ஷன் புடவை எடுக்க… காண்ராஸ்ட் கலர் ப்ளவுஸ்தான் இப்போ ஃபேஷனாம்.. மேக்அப்க்கு யார் கிட்ட சொல்ல… நகை… ஆண்டிக் வாங்கவா… ரிசப்ஷனுக்கு மெனு போட்டுக்கிட்டு இருக்கோம் டா… சாப்பாட்டில்… ரசகுல்லா ஸ்வீட் ஓகேவா… ‘ என எல்லாவற்றுக்கும் போன் செய்து அவளின் பொறுமையை சோதித்தார். ஆனாலும் அது ஒரு ஆறுதலை தந்தது சக்திக்கு. என் வீட்டில் என்னை கேட்கிறார்களே எனும் சந்தோஷம்தான் அது.
சக்திக்கு, தன் வீட்டை தவிர… உரிமையானவனிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லையே என.. மனம் அடித்துக் கொண்டது. நான் பாதிக்கவேயில்லையே அவனை என அமைதியாக அழ தொடங்கினாள் சக்தி. நான் அழைத்து பேச வேண்டும் என தோன்றவேயில்லை அவளுக்கு.. அதுவும் தன் வீட்டிலிருந்து போன் வரும் நேரங்களில்… ஒருமுறை அழைக்க மாட்டானா.. என எதிர்பார்க்க தொடங்கினாள்.
ஆனால், லிங்காவின் தெளிவு இவளுக்கு தெரியவில்லையே. எல்லாம் ஏமாற்றத்தில் தான் முடிந்தது சக்திக்கு. எனவே இந்த திருமணத்துடன் ஒன்ற முடியவில்லை அவளால். நாட்கள் சென்றது.
முகூர்த்த புடவை எடுத்த அன்று மாலை காவ்யா அழைத்தாள் சக்திக்கு.. “அண்ணி…” என குதுகலமாக பேசினாள்.. அது சக்தியையும் தொற்றிக் கொண்டது போல… “சொல்லுங்க அண்ணி” என்றாள் பொறுப்பாக.
காவ்யா “ஏன் அண்ணி.. எப்போதும் காவ்யாதானே வரும்” என்றாள்.
“ஆமாம், என்னை விட பெ……. ரியவங்க தானே நீங்க.. அதான், அத்தோட… அரவிந்த் அண்ணா.. என் காவ்யாவ மரியாதை இல்லாமா கூப்பிட கூடாதுன்னு, சொல்றத்துக்கு முன்னாடி.. நானே மாத்திக்கனுமில்ல….” என பெரிதாக விளக்கம் வேறு கொடுத்தாள் சக்தி.
காவ்யா “சரி.. இனி நீ சக்தி, நான் காவ்யா “ என்றாள் பேரம் பேசும் குரலில்.
“அது அப்படி… வரனும் வழிக்கு…” என்றாள் பெருமிதமாக.
காவ்யா “சரி… உங்க முகூர்த்த புடவை பார்க்கிறீங்களா” என்றாள்.
சக்திக்கு உற்சாகம் ஆனது “ஓ… இங்கதான் இருக்கா… நான் வீடியோ கால் வரவா” என சொல்லி அதில் அழைத்தாள்.
காவ்யா எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்திருந்தாள்.. சக்தி உடனே அழைத்தாள்… ஒவ்வொன்றாக காவ்யா, சொல்ல.. சொல்ல.. அந்த சின்ன, புது பெண்ணுக்கு… ஆசை வந்தது… எல்லாவற்றையும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
நடுவில் தீபக் வந்தான், அம்மு அங்கேயே விளையாடிய படியே.. இருந்தாள்… சக்திக்கு இன்றுதான் நிறைந்திருந்தது… அவளை தங்களுள் ஒருத்தியாக காவ்யா உணர செய்து கொண்டிருந்தாள்.. தன்னுடைய உறவால்… பேச்சால்.. சத்தமில்லாமல் சக்தியை தங்களுக்குள் இழுத்துக் கொண்டாள் காவ்யா.
[the_ad id=”6605″]
அப்போது காமாட்சி அழைத்தார் காவ்யாவை.. போனில் பிஸியாக இருந்ததால்.. போனுடன் அங்கே சென்றாள்.. அவள். தன் அன்னையிடம் போனை கொடுத்தாள்.. காமாட்சியும் பேசினார் “ஏன் ம்மா.. நீ வரல… நான் எடுத்தது பிடிச்சிதா…” என பொறுப்பாக மதித்து கேட்டார் சக்தியிடம். அது அந்த சின்ன பெண்ணுக்கு அத்தனை ஆனந்தத்தை தந்தது. எல்லாவற்றுக்கும் சிரித்த முகமாக பதில் சொன்னாள் சக்தி.. இப்போதுதான் காமாட்சிக்கு கொஞ்சம் நிம்மதி… ‘எப்போ வருவ… எத்தனை நாள் லீவ் என பொறுப்பாக கேட்டுக் கொண்டார்.. மாமியார்..’ இப்போதுதான் தனக்கு திருமணம் என்ற எண்ணமே உறுதியானது போல இருந்தது சக்தி.
எனவே அன்று இரவு கனவு கூட வந்தது அவளுக்கு.. எல்லோருக்கும் கணவன் வருவான் கனவில்.. இவளுக்கு மட்டும்.. நாத்தனார்.. மாமியார்… லதா அக்கா.. அவரின் குழந்தைகள்… என உறவுகளாக வந்தது கனவில்… ஹா.. ஹா… இது கல்யாண கனவு அல்ல போல… (வேறு என்ன யோசித்து சொல்லவும்…) ஆனால், நிம்மதியாக உறங்கினாள் சக்தி.
லிங்காவிடம் பொதுவாக கல்யாண நிகழ்வுகள் சொல்லப்படும்… காமாட்சி, பொறுப்பாக அவன் உண்ணும் போது.. என்ன நடக்கிறது என சொல்லிவிடுவார்..
இது ஒரு கலை… நீ பொறுப்பானவன்.. உனக்கு தெரியாமல் இங்கு ஏதும் நடக்கவில்லை என மகனிடம் சொல்லி சொல்லி அவனை பொறுப்பாக்கும் நிகழ்வு.. எல்லா அம்மாக்களும் இதில் தேர்ந்தவர்கள்… இங்கும் அப்படியே ‘இன்னிக்கு புடவை எடுத்தோம்…இன்னிக்கு குலதெய்வ கோவில் போனோம்.. என சரியா சொல்லிவிடுவார் அன்னை.
அவனும்… எல்லாவற்றையும் குறித்துக் கொள்வான் மனதில்… ஒரு கணக்கிடுதளுடன். நாட்கள் நெருங்கியது.. “போடா… ரிசப்ஷனுக்கு டிரெஸ் எடுடா” என எல்லோரும் பலமுறை, பல்வேறு விதமாக சொல்லி… கடிந்து.. என ஒரு வழியாக துணி எடுத்து வந்தான் லிங்கா.
நாளை மறுநாள் திருமணம்… என்ற நிலையில்.. ஆண்கள் மூவரும்… ஹாலில் அமர்ந்திருந்தனர்… இரவு உணவு முடித்து.
லிங்கா தன் தந்தையிடம் “என்ன ப்பா… அமௌண்ட் ஏதாவது தேவையா… எத்தனை பேர் கூப்பிடறோம்… எத்தனை பத்திரிகை…” என்றான் அவரை பேச வைக்கும் எண்ணத்துடன்.. அவரிடம், பேசியே… நாட்கள் ஆனது மகனுக்கு. எப்போது சக்தியை திருமணம் செய்கிறேன் என சொன்னானோ அதிலிருந்து அவர்.. அவனிடமிருந்து தள்ளியே நிற்கிறார்.. ஆனால், எல்லா நிகழ்வுகளில் வீட்டு தலைவனாக விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்.. ‘எனக்கு பிடிக்கவில்லை… உன் ஆசையை தடுக்கவில்லை..’ என எல்லா தந்தை போலவும் சேர்ந்தும் விலகியும் நிற்கிறார்.
மூர்த்தி… “எல்லாம் உன் அண்ணன் பார்க்கிறான் டா… அவன கேளு” என்றார். ஒரே வார்த்தையாக சொல்லி… எழுந்து சென்றார். சங்கடமாக தன் அண்ணனை பார்த்தான் லிங்கா. பேசாமல் அமர்ந்து கொண்டான். இளாக்கு என்னவோ போலானது. அவரின் ஒதுக்கம் ஏதோ மனதில் பாரமாக ஏறியது லிங்காக்கு.
லிங்கா இப்போது அலுவலகம் செல்ல ரெடியாக அமர்ந்திருந்தான். இன்று லோட் ஏற்றிக் கொண்டிருந்தனர்… எனவே அதைனை பார்க்க அலுவலகம் செல்கிறான் லிங்கா. அப்படியே கண் மூடி ஷோபாவில் சாய்ந்து கொண்டான்.
அதனை பார்த்த இளா, அவனுக்கு.. ஒய்வு தர எண்ணி… ”லிங்கா… கொஞ்சம் ரெஸ்ட் எடு… போய் தூங்கு…. கட்டிங் பன்னு முதலில்… வனவாசம் போன சாமியார் மாதிரி இருக்க…. நாளைக்கு ஒரு நாள்தான்… மறாவது நாள் உனக்கு கல்யாணம், நியாபகம் இருக்கா… போடா.. தூங்கு.. நான் போய்கிறேன் கம்பெனிக்கு, பாரு முகமே இறுகி போச்சு… ரெஸ்ட் எடு…” என சொல்லி சமாதானப்படுத்தி… அவனை வீட்டிலிருக்க சொல்ல…
லிங்கா “என்ன நாளான்னிக்கு கல்யாணமா… இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு சொன்னீங்க..” என்றான் சத்தமான குரலில்.
இளா அடங்கிய கோவத்துடன் அவனை பார்த்தான்… “என்ன டா, எங்களை பார்த்தா எப்படி தெரியுது…” என அதட்டலாக கேட்க…
கொஞ்சம் பொறுப்பாக தன் அண்ணனை பார்த்தான் லிங்கா.. “இல்ல நாளைக்கு லோட்.. அனுப்பிட்டா, நான் ப்ரீ இளா… ப்ளீஸ்… இளா… நாளைக்கு நான் புல் ரெஸ்ட்…” என்றான் கட்டுப்பாடும் குரலில்.
இளா ‘எப்படி இவனுக்கு புரியவைப்பது’ என தன் தலையை கோதிக் கொண்டான் ‘நானும் இப்படிதான் டா… நீயாவது எல்லோரையும் புரிஞ்சிக்கோ என சொல்ல தோன்றியது… ஆனால், இது அண்ணன் தம்பி பேச கூடிய விஷயமா எனவும் தோன்றியது.. எனவே “அந்த பொண்ணுக்கு போன் பண்றீயா… எப்போ காலேஜிலிருந்து வருதாம்” என்றான் ஆராயும் பார்வை பார்த்து.
லிங்கா ஈயம் பூசியும் பூசாத பதிலாக… “இல்ல ரெண்டு நாளா பண்ணல… அவளும் ஏதோ… டெஸ்ட் அது இதுன்னு பிஸி… நா.. எனக்கும் டைம் இல்ல.. இனி தான் பேசணும்” என்றான்… கம்மிய குரலில்…
இளாக்கு இந்த பதில் நிம்மதியை தந்தது… ‘நம்மை போல் இல்லை இவன்’ என்ற நம்பிக்கையை தந்தது… எனவே “ம்… நாளைக்கு காலையில் எத்தனை மணிக்கு வண்டி கிளம்புது… எத்தனை வண்டி…” என ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தான் அண்ணன்,
லிங்கா “இப்போ லோட் ஏற்றிக் கொண்டு இருக்காங்க… பார்த்தாதான் தெரியும்” என்றான் லிங்கா.
இளா “நீ ரெஸ்ட் எடு டா… நான் போறேன்…” என்க…
“இல்ல, அம்மு அழுதுட்டே இருக்கா போல, நீ பாரு… அண்ணியால சமாளிக்க முடியலை போல.. நீ போ… நான் பார்த்துக்கிறேன்” என்றான். இந்த பதிலில் தன் தம்பி தந்தையாக தெரிந்தான்.. இளாக்கு. எங்கும் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த நானும் இவனும் ஒன்றல்ல… இவன் வேறு.. என கண்ணில் மதிப்புடன் தன் தம்பியை பார்த்தான் இளா..
சத்தமில்லாமல் போக… லிங்கா என்னவென பார்க்க… இளா… ஏதோ பாவமாக தன்னை பார்ப்பது தெரிந்தது.. லிங்கா அதட்டலாக.. “என்ன அங்க அம்மு அழறா சொல்றேன்… நீங்க இங்க நிக்கிற போ… அவளை பாரு” என்றான் த்வனி மாறாமல். லிங்காக்கு எல்லோரும் முக்கியம்… அது அம்முவானாலும் சரி, தன் அன்னையானாலும் சரி என தனது ஒவ்வொரு செயலிலும் நிருபித்துக் கொண்டிருந்தான்… இளா ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றான்.
லிங்காக்கு தன் தந்தையின் ஒதுக்கமே தெரிய… மற்ற எல்லாம் பின்னுக்கு போனது… மெல்ல தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு.. வண்டி எடுத்துக் கிளம்பினான் குடோனுக்கு.
அங்கு இவன் பார்க்க வேண்டியது என எதுவும் இல்லை.. அவர்கள் ஏற்றுவதை, இவன் மேல் பார்வை பார்த்தாள் சரி.. அத்தோடு.. கூட இருந்தால் போதும்… அதற்குதான் வநதிருந்தான். செந்திலை வரசொல்லவில்லை, நானே பார்த்திர்க்கிறேன் என்றுவிட்டான்.. எனவே அரைமணி நேரம் நின்றான் அங்கேயே.
[the_ad id=”6605″]
பின், தனக்கென இருந்த அறையில் சென்று அமர்ந்து கொண்டான். மனமெல்லாம் நிம்மதியில்லாமல் இருந்தது… தன் தந்தையின் ஒதுக்கத்தில். என்ன செய்வது என புரியவில்லை… ‘ஏதோ, அவர் தன்னிடம் இருந்து விலகுகிறார் என தோன்றியது…’ கண்களை இறுக மூடிக் கொண்டான்.. அதில் முதல் முறை.. சக்தி.. தெரிந்தாள்.. தன்னை ‘வேண்டாமென சொல்லி.. அம்முவுடன் போட்டோ எடுத்துக் கொண்ட சக்திதான் தெரிந்தாள்..’ பட்டென விழித்தான்.
சம்மந்தேமேயில்லாமல்… ஏன் சக்தி… என தோன்றியது.. இவர் என் தந்தை… என் செயல் பிடிக்கவில்லை ஒதுங்குகிறார். ஆனால் அவள்… ஏன், எனக்கு போனே செய்யலையே… வாக்கிங் போறப்ப அவ வரதில்லையே… ஏன்… ஒதுங்கிட்டாளோ… என்னாச்சு…. இவளுக்கும் என்னை பிடிக்கலையோ… ’ என முதல் முறை அவளின் சிந்தனை வந்தது.. அவனுக்கு.
கைகள் போனை எடுத்துக் கொண்டது… அவளின் என்னை தேட… கிடைக்கவில்லை.. அதன் பிறகுதான் நினைவு வந்தது.. அவளுக்கு நான் இதுவரை.. போனே செய்தது இல்லை… என.
அவசர அவசரமாக மெசன்ஜரில் அவளின் எண் தேடி எடுத்தான். மனது மாறுவதற்குள் அவளை தன் கைபேசியில் சேமித்துக் கொண்டான்.. உடனே வாட்ஸ்அப்பில்… “ஹாய்…” என டைப் செய்தான்.
அவளும் ஆன்லைன்னில் தான் இருந்தாள்.. அப்படிதான் காட்டியது.. அவள் பார்த்ததற்கான அறிகுறி வந்தது… ஆனால், இவனுக்கான பதில் வரவில்லை.
தவறவிடுவது எளிதுதான்… தெரிந்தே விட்டான்….
கவனியாமல் இருந்தால்.. தவறிவிடும். ஆனால், அதை நேர் செய்வது என்பது.. எப்படி… என இப்போதுதானே கற்கிறான். அதான், இளா தவறவிட்ட தொழிலை நேர் செய்ய… இவன் இவ்வளவு… இல்லை, தன்னையே அடமானம் வைத்தது தெரியாமல்… உணராமல்.. மீண்டும் தவற விட்டிருக்கிறான்.. முதலமது.. பொருள், பெயர்… அது இன்று இல்லை நாளை வந்து விடும்.. ஆனால், இவன் விட்டது… உயிரும் உணர்வுமான தனககானவளை… ப்ரியமானவளை.
“கீச்ச் கீச்ச் என்றது,,,
கிட்ட வா என்றது…
பேச்சு ஏதுமின்றி…
பிரியமா என்றது…”