குருக்களும் “வாங்கோ..” என சொல்லி அழைத்து சென்றார்.
அப்போதுதான் திறந்த கோவில் என்பதால்.. சிம்பிளான அலங்காரத்தில் இருந்தார் விநாயகர். தீபாராதனை செய்து… வீபூதி பிரசாதம் தந்து அனுப்பினார்.
வெளியே வந்த இளாக்கு நினைவு நன்றாகவே வர.. போனையும் எடுத்து வரவில்லை என புரிந்தது. எனவே, ரோட்டிற்கு வந்தான்.. சென்று கொண்டிருந்த ஆட்டோவை பிடித்து, வீடு வந்தான்.
உள்ளே வந்தான்.. முகம் அப்போதும் தெளியவில்லை.. சத்தியமூர்த்தி அப்போதுதான் பேரனை அழைத்து வந்திருந்தார்.. மகனும் ஹாலில் அமர்ந்திருந்தான்.. காவ்யாவையும் சாதனாவையும் தவிர மற்ற எல்லோரும் இருந்தனர்.
யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை இளாவால்.. குனிந்த படியே சென்றான்.. ஏதோ தோன்ற “லதா.. ஆபீஸ்ல GMக்கு போன் செய்து.. நான் வீட்டுக்கு வந்திட்டேன்னு சொல்லிடு.. எ.. எனக்கு தலைய வலிக்குது… நா… தூங்கறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே..” என படி ஏறியபடியே சொன்னான்.
யாருக்கும் ஏதும் பெரிதாக தெரியவில்லை.. எல்லோரும் தீபக்கிடம் முழ்கி இருந்ததால்.. இளாவை கவனிக்கவில்லை..
GM, சுற்றி விட்டார் அந்த ஏரியாவில் எங்கும் காணவில்லை.. மனமெல்லாம் பதை பதைத்துக் கொண்டிருக்க.. அவ்வபோது லிங்கா வேறு, தன் வேலையை செய்ய.. ஆட்டம் கண்டார் உள்ளுக்குள்.. ‘திடமான மனிதன் இளங்கோ.. சிறுபிள்ளை போல் ஏ… ஏதும்… ஆகாது..’ என மந்திரமாக சொல்லிக் கொண்டார் தனக்குள் GM.
[the_ad id=”6605″]
சத்தியமூர்த்தி, அழைத்தார் செந்தில்நாதனை… மீண்டும் பயமே.. ஆனாலும் திடமான குரலில் எடுத்து “ஹலோ” என்றார்.
மூர்த்தி “இளா, இங்க வந்திட்டான் செந்தில்.. உங்க கிட்ட சொல்ல சொன்னான்..” என்றார்.
வாய்விட்டே சொன்னார் செந்தில் “சந்தோசம் சார்… சந்தோஷம்” என்றார்.
“ஹா.ஹா… ஹா….” என சிரித்த படியே… “என்ன செந்தில் என்ன ஆச்சு… ஏதாவது பிசினஸ் மீட்டா.. இவன் நேரே இங்கே வந்திட்டான்.. உன் கிட்ட கூட சொல்லாமல்…” என்றார்.
அய்யோ.. இந்த ஆபிஸ் வேலை செய்பவர்கள்.. அந்த முதலாளி, விட்டுடுடன் தொடர்பில் இருப்பவர்கள் நிலை எப்போதும்.. கொஞ்சம் கஷ்ட்டமானது. அங்கு நடப்பது.. வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா, தெரியாதா… என வேலை செய்பவர்களுக்கு தெரியாது.
சொன்னாலும் பிரச்சனை.. சொல்லாவிட்டால்.. ஏதாவது பிரச்சனை, வரும் போது.. ‘நான் அன்றே கேட்டேன் நீ சொல்லலை’ என வேலை செய்பவர்கள் மீது முதலாளி வீட்டார் பழி போட கூடும். எனவே சொன்னா மாதிரியும் இருக்கணும்.. சொல்லாத மாதிரியும் இருக்கணும்.. எப்போதும் எதிலும்.
இன்று அப்படி சிக்கிக் கொண்டார் செந்தில்நாதன் “அது ஒன்னுமில்லைங்க.. கொஞ்சம் டென்ஷன், அதான் அப்படியே கிளம்பிட்டார்… நானும் அங்கதானே வரேன்.. அவரோட போன் எங்கிட்ட இருக்கு.. தோ வரேன்.. சர்” என சொல்லி வைத்து விட்டார் செந்தில்.
போன உயிர் திரும்ப வருதுன்னு சொல்லுங்கல்ல… அப்படி உணர்ந்தார் செந்தில். தானும் இளா வீட்டுக்கு சென்றார்.. போனை கொடுத்தார்.. “நான் சாரை.. பார்க்கணும்..கேட்டு சொல்லுங்க “ என்றார்.
மேலே சென்றாள் லலிதா..
ஏதோ யோசனையுடன் அந்த ஈஸி சேரில்.. பால்கனியில் அமர்ந்திருந்தான் கணவன். வந்தது வந்தபடி அமர்ந்திருந்தான்.. சாய்ந்து கூட அமரவில்லை. ஏதோ ஒரு மாதிரி டிஸ்டர்ப் நிலையில் இருந்தான்.. பார்த்த மனைவிக்கு.. என்னவோ போல் இருக்க “ஏங்க… செந்தில் சார், உங்களை பார்க்க வந்திருக்கார்” என்றாள்.
உடனே பரபரப்பானான். இளா “எங்க..” என கேட்ட படி கீழே இறங்கினான்.
ஹாலில் செந்தில் அமர்ந்திருப்பதை பார்த்தார் “ம்.. “ என்றான் கீழே ஹாலுக்கு வந்து அவ்வளவுதான்.
செந்தில் “போன்” என சொல்லி போனை எடுத்து தர… வாங்கிக் கொண்டான். .”வேறு” என்றான்.
சத்தியமூர்த்தி அங்கு இருப்பதை பார்த்து.. செந்திலுக்கும் புரிய “நான் கிளம்பறேன் சார்…” என்றார்.
பின்னாடியே வந்தான் இளா, ஹால் தாண்டியதும், செந்தில் “சர், தைரியமா இருங்க.. od எடுத்து.. முதல்ல போனஸ் போட்டிடலாம்.. அப்புறம் தீபாவளி கழிச்சி.. சம்பளம் போட்டுக்கலாம்.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்றார்.
இளா “ம்.. ஆனா, அங்க நிக்கிற சரக்குக்கு என்ன பதில் சொல்லுவீங்க செந்தில்.. எப்படி செந்தில்.. இப்படி இருக்காங்க மனுஷங்க.. அப்படி ஐந்துக்கும், பத்துக்குமா நான் கணக்கு பார்ப்பேன்… ச்சே… நிட்டிங்கிலிருந்து.. ட்ரான்ஸ்போர்ட் வரை.. தீபாவளிக்குள்ள செட்டில் பண்ணனும்… என்ன பண்ணறது… “ என நெற்றியை தட்டிய படியே கேள்வியாக செந்திலை பார்த்தான் இளா.
செந்திலுக்கும், இந்த இளா புதிதாக தெரிந்தான்.. சட்டென துவலமாட்டான்.. ரிஸ்க் எடுப்பவன்… கொஞ்சம் தில்லான ஆளுதான் என செந்தில் நினைத்திருக்க.. அவரே இப்படி கேட்கவும் என்ன சொல்ல முடியும் என பார்த்தார்..
செந்தில் “சமாளிக்கலாம் சர்.. முதலில் இந்த கணக்கை முடிப்போம்.. அதுக்குள்ள.. ரெண்டு நாள் ஆகிடும்.. தீபாவளில எல்லோரும் பரபரப்பாகிடுவாங்க.. நாம.. அடுத்த வாரம் வரை.. தள்ளி போட்டுக்கலாம் சர்…” என்றார்.
நெற்றி தட்டிய கைகள் இறங்கவே இல்லை… இளாக்கு “ம்..” என்றான்.
இளா “சரி, கிளம்புங்க… பார்த்துக்கலாம்.. என்னாச்சு, அந்த மினிஸ்டர்..” என்றான்.
உதடு பிதுக்கினார் செந்தில்..
[the_ad id=”6605″]
ஆத்திரமாக.. ரௌத்திரமாக நின்றான் இளா. அங்கு அழகுக்காக வைத்திருந்த பூ தொட்டியை தன் முழங்கை கொண்டு இடித்தான், ஒரே இடியில்.. இரண்டாய் பிளந்தது.. செந்தில் சற்று தள்ளி நின்றார்.
“இன்றோடு.. முடியாது செந்தில்.. திரும்பவும், தொகுதி, எலெக்ஷன் என வராமலா போவான்…” என்றான் பல்லை கடித்த படியே.
சத்தியமூர்த்தி, சத்தம் கேட்டு வெளியே வந்தார்.. செந்தில் “ஒண்ணுமில்ல சார்.. நான் கிளம்பறேன்” என சொல்லி கிளம்பினார்.
சத்தியமூர்த்தி, தன் மகனையே பார்த்தார்.. இளா நிற்காமல் உள்ளே சென்றுவிட்டான்.
தன் அண்ணன் போனை எடுக்காததால்.. செந்திலுக்கு போன் செய்தான் லிங்கம்.. செந்தில் எல்லாம் சொல்லி.. “அப்புறம் பார்த்துக்கலாம் தம்பி.. இனி பொறுமையா கூட வாங்கிக்கலாம் நீங்க வாங்க” என்றார்.
லிங்கமும், கோவம் பாதி.. சங்கடம் மீதியாக.. ஹோட்டல் வந்து, செக் அவுட் செய்து.. அப்போதே தனது காரெடுத்து கிளம்பினான்.
அண்ணனிடம் பேச வேண்டும் என தோன்றிற்று.. ஆனால், என்ன கேட்பது.. என்ன சொல்லுவது என தெரியவில்லை.. அமைதியாக காரில் வந்தான்.
இந்த சென்னை பயணம் அவனுள் பல அழுத்தத்தை மட்டும் விதைத்திருந்தது..
இங்கே,
வீடு எப்போதும் போல் கலகலப்பாக இருந்தது.. மேலே சென்ற இளா கீழே வரவேயில்லை. போனை ஆப் செய்து வைத்திருந்தான். நடையாக நடந்தான்.. எப்படி சமாளிப்பது என ஒரு சின்ன இனுக்கு கூட வழி கிடைக்கவில்லை.. அவனுக்கு.
தன் பெண்டாட்டி வீட்டில் கேட்கலாமா.. அவர்களுக்கு.. சொத்து என்பதே.. ஏதோ ஒரு வீடு காரு என சின்ன அளவுதான்.. அதிலும் இரண்டு பெண்கள்.
அம்மாவிடம் இருக்கும் நகை.. லதா நகை எல்லாம் சேர்த்தால்.. ஒன்றிரண்டு கோடியை தொடும் அவ்வளவுதான். fd, ஷேர்.. எல்லாம் காணவே காணாது.. ‘ என எங்கு சென்றாலும் விழி பிதுங்கியது அவனுக்கு. ஏதோ நடந்தால் விடை கிடைக்குமென நடந்தான்.
சத்தியமூர்த்தி, மேலே வந்தார்.. இரவு எட்டு மணிக்கு.. இளாவின் நடவடிக்கை பார்த்து சற்று சுதாரித்து வந்தார். இளா இன்னமும், அதே உடையிலேயே இருந்தான். அதுவும் மொட்ட மாடியில்.. ஏதும் மாற்றமில்லாமல் சிந்தனையிலேயே இருந்தான்.
சத்தியமூர்த்தி மெல்ல மேலேறி வந்தவர், சற்று நேரம் நின்றார் மூச்சு வாங்க.. அது கூட மகன் கண்ணில் படவில்லை.. ஒரே நடை… பொறுமையாக கேட்டார்.. “என்ன டா.. ஏதாவது பிரச்சனையா.. போன் ஸ்விட்ச் ஆப் ன்னு வருது… கீழையும் வரல.. செந்திலும் படபடப்பா இருக்கார்.. என்னடா.. என்ன.. சொல்லு டா..” என்றார்.
அப்போது சொல்லி இருந்தால் கூட தீர்ந்திருக்குமோ என்னமோ… இளங்கோ, வாயே திறக்கவில்லை “ஒண்ணுமில்ல ப்பா… நீங்க ஏன் வொர்ரி பண்ணிக்கிறீங்க… ஒண்ணுமில்ல ப்பா” என்றான் அமைதியாக.
இன்னும் எப்படி எப்படியோ மகனிடம் கிரஸ் கேள்வி கேட்க.. விடை என்னோமோ பூஜியம்தான். ‘போடா’ என தோன்றியது சத்தியமூர்த்திக்கு.
கீழே இறங்கி வந்தார்.. மனது கேட்கவில்லை அந்த மனிதற்குக்கு.. ஏதோ மகன் சங்கடத்தில் இருக்கிறான் என தெரிந்தது.. ‘ஒருவேளை, அந்த அமைச்சர்..’ என தோன்ற.. தன் இளைய மகனுக்கு போனில் அழைத்தார்.
லிங்கா “ஹலோ..” என்றான்
”என்ன ப்பா… என்னா ஆச்சு, வேலை முடிந்ததா..” என்றார்.
லிங்காவிற்கு, இப்போதுதானே சற்று புரிய தொடங்கும் நேரம் தந்தை கேட்கவும் மறைக்க தெரியவில்லை.. ஆனாலும், தன் அண்ணன் சொல்லியிருக்க மாட்டான் என தோன்றியது. தொழிலில் அவர்களின் நேர் எதிர்த்தான் தெரியுமே.. எனவே “ஒண்ணுமில்ல ப்பா… அமைச்சர் இன்னும் டெல்லிலேர்ந்து வரல…” என்றான்.
ப்பா… ரெண்டும்.. ரெண்டும் நாலு என கண்டு கொள்ள மனிதர்க்கு அனுபவ அறிவு போதுமே.. எனவே பொறுமையாக “என்ன டா..” என்றார்.
இந்த நான்கு நாட்கள் நடந்ததை எல்லாம் சொன்னான் லிங்கா. எல்லாம் கேட்டு “நீ எப்போ வருவ” என்றார்..
“ஆன் தெ வே ப்பா” என்றான்.
“சரி…” என சொல்லி போனை வைத்தார். ஆனால், பெரிதாக அலட்டவில்லை.. சொத்து இருக்கு.. எங்காவது வைத்து புரட்டிக் கொள்வான் மகன் என தைரியம்.. அமைதியாகிவிட்டார்.
மணி இரவு எட்டரை… எப்போதும் போல லலிதா மேலே சென்றுவிட்டாள். நாள் முழுதும் சுற்றுவாள்.. மணி இரவு எட்டானால்.. மேல்தான் ஜாகை அவளுக்கு.. இரண்டு குழந்தைகளையும், கவனித்து, கதை பேசி, தூங்க வைத்து என லலிதாவின் நேரம்.. அப்போது குழைந்தகளுக்கானது
உண்ண வரவில்லை இளா. இது தெரியவில்லை அவளுக்கு.. ஏதோ பிசினஸ் டென்ஷன் என தெரிந்து அமைதியாக தன் வேலையை பார்த்தாள்.
காமாட்சி, அழைத்து பார்த்து வரவில்லை எனவும்.. தன் கணவரிடம் புலம்ப தொடங்கினார். மூர்த்தியும், டென்ஷனில் இருப்பதால் “என்ன இப்போ ஒருநாள்.. சாப்பிடலேனா என்ன ஆக போகுது விடு” என சொல்லி படுத்துக் கொண்டார்.
சத்தியமூர்த்தி, சத்தம் போடவும்.. காவ்யா கூட ஏதும் சொல்லாமல், தன் அன்னைக்கு உதவி செய்து.. அவரையும் சாப்பிட வைத்து… துடைத்து.. உள்ளே சென்றாள். வீடே அன்று அமைதியாக இருந்தது.
இரவு மணி ஒன்றிருக்கும்.. இளா இறங்கி வந்தான் மொட்டை மாடியிலிருந்து. நடந்து ஓய்ந்தானோ.. சிந்தித்து ஓய்ந்தானோ… கீழே தங்களறைக்கு வந்தான்.
மனைவி, நிம்மதியாக இன்று தூங்கிவிட்டாள். எப்போதும் போல நடுவில் படுத்துக் கொண்டிருந்தாள். பார்த்தவனுக்கு.. ‘அவள் பார்த்துக்குவா’ என தோன்றியது.
[the_ad id=”6605″]
உடை மாற்ற கூட தோன்றவில்லை.. குழந்தைகள்.. லலிதா படுத்திருந்த கட்டிலில், கால்மாட்டில் அமர்ந்தான்.
ஏனோ.. துவன்றிருந்த மனம்.. அவர்களை பார்த்தவுடன் கேவ தொடங்கியது ‘என்ன வைத்திருக்கிறேன் என் பிள்ளைகளுக்கு.. செந்தில் சொல்லுவது போல.. எல்லாவற்றையும் தேற்றினாலும்… அந்த திருப்பி அனுப்பிய சரக்குக்கு எப்படி நேர் செய்வேன்.. காலம் முழுவதும் வட்டி மட்டுமே கட்ட முடியும்.. என்னோடு சேர்த்து என் தம்பியின் சொத்தையும் வைத்துவிட்டேன்..’ என அது வரைதான் நினைவு வந்தது… இளாக்கு.
அதன்பிறகு… இளா எழுந்து… அங்கிருந்து இரண்டாவது அறை… இருக்கும், அவர்கள் எப்போதாவது உபயோக படுத்தும் அறை… விருந்தினர் அறை… அங்கு சென்றான்.
எதையோ எடுத்து போட்டு, எதற்கோ ஆயுத்தமானான்.. பரபரப்பாக நடந்தான்… யாரோ அந்த இரவில்.. பெல் அடிக்கும் ஓசை கேட்டது இளாக்கு.. இன்னும் பரபரப்பானான்.
அவன் தேடியது கிடைக்கவில்லை போல.. மீண்டும் எதையோ நகர்த்தினான்.. சத்தம் வருகிறது என தூக்கி போட்டான்.. பதட்டமல்லவா.. ‘தட்’டென சத்தம் கேட்டது…
கீழே.. மணி அடித்தவுடன் சத்தியமூர்த்தி, வந்து கதவை திறந்தார். லிங்கம் நின்றிருந்தான். ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றார்..
லிங்கம் “அம்மாவ, எழுப்புங்க ப்பா… சாப்பிடனும்” என்றான்.
சத்தியமூர்த்திக்கு கோவமே ‘அவளே இப்போதான் படித்திருக்கா’ என தோன்ற “ஏண்டா.. சாப்பிட்டு வரமாட்டியா… இரு, காவ்யாவ எழுப்பறேன்.. அம்மா இப்போதான்.. புலம்பி முடித்து படுத்தா..” என சொன்னார்.
“ம்.. நான் குளிச்சிட்டு வரேன்” என சொல்லி மேலே சென்றான்.
குளித்து வந்தான் பத்து நிமிடத்தில். சத்தியமூர்த்தி.. தன் மகளுக்கு உதவிக் கொண்டிருந்தார்… வந்து அமர்ந்தான் லிங்கா, உண்ண தொடங்க, தந்தை பேச்சை தொடங்கினார்.. “என்ன டா.. ஆச்சு… “ என்றார்.
அப்போதுதான் லிங்கா “அண்ணன் எங்க.. எப்போ வந்தான்.. தூங்கிட்டானா, அவன்தான் வந்து கதவை திறப்பான்னு, பார்த்தேன்… நீங்க வரீங்க…” என்றான்.
தந்தை “அவன் முகமே சரியில்ல.. சாப்பிட கூட வரல..” என்றார் எதோவான குரலில்.
யாருக்கும் அப்போதும் ஏதும் தெரியவில்லை.. உண்டு முடித்து மேலே வந்தான் லிங்கா.
இவன் அறைக்கு பக்கத்து அறைதான் அந்த விருந்தினர் அறை.. அந்த அறையில் விளக்கு எறிவது, சாற்றி இருந்த கதவின் கீழ்.. அந்த இருளில் தெரிந்தது.
எதேச்சையாக கதவை தட்டினான்.. திறக்கவில்லை. தானே திறக்க… தன் அண்ணன்.. செடி வெட்டும் பெரிய கத்திரி கோலால்… கையை அறுத்துக் கொண்டு.. கிடந்தான். மயங்கிய நிலையில்.. பார்த்த லிங்கா.. ரெண்டடி பின்னால் சென்றான்.. அனிச்சையான, அச்சத்தில்.
கதவை தாள் போட கூட இல்லை.. அப்படியே இருந்தது.. சேர் நடுவில் இருந்தது.. களைந்து இருந்தது… அந்த அறை. பார்த்த லிங்காவிற்கு, ஒன்றும் புரியவில்லை “டேய்… டேய்…” என்கிறான் அருகில் செல்ல பயம், நடுங்குகிறது கால்கள்.
“பப்பா… ப்பா…” என உள்ளிருந்து கத்த, காதில் விழவில்லை போல.. தன் அண்ணனில் அருகில் சென்று முயன்று அவனை தூக்கிக் கொண்டு..”அப்பா… அம்மா..” என அந்த வீடே கிடுகிடுக்க அலறினான் லிங்கா.
“பொருளுக்கு அலைந்திடும்…
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..
உன் அருள்றருள் அருள்.. என்று அலைகின்ற
மனமின்று பிதற்றுதே…
அருள் விழியால் நோக்குவாய்..
உன் மலர்பதத்தால் தாங்குவாய்…
உன் திருக்கரம் அரவனைத்தருள் தர…”