தன் தம்பி இப்படி கேட்டதே போதுமாக இருந்தது இளாக்கு.. “அப்புறம் என்ன டா நடக்குது “ என்றான்.
“ஒன்னும் ஆகல… இன்னிக்கு மட்டும்தானே நீ இல்லை… ‘என்ன’ ஆகிட போது.. கம்பெனிய, பேத்தா எடுத்தட போறோம்.. எல்லாம் அங்க அங்க நிக்குது.. அப்படியே. நீ இல்லாமல்..” என்றான்.. நீ முக்கியம் என்ற குரலில்.
இளாக்கு அவனின் பேச்சில், கண் கலங்கியது.. கூடவே லேசாக சிரிப்பு எட்டி பார்த்தது. சின்னதாக சிரித்தான்.. லிங்கா “சரி, இப்படியே படுத்து உடம்பை தேத்தாமா.. நாளைக்கு வந்து போனஸ் கொடு… என்னால முடியாது… பதினோரு மணிக்கு.. பாங்கிலிருந்து கேஷ் வருதாம்..” என்றான் விட்டேற்றியான குரல்தான், அது தனக்காக என அண்ணனுக்கு தெரிந்தது.
இளாக்கு நிம்மதியாக ஆனது.. அந்த வார்த்தையில், அந்த த்வனியில். தன்னை ஓரம் கட்டவில்லை என தோன்றியது. ஒரு பிடித்தம்.. ஒரு அனுசரணை.. உன் கூடவே இருப்பேன் என ஏதோ அறியாத மொழியில் தம்பி சொல்லுவது போல் உணர்ந்தான்.
லேசாக சிரித்த படியே “டேய்… நாளைக்கு என்ன கிழமை.. வியாழ கிழமையா… நல்ல நேரம் எப்போன்னு.. பாரு… யாராவது மாசமா இருக்கிறவங்கள கூப்பிட்டு.. முதல் போனஸ் கொடு. இல்லை, கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு முதல்ல கொடு… அப்பா அம்மாவ கூப்பிட்டுக்கோ…” என்றான் பொறுப்பாய்.
“டேய்… அதென்ன.. ப்ரெகனட்… லேடி… “ என்றான் கேள்வியாய்.
“அது வளர்ச்சியை காண்பிக்கும்ன்னு அப்பா சொல்லுவாரு.. எப்போதும் அப்படிதான் கொடுப்போம்… அம்மா வருவாங்க.. போனஸ் கொடுக்க.. அது ஒரு ஸ்பெஷல் டே நமக்கும்.. வொர்கர்ஸ்க்கும்…
நிறைய பேர்… ரொம்ப வருஷமா நம்ம கிட்ட வேலை பார்க்கிறவங்க… அதாவது நிறையப்பேர, தைப்பதற்கு.. மடிக்க.. ஐயன் செய்ய என இப்போ காண்ட்ராக்ட்டில் எடுத்திருக்கோம்…
ஆனா, நம்மகிட்ட இந்த கம்பெனி, ஒவ்வொரு படியா வளர்ந்த காலத்திலிருந்து கூடவே நிறைய பேர் இருப்பாங்க.. அவங்க கம்பெனி ஸ்டாப்…
[the_ad id=”6605″]
அம்மாவ கூட்டி போயேன், போனஸ் வாங்கும் சில பேரை அம்மா.. அவங்களோட, பேத்தி.. பேரன்.. வரைக்கும் விசாரிப்பாங்க… அம்மாவும், கதை கதையா சொல்லுவாங்க… இவங்க நான் கல்யாணம் செய்து வரும் போது வந்தாங்க… இவங்க… நீ, பிறந்த போது வந்து சேர்ந்தாங்க அப்படின்னு சொல்லுவாங்க..
இந்த கம்பெனி வெறும் வரவு செலவு பண்ற இடமில்ல டா… அதுதான் நம்ம அங்கீகாரம், உயிர், கௌரவம்… அங்கிருக்கிறவங்க எல்லாம் தான் சொந்தம்..
நம்ம தாத்தா.. சின்னதா… கொட்டகையில் ஆரம்பித்த மில்… அப்பா காலத்தில் கொஞ்சம் வளர்ந்து ஷீட்.. லைட்.. என வந்தோம். இப்போ.. நிறைய மிஷின்.. சிஸ்டம்… தனியா நமக்கான வண்டி, வாகனம்.. ஷிபிட் பேசிஸ்ல வொர்க்கர்ஸ்.. என இது எல்லாம் இருக்குன்னா… அதெல்லாம் அங்கிருந்து வந்தது தான். நீ ரெண்டுநாள் லேட்டா கூட கொடு பணத்தை… ஆனா, நம்மை ஏக்கமா பார்ப்பாங்களே தவிர.. கோவப்பட மாட்டாங்க… வொர்கர்ஸ். இன்னும் பழைய மனிதர்கள் நிறையப்பேர் இருக்காங்க.. அதனால பொறுமையா கொடு.. அவங்களை அடையாளம் தெரிஞ்சிக்கோ.. சரியா..” என்றான் இளா… ஏதேதோ கனவுகளுடன்.
லிங்கா “எப்படி டா.. இவ்ளோ டீப்பா யோசிக்கிற.. நீ, அதிலேயே மூழ்கிட்ட டா. ப்பா… நீயே வந்து நாளைக்கு கொடுத்திடு.. எனக்கு இவ்வளோ செண்டிமெண்ட் ஆகாதுடா ப்பா.. சாமி…” என்றான்.. கிண்டலாக.
ஒன்றும் சொல்லவில்லை இளா. இன்னமும் அதே நினைவில் இருந்தான். எனவே இதழ்கள் தன் தம்பியின் மொழிக்கு, மறுமொழியாக புன்னகையை சிந்தியது.
லலிதா ஒன்றும் சொல்லாமல் தன் கணவனையே பார்த்திருந்தாள்.. எங்களை விட பிசினஸ் இவ்வளோ பிடிக்குமா என அந்த பார்வை சொல்லியது. அதையே தான், லிங்காவும் உள்ளுக்குள் நினைத்தான்.
இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் வாயடித்தான் லிங்கா. நர்ஸ் வந்து தேவையான மாத்திரைகளை எடுத்து வைத்து.. செல்ல… டிபன் கொடுத்தாள் தன் கணவனுக்கு லதா.
உண்டு முடித்து.. மருந்தகளை உண்டு.. லதா உணவு உண்ணும் வரை.. ஏதோ பேசிய படியே அமர்ந்திருந்தான் லிங்கா. பின்தான் விடைபெற்று வீடு வந்தான்.
கணவன் மனைவி இருவரும் அந்த இரவில் அனாதையாகினர். முகம் பார்க்கும் கணவனை, திரும்பியும் பார்க்கவில்லை லலிதா. இரவு உறக்கமும் வரவில்லை.. இமைகொட்டாமல் பார்த்திருந்தாள்.. எதோ இவள் பார்க்கவில்லை என்றால் எமன் வந்து எடுத்து போய் விடுவானோ என எண்ணம் போல… அப்படியே பார்த்திருந்தாள்.. அவன் சுவாசத்தை. இளங்கோ மருந்தின் உதவியால்.. நன்றாக உறங்கினான்.
வீட்டில் பெற்றோருக்கும் அதே நிலைதான்.. லிங்கத்திற்கும் அப்படியே. ஏதேதோ ஒரு நடுக்கம்.. என்னதான் ஒன்றுமில்லை என காட்டிக் கொண்டாலும்.. இளா மருத்துமனையில் பேசியது லிங்கத்தின் நெஞ்சை தொட்டது. வெளியே நிற்கும் சரக்கை எப்படி கைமாற்றுவது… எங்கே எப்படி odக்கு கடன் கட்டுவது.. என தன் அண்ணனின் தொந்திரவுகளை அழகாக.. இயல்பாக ‘தான்’ வாங்கிக் கொண்டான்.
என்ன முயன்றும் அண்ணியை என்னால் சமாளிக்க முடியவில்லை. என்ன செய்து என்ன பிரோயசனம்.. அவர்கள் வருத்தத்தை போக்க முடியவில்லை என மனம் சலிப்படைந்தது.
மெல்ல மெல்ல பின்னிரவில்தான் இமைகள் மூடி உறங்கினான் லிங்கா.
காலையிலேயே வீடு பரபரப்பானது.. சத்தியமூர்த்தி சொல்லியிருந்தார் தன் மனைவியிடம் கம்பெனி செல்ல வேண்டும் என. எனவே அதற்குண்டான வேளைகளில் இருந்தார் இல்லத்தரசி.
நமக்கு என்ன வருத்தமிருந்தாலும், அதை தொழிலாளர்கள் முன் காட்ட கூடாது என்பது காமாட்ஷிக்கும் புரியுமாதலால்.. சுப்ரபாதம் ஒலிக்க தொடங்கியது அதிகாலையிலேயே.
வீட்டில் சாம்பிராணி போட்டபடி.. “காவ்யா… காவ்யா ம்மா…. எழுந்திரு டா….” என அவளின் அறை நோக்கி சத்தமிட்டபடி.. எல்லா பக்கமும் சாம்பிராணியை காட்டிய படியே நடந்தார் காமாட்சி.
மெல்ல மெல்ல காவ்யாவும் எழுந்து வர… அவளை குளிக்க சொல்லி டிபனுக்கு தேவையானதை முடிக்க செய்தார். தன் கணவருடன் மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடாகிக் கொண்டிருந்தார்.
அதற்குள் தீபக்கை பள்ளி அனுப்பும் நேரமும் வர.. அதில் பாதி நேரம் கடந்தது.. இப்படியே காலை நேர வேலைகள் சென்றது.
லிங்கா இறங்கி வந்தான்.. குளித்து. நேராக பூஜை அறை நோக்கி சென்றான். ‘சொல்லி வந்து விடுமா பொறுப்புகள்’ என்பது போல பார்த்திருந்தனர் பெற்றோர் இருவரும்.
அண்ணனின் போன் தன்னிடம் இருப்பதால்… போன் பேசியபடியே இருந்தான் லிங்கா. காலையிலேயே ஏதோ ப்ரிண்ட் போல.. “ஹேய் இளா” என ஆரம்பிக்க..
“நான் அவங்க தம்பி பேசறேன்” என்றான் லிங்கா. எங்கே, ஏன் என கேட்டு வைத்து விட்டனர் அவர்கள். ஆக பதில் சொல்ல முடியவில்லை லிங்காவால்.
இப்போது போன் பேசி முடித்து வந்தவன், தீபக்கை பார்த்து “என்ன டா… ஹோம் வொர்க் முடிச்சியா..” என தொடங்கி ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். லிங்கா சத்தம் கேட்டு காவ்யாவின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த சாதனா விழித்து அழ ஆரம்பித்தாள்.
லிங்கா அங்கே செல்ல.. காவ்யாவும் சென்றாள். லிங்கா அவளை தூக்கி சாமாதனாம் செய்தான். காவ்யா அவளுக்கு தேவையானதை கவனித்து வெளியே அழைத்து வந்தாள்.
மூர்த்தி “லிங்கா, இந்தா பியெட் கேரேஜ் சாவிய எடுத்து… பாண்டிக்கிட்ட கொடு. கார… கிளீன் பண்ணி வைக்க சொல்லு..” என்றார்.
லிங்கா “ப்பா… பென்சில் போலாம் ப்பா” என்றான்.
[the_ad id=”6605″]
“டேய்.. சொல்றது செய்.. உன்னை யார் என் கூட வர சொன்னா… நீ போ அதுல, நாங்க இதில்தான் வருவோம்” என்றார். லிங்கா ‘… ம்.. இவரு பெரிய லாடு லபக்…’ என ஏதோ முனகிய படியே, அந்த வேலையை செய்ய போனான்.
தீபக் “தாத்தா.. சித்தப்பா.. உங்களை ஏதோ சொல்றாங்க” என்றான். லிங்கா திரும்பி தீபக்கை முறைத்தான். தீபக் “தாத்தா…” என அழைத்து அவரிடம் ஓட..
மூர்த்தி “போடா… போ.. அவனை போய் முறைச்சிக்கிட்டு… நீ சொல்லியிருப்ப எனக்கு தெரியாதா…” என்றார் கடுப்பாக.
காமாட்சி இதையெல்லாம் பார்த்து விட்டு “பையன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்.. நீங்க என்னமோ, இப்போதான், மாப்பிள்ளை ஊர்வலம் போறா மாதிரி… பியட்டில்தான் வருவேன்.. பட்மினிலதான் வருவேன்னு..” என சொல்ல…
“போடி… போடி.. அதேயே திரும்ப திரும்ப சொல்லாதா.. ஒண்ணுமில்ல.. அவனுக்கு. அதெல்லாம்… சரியாகிடும்… ” என்றார் பொறுமையான மந்திர குரலில்.
அந்த அம்மணியும் சிரித்தபடியே சென்றார். அது… அந்த மனநிலை… எல்லோரையும் தொற்றியது.
தீபக் பள்ளி சென்றான். எல்லோரும் உண்டு முடித்து இருக்க.. சரியாக செந்தில் வந்தார்.. லிங்கா “சரி ப்பா.. நான் கிளம்பறேன்.. நீங்க அண்ணன் பார்த்திட்டு ஆபிஸ் வந்திடுங்க” என்றான்.
செந்திலும் லிங்காவும் கிளம்பி பேங்க் சென்றனர்.
மூத்த தம்பதிகள் இருவரும் மருத்துவமனை சென்றனர்.. லலிதாவுக்கு தேவையான மாற்றுடை எடுத்து வந்திருந்தார் காமாட்சி.
லலிதா அங்கேயே குளித்து, தன் கணவருக்கு உணவு கொடுத்து, மருத்துவர் விசிட் முடித்து.. என நேரம் சென்றது.
பத்தரை மணிக்கு மூர்த்தி தம்பதி தங்களது பியட்டில் கிளம்பினர் கம்பெனி நோக்கி. காமாட்சி.. வைர அட்டிகை… இரட்டை வட சங்கிலி ஜொலிக்க.. மிதமான நீலவண்ண பட்டு உடுத்தி, இறங்கினார்.
அப்போதே புரிந்தது.. வொர்கர்ஸ்க்கு… ’இன்று விழா’ என.
நேர உள்ளே சென்றார் காமாட்சி. மூர்த்தி எப்போதும் போல.. ஒவ்வொரு இடமாக பார்த்து.. எல்லோரிடமும் பேசி பொறுமையாக உலா வந்து கொண்டிருந்தார்.
உள்ளே செல்ல, அங்கு ஏற்கனவே இளைய மகன் இருந்தான். அவனை சுற்றி… ஐந்து நபர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘யாருக்கு எவ்வளவு தொகை’ என ஏற்கனவே கணக்கிட்டதை.. கவரில் அடுக்கிக் கொண்டிருந்தனர். பரபரப்பாக.. லட்ஷ்மிகாடக்ஷமாக.. இருந்தது அந்த இடம்..
[the_ad id=”6605″]
காமாட்சி எல்லாவற்றியும் பார்த்துவிட்டு.. நல்லபடியாக முடிய வேண்டும் என்ற எண்ணத்துடன் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார்.
எல்லாம் நேர் செய்து.. லிஸ்ட் சரி பார்த்து அக்கௌண்ட்ஸ் செக்ஷன் ரெடியாக இருந்தது. எப்போதும் சம்பளம் பேங்க் அக்கௌண்டில் கிரெடிட் செய்வர்.. இது மட்டும் எல்லா வருடமும் ஸ்பெஷல்.
நல்ல நேரம் வந்தது… MD கேபின் ஒதுங்க வைக்க பட்டு… அம்மாவை அமர வைத்தான் லிங்கா… வரிசை படி எல்லோரையும் அனுப்ப பணித்தான் அக்கௌண்ட்ஸ் செக்ஷனிடம்.
முதலில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணை முதலில் அழைத்தனர். காமாட்சி வணங்கி… எழுந்து நின்று.. அவருக்கு போனஸ் ஸ்வீட் பாக்ஸ்.. என எல்லாம் கொடுத்து அனுப்பினார்.
‘ப்பா டா… ‘ என லிங்கா முதலில் நிமிர்ந்தான். முதல் முதலாக… ஒரு உணர்வு வந்தது, இது என்னுடைய கம்பெனி.. இவர்கள் என் மக்கள்.. நான் இதை பாதுகாக்க வேண்டும்.. என ஏதோ உள்ளே கலந்தது அவனுக்கு.
இது ஒரு செண்டிமெண்ட் அங்கிருந்த அனைவருக்கும். அமைதியாக சத்தியமூர்த்தி அந்த அறை வாசலில் நின்று.. வெளியே வரும் எல்லா தொழிலார்களையும் வாழ்த்தி அனுப்பிக் கொண்டிருந்தார்.
வரிசையாக ஒவ்வொருவராக வர, கம்பெனியில்.. தீபாவளி களைகட்டியது.
அப்போதே அண்ணனுக்கு போனில் அழைத்து.. பேசினான் லிங்கா… “ம்.. ண்ணா.. ஆரம்பிச்சிட்டோம்..” என ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
“தன்னை போல என்னை எண்ணும்..
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை…
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை…
ஒன்றாய் காணும் வானம் என்றும்..
இரெண்டாய் மாற நியாயம் இல்லை…”