தாழம்பூ வாசம் நீ…..
7
லிங்கம்.. இப்போது அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். மதியமே.. அன்னையும் தந்தையும் வீடு வந்திருந்தனர். லலிதா, அங்கு மருத்துவமனையில் இருந்து கொண்டாள்.
பிள்ளைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தது. காவ்யா அவர்களுடன் இருந்தாள். லிங்கா இப்போதுதான் இறங்கி கீழே வந்தான். சாதாரண டி-ஷர்ட் ஒரு ஜீனில் கிளம்பியிருந்தான்.. கண்களில் அயர்வு நன்றாக தெரிந்தது.
இளையவன் சோர்ந்து வருவதை பார்த்த சத்தியமூர்த்தி “நீ ரெஸ்ட் எடேண்டா, நான் ஆபீஸ் போயிட்டு வரேன்” என்றார்.
“ம்… நீங்க போய் முதலில் ரெஸ்ட் எடுங்க… எனக்கு ஒண்ணுமில்ல…” என்றவன் “ம்மா… டீ போடு ம்மா, காபி வேண்டாம்” என்றான் கடுகடு குரலில்.
பெற்றோருக்கு.. அவனின் நிலை புரிகிறது… முதல் நாள் முழுவதும் வண்டி ஓட்டி வந்திருக்கிறான்.. பின் இரவு முழுவதும் தன் அண்ணைனை பார்த்து.. காலை ஆபிஸ் சென்று, இப்போதுதான் எங்களோடு வந்தான், சற்று நேரம் கூட படுக்கவில்லை.. என தோன்றியது.
ஆனால், மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் போது.. இவனின் அலைச்சல் பெரிதாக தெரியவில்லை. அவனிடம் வாதாடும் எண்ணம் இல்லை தந்தைக்கு.. “அவசர படாதடா… நீயும், அவன மாதிரி. பொறுப்பா இரு.. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியலை” என்றார் ஆற்றாமையான குரலில்.
காதில் வாங்கியது போன்ற பாவம் கூட இல்லாமல்.. டீ குடித்து, பிள்ளைகளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு, அலுவலகம் கிளம்பிவிட்டான் லிங்கா.
அங்கு செந்தில் முகமே சரியில்லை.. பார்த்த லங்கத்திற்கு ஓய்ந்து போனது. அவரும் ஏனோ தானோவென வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாளில் தீபாவளி என்பதால்.. பெரிதாக வேலையில்லை. எனவே அமைதியாக அவரவர் இடத்தில் அமர்ந்திருனர் இருவரும்.
[the_ad id=”6605″]
லலிதா, குளித்து தன் கணவருக்கு.. எது கொடுக்கலாம் என அறிந்து அதற்குண்டான பொருட்கள் எடுத்து, மதியமே வந்துவிட்டாள் மருத்துவமனைக்கு.
இளாக்கு இப்போது வெறுமெனே படுத்திந்தான்.. கையில் தையல் போட்ட இடம் சுருக் சுருக்கென வலித்தது. அதை விட, மனைவியின் இந்த பாரா முகம்.. மிகவும் வதைத்தது.
இளா, எழுந்து அமர்ந்திருந்தான். லதா, அந்த அறையில்.. அங்கும், இங்கும் நடமாடும் ஒரு அலைபுருதலை பார்த்தே இருந்தான். தனக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் குரலில் சேர்த்து “லதா… ஹேய்..” என அழைக்க… வெடுக்கென வெளியே சென்றுவிட்டாள், மனையாள்.
இளாக்கு, அவளை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த கொடுப்பினையும் தீர்ந்து போனது. அதன்பின் லதாவின் பெற்றோர் வந்தனர் அப்போதுதான் உள்ளே வந்தாள் மனையாள்.
அவர்கள் லிங்கம் சொன்னதை கேட்டு ஏதோ BP லெவல் மாற்றம் என எண்ணி வந்தனர். ஆனால், கைகளில் காயம், முகத்தில் சோர்வு.. அத்தோட மகளின் தீரா அழுகை.. என எல்லாம் பார்த்ததும் பெற்றோரின் முகம் இருண்டது.
லலிதா வேறு.. “வாங்க ப்பா..” என சொல்லி ஒரே அழுகை.
என்னாச்சு என பெற்றோர் கேட்க பதில் சொல்லவில்லை லலிதா. தேம்பிய படியே இருந்தாள்.
இளாவே “ஒண்ணுமில்ல மாமா… அவ பயந்துட்டா அதான்..” என நிமிராமல் மென்று முழுங்கி.. சொல்லி சமாளித்தான்.
மருமகன் என்ன சொன்னாலும் மகளின் முகம் தெளியவேயில்லையே.. அத்தோடு, அவள் வேறு பேசவும் இல்லை.
லதாவின் தந்தைக்கு சந்தேகம் வர, மூர்த்திக்கு அழைத்தார், வெளியே வந்து.. “என்னாச்சு மாப்பிளைக்கு” என கேட்க.
“நீங்க ஹாஸ்பிட்டல் வந்திட்டிங்களா… தோ வரேன்” என்றார் சத்தியமூர்த்தி.
இப்போது மருமகளின் பெற்றோருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறேதே சத்தியமூர்த்திக்கு. உடனே கிளம்பி மருத்துவமனை வந்தார்.
என்றும் நிலை குறைந்ததே இல்லை சத்தியமூர்த்தி. தனக்கென ஒரு இடம் எப்போதும் வைத்திருப்பார். அப்படிப்பட்ட ஆட்களுடன்தான் அவருக்கு பழக்கமே. இப்போது லலிதாவின் குடும்பமும் அப்படியே.. காசு பணம் இல்லையே தவிர.. கௌரவமான குடும்பம்.
வந்துவிட்டார் அடுத்த பத்து நிமிடத்தில்… அறையில் எல்லோரும் அமைதியின் சாயலில் இருந்தனர். ஆனால் முகம் கலவரத்தைதான் காட்டியது.
உள்ளே வந்தார்… மூர்த்தி. லலித்தாவின் பெற்றோர் நிற்கின்றனர்… சத்தியமூர்த்தி எனும் மனிதர், தந்தையாக மகன் செய்த செயலுக்கு, கைகட்டி நின்றார்.. தலை தாழ்ந்து.
கண்ணாலே கேள்வி வருகிறது, ‘என்னவாயிற்று..’ என. ஆனால், பதில் எப்படி சொல்லுவது என தெரியவில்லை மூர்த்திக்கு.
[the_ad id=”6605″]
‘பெண்ணை பெற்றவர் கேட்பது நியாயமே என தோன்றுகிறது. விதி வசத்தால் நடந்தால் பரவாயில்லை, இப்படி தானே தேடிக் கொண்டால்.. அதுவும் சின்ன சின்ன பிள்ளைகளை வைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று ஆகியிருந்தால்.. எப்படி என் பெண்ணை பார்ப்பேன்’ என லலிதாவின் அப்பா.. சத்தியமூர்த்தியை குற்றம் சொல்லி பார்வைப் பார்த்தார்.
ஆண்கள் சங்கடமான சூழ்நிலைகளில் மௌனத்தையே எடுத்துக் கொள்கின்றனர் போல… லலிதா “வாங்க மாமா.. அப்பா இப்போதான் வந்தார்… லிங்கா கூப்பிட்டு சொன்னார்..” என அந்த நொடியை கடக்க உதவினாள்.
எல்லோரிடமும் ஒரு பெருமூச்சு “ம்… அதான் வந்தேன்.. என்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல.. நான் இங்கே இருந்திருப்பேன்.. சரி.. நாங்க கேண்டீன் போயிட்டு வரோம்…” என்றார்.
செல்லும் அவர்களையே தம்பதிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். இளாக்கு என்ன நடக்கும் என தெரியாதா.. மனமெல்லாம் ‘நான் கோழையா.. கோழையா..’ என தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
இது எதையுமே முகத்தில் காட்டாமல்.. விழிகளில் நீர் நிரப்பியப் படியே தனக்கு.. ஏதோ கப்பில் எடுத்துக் கொண்டிருந்தாள் மனையாள், மீண்டும் “ஹேய்… லதா” என்றான் ஆழ்ந்த குரலில்.
லலிதா அறையின் உள் இருந்தாள் அவ்வளவே.. மற்றபடி காது கேட்கவில்லை அவளுக்கு. பேசவேயில்லை தன் கணவனிடம். மனதே விட்டு போயிற்று. அதுவும் நேற்று லிங்கா, தன் கணவரை தூக்கிக் கொண்டு சென்றது, இன்னமும் கண் முன் ஆடியது அவளுக்கு. அது அளவில்லா கண்ணீரை அவ்வப்போது சிந்தத் தொடங்கியது… அதில் இந்த அழைப்பு கரைந்து போனது.. ‘நேற்று லிங்கா பார்க்காவிட்டால்.. இந்த அழைப்பை நான் எங்கே கேட்பேன்.. நல்லா கூப்பிடட்டும், ஏன், நேற்று இந்த லதா.. தெரியவில்லையா… போடா.. எனக்கு எதுவுமே இருக்காதா.. நானென்ன பொம்மையா… அங்க கை குழந்தையை கூட நினைக்கலையில்ல… போடா…’ என வஞ்சனையில்லாமல் மனம் பிதற்ற… காதில்லா ரோபோவானாள் லலிதா.
எல்லோருக்கும் தெரியும் படியான இடைவெளி விழுந்தது அவர்களிடம்..
நேரம் சென்றது. லலிதாவின் பெற்றோர் வந்தனர் மீண்டும். ஏதும் மருமகனிடம் கேட்கவில்லை “உடம்பை கவனிச்சிக்கிங்க மாப்பிளை” என்றார் மாமனார் அவ்வளவே. மாமியார் அழுததற்கான தடம் தெரிந்தது. ஆனால், வாய் திறந்து ஏதும் கேட்கவில்லை தன் மாப்பிள்ளையை. விடைபெற்று கிளம்பினர் இருவரும்.
லலிதாவும் அவர்களுடன் சென்றாள்.. வெளியே வந்து வராண்டாவில் ஒரே அழுகை.. “என்னையும் என் பிள்ளைகளையும் நினைச்சே பார்க்கலம்மா..” என ஒரே அழுகை.
தந்தைதான் தேற்றினார் “விடு டா… எல்லாம் நேரம்.. பெரிய கண்டத்திலிருந்து தப்பிச்சிட்டார்… நான் ஜாதகம் பார்த்துட்டு வரேன்… நீ சங்கட படாத… பிஸ்னஸ்ல ஏதோ பிரச்சனை போல…அதான். இனிமேல் நீதான் கவனமா இருக்கனும். ஒதுக்கிடாத அவர… இனி தாங்கமாட்டார் மனுஷன்… நீ பேசு…” என சொல்ல சொல்ல…
[the_ad id=”6605″]
மகள் “மாட்டேன் பா… நான் உங்க கூடவே வந்திடுறேன்… வாழும் போது நான் முக்கியமில்லைன்னு சொல்லிட்டார்… நான் எப்படி ப்பா.. என்னை நினைக்கலையில்ல… என்னால தாங்கவே முடியல ப்பா… இவர் இல்லைன்னா நான் எங்க போவேன்..” என இன்னும் அதிலிருந்து மீளாமல் ஒரே அழுகை லதா.
என்ன சொல்ல முடியும், இப்போது அன்னைதான் “விடு லலிதா… இத்தோட போச்சேன்னு நினைக்கனும்… தைரியம் தான் முக்கியம்… ஏதோ நேரம் சரியில்லை.. பொறுமையா இரு லதா. நான் நாளைக்கு வரேன்.. நைட் போன் பண்றேன் டா… தைரியமா இரு.. அவர ஏதும் சொல்லிடாத.. கோவ படாத…” என ஆயிரம் முறை பத்திரம் சொல்லிச் சென்றார் அன்னை.
ஒருவழியாக தேறி.. கலங்கிய கண்கள் மாறாமல்தான் விடை கொடுத்தாள் லலிதா.
இரவு எட்டு மணிக்கு செந்திலை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான் லிங்கா. எதோ பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள் அவனின் அண்ணி. முகமெல்லாம் வாடி போய் இந்தாள் லதா. இவர்கள் வரவும், எழுந்து வெளியே சென்றாள்.
பத்து நிமிடம் பார்த்து விட்டு வெளியே வந்தனர் இருவரும். மீண்டும் உள்ளே சென்றாள். இதையெல்லாம்.. பார்த்த படியே லிங்கா, செந்திலை அனுப்பி விட்டு.. மீண்டும் அங்கு வந்தான்.
லிங்கா “அண்ணி, என்ன டிபன் வேண்டும்… நான் வாங்கி வரேன்…” என்றான். லலிதாவும் ஏதோ சொல்ல, தன் அண்ணனுக்கு இட்லியும், அண்ணிக்கு உணவும் வாங்கி வந்தான்.
இவர்கள் இருவரின் பனிபோரும்… ஒரு சங்கடத்தை தந்தது லிங்காவிற்கு. ‘கண்ணை உறுத்தாமல் வாழும் அன்றில்கள் இருவரும் என நினைத்திருந்தேனே… யார் கண் பட்டுதோ’ என மனம் கணக்க… மெல்ல அண்ணனிடம் பேச தொடங்கினான்.. “ண்ணா.. அந்த சரக்க… செகண்ட்ஸ்க்கு கேட்க்குறாங்க… என்ன பண்ணலாம்” என்றான்.
இளா “அவசர படதா டா… அந்த பையருக்கு ஒரு மெயில் அனுப்பு… ப்ராப்பிட் ரேட்டை குறைத்து தரோம்ன்னு சொல்லு… என்ன சொல்றாங்க பார்ப்போம்” என்றான் ஆழ்ந்த குரலில்.
இந்த பொறுமை நேற்று இல்லாமல் போனதே என தம்பி நினைத்தான்.