தானும் அந்த ஜோதியில் கலந்தான்.. மெல்ல கால்கள் குதித்து குதித்து ஜாக்கிங் சென்றது.. சிறு பையனாக.. ‘இந்த வாக்கிங் என்பதெல்லாம் வயதவர்களுக்கு.. இல்லை, பேஷன்ட்களுக்கு’ என தன் அண்ணன் ஜாக்கிங் செல்லும் போது சொல்லியது நினைவு வந்தது… லிங்காக்கு.
மெல்லிய புன்னகை உதட்டில் உறைய… மெதுவாக ஜாக்கிங் தொடங்கினான்… அப்படியே வேடிக்கை பார்த்தபடி.. மிதமான குளிரில் செல்லுவது எப்படியோ . இதமாக இருந்தது..
பெரிய பெரிய மரங்கள்.. அந்த மரங்களில் இருந்த பறவைகளின் சத்தம் தவிர வேறு பெரிதாக சத்தம் இல்லை.. ‘இது ஒரு பொன் காலை பொழுது…’ என ஹம் செய்த படி துள்ளிக் கொண்டிருந்தான் லிங்கா.
ஆனால், கொஞ்ச தூரம் சென்றதும் “என்ன தாமு.. இன்னும் டூ ஹன்றட் ஸ்டேப் கூட வைக்கலை… அதுக்குள்ள… ஸ்டாப் சொன்னா எப்படி…” என்றாள் சத்தமான குரலில்.. இவன் காதில் அது விழுந்ததும்… திரும்பி, சத்தம் வந்த திசை நோக்கி பார்க்க… அந்த தாமு “ஹாய்… லிங்கா..” என்றார் எதிலிருந்தோ தப்பிக்கும் குரலில்.
அந்த ஐந்தடி ஜாக்கிங் சூட் அணிந்த பதுமை, இடுப்பில் கை வைத்து “இப்போ யாரு…” என்றாள்.. மிரட்டும் த்வனியில்..
லிங்கா, அதற்குள் தாமோதரனை அடையாளம் கண்டு, அருகில் வரவும்.. தாமு “ஹாய்.. லிங்கா… எப்படி இருக்கீங்க…” என்றார் மறுபடியும்.
“ம்… அங்கிள்” என்றவன் “நீங்க” என்றான்.
“ம்… அதையேன் கேட்க்கிற.. நீ இடிச்சதோட உன் வேலை முடிஞ்சது… ஆனா, எனக்குதான் வேலை தொடங்கிடுச்சி… சரி அத விடு… இளங்கோக்கு என்ன ஆச்சு..” என்றார் மெல்லிய குரலில்.
இவன் திணற தொடங்கினான்… அதற்குள் அந்த பெண் “ப்பா… வரீங்களா.. வந்து பேசலாம்…” என மரியாதை பன்மைக்கு மாறி.. லிங்காவை முறைக்க தொடங்கினாள், அவனால்தான் தாமு வரவில்லை என எண்ணம் அவளுக்கு.
லிங்கா அவளை அனிச்சையாய் பார்க்க… ‘வாய்க்கு ஈக்குவளா… கண்ணும் பேசும் போல…’ என சட்டென தோன்றியது. பின் சுதாரித்து ‘என்ன இருந்தாலும்.. ட்ரீமி மாதிரி இல்ல’ என நினைத்துக் கொண்டான்.
அதற்குள் தாமு லேசாக சிரித்த படியே “ப்ரியாம்மா… நீ பைவ் ஹண்றட் ஸ்டேப் போயிட்டு வா… அதுக்குள்ள நான் வந்துடுவேன்.. “ என்றார் லிங்கத்தின் தயக்கத்தை பார்த்து.
முகத்தை லேசாக தூக்கி வைத்தபடி வந்த வழியே சென்று.. தனது கவுன்ட்ஸ் தொடங்கினாள்.. சக்திப்ரியா.
[the_ad id=”6605″]
இவர்கள் திரும்பி நடந்தனர்.. தாமு “என்னாச்சு ஏதோ பிரச்சனை போல…” என்றார் மீண்டும்.
அரசியல் தந்திரி அல்லவா… வெட்கபடாமல் கேட்டார் லிங்காவிடம்.. லிங்கா “ஒண்ணுமில்ல அங்கிள்.. அவனுக்கு லோ BP.. விழுந்திட்டான்..” என்றான் ஏனோ தானோ குரலில்.
“தாமு “ம்… அப்படி சொல்றீங்க சரி… ஆனா உண்மையா என்ன ஆச்சு…” என்றார் லிங்காவின் கண்களை பார்த்து.
லிங்கா அமைதியாகவே இருந்தான். தாமு “நான் ஏதோ, உன் கஷ்ட்டத்தை தெரிந்துக்க கேட்கல… உதவி செய்யத்தான் கேட்கிறேன்.. ஏன்னா… உங்க அப்பா.. உங்க குடும்பம்னாலே எங்களுக்கு பிடிக்கும்…
நாங்க எலெக்க்ஷனில் நிற்கும் போதே, வந்து பார்த்தோம்.. உங்க அப்பாவ, அவரு.. எப்போதும் போல, பேசி அனுப்பிட்டார் கெத்தா.. ஆனாலும் எங்களுக்கு அவர பிடிக்கும்.. ஏன்னு தெரியலை.. எப்போதும் எனக்கும் என் மச்சானுக்கும் அவர் மேல தனி மரியாதை.
ஏதோ அரசியலாக்க கேட்கிறேன்னு நினைக்காத… நம்பி, சொல்லு.. எங்களால் என்ன முடியுமோ செய்யறோம்..” என்றார்.
அப்போதே அவர்களை கடந்து சென்றாள் ப்ரியா… லிங்கா அதை உணரவில்லை, தாமு “போடா அம்மணி, வரேன்…” ஏனறார் தாழ்ந்த குரலில்.
திருப்பிக்கொண்டு சென்றாள் ப்ரியா…
லிங்கா எப்படி நடு ரோட்டில் பேசுவது என சுற்றிலும் பார்வையை செலுத்திய படியே… யோசனையாக நின்றான்.. தாமு “வாங்க தம்பி “ என சொல்லி தங்களின் வீடு இருந்த தெருவிற்குள் நுழைந்தார்.
இங்கே மனிதர்கள் அவ்வளவாக இல்லை.. மெல்ல லிங்கா தொடங்கினான் “அந்த மந்திரி நிறைய எதிர்பார்த்திட்டான்.. அண்ணன், அவர… நம்பித்தான் “ என தொடங்கி எல்லாம் சொன்னான் மெல்லிய குரலில்.
அப்படியே பேசியபடியே தாமுவின் வீட்டிற்கு வந்திருந்தனர் இருவரும்.. அங்கிருந்த கேட்டின் முன்பே பேச்சு சென்றது.. அதிகாலை என்பதால் கூட்டமில்லை.
தாமு “ஏன் இளங்கோ, அந்த பத்தைதான் கொடுத்திருந்தா என்ன… தேவையா இதெல்லாம்… அவன நம்பிருக்க கூடாது… அந்த பினாமிய விசாரிச்சிங்களா..” என்றார்.
“ம்…. என்ன செய்ய, நேரம்… அண்ணன் ஏதோ.. தீபாவளி முடிஞ்சி பார்க்கலாம்ன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டான்…” என்றான் யோசனையாக.
தாமு “மந்திரி போன் செய்தாரா…” என்றார்.
“இல்லை… இன்னும் ஒன்னும் வரலை… வரட்டும் எங்க போயிட போறாங்க… தொழில் நடத்தரவங்கன்னா சும்மான்னு நினைச்சிட்டான்… வரட்டும்..” என பல்லை கடித்தான் தன்னை அறியாமல்.
“ம்… அந்த பினாமி.” என தாமு ஆரபிக்க.
லிங்கா தயங்க படியே “எனக்கு ஒரு உதவி செய்வீங்களா” என்றான்.
“அதுக்குதானே கேட்கிறேன்.. என்ன வேணும் சொல்லு…” என்றான்.
“அ… அந்த முத்து.. பினாமி, அவன பிடிக்கணும்…” என்றான். கூடவே “நான் யாருகிட்ட கேட்கறதுன்னு தெரியலை.. அப்பா அவ்வளோதான் இதெல்லாம் கேட்டாலே… என்னை வெளியே துரத்திடுவார்…, அண்ணன் இப்போதுதான் வந்திருக்கான்… நீங்க நம்பிக்கையான ஆளா.. சொல்லுங்க… பேசிக்கலாம்…” என்றான் கடுமையான பாவமாக..
தாமு லேசாக அதிர்ந்தார் “என்ன தம்பி இது… இப்படி எல்லாம் பேசாதீங்க.. உங்களுக்கு என்ன, அந்த பையில் சைன் ஆகணும் அவ்வளவுதானே.. விடுங்க.. எதிர்கட்சியா நாங்க செய்து தரோம்… மத்தபடி… அந்த முத்துகிட்ட இருந்து பணத்தை வாங்கிடலாம்…
நீங்கல்லாம் அமைதியா இருங்க… உங்க பேர் வராம நாங்க பார்த்துக்கிறோம்… நீங்க, இதுக்கு பதில்.. உங்க அப்பா கிட்ட நம்ம சாரங்கனை பத்தி பேசுங்க.. அடுத்த எலெக்க்ஷனில் அவர மந்திரியாக்குங்க போதும்… உங்க சங்கமெல்லாம் சேர்ந்தால்.. போதுமே எங்களுக்கு… அத்தோட நாங்க செய்திட்டு தான், கேட்கிறோம்.. பணம் காசு வேண்டாம் எங்களுக்கு…” என்றார் அமைதியாக.. தந்திரி.
லிங்கா சிறியவன் என்றோ அவனிடம் இதை கேட்கலாமா வேண்டாமா என கூட தாமு யோசிக்கவில்லை.. சத்தியமூர்த்தி எல்லாம் யானை போல, இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்… அதாவது.. காசு பணம் இல்லை என்றாலும்.. அவர்கள் வாக்கு அப்படி. எனவே சட்டென… முடிவுகளை தங்களதாக்கினார் தாமோதரன்.
லிங்கா தாடையை தடவிய படியே சிரித்தான் “அங்கிள்… இப்போ தெரியுது சாரங்கன் சார் ஏன் அங்க நிக்கறாருன்னு…” என்றான் நக்கலாக.
தாமோதரனும் சிரித்த படியே “இன்னும் நிலையா உட்காரலையே, அதான்… “ என்றார்.
லிங்கா வீட்டை நிமிர்ந்து பார்த்தான்… அனிச்சையாக… தாமோதரன் வினையமாக சிரித்தார்..
அதற்குள் வந்தாள் ப்ரியா.. வாசலில் நின்றிருந்த இவர்களை ஒரு திமிர் பார்வை பார்த்து உள்ளே நடந்தாள்.. வியர்வையில் குளித்தவளாக.
தாமோதரன் “உள்ள வாங்க, லிங்கா… காபி… இல்ல, கிரீன் டி.. சாப்பிடலாம்” என்றார்.
மறுக்க தோன்றவில்லை.. லிங்கத்திற்கு, உள்ளே சென்றான். வீடு வெளியிலிருந்து பார்க்கும் போதே பிரம்மாண்டமாய் இருந்தது… உள்ளே… எல்லாம், க்ரனைட்டிலும்… தேக்கு மரத்தாலும்.. இழைத்திருந்தனர்.
பெரிய போர்ட்டிகோ.. அதை அடுத்து வரவேற்பறை.. இருவரும் அமர்ந்தனர்.. வேலையாட்கள் வந்து என்ன வேண்டும் என கேட்டு சென்றனர். லிங்கா காபி என்றான், அவர் ஏதோ.. கஷாயம் போல.. அது வந்தது. சொல்லாமலே எடுத்து வந்தாள்.. ப்ரியா.
தாமோதரன் “இவள்.. எங்க எல்லோரின் பெண்.. எங்கள் வாரிசு… அதாவது சாரங்கனின் மகள்.. எங்களுக்கு பிள்ளையில்லை. அதனால… எங்களுக்கு எல்லாம் இவள்தான்… நாங்கதான் அவளின் அப்பா… அம்மா எல்லாம்.” என்றார் சட்டென உணர்ச்சி வசப்பட்ட குரலில்.
லிங்கா நெளிய தொடங்கினான்… ப்ரியா “ப்பா…” என்றாள் அதட்டலாக.
[the_ad id=”6605″]
சுதாரித்தவராக “சக்திப்ரியா… எங்க பொண்ணு பேரு…. ஊட்டில படிக்கிறா… இந்த மேவோட எக்ஸாம் முடியுது.. அதன் ஏதோ.. ப்ராஜெக்ட்.. அது.. இதுன்னு வந்துட்டா…” என்றார்.
அதற்குள் தாமோதரனின் மனைவி வந்தார் “இவங்க என் மனைவி சரஸ்வதி…“ என அறிமுக படுத்தினார் எல்லோரையும்.
பெண்கள் இருவும் உள்ளே சென்றனர்..
மீண்டும் ஒரு அரைமணி நேரம் பேசிய பின்.. லிங்கா விடைபெற்று கிளம்பினான். வீடு வரவும்… ஹாலில் எல்லோரும் அமர்ந்திருந்தனர்.
லிங்காவிற்கு, என்னடா இது என பார்த்து உள்ளே வந்தான் “தீபக் ஸ்கூல் இல்ல… மணியாச்சு” என்றான்.
தீபக் “நாளைக்கு தீபாவளி சித்தப்பா… எனக்கு ப்போர் டேய்ஸ் லீவ்.. “ என்றான்.
அப்போதுதான்… அவனுக்கு, தீபாவளி என்பது நினைவு வந்தது.. “ஓஒ..” என்க.
“என்ன ஓஒ.. எனக்கு அம்முக்கு டிரஸ்…” என்றான்.
எல்லோருக்கும் அப்போத்தான் சுயநினைவே வந்தது… சட்டென லிங்கா “இன்னிக்கு.. நாம எல்லோரும் டிரஸ் எடுக்க போறோம்” என்றான்.
தீபக் “ஹேய்… ஜாலி…” என்றான்… அதை பார்த்து.. கூழ் குடித்துக் கொண்டிருந்த அம்மு… சிரிக்க.. அவளை தூக்கிக் கொண்டான்.. லிங்கா… தனது பொக்கை வாய் சிரிப்பால்.. இன்னும் சிரித்தாள் அம்மு.
காவ்யா “ப்பா… “ என்றாள் தயங்கிய படி
சத்தியமூர்த்தி என்ன என்பதாக நிமிர்ந்து பார்த்தார் “அவர்… அரவிந்.. ஏதோ வேலையா வராங்களாம் இங்க… அ.. அப்படியே எனக்கு ட்ரெஸ் எடுத்து தரேன்.. ன்னு சொன்னார்” என சொல்ல சொல்ல.. இளங்கோவின் போனில் அரவிந் அழைத்திருந்தான்.
இளங்கோ சிரித்த படியே எடுத்தான்.. ‘மாப்பிள்ளை’ என ரகசிய குரலில் எல்லோருக்கும் சொல்லிய படியே எடுத்தான் போனை “ஹலோ.. எப்படி இருக்கீங்க அரவிந்” என்றான்.
அரவிந்தும், இளங்கோவும் பேசிக் கொண்டிருந்தனர் பத்து நிமிடம். “சரி சரி..” என சொல்லி, போனை அனைத்து விட்டு, விஷயம் சொன்னான் இளங்கோ. சற்று முன் காவ்யா சொன்னதை சொன்னார். மூர்த்தி “எதுக்கு ப்பா.. அதெல்லாம்.. “ என்றார்.
இளங்கோ சிரித்தபடி “விடுங்க ப்பா… ஏதோ சின்ன பிள்ளைகள்.. போயிட்டு வரட்டும், அவளும் எங்க போறா.. போ காவ்யா.. போய் ரெடி ஆகு.. அரவிந்.. ஈரோட்டிலிருந்து கிளம்பிட்டாராம்.. வந்திடுவார் போ..” என்றான் பொறுப்பாக.
லிங்கா “ம்.. ம்… நடக்கட்டும்.. நடக்கட்டும்… ஓடாம போ..” என்றான் வேண்டுமென்றே..
காவ்யா “நான் எங்க ஓடினேன்” என்றாள் அப்போதுதான் எழுந்தவள்
“பாருடா பேச்ச.. அரவிந் வராருன்னு சொன்ன உடனே சத்தம் வருது…” என்றான் வம்பிழுக்கும் எண்ணத்துடன்..
காவ்யாக்கு கன்னம் சிவந்த போதும், லிங்கம் பேசுவது பொறுக்காமல் “ம்… தீபக்… நாம இப்படி சொல்லலாம் டா… அதிசையமா நீயே.. வீட்டில் இருந்தா என் சத்தம் கேட்கத்தான் செய்யும்… அப்படிதானே டா.. தீபக்..” என சொல்லி அத்தையும் மருமகனும் ஹைபை கொடுத்துக் கொண்டனர்.
லிங்கா அடுத்து பேசுவதற்குள் காவ்யா “என்ன, என்ன,. யோசனை.. சொல்லு… போன வாரம் வரை… எங்க லிங்கா, சாப்பிட வரலையேன்னு அம்மா புலம்புவாங்க… இளா அண்ணாதான் ஏதோ சொல்லி சாமாளிப்பாங்க… எனக்கு தெரியாதா….
அத்தோட எந்த தீபாவளிக்கு, நீ எங்க கூட ட்ரெஸ் எடுக்க வந்திருக்க.. சொல்லு… சொல்லு… பார்க்கலாம்… எல்லாத்துக்கும் இளா அண்ணாதான் வருவாரு..
இப்போ நாலு வருஷமா அவரும் வரதில்லை… எல்லாம் அண்ணிதான் பார்த்துக்கிறாங்க. இதில் சத்தம் வருதாம்…” என சொல்லி லிங்காவின் அருகில் சென்றவள், அவனின் புஜத்தில்.. லேசாக குத்தி “என்ன சத்தம் போதுமா..” என்றாள்.. சத்தமாக.
[the_ad id=”6605″]
லிங்கா அவளை ஒரு முறை சுற்றி வந்து “பாரேன்… வாய… வேண்டாண்டி… கல்யாணம் ஆக போற பொண்ணுக்கு இவ்வளோ வாய் ஆகாது… டி… சொல்ல மாட்டியா, காமாட்சி இதெல்லாம்.. “ என தன் அன்னையும் வம்பிழுத்தபடி அம்முடன் அமர்ந்தான், சோபாவில்.
காமாட்சி “டேய்.. அப்படி கூப்பிடாத டா…” என்றார்.
எப்போதும் போல தீபக்கிடம் “கூப்பிடத்தானே பேரு வைச்சாங்க… ஏன் தீபக்..” என்றான்.
காமாட்சி “திருந்தவே மாட்டான்..” என தனக்குள் புலம்பினார் அன்னை.
இப்படி இங்கு பேச்சு செல்ல… இளங்கோவின் செல் ஒலித்த தொடங்கியது.. யாரென பார்த்த இளங்கோவின் முகம்… கோவத்தில் ஜொலிக்க தொடங்கியது.
“ஆண்டவனே.. ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
கவலையில்லா இதயம் உண்டா…
கொஞ்சம் காட்டு…
ஒருநாள் இரவில…
நான் கொஞ்சம் அழுதேன்…
ஏண்டா போறோந்தோமின்னு… நினைச்சேன்…
தனியா ஒரு பிடி..
நெசம்(நிஜம்) தின்னு பார்த்தேன்…
தெளிவாச்சு.. உள் நெஞ்சி…”