என் காதல் கனா 16
சதீஷ் இயல்பாக தலையை தட்டுவதையும், அதற்கு மறுபேச்சில்லாமல், சுஜினி சிரித்துக் கொண்டிருப்பதையும், வாக்கிங் சென்று முடித்து திரும்பியிருந்த விவேக்கின் கண்கள் நிறைய எரிச்சலுடன் பார்த்தன.
“இதப்பத்தி சதீஷ்ட்ட இன்னைக்கே பேசணும்…சுஜினிட்ட இருந்து அவனை விலகியிருக்க சொல்லணும்…எனக்கு சுஜினி எவ்வளோ முக்கியமானவன்னு சதீஷ்க்கு புரியற மாதிரி எடுத்து சொல்லிடணும்….என்ன இவன்? இப்படி நடந்துக்கறான்?”
“ப்ரேக்கப் ஆகி ரெண்டு மாசம் முடியறதுகுள்ள இன்னொரு லவ்வா? இப்படியெல்லாம் நடந்துக்கற டைப் இல்லையே இவன்….அதை விடவும் இந்த சுஜினியப் பாரு…இவன்ட்ட எப்படி சிரிச்சு பேசறதை….நான் பத்து வார்த்தை பேசினா, ஒரு வார்த்தையில பதில் சொல்லறவ, இவங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசறதை…”என்று மனம் கருவியது விவேக்கிற்கு.
விவேக்குடன் சேர்ந்து மற்றவர்களும் உடன் வந்து கொண்டிருக்க, அவர்களை விடுத்து நடையில் வேகத்தைக் கூட்டியவன் சதீஷும் சுஜியும் அமர்ந்திருந்த இடத்தை நொடியில் அடைந்திருந்தான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த கடைசி வரிகள் இன்னமும் கோபத்தைத் தூண்டியது. “நெக்ஸ்ட் வீக்கெண்ட் கண்டினியூ பண்ணலாம்…”என சதீஷ் கூற, “ஸ்யூர்” என்று அடுத்த நொடியே ஆமோதித்தவளைக் கண்டு இன்னமும் வெறுப்பானவன்,
“என்ன? என்ன அடுத்த வாரம்?”என்று ஒரு படபடப்புடன் வினவியிருந்தான்.
“நெக்ஸ் வீக் மீட் பண்ணலாம்னு சொன்னேன்” என்று சதீஷ் பதிலளித்தான்.
“அடுத்த வாரமா? எதுக்கு?”
“என்ன விவேக்? என்னாச்சு? ஷேர்ஸ் பத்தி சொல்லிக் கொடுக்கத்தான்…ஏன் அதுல என்ன பிராப்ளம்…?” என்று அப்பாவியாக வினவியவளின் தலையில் கையில் இருந்த காபிசீனோ கோப்பையை கவிழ்த்திவிடலாம் போல் எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள விவேக் பெரும்பாடுபட்டான்.
“இன்னும்…இன்னும் முடியலையா? இவ்வளோ நேரம் அப்ப என்ன தான் பண்ணிட்டு இருந்தீங்க?”என ஆத்திரத்துடன் வினவ, சதீஷிற்கும், சுஜினிக்கும் சங்கடமாகிப் போனது. “ஏண்டா ஒரே நாள்ள எல்லாமே சொல்லிடனுமா….ரொம்ப போரிங் சப்ஜெட் டா….கொஞ்சம் நேரம் சொல்லிக் கொடுத்தேன்…அப்பறமா சும்மா ஜெனெரலா பேசிட்டு இருந்தோம்?”
“என்ன பேசிட்டு இருந்தீங்க?”என்றான் விவேக் விடாமல். விவேக்கின் கேள்வி அங்கு இருந்த சுஜினி, வித்யா, ரோனால்ட் மற்றும் எம்மாவிற்கு சற்று அதிகப்படியாக இருந்தது. “என்ன பேசிக் கொண்டிருந்தால் உனக்கென்ன”என்று கேட்டுவிட நொடிப் பொழுது ஆகாது தான்.
ஆனால் அப்படி கேட்பது நாகரீகமற்றது என்று எண்ணி அனைவருமே அமைதியாயினர். சதீஷிற்கு விவேக்கின் கேள்விகள் சற்றே விசித்திரமாகத் தோன்றியபோதும் கோபம் கொள்ளும் வகையில் இல்லை. சுஜினியுடன் பேசிக் கொண்டிருந்ததால் தோன்றிய இனிய மனநிலை இன்னமும் நீடித்திருந்தது. விவேக்கின் துருவி துருவி கேட்கும் கேள்விகளுக்கு சிரித்தபடிக்கே பதிலளித்துக் கொண்டிருந்தவன்,
[the_ad id=”6605″]
“நீ என்னடா ஸ்கூல் பிரின்சிபல் மாதிரி நிக்க வச்சு கேட்ற…ஏ, ஸ்கூல்னு சொன்னதும் நியாபகம் வருது…சுஜினி என்னோட ஸ்கூல் ஜூனியராமாடா…. அதனால தான் அவளுக்கு என்னோட முழு பேர் அன்னைக்கு தெரிஞ்சிருக்கு…என்னை விட ரெண்டு வருஷம் ஜூனியராம்”என்று விவேக்கையும் சேர்த்து அனைவரிடமும் பொதுவாகக் கூறினான்.
“ஜூனியரா?”என்று கேட்டதற்கு மேல் விவேக் வேறு ஒன்றும் பேசவில்லை. அதற்குள், வித்யாவும் எம்மாவும்”ஹே ஹே ஹே”என்று ஆர்ப்பரிக்க, அதைவிடவும், வித்யா மேலும் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, அவர்களை அடக்கும் வண்ணம் சுஜி, “ஷட் அப் கேர்ல்ஸ்” என்று கத்திக் கொண்டே இரு பெண்களையும் துரத்திக் கொண்டு சிறிது தூரம் ஓடினாள்.
இருபதடி சென்று மூன்று பெண்களும் மூச்சு வாங்கிக் கொண்டு நிற்க, வித்யா சுஜினியை விளையாட்டாக கட்டிக் கொள்ள, எம்மா சுஜினியின் மறுபக்கம் கட்டிக் கொள்ள, அவளை குண்டுகட்டாக கட்டிக் கொண்டே தூக்கிய வாக்கில் இருபெண்களும் குதித்தனர். எம்மாவின் கால்கள் தடிமாறி கீழே விழ, மூவரும் புல்தரையில் ஒன்றின் பின் ஒன்றாக விழுந்தனர்.
இதைக் கண்ட சதீஷிற்கும், ரானிற்கும் சிரிப்பு வந்தது. விவேக்கின் நினைவுகள் அவனை விட்டு நீண்ட தொலைவு சென்று விட்டிருந்ததால், பத்தடி தூரத்தில் நடந்த கூத்தை ரசிக்கவோ, சிரிக்கவோ இயலவில்லை. ஒருவழியாக விளையாடி முடித்து பெண்கள் வந்து சேர, அவர்களுடன் சேர்ந்து அனைவரும் அந்த பூங்காவில் இருந்து அவரவர் டார்மிட்டரி நோக்கி நடக்கத்துவங்கினர்.
பிரியும் இடம் வந்ததும், சில பல பாய்களை உதிர்த்தவர்கள், “சீ யூ..”என்று விடைபெற்றுக் கொள்ள, “நெக்ஸ் வீக்கெண்ட் பார்க்கலாம்”என்று சுஜினி மறவாமல் சதீஷிடம் கூறினாள். கையை அன்று போல் நெற்றிக்கும் கண்களுக்கும் இடையில் வைத்து சின்ன ராயல் சல்யூட் வைத்தவன், விடைபெற்றுக் கொண்டான்.
[the_ad id=”6605″]
“பை, விவேக்”என்று தன்மையாக கூறியவளிடம் விவேக் ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக வழங்கியது சுஜினிக்கு வேறுபாடாக் தெரிந்தது. விவேக்கிடம் காணப்பட்ட ஒதுக்கம் சுஜினியை வருத்தபடுத்தியது என்னவோ உண்மை. அடுத்து இதைப் பற்றி யோசிக்கும் முன்னர், வித்யாவும் எம்மாவும் மீண்டும் சுஜியை ஆளுக்கு ஒருபக்கமாக கட்டிக் கொண்டு தூக்க முயல, அவர்களை விலக்கிக் கொண்டே விடைபெற்றுக் கொண்டாள்.
பூங்காவில் இருந்த திரும்பிய நேரம் தொட்டு, மெளன சாமியாராய் உடன் நடந்த விவேக்கை, சதீஷ் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில், அதிலும் ஒற்றை வார்த்தையில் மொழிந்து வந்தவனிடம் என்ன பேசுவது என்றே சதீஷிற்கு புரிபடவில்லை.
வரும் வழியிலேயே, ஃபுட் டிரக் ஒன்றில், அவரவர் விருப்பம் போல், மெக்ஸிகன் டாக்கோஸ் வாங்கி மதிய உணவை முடித்திருந்தனர். சதீஷிற்கு தான் சாப்பிட்ட சிக்கன் டாக்கோஸ் வித் சில்லி-கான்-கர்டெ மிகவும் பிடித்திருந்தது.
“சின்ன சின்ன ஜெலபீனோ பீஸ்…கொஞ்சம் கார்ன், ரியலி அமெசிங் டேஸ்ட் மேன்” என அதைப் பற்றியே ரானும் சதீஷும் அளவளாவிக் கொண்டே நடக்க, விவேக் மட்டும் உரையாடலில் கலந்து கொள்ளாமல் உடன் நடந்தான்.
டார்மிட்டரிக்குள் நுழைந்ததும், வரவேற்பு அறையில் வழக்கமாக அமர்ந்து அரட்டையடிக்கும் இடத்தில் நண்பர்கள் மூவரும் அமர்ந்து கொள்ள, அப்போதும் ரானும் சதீஷுமே பேசிக் கொண்டனர்.
நீண்ட நேரமாக வாயைத் திறவாமல் அமர்ந்திருந்த விவேக்கை காண சகிக்காத சதீஷ், “என்ன தாண்டா உன் பிரச்சனை? ஏன் இப்படி முகத்தை உம்முனு வச்சிருக்க?”என்று வினவினான். விவேக் உடனே பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டன் என சதீஷ் உணர்ந்திருந்த படியால், நிதானமாக விவேக்கின் முகத்தை ஏறிட்டவன்,
“சொல்லுடா ஏதாச்சும் பிரச்சனையா? இந்தியால யாருக்காவது ஏதாவது உடம்புக்கு…” என்று முடிப்பதற்குள், “அதெல்லாம் ஒன்னும் இல்லை”என்று அவசரமாக மறுத்தான் விவேக்.
“அப்போ என்ன திடீர்ன்னு ஒருமாதிரி ஆயிட்ட? போறப்போ நல்லா தானேடா இருந்த..”
“அப்பறமா சொல்லறேன்….எனக்கு தூக்கம் வருது, நான் ரூமுக்கு போறேன்…”என்று அவசரமாக டார்மிட்டரி லிவிங் ரூமில் இருந்து தனது அறைக்கு செல்ல படிகளில் தாவி ஏறினான். சதீஷின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டு அருகில் அமர்ந்திருந்த ரான்,
“ஹி இஸ் ஜெலஸ் மேன்…..காண்ட் யு சீ?” என்று கால்களை டீபாயின் மேல் லாவகமாக வைத்துக் கொண்டே பதிலளித்தான்.
“பொறாமையா…? என் மேலயா?” எதுக்குடா? நான் என்ன பண்ணேன்…” என்று ரானிடம் வினவினான் சதீஷ். ரான் டீப்பாயின் மேல் நீட்டியிருந்த கால்களை மெல்லமாக ஆட்டிக்கொண்டே, “அவனுக்கு பிடிச்ச பொண்ணை நீ கரெக்ட் பண்ணிடுவியோன்னு பயப்படறான்” என்று கலப்பட ஆங்கிலத்தில் மொழிந்தான்.
“ஐ டோண்ட் நோ அபவுட் யூ இந்தியன்ஸ்….இங்க எங்க நாட்டில, ஒரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கறப்போவே இன்னொரு பொண்ணை பார்க்கறதுனால தான் ப்ரேக் அப் ஆகுது”என்று கூறிய ரான், “யு பெட்டர் டாக் டு ஹிம்…. “என்று சதீஷின் தோளில் தன் கை முஷ்டியால் குத்திவிட்டு தன் அறைக்குச் சென்றான்.
சதீஷிற்கு ரான் கூறிய செய்தி உண்மையாக இருக்குமோ என விசனம் தோன்றியது. இதைப் பற்றி கண்டதையும் யோசிப்பதை விடுத்து, நேராக விவேக் என்ன மனநிலையில் இருக்கிறான் என தெரிந்து கொள்ளவது சிறப்பு என்று தீர்மானித்தவன், எழுந்து விவேக்கை நாடிச் சென்றான்.
அவன் அறையின் வெளிக்கதவை இரு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனை விவேக்கை அறையில் சூழ்ந்திருந்த கும்மிருட்டு வரவேற்றது. ஜன்னலின் திரைசீலைகளை இழுத்துவிட்டு உறங்கியிருப்பான் என நினைத்துக் கொண்ட சதீஷிற்கு, கட்டிலின் விளிம்பில், இருட்டில் அமர்ந்திருந்த விவேக்கைக் காண சுருக்கென்றது.
“டே…ஏண்டா இப்படி பண்ணற….ஏன் லைட் கூட போடாம இப்படி உட்காந்திருக்க…எந்திரு மொதல்ல…வா, வெளிய போலாம்…”
“நான் வரலை…நீ போயிட்டு வா…”
“நீ வா மொதல்ல….”என்று வம்படியாக விவேக்கின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு டார்மிட்டரியின் வெளியே அழைத்து வந்தான். மூன்று மணி வெயில் மெல்லமாக வாட்டியது. ஆனால் சூடு கொஞ்சமும் உரைக்காத வண்ணம், சில்லென்று காற்று மோதிச் செல்ல, சதீஷ் ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளிவிட்டான்.
“சொல்லுடா, என்ன உன் பிரச்சனை…ஏன் திடீர்ன்னு உம்முனு ஆயிட்ட..”
“ஒண்ணுமில்லைன்னு சொல்லறேன்ல …விடேண்டா…”
“நீ தானடா அப்பறமா சொல்லறேன்னு சொன்னே….டே, எங்கிட்ட உனக்கு என்ன தாண்டா அப்படி ஒரு தயக்கம்…யாரோ மாதிரி ஃபார்மாலிட்டி பார்க்கற…நான் உன் ஃப்ரெண்டு டா…நமக்குள்ள இவ்வளோ டிஸ்டன்ஸ் வர்றது எனக்குப் பிடிக்கலை விவேக்…அதும் ஒரு பொண்ணுனால…”என்று போகிற போக்கில் சதீஷ் பேசவந்த விஷயத்தின் நாடி பிடித்திருந்தான்.
“நீ சொல்லறது கரெக்ட் சதிஷ்..அந்த பொண்ணால நமக்குள்ள பிரச்சனை வேண்டாம்… வெளிப்படையா சொல்லனும்னா எனக்கு சுஜினியை ரொம்ப பிடிச்சிருக்குடா. அவளை பார்த்தப்போ இருந்தே இவ எனக்கானவன்னு ஒரு எண்ணம். அவகூட நீ சிரிச்சு பேசறதையும், அவ உங்கூட ஃப்ரெண்டிலியா பழகறதையும் என்னால ஜீரணிக்க முடியலை….”
“டே, நான் ஜஸ்ட் ஃபார்மாலா தான் பேசறேன்…விவேக்.. நீ அவளை விரும்பறன்னு அன்னைக்கே சொல்லிட்ட… கண்டிப்பா உன் காதலுக்கு நான் எதிரி இல்ல டா.. அப்படி நினைக்காத என்னை..”
“நீ அப்படித்தாண்டா பேசற..ஆனா சுஜினி உங்கிட்ட அப்படி பேசலைன்னு எனக்குத் தோணுது. எங்கிட்ட முகம்குடுத்துக் கூட ரெண்டு வார்த்தை பேசாதவ, இன்னைக்கு உங்கூட எப்படி சிரிச்சு பேசிட்டு இருந்தா…தாங்க முடியலைடா…ஐம் சாரி.. அதான் அப்படி கத்திட்டேன்”என்றவன் தலையை கைகளால் பிடித்துக் கொண்டான்.
“ஸ்கூல்ல நான் ப்ளெட்ஜ் சொல்லறதை நடிச்சு காமிச்சுட்டு இருந்தா, வேற எதுவும் விஷேஷமா பேசிக்கலை…நீ இவ்வளவு சீரியஸா இருப்பன்னு நான் நினைக்கலை மச்சி….”என்றவன், சிறிது நேரம் மெளனமாக விவேக்கை பார்த்துக் கொண்டிருந்தான். விவேக் அசைவதாகத் தெரியவில்லை. தலையை குப்புறக்கவிழ்த்து கைகளால் பிடித்திருந்ததை நிமிர்த்தவேயில்லை.
[the_ad id=”6605″]
“ஒ.கே, ஐம் கெட்டிங்க த பாயிண்ட் விவேக்… யு லைக் சுஜினி…யு லவ் சுஜினி…நான் குறுக்க வற்றது பிடிக்கலை…சரியா…இனிமே நான் அவளை பார்க்கவோ, பேசவோ மாட்டேன்….யு கேன் டிரஸ்ட் மை வேர்ட்ஸ்….எனக்கு அவளை விட நீ முக்கியம்….”என்று நிறுத்தியவனை ஏறிட்டான விவேக். கண்கள் லேசாக கலங்கியிருந்தன.
“ஐம் சாரி டு காஸ் யு திஸ் டிரபுள் மச்சி….சீயர் அப்…”என்று கண்களில் உண்மையான நட்புடன் மொழிந்த சதீஷை அதற்கு மேல் வெறுக்க விவேக்கிற்குத் தெரியவில்லை.
ஓடிச்சென்று நண்பனை கட்டிக் கொண்டான்.”ஐம் சாரிடா…” என்று மீண்டும் சதீஷ் மொழிய அவனது தோள்களில் கைகளை வைத்து தட்டி சாந்தப்படுத்தினான்.
இருவரின் மனமும் அமைதியடைந்திருந்தது. விவேக்கின் அறையில் இருந்து விடைபெற்று தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்த போது சதீஷின் மனம் குழம்பிப் போயிருந்தது. முடிவெடுக்க இயலாமல் தவிக்கும் வேளையில் நம் கண்முன்னர் இரண்டு விஷயங்கள் தென்படும்.
ஒன்று, சரியான முடிவு, மற்றொன்று மனதிற்கு பிடித்த முடிவு. வெகு சில நேரங்களில் மட்டுமே இரண்டுமே ஒன்று போல் சமன்படும். பெரும்பாலான சமயங்களில் மனதிற்கு பிடித்த முடிவினை எடுக்க முடியா வண்ணம் சந்தர்பங்கள் வாய்த்துவிடும். இதுவும் சதீஷைப் பொறுத்தவரையில் மனதிற்குப் பிடிக்காத முடிவு என்றாலும், சரியான முடிவு.