என் காதல் கனா 22
அடுத்த தினம் அவனது பெற்றோரை அழைத்து வர விவேக்கும் சதீஷும் சென்றிருந்தனர். விமான நிலையத்தில் தன் பெற்றோரை கண்டதும் சதீஷ் பெரிதாக ஓடி சென்று அவர்களை கட்டிப்பிடித்து எல்லாம் கொஞ்சம் விடவில்லை.
இயல்பாக புன்னகைத்து வரவேற்று, அவர்கள் அருகில் வந்ததும் “ ஹாய் பா, ஹாய் ம்மா.. அப்பா கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க போல.தொப்பை எல்லாம் வெளிய தெரியுது” என சாதாரணமாகவே வினவினான்.
விவேக் சதீஷின் அன்னையிடமிருந்து கைப்பையை பெற்றுக்கொண்டவன், “எப்படி இருக்கீங்கமா? முட்டு வலி எப்படி இருக்கு?” என கரிசனமாக வினவினான்.
நால்வரும் பேசிக்கொண்டே சதீஷ் ஏற்பாடு செய்து வைத்திருந்த பிரட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். சிறிதுநேரம் பெற்றோரிடம் செலவழித்த சதீஷ், “சரி நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. எங்களுக்கு ஒரு டூ ஹவர்ஸ் கிளாஸ் இருக்கு. நாங்க போயிட்டு வந்துடரோம். ஈவினிங் நாம வெளியே போலாம்” சதீஷ் மொழிந்தான்.
ஆனால் அதற்கு பதில் மொழியாக, “அந்த பொண்ணு சுஜி ஏன்டா ஏர்போர்ட்டுக்கு வரல? நாங்க வரேம்னு சொன்னியா இல்லையா?” என உரிமையாக மகனிடம் வினவினார்.
அவன் அருகில் அமர்ந்திருந்த விவேக்கிற்கு இந்த சொற்கள் சற்று ஆச்சரியம் கொடுத்தன. “என்ன சுஜி பத்தி சதீஷ் அம்மா இவ்ளோ உரிமையா கேட்கிறாங்க? அப்படின்னா இவன் அவளை பத்தி அவங்ககிட்ட எந்தளவு சொல்லி வச்சிருக்கானோ என்னவோ?” என்ற இயல்பான சந்தேகம் மனதில் உதித்தது.
தன் மனதின் எண்ண ஓட்டத்தை கட்டுப்படுத்திக்கொள்ள விவேக் மிகவும் பிரயத்தனப்பட்டான். சதீஷுமே தன் அன்னையின் கேள்வியால் சற்று தடுமாறித்தான் போனான். “இப்பதான் கேட்கணுமா இந்தக் கேள்விய? ஒரு நேரம் காலம் விவஸ்தையே கிடையாது” என மனதிற்குள் தன் அன்னையை நொந்து கொண்டவன்,
[the_ad id=”6605″]
“சொல்லி இருக்கேன். அந்த பொண்ணுக்கு கொஞ்சம் வேலை இருக்காம். ஈவினிங் நாம டின்னர் போறோம்ல, அப்ப பாத்துக்கலாம்” என சற்றே விட்டேற்றையாக பதில் சொன்னான் சதீஷ்.
“சரி சரி. அந்த பொண்ணு வேலை பாக்குற ரெஸ்டாரண்டுக்கு தான் டின்னர் போகிறோமா?” என அப்பொழுதும் நிறுத்தாமல் அவனது அன்னை அடுத்த கேள்வியை தொடுத்திருந்தார்.
“ஆமாம்மா” எனத் தன் மாவில் நிறைய அழுத்தத்தை கொடுத்து இந்த பேச்சை நிறுத்து என்பதை சொல்லாமல் சொல்ல நினைத்தான் சதீஷ்.
தன் மகனின் வார்த்தைகளில் படிந்திருந்த அழுத்தம் அந்த அன்னைக்கு புரிந்தது. “ஏன்டா என்ன திட்டுற? எதுக்கு கேட்டேன்னா ஆனா அந்த பொண்ணு அந்த ரெஸ்டாரெண்டில் வெயிட்ரசே வேலை பாக்குதுல்லையா? தெரிஞ்சவங்க நாம அங்க போனா நமக்கு சர்வ் பண்ணனுமில்ல. அப்போ அந்த பொண்ணுக்கு அது கஷ்டமா இருக்கும் இல்லடா” என நீட்டிக் கொண்டே போனார்.
“பத்மா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. இந்த ஊர்ல எந்த வேலையும் உயர்வு தாழ்வு கிடையாது. பெரிய மல்ட்டி மில்லியனர் பையனாய் இருந்தாலும் கூட தன்னோடு படிப்புக்கு தானேதான் சம்பாரிப்பான்.”
“அதனால இங்க வந்து ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கிற வேலை பார்க்கிறது எந்த விதத்திலும் கவுரவ குறைச்சல் இல்லை. அப்படி யாரும் நினைக்க மாட்டாங்க புரியுதா? நீ தத்து பித்துன்னு உளறாம இரு போரும்” என தன் மனைவியின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார் சதீஷின் தந்தை.
இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சதீஷும் விவேக்கும் அவர்களது கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்த சமயம், விவேக் அதுவரையிலும் மனதில் அடக்கி வைத்திருந்த கேள்வியை சதீஷிடம் வினவினான்.
“டேய் நான் உன்னை கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. உங்க அம்மா எப்படி சுஜியை பத்தி இவ்வளவு அக்கறையா விசாரிக்கிறாங்க? அன்னைக்கு ஒருநாள் ஏர்போர்ட்டில் பார்த்ததோட சரிதானே?” என கேட்ட விவேக், அதற்குப் பிறகும் சுஜியுடன் சதீஷின் அன்னையுடன் பேசிக் கொண்டிருக்கிறாளா என்ற ஐயத்தை வார்த்தைகளால் தொடுக்காமல் விட்டிருந்தான் விவேக்.
விவேக் இந்த கேள்வி கேட்பான் என சதீஷிற்குத் தெரிந்துதான் இருந்தது. அதனால் சற்றும் தாமதிக்காமல், “நேர்ல அம்மா ஒரு தடவை தான் சுஜியை பார்த்து இருக்காங்க. ஆனா பாரு அன்னைக்கு ஏர்போர்ட்ல நான் கொஞ்சம் எடுத்து எறிஞ்சு பேசிட்டேன்ல. அதனால அம்மா சுஜியோட அம்மாகிட்ட ஏதாவது பேசி இருக்கலாம். அதனால கொஞ்சம் ஒரு அட்டாச்மெண்ட் இருந்திருக்கும்”
“ஓ அப்படியா?” என்று மட்டுமே விவேக் பதிலுரைத்தான்.
“ஆமாடா எனக்குமே கொஞ்ச நாள் முன்னாடிதான் அம்மா சொன்னாங்க. சுஜியோட அம்மா ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை எங்க அம்மாவை மீட் பண்ண வருவாங்களாம் வீட்டுக்கு” என அவன் வார்த்தைகள் அவனையே சமாதானப்படுத்தவில்லை.
“ஓ” என்று விட்டேத்தியாக தோளைக் குலுக்கிய விவேக் அதற்கு மேல் இந்த பேச்சை வளர்க்கவில்லை. இருவரும் தங்களது வகுப்பிற்குள் சென்று அன்றைய தினத்தை அவரவர் எண்ணவோட்டத்துடன் கழித்தனர்.
சதீஷ்ற்கோ தான் எவ்வளவு ஜாக்கிரதையாக இந்தை கையாளும் போதும், எங்கே தன் பெற்றோரால் வேறு புதுவகையான சங்கடம் ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தோன்றியிருந்தது.
விவேக்கின் மனநிலை முற்றிலும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. வழக்கமாக சதீஷின் பெற்றோரை காணும் பொழுதெல்லாம் தோன்றும் ஏக்கம் அன்று பன்மடங்காக பெருகி இருந்தது. “சுஜி அம்மாவும் சதீஷ் அம்மாவும் பழகுறாங்க. வீட்டுக்கு போறாங்க. 2 ஃபேமிலியும் சீக்கிரம் ஃபிரண்ட்ஸ் ஆகிடும். அதுக்கப்புறம் என்ன? உங்க பையனுக்கு என் பொண்ண தரேன் அப்படின்னு பேசுவாங்க.””என்ற எண்ணமும் அத்தோட,
“இன் ஃபேக்ட் சொல்லபோனால் ரெண்டு குடும்பமும் பொருத்தமானதுதான். சுஜி வீட்ல சதீஷ் அளவுக்கு ஸ்டேட்டஸ் எதுவும் இல்லைனாலும் அவர் பேமிலி பேக்ரவுண்ட் சதீஷ் ஃபேமிலி பார்க்கவேண்டும் நல்லா சூட்டாகும். சதீஹுக்கு பெருசா அவங்க அப்பா அம்மா எந்த தடங்கலும் சொல்லப்போவதில்லை.”
“இவன் பிடிச்சிருக்குன்னு சொன்னா, அவங்க மறுபேச்சு இல்லாமல் கல்யாண வேலைகளை பார்ப்பாங்க. சுஜியை ஏத்துக்குவாங்க. சதீஷ்க்கு தம்பி தங்கச்சிய படிக்க வைக்கணும், தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும், எடுக்கேஷன் லோன் அடைக்கணும்னு எந்த கமிட்மெண்ட்ஸும் கிடையாது. குடுத்து வச்சவன்” என்ற ரீதியில் விவேக்கின் எண்ணங்கள் இருந்தன. எந்த இடத்திலுமே சதீஷ் பற்றி பொறாமைப்பட்டு விடவில்லை. தனக்கு அது இல்லையே என்ற ஏக்கம் மட்டுமே விவேக்கின் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
ஏதேனும் காரணம் சொல்லி அன்றைய மாலை எப்படியாவது இவர்களுடன் சேர்ந்து உணவகம் செல்லக்கூடாது என விவேக் முடிவெடுத்தான். “இவங்கள பார்த்து பார்த்து கஷ்டப்படறதுக்கு, இவங்கூட போகாம இருக்கலாம்” என்ற முடிவை எட்டியிருந்தது.
[the_ad id=”6605″]
சதீஷ் தன்னை அழைக்கும் பொழுது என்ன காரணம் சொல்வது என சத்தியமாக தெரிந்திருக்கவில்லை விவேக்கிற்கு. “படிக்கணும். வேலை இருக்கு” என்று காரணம் கூற இயலாது. அதேநேரம் சதீஷிற்குத் தெரியாமல் வேறு வேலை இருக்கிறது என்று சொல்லவும் முடியாது.
தன் அன்றாட நிகழ்வுகள் அனைத்துமே சதீஷ் அறிந்திருந்தபடியால் வேறு வழியில்லாமல் அன்றைய மாலை சதீஷ் பெற்றோருடன் சுஜி வேலைபார்க்கும் உணவகத்திற்கு சென்றான் விவேக்.
விவேக் எதிர்பார்த்தது போலே சதீஷின் பெற்றோர் சுஜியை கண்டதும் நீண்டநாள் தெரிந்தவர்கள் போல நடந்து கொண்டனர். அதிலும் சதீஷின் அன்னை உள்ளே வந்துமே தசுஜியின் கையை பிடித்தவர், 10 நிமிடங்கள் கழிந்திருந்த பொழுதும் சுஜியை விடவில்லை.
அவர்கள் வந்ததுமே தன் மேற்பார்வையாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்து அமர்ந்து கொண்டாள் சுஜி. கைகழுவ எழுந்து சென்ற விவேக்கிற்கு தூரத்திலிருந்து அந்த நால்வரும் அமர்ந்திருந்த மேஜையை பார்க்க என்னவோ போலிருந்தது.
“அவங்க நாலு பேரும் ஒரு குடும்பம் மாதிரியும். நான் சம்பந்தமே இல்லாம ஒப்புக்கு சப்பாணியாக உட்கார்ந்திருக்க மாதிரியும் இருக்கு” என எண்ணிக்கொண்டான். அதற்கு தகுந்தார் போல சதீஷ் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்க சதீஷின் அன்னை சுஜியிடம் சிரித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
மேசையின் மேல் செல்லமாக தட்டி அன்னை ஏதோ கூற, சுஜி அதற்கு தலையை பின்னால் இழுத்து கலகலவென சிரித்தது தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டேயிருந்த விவேக்கிற்கு மிகுந்த மன பாரத்தைக் கொடுத்தது.
அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல், அங்கிருந்து உடனே சென்று விடவும் முடியாமல் நின்றிருந்தான் விவேக். இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டே இருக்க, அவனது மனம் ஒரு திடமான முடிவை எட்டியிருந்தது.
“என்னதான் சுஜியைப் பிடித்து இருந்தாலும், இது எந்த காலத்திலேயும் நடக்கப்போவதில்லை. அதனால என் மனச வெளிக்காட்டாமல் முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா இந்த பொண்ணுகிட்ட இருந்து தள்ளி வருவதுதான் நல்லது. இனிமேல் இவளுக்காக பின்னாடியே போவதோ, இவளை பற்றி கவலைப்படுவதும் கம்மி பண்ணிக்கணும்” எனத் தன் மனதில் முடிவெடுத்துக் கொண்டான்.
அந்த நொடி மனதில் ஏற்பட்டிருந்த உறுதி விவேக்கிற்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. “பிடிக்குதுங்கறதுக்காக சுத்தமா ஒத்தே வராது அப்படின்னு நினைக்கிற ஒரு விஷயத்தை வலுக்கட்டாயமா நடக்கும் அப்படின்னு நம்பிகிட்டு இருக்கிறது முட்டாள்தனம்” என விவேக் அந்த நிமிடம் தன் மனதை வென்றிருந்தான்.
விவேக் சிறு வயது முதலே ஏற்பட்டிருந்த குணம் அது. முதலில் அவனது அறிவும் மனமும் சண்டைபோடும் அதில் மனம் சில சமயங்களில் வென்று விடுவதுண்டு. சுஜியின் விஷயத்தில் முதலில் அப்படித்தான் மனம் வென்று கொண்டே இருந்தது. என்னதான் மூளை சுஜி தனக்கு தன் குடும்பத்திற்கு ஒத்து வர மாட்டாள் என்பதை அறிவுறுத்தி கொண்டே இருந்தாலும் விவேக்கின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து இருந்தது.
தன்னால் முடிந்த மட்டும் சுஜிக்கு எதிராக காரணங்களை அறிவிற்கு செலுத்தி கொண்டேதான் இருந்தான் விவேக். இன்று அவர்கள் நால்வரையும் தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது, “நீயே சொல்லு. இங்க தூரத்திலிருந்து பாக்குறப்போ அவங்க நாலு பேரும் ஒரு ஃபேமிலி மாதிரிதானே தெரியறாங்க. ஒரு அப்பா அம்மா தன்னோட பையன் மருமகள் இப்படித்தானே தெரியறாங்க.” என மனதிற்கு படமெடுத்துக் காட்டியிருந்தான்.
“இதே இடத்தில் அவங்க அப்பா அம்மாவை எடுத்துட்டு, சதீஷயும் எடுத்துட்டு, சுஜியை என்னோட வீட்டு ஆளுங்க கூட உட்கார வச்சு பார்த்தா அது எப்படி இருக்கும். அம்மா,சித்தி, தம்பி, தங்கச்சிக, இவங்களுக்கு நடுவுல சுஜி உட்கார்ந்திருக்கிறது ரொம்ப அந்நியமா இருக்கு இல்லை. எதுவோ ஒட்டாத மாதிரி” என கற்பனை செய்து பார்த்த விவேக்கிற்கு அந்த நொடி அவனது மனதை அறிவு வென்றிருந்தது புரிந்துபோனது.
மனதில் ஏற்பட்டிருந்த தெளிவுடன் கை கழுவிக் கொண்டு முகத்தில் சற்றே குளிர்ந்த நீரை அடித்து தன்னை நேராக்கி கொண்டவன், அமைதியான மனநிலையுடன் அவர்களுடன் சென்று சேர்த்துக் கொண்டான்.
“எங்கடா போன இவ்வளவு நேரமா? உனக்கும் சேர்த்து ஆடர் பண்ணியாச்சு. உனக்கு வேற ஏதாவது வேணுமான்னு பார்த்து சொல்லு.” என சதீஷ் மெனு கார்டை விவேக்கிடம் நகர்த்த விவேக் சிரிப்புடன் கார்டை எடுத்து பார்வையை ஓட விட்டான்.
மெனுகாட்டினை வாங்கிய விவேக், “இந்த ரெஸ்டாரண்டில் எதுவுமே நல்லா இருக்காதுன்னு நீதான மச்சி அடிக்கடி சொல்லுவ..?”என சதீஷை கிண்டல் செய்த விவேக், சுஜி முறைப்பதைக் கண்டு இயல்பாக சிரித்துக் கொண்டான்
விவேக்கின் மனதில் அப்போதைக்கு சுஜியின் மேல் கோபமோ வருத்தமோ, ஏன் எந்தவித காதலோ பாசமோ இருக்கவில்லை. அவள் நிலைபாடு இது என பலமுறை அவள் உனர்த்தியிருக்க தான் அது தெரிந்தும் ஒரு வித காதல் போதையில் சிக்குண்டு தெளிவில்லாமல் நின்றதாகவே விவேக் நினைத்தான்.
“என்னோட தப்புக்கு நான் அவ மேல கோபப்படுறது நியாமில்லையே” என்ற புரிதல் தோன்றியிருந்த காரணத்தினால் அவனால் சுஜியுடன் இயல்பாக பேச முடிந்தது. உணவுகள் தயாரானதும் அவற்றை எடுத்து கொண்டு வந்து மேஜையில் சுஜியே அழகாகப் பரப்பி வைத்தாள்.
அனைவரும் உண்டு முடித்து சாதாரணமாக விஷயங்களைப் பேசிக் கொண்டும், கிஷோரின் நிட்சயதாம்பூலம் சம்பந்தமான நிகழ்வுகளை விவாதித்துக் கொண்டும் இருந்தனர். “சாடர்டே , சண்டே..உங்க எல்லாருக்குமே லீவ் தானே. எல்லாருமா சேர்ந்து ஒரு சின்ன ட்ரிப் மாதிரி கிஷோரை பார்க்க போலாமே” என சதீஷின் தந்தை அந்த யோசனையை வழங்கியிருந்தார்.
சதீஷின் அன்னையும் உடனே அதற்கு ஆமோதிப்பாக, “நாங்க மூணு பேரு மட்டும் போறதுக்கு, எல்லாருமே சேர்ந்து போலாம்.. நீங்களும் அமெரிக்கா வந்து ஆறு ஏழு மாசம் ஓடிருச்சு. முழுசா எங்கேயும் போயிருக்க மாட்டீங்க. பிலடெல்பியா ரொம்ப அழகா இருக்கும்” என மொழிந்தார்.
விவேக் தன்னால் முடிந்த மட்டும் இவர்களுடன் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்தான். “எப்படியும் அங்க போயி அவங்க பேமிலி பார்த்து, நமக்கு இப்படி இல்லையே இல்லையேன்னு கவலைபடறதுக்கு பதிலா, பேசாமலேயே நிம்மதியா இங்கேயே இருக்கலாம்” என தீர்மானித்திருந்தான்.
அதை உண்மை ஆக்கும் முயற்சியிலும் ஈடுபட்டான். “என்னோட தீசிஸ் வெர்க்ஸ் பெண்டிங் இருக்குமா. நீங்க போயிட்டு வாங்க. நீங்க திரும்பி வரப்போ நான் உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்” என தானாகவே முன்வந்து விவேக் மொழிந்திருந்தான்.
“விவேக் நீ வராம எப்படிப்பா. வேணும்னா ஒரு லேப்டாப்பை கூட எடுத்துட்டு வா. அங்க வந்து உட்கார்ந்து உன் வேலை பாரு” என விவேக்கை அழைத்துச் செல்ல விழைந்தார் சதீஹின் அன்னை.
“என்னடா விவேக். ஒரு நாள் தானேடா. வாடா போயிட்டு வரலாம்” என சதீஷும் தன் நண்பனை வற்புறுத்தி அழைத்தான். இந்த சம்பாஷணை எதிலும் சுஜி கலந்து கொள்ளவில்லை. அவளுக்கு அப்போதைக்கு தனது மஸ்ரூம் நூடுல்ஸும் பேபிகார்ன் சில்லியுமே பிரதானமாகத் தெரிந்தன.
நூடுல்சை ஸ்பூனால் எடுப்பதிலும், அதை அதிகவனமாக கெட்சப்பில் தொட்டு தன் வாயில் திணித்துக் கொள்வதிலுமே கவனமாக செயல்பட்டாள். சதீஷ் விவேக்கிடம் பேசிக்கொண்டிருக்க, அவன் அன்னை “சுஜி, உனக்கு எதும் வேலை இல்லையே” என வினவினார். தன்னை பேச்சில் இழுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்தவள், என்ன பதில் சொல்வது என தெரியாமல் சதீஷையும் விவேக்கையும் மாறி மாறிப் பார்த்தாள்.
ஒரு பக்கம் சதீஷுடன் செல்ல வேண்டும் என்ற பேராவல் இருக்கத்தான் செய்தது. “ஆனால் இவர்கள் ஒரு ஃபார்மாலிட்டிகாக கூப்பிடும் பட்சத்தில், போக வேண்டுமா என்ற எண்ணமும் தோன்றியது.
விவேக் அவர்களுடன் வருகிறான் எனும்பொழுது சதீஷ் தன்னிடம் எப்படி நடந்து கொள்வான் என அறிந்திருந்தபடியால், உடன் செல்லவும் தயக்கமாக இருந்தது.
சுஜி, சட்டென ஒரு பதிலை சொல்லி விடவில்லை. “ ஆண்ட்டி அதுவந்து இங்க கொஞ்சம் வேலை இருக்கு.” என அவளும் கழண்டு கொள்ளவே பார்த்தாள்.
ஆனால் சதீஷின் அன்னை அதற்கு இடம் கொடுக்கவில்லை. “எனக்காக நீ கம்பெனி கொடுக்கலாமில்லை. நீ இருந்தாக்கா தட்டு சாமானம் அடுக்க, பொண்ணுக்கு பூ சேலை அடுக்கன்னு எனக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சுஜி. அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ வந்து தான் ஆகணும்.” என்றார் திட்டவட்டமாக.
“ரெஸ்டரெண்டில ஆள் இல்லை ஆண்ட்டி. லீவ் கிடைக்குமான்னு தெரியலை”
“இந்த ஹோட்டல்ல நான் யாருகிட்ட பேசினா உனக்கு பர்மிஷன் கிடைக்கும்னு சொல்லு. நான் போய் பேசிட்டு வரேன்” என கறாராக சொல்லிவிட சுஜி உடனே மறுத்து எதுவும் பேசி விடவில்லை.
ஒருவாறாக சதீஷ், அவனது பெற்றோர் மற்றும் சுஜியும் பிலடெல்பியா செல்வதாக ஏற்பாடானது. விவேக் அவனது முடிவில் தீர்க்கமாக இருந்தான். சதீஷ் ரெஸ்டரண்டை விட்டு வெளியே வந்து திரும்பவும் விவேக்கை சமாதானப்படுத்தி உடன் அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டான்.
“ஏன்டா திடீர்னு இப்படி பண்ற? வாடா போலாம்” என தன் அன்னை தந்தையின் காதுகளில் எட்டாத வண்ணம் தன் நண்பனிடம் கிசுகிசுத்தான். சுஜி அவனது பெற்றோருடன் முன்னால் நடந்து கொண்டிருக்க சிறிது இடைவெளிவிட்டு சதீஷ் தன் நண்பன் விவேக்குடன் மெதுவாகவே நடக்கலானான்.
[the_ad id=”6605″]
“இல்லடா நீங்க போயிட்டு வாங்க டா” என திரும்ப விவேக் அதே பல்லவியை இசைத்தான்.”விவேக், கிஷோர் உன்ன ரொம்ப எதிர்பார்ப்பான்டா. ஒரு நாள்ல உனக்கு என்னடா பெரிய வேலை? எனக்குத் தெரியாம? அப்பா அம்மா அதை நம்பலாம்” என்றான் சதிஷ். அவன் குரலில் நிஜமான வருத்தம் இழையோடியதைக் கண்டான் விவேக்.
“அப்படி இல்லடா மச்சான். நீங்க எல்லாம் ஃபேமிலியா போறீங்க. இதுல நான் எதுக்குடா இடைஞ்சலா?”
“என்னடா உளர்ற புதுசா? நீயும் என் ஃபேமிலி தான்டா. கிஷோரை முன்னபின்ன அவ பார்த்தது கூட இல்ல.. அவள்லாம் வரால்ல. நீ என்னடா யாரோ மாதிரி கவலைப் படுற?” என சுஜியை கைகாட்டி சதீஷ் பேச விவேக் இன்னும் சற்றே சங்கடப்பட்டு போனான்.
“டேய் உன்கிட்ட நான் இதை முன்னாடியே சொல்லணும் நினைச்சிருந்தேன். எனக்கு அவள புடிச்சிருக்குந்னு நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல?”
“ஆமா. அதுக்கென்ன இப்போ?”
“மனசுக்கு பிடித்திருந்தாலும் பிராக்டிகலா இதெல்லாம் சரிவராது மச்சான்.”
“என்னடா உளர்ற?”
“நல்லா யோசிச்சு தாண்டா சொல்லறேன். இந்த எண்ணம் என் மனசுல இருந்துகிட்டே இருக்குடா.”
“இப்படி நெகடிவ்வா ஏண்டா யோசிக்கற? மனசுக்கு பிடிச்சிருக்குனு சொல்ளுற. அப்போ இதை ஒரு சான்ஸா எடுத்துக்கோடா .அவ கூட அவங்க வந்து நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணு. அவளுக்கு உன்ன பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்கும்.” என உண்மையான அக்கறையுடன் சதீஷ் மொழிந்தான்.
சில நிமிடங்கள் எதுவும் பேசாம உடன் நடந்த விவேக், “எனக்கு அதான் பயமா இருக்கு. எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்டா. இது என்ன ஏதுன்னு கொஞ்சம் யோசிக்கணும். அதனால தான் வரலேன்னு சொல்லறேன். ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதடா. நீங்க போயிட்டு வாங்க” என தீர்மானமாக முடிந்திருந்த விவேக்கிடம் அதற்குமேல் என்ன பேசினாலும் உதவாது என்று தெரிந்து கொண்டான் சதீஷ்.
விவேக் சொல்லும் காரணங்கள் சரியானதாகவே சதீஷ்க்கு தோன்றியது. எனக்கு யோசிக்க சில நாட்கள் அவகாசம் தேவை என கேட்கும் ஒருவனிடம் அதை மறுத்து கட்டாயமாக நீ வந்த வந்துதான் ஆகவேண்டும் என்று கூறி இழுத்துச் செல்வது நியாயமாகப் படவில்லை.
ஆனாலும் மறுநாள் காலை விமானம் ஏறும் சமயம் வரையிலுமே “வருகிறாயா? வருகிறாயா? நீயும் வா.” என்று சுஜியை தவிர அனைவருமே விவேக்கை மாறிமாறி அழைத்துக் கொண்டுதான் இருந்தனர்.
“டேய் கெளம்புடா..வரணும் நினைச்சிருந்தா நான் அப்பவே வரேன்னு சொல்லி இருப்பேன். இவளோ தூரம் நீ பேசனும்னு அவசியமே இல்ல.திரும்பத்திரும்ப ஏன்டா என்னையும் சங்கடப்படுத்தற” என சற்றே சலிப்புடன் விவேக் மொழியை சதீஷ் அதற்குமேல் நண்பனை வற்புறுத்தாமல் கைகளை வழக்கம் போல சிறிய ராயல் சல்யூட் வைத்து “டுடேஸ். என்னை மிஸ் பண்ணாத” என சிரிப்புடன் கூறினான்.