என் காதல் கனா
7
அமெரிக்கா. அந்த பெரிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆர்கன் மாகாணத்தில் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் தரையிரங்கிய போது அன்றைய தின நள்ளிரவு மணி ஒன்று முப்பது என காட்டியது. சில்லென்று முகத்தில் மோதிய பனிக்காற்றும், ஊசி போல் ஊடுருவிச் சென்ற குளிரும் சுஜினிக்கு புதிதாகவும், பரவசமாகவும் இருந்தது. அணிந்திருந்த கரிய நிற லெதர் கோட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். கோட் மூடியிறாத கைவிரல்கள் மெல்லிசாக குளிரில் நடுங்கத் துவங்கியது. குளிரினை விடவும் சுஜினியை பெருதும் தாக்கியது அமெரிக்கா தந்த சுதந்திரம். யாரும் யாரையும் பற்றி சட்டை செய்யவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டிருந்தனர். இதுவே இந்தியாவாக இருந்திருந்தால், என்ற எண்ணமும், அதனுடன் “அம்மா என்ன செஞ்சுட்டு இருக்காங்களோ”என கவலையும் தோன்ற, உடனே தாயிடம் பத்திரமாக வந்து சேர்ந்து விட்ட செய்தியை சொல்ல வேண்டும் என மனம் ஏங்கியது. காயின் பாக்ஸ் எங்கே இருக்கிறது என கண்களால் அலசியபடிக்கு நடந்தாள் சுஜினி.
சிறிது தூரத்தில் காயில் பாக்ஸிகள் கொண்ட ஒரு நீண்ட பப்ளிக் பூத் தென்பட தன் டிராலியுடன் அங்கே சென்று வரிசையில் நின்றாள். ஏற்கனவே இந்தியா ரூபாய் நோட்டுகளை மாற்றி அமெரிக்க டாலர்களாக்கிக் கொண்டிருந்த படியால், கையில் அமெரிக்க பணம் இருந்தது.
நீண்ட ரிங் டோனிர்குப் பிறகு, அம்மாவின் கைப்பேசி எடுக்கப்பட, “சுஜி…”என்று லக்ஷ்மியின் குரல் கேட்டதுமே சுஜினியின் கண்கள் கலங்கிவிட்டன.
“சுஜி…பத்திரமா போயாச்சா? எங்க இருக்க இப்போ?”
“வந்துட்டேன்ம்மா….இன்னும் ஏர்போர்டில தான் இருக்கேன்….”
“சரி, சரி..மணி என்ன இப்போ அங்க?”
“சாயந்தரம் ஐஞ்சு மணி”. நள்ளிரவு ஒரு மணி என்பதை மாற்றி மாலை ஐந்து மணி தான் என கூசாமல் பொய் சொன்னாள் சுஜினி. நள்ளிரவு ஆகிவிட்டதே, தனியே சுஜி என்ன செய்வாளோ என அம்மா கவலை கொள்ளக் கூடும் என்ற பயத்தினாலேயே அவ்வாறு கூறினாள்.
“ஐஞ்சு தானா….சரி சரி….உன் ஃப்ரெண்டு அந்த பொண்ணு வந்திருவாளா ஏர்போர்ட்டுக்கு? மறக்காம போன் செஞ்சிடு…நீயா தனியா போற வேலையெல்லாம் வச்சுக்காத சுஜி….”
“வந்திடுவாம்மா. இன்னும் ஃபோன் பண்ணலை…இனிமே தான் பேசணும்….” என்று இன்று என்ன சமையல், மாமா சகஜமாக பேசுகிறாரா? அத்தை ஏதாவது வம்பு பேசினார்களா என அந்த டாலர் காயின் தீரும் மட்டும் பேசிவிட்டு வைத்தாள். அடுத்த காயினைப் போட்டு, தன் எஸ்.ஏ.டி வகுப்புத் தோழி சரண்யாவிற்கு அழைத்தாள். சரண்யாவிற்கும் அமெரிக்காவின் வியோமிங் மாகாணத்தின் கல்லூரியில் பயில இடம் கிடைத்திருந்தது. அவளது தாய்மாமா அதே மாகாணத்தில் வேலை பார்த்தார். சரண்யா இரண்டு வாரங்கள் முன்பே அமெரிக்கா வந்துவிட்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
“ஹேய் சுஜி…வெல்கம் டு அமெரிக்கா…” என்று கைப்பேசி இணைப்பு அழைத்ததுமே மொழிந்தாள் சரண்யா.
“ஹாய் சரண்….”
“கஸ்டம்ஸ் செக்கிங் முடிஞ்சதா? ஒன்னும் பிராப்ளம் இல்லையே?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை….சரி, நீ வந்துட்டியா?”
“யா யா…. ஒரு டென் மினிட்ஸ்ல அங்க இருப்போம்..நீ வெஸ்ட் கேட் என்ஸிட் நம்பர் – 23கிட்ட வெயிட் பண்ணு. சரியா…சீயூ இன் எ ஜிஃபி” என்று கைப்பேசியை அணைத்தாள். சரண்யா மொழிந்த வெஸ்ட் கேட் எக்ஸிட் எங்கே என அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்துக் கொண்டு அவ்விடம் நோக்கி நடக்கத் துவங்கினாள்.
எக்ஸிட் 23 என்று நியான் விளக்குள் மின்னிக் கொண்டிருந்த வாயிலின் அருகில் சென்ற போது அங்கே ஏற்கனவே தனக்குப் பரிட்சயமான இரண்டு உருவங்கள் நின்றதை கண்டாள் சுஜினி. அதிலும் விவேக் சுஜினியைக் கண்டதும், உதடுகளிலும் கண்களிலும் ஒரு சேர புன்னகை சிந்தினான். அவனையும் அறியாமல் தன்னிட்சையாக கைகள் “ஹாய்”என அசைந்தன. தன்னைக் கண்டதில் உண்மையான மகிழ்ச்சி பொங்க மின்னிய சிரிப்பை அலட்சியப்படுத்த சுஜினியால் இயலவில்லை. பற்கள் தெரியாமல் இதழ் விரித்தாள்.
சுஜினி புன்னகைத்ததை கண்டு அவளது அருகில் வந்திருந்த விவேக், அவள் டிராலியைத் தள்ள உதவ முயல, “இல்லை பரவாயில்லை….ஐ கேன் கேண்டில்”என்று மறுத்துவிட்டாள். சுஜினியின் கண்கள் அருகில் சதீஷ் இல்லையே என கவனமாக சில நொடி ஆராய, இரண்டடி தொலைவில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சதீஷ் கண்ணில் பட்டான். சட்டென சிரிப்பு மறைந்து, ஒரு வித கணமான மெளனம் வந்து சூழ்ந்து கொண்டது. கைப்பேசி அழைப்பை முடித்த சதீஷ் விவேக்கையும் சுஜினியையும் கண்டு கண்களை கொஞ்சம் விரித்த போதிலும் வேறு எதுவும் தவறாக சொல்லாமல் நின்றதே சுஜினிக்கு நிம்மதி அளித்தது.
ஆச்சர்யத்திலும் ஆச்சயர்மாக, “பிக்கப் பண்ண யாராவது வருவாங்களா?”என சதீஷின் வாயில் இருந்து முத்துகள் உதிரவும் கண்களை இன்னும் அகல விரித்தாள் சுஜினி.
“என்ன ஒரே நாள்ல அபவுட் டர்ன் சேஞ்ச்?” என்று கேட்கலாமா என் அவாய் வரை வார்த்தைகள் வந்துவிட, பெரும்பாடு பட்டு முழுங்கிக் கொண்டவள், “ஃப்ரெண்டு வருவா…” என்று மட்டும் பதிலளித்தாள்.
சதீஷ் எதார்த்தமாக சுஜினியிடம் பேசியது விவேக்கிற்கும் வியப்பாக இருந்தது. நண்பனின் மனம் இது போல் சட் சட்டென்று மாறும் என்ற விஷயம் விவேக் அறிந்திருந்தபடியால் வேறு எதுவும் கேட்கவில்லை. மூவருமே ஊசி குத்தும் குளிரில் மெளனமாக சில நொடிகள் நின்றிருந்தனர். சுஜினிக்கு யாருமே பேசாத இந்த அமைதி கொஞ்சம் நெருடலாக இருக்க,
“நீங்க எப்படி போவீங்க? யாராவது வருவாங்களா?” என்று பொதுவாக விவேக்கிடமும் சதீஷிடமும் வினவினாள். சதீஷ் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்னர், “ஆமா, சதீஷோட அண்ணா வருவாங்க…” என்று பதிலளித்த விவேக், இரண்டடி நகர்ந்து சுஜினியின் அருகில் நின்றுகொண்டு பேச ஆயத்தமானான்.
“சோ, ஸ்டே எல்லாம் பார்த்தாச்சா? ஃப்ரெண்டு வீட்டிலையா?” என்று தன் ஆர்வத்தை மறைத்துக் கொண்டு எதார்த்தமாக வினவுவது போல் விவேக் கேட்டான். விவேக் கொஞ்சம் தன்னிடம் வழிவது போல் சுஜினிக்கு தோன்றினாலும், யாருமே தெரியாத ஊரில் நண்பர்கள் என்ற அளவில் இல்லை என்றாலும், தெரிந்தவர்கள் என்ற ரீதியில் இருக்கும் இருவரையும் இழக்கும் எண்ணம் தோன்றவில்லை.
சுஜினியின் பதிலுக்காக ஆர்வமாக அவளது முகத்தைப் பார்த்தபடிக்கு நின்றிருந்த விவேக்கும், பதில் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாதது போல் காட்டிக் கொண்டாலும், காதுகளை கூர்மையாக தீட்டிக் கொண்டு நின்றிருந்த சதீஷையும் காண சுஜினிக்கு சிரிப்பு எழுந்தது.
“ஃப்ரெண்டு வீட்டில ஜஸ்ட் ரெண்டு நாள் தான். பெனிடிக்ட் ஹவுஸ் டார்மிடரில ரூம் அலாட் ஆகியிருக்கு. பட் டு டேஸ் கழிச்சு தான் கிடைக்கும். சோ, அதுவரைக்கும் ஃப்ரெண்டோட மாமா வீட்டில….” என்று காற்றில் பறந்த தலைமுடியை ஒதுக்கிக் கொண்டே பதிலளித்தாள் சுஜினி. இவர்கள் இருவரும் “எங்கே தங்கப் போகிறார்கள்” என கேட்ட வேண்டுமா என்ற யோசனை எழுந்தது. “ஏதோ, நல்லமூடில் இருக்கும் முசுடு சதீஷ் எதுவும் பட்டென்று சொல்லாமல் பதில் சொல்கிறான். கேள்வி மேல் கேள்வி கேட்டு அதை கெடுத்துக் கொள்வானேன்” என்ற எண்ணம் ஏற்படவும் மெளனமாக வாயிலில் வந்து செல்லும் கார்களை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றுகொண்டாள்.
சுஜினி ஏதேணும் தங்களைப் பற்றி கேட்பாள், இயல்பாக பேசிப் பழகலாம், விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மறந்து நட்பு பாராட்டலாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்த சதீஷிற்கும், சுஜினியின் மேல் ஒரு வித ஈர்ப்பும் ஆர்வமும் கொண்டிருந்த விவேக்கிற்கும், சுஜினியின் மெளனம் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
[the_ad id=”6605″]
சில நிமிடத்திலேயே அமைதியை கிழித்துக் கொண்டு சுஜினியின் தோழி சரண்யா தன் மாமாவுடன் காரில் வந்து இறங்கினாள். “ஹாய்ய்ய்ய் சுஜீ”என்று பலமாக கத்திக் கொண்ட இறங்கியவள், ஓடி வந்து சுஜினியை கட்டிக் கொண்டாள். சரண்யாவின் வரவேற்பைக் கண்டு சுஜினிக்கு ஒருபக்கம் கூச்சமாக இருந்தாலும், மறுபக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தது.
“ஹாய் சரண்யா…எப்படி இருக்க?”என்று சரண்யாவின் அணைப்பில் இருந்து மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு வினவினாள்.
“ஐம் சூப்பர்ப்…ஜேர்னி எப்படி? ஒ.கேவா? அம்மா எப்படி இருக்காங்க? உன் மாமா ஃபேமிலி ஏர்போர்ட் வந்தாங்களா?“என்று அடுத்தடுத்து கேள்விகளாக கேட்டுக் கொண்டே செல்ல, அப்போது அங்கே வந்த சரண்யாவின் மாமா, “சரண் பேபி, வீட்டுக்கு போய் பேசிக்கலாம். 30 செகண்ட்ஸ்க்கு மேல இங்க கார் நிறுத்தக் கூடாது…கமான் ஹரி அப்” என்று பேசியபடிக்கே சுஜினியின் டிராலியில் இருந்து சூட்கேஸ்களை காரின் டிக்கியில் ஏற்றத் துவங்கினார்.
பெட்டிகளை கஷ்டப்பட்டு அவர் ஏற்றுவதைக் கண்ட, விவேக், தானாக முன்வந்து “மே ஐ சார்?”என்று வினவினான். இருவருமாக பெட்டிகளை அடுக்கியதும், “ரொம்ப தேங்க்ஸ் விவேக்…”என்று மொழிந்த சுஜினி, சரண்யாவிடம் திரும்பி, “இது மிஸ்டர் விவேக். இவரும் சென்னை தான். மோர் ஓவர், ஆர்கன் யுனிவர்சிட்டி தான்… இது சரண்யா, என்னோட ஃப்ரெண்ட்”என்று சரண்யாவிடம் விவேக்கை மாத்திரம் அறிமுகப்படுத்தினாள் சுஜினி. சதீஷை வேண்டுமென்றே பேச்சில் இழுக்கக் கூடாது என்ற எண்ணமெல்லாம் சுஜினியிடம் இருக்கவில்லை. சுஜினி சரண்யாவுடம் பேச ஆரம்பித்தவுடனேயே சதீஷ் “இவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை”என்பது போல் இரண்டடி நகர்ந்து விட்டிருந்தான்.
சதீஷ் என்று கத்தி அழைத்து, இது என் தோழி, இது அவள் மாமா என்றெல்லாம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சுஜினிக்கு தோன்றவில்லை. அவ்வளவு தூரம் சதீஷ் எதார்த்தமாக நடந்து கொள்ளவும் இல்லை. மேலும், இயல்பாக உதவிய விவேக்கிடம் நன்றி சொல்லாமல் செல்வதும் நாகரீகமற்றது எனக்கருதியே விவேக்கை அறிமுகப்படுத்தினாள். சதீஷிடம் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என கண்கள் ஒரு நொடி அவன் இருக்கும் இடத்தை அலச, சதீஷ் கைப்பேசியை காதிற்கு கொடுத்துக் கொண்டு இவர்கள் நின்றிருந்த இடத்தை விட்டு விலகி நடக்கத் துவங்கியிருந்தான்
“ஒ.கே விவேக்…பார்க்கலாம்..டேக் கேர்” என்று விவேக்கிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சரண்யாவுடம் பேசியபடிக்கே காரில் ஏறிக் கொண்டாள். சுஜினி அவ்விடம் விட்டுச் சென்ற சிறிது நேரம் கழித்தே சதீஷ் கைப்பேசியில் பேசி முடித்து வந்திருந்தான்.
“என்ன பிரியாவிடை கொடுத்தாச்சா?”என்று எடுத்ததுமே விவேக்கிடம் எகிறினான். எதனால் இந்த கோபம் என்று சதீஷிற்குமே ஆச்சர்யமாக இருந்தது. வேண்டும் என்றே அல்லவா நான் கைப்பேசியை எடுத்துக் கொண்டு இவ்விடம் விட்டு நகர்ந்தேன். காரில் ஏறும் சமயம் அவளை நான் பார்த்தேன் தானே. அவளாக அழைத்து, “பை சதீஷ்”என்று சொன்னால் குறைந்தா போவாள். இல்லை இந்த விவேக் தடியன் போல், “சுஜி, சுஜி”என்று பின்னாலேயே செல்லம் கொஞ்சிக் கொண்டு திரிய வேண்டுமா? என மனம் எசிலி போட, தன் கோபத்தை விவேக்கிடம் காட்டும் முன்னர், சதீஷின் அண்ணன் கிஷோர் வந்துவிட்டிருந்தான். “ஹே கைஸ்…..சாரி டா, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு….கமான் கமான், லக்கேஜ் எடுங்க…போற வழியில பேசிக்கலாம்…”என்று கிஷோர் துரிதப்படுத்த விவேக்கும் சதீஷும் தங்களது டிராலிகளை வண்டியில் நிரப்பிக் கொண்டு கிளம்பினர்.
“சோ, ஒருவழியா அமெரிக்கா வந்துட்டீங்க….வெரி ஹேப்பி ஃபார் யூ கைஸ்… அம்மா அப்பா எப்படி இருக்காங்க? உன் அம்மா தம்பி தங்கச்சிலாம் ஒ.கேவா”என்று கிஷோர் மடைதிறந்த வெள்ளம் போல் பேசிக் கொண்டே லாவகமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான். கிஷோரின் கேள்விகளுக்கு தக்க பதில்களை இருவரும் சொல்லிக் கொண்டே வந்தனர். ஒருகட்டத்தில் சதீஷிற்கு கிஷோரின் கேள்விகள் கோபமூட்ட, “கொஞ்ச நேரம் கூட அமைதியா இல்லாம, ஏண்டா இவ்வளோ கொஸ்ட்டியன்ஸ் கேட்கற?” என்று கேட்டே விட்டான்.
[the_ad id=”6605″]
கிஷோர் இதற்கெல்லாம் அசறுவதாக இல்லை. “எவ்வளோ நாள் கழிச்சு உங்களை பார்க்கறேன்…ஐ ஃபீல் எக்ஸ் சைட்டட் மேன்” என்று சதீஷின் ஆத்திரம் உணராமல் தன் போக்கில் இயல்பாக பேசிக் கொண்டே வண்டியை ஓட்டினான். நல்ல வேளையாக, சதீஷ் பின் இருக்கையிலும், விவேக் கிஷோரின் அருகினிலும் அமர்ந்திருந்தபடியால் சதீஷின் மெளனமோ, காட்டமான பதிலோ எடுபடவில்லை. சதீஷ் கார் சீட்டின் மேல் வாகாக சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொள்ள, விவேக்கும் கிஷோரும் வழியெல்லாம் பேசிக் கொண்டே வந்தனர்.
ஒரு மணி நேர நெடுஞ்சாலைப் பயணத்தை அடுத்து, வானளாவிய கட்டிடங்கள் தென்படத்துவங்கின. சதீஷ் மெல்லிய சீரான குரட்டை சத்தத்துடன் உறங்கத் துவங்கியிருக்க, விவேக், இன்னமும் கிஷோருடன் பேசிக் கொண்டேயிருந்தான்.
“ஹே ஸ்லீப்பி ஹெட், வேக் அப் மேன்….”என்று கிஷோர் தன் தம்பியை எழுப்ப, கார் அந்த பல வயல்வெளிகளையும், சிறிய புல் மேடுகளையும் கடந்து அந்த ஊரினுள் நுழைந்திருந்தது. விடிவதற்கு இன்னும் நேரமிருந்ததால் சுற்றுப்புற காட்சிகள் எதுவும் ரசிக்கும் படிக்கு தெரியவில்லை. நகரின் பல்வேறு தங்கும் விடுதிகள் அந்த நள்ளிரவு மூன்று மணிக்கும் கூட மக்கள் கூட்டத்துடன் காட்சியளித்தது.