மிகவும் அழகான பதிவு மித்ரா பரணி????.ரேக்ளா பந்தயத்தில் தொடங்கும் கதை ரேக்ளாவில் முடிகிறது???.
பொதுவாக கதைகளில் கால்நடை மருத்துவராக, வேளாண்மை துறையில் அதிகாரியாக ஹீரோவை காண்பிப்பர்.அந்த எண்ணத்தை மாற்றி அரசியையும்,அரும்பையும் காண்பித்தவிதம் அருமை???.
அமைதியான பெண்ணாக தமிழ் என்றால்,அதிரடியும்,குறும்புமாக அரசியும்,அரும்பும் வருகின்றனர்.நங்கை,வேந்தன்,தீரன் குறும்பில் இவர்களையும் மிஞ்சி விட்டனர்???. குலசேகரனின் நீண்ட நாள் ஆசையான மீசையின் மீசையை பிச்சிடனும் என்ற நினைப்பும். மகனால் நிறைவேறியது????.
மாறன் இயற்கை விவசாயி விருது பெற்றதும்,விக்ரமன்,குலசேகரன் தலைவர்களாகவும். முன்னேற்றம் கண்டனர்????.
நாயகியும், வேலாத்தாளும் இவர்கள் அம்மாவே பராவாயில்லை என நினைக்க வைத்த கொள்ளுப்பேரன்களுடன்???.பிரியமான மாமிர்களாக லட்சுமி,சாரதா ,பேரன்களின் பாசத்தில் மூன்று சாமிகளும் மரகதமும்,இவர்களுடன் மாரிமுத்து குடும்பமும் அருமையான கதை???.
கிராமிய தமிழில், மண்மனம் மாறாமல் கதை.காலத்தால் மறைந்த நெற்பயிர்கள்,நாட்டு மாடுகள்,கோழிகள், பாரம்பரிய விளையாட்டுகளை காப்பாற்ற முயற்ச்சி ,ஆராய்ச்சி என அருமையான கதைக்களம்???.
கதைக்கேற்ற படங்களை போட்டது மிகவும் அருமை.மாட்டின் மடியில் பால்குடிக்கும் படங்கள் அத்தனை அழகு???.
அருமையான கதை,இனிமையான முடிவு.வெற்றிபெற வாழ்த்துக்கள் மித்ரா பரணி???.