டாப் 18 வரை என்னை அழைத்து வந்ததே எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் ஃபிரண்ட்ஸ். போட்டி நடந்துக் கொண்டு இருக்கும் சூழலில் பங்கேற்பே இருக்குமா என்ற சந்தேகம் தான் .இடைவெளி அதிகம் ஏன் என்ற வாசகர்களின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூட தர முடியவில்லை ... காரணம் ,சென்னையில் அப்போதுதான் பரவத் தொடங்கிய கொரோனா என்னையும் என் குடும்பத்தாரையும் விட்டு வைக்கவில்லை.
இப்போ எப்படியோ ஆரம்ப காலம் என்பதால் அரசாங்கம் கொரோனா நோயாளிகளை எப்படி கவனித்துக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம் தானே ….
உண்மையில் அது ஒரு கொடுமையான நாட்கள் ஃபிரண்ட்ஸ் … துவக்கத்தில் ஆறேழு நாட்கள் … என்னால் பேசக் கூட முடியவில்லை. மருத்துவர்கள் உங்களுக்கு விருப்பமானதில் மனதைச் செலுத்துங்கள் என்கிறார் .. ம்ஹூம்… என் நாவில் சுவையும் , வாசனையும் திரும்பி வரவும் தான் நான் குணமடைகிறேன் என்ற எண்ணமே. என் கணவரின் தந்தைக்கு இருந்த பத்து நாட்களில் நான்கு நாட்கள் வென்டிலேஷன் தரப்படுகிறது… மொத்தத்தில் நாங்கள் அனைவரும் உயிர் பிழைப்போமா என்ற நினைவுதான் … பதினான்கு நாட்கள் முடிந்து … அனைவரும் குணமடைந்து விட்டீர்கள் .. இனி பிரச்சினை இல்லை என்றதும் தான் .. என்னால் எழுதவும் எழுதியதை சரிபார்க்கவும் முடிந்தது … அப்படியும் என் நெருங்கிய இளவயது உறவினர் ஒருவரையும் கொரானா கொண்டு சென்று விட்டது.
நாங்கள் மீண்டது தெய்வச் செயல்தான்.ஆனாலும் இன்னும் அந்த உணவு முறைகளை கடைப்பிடித்து வருகிறோம் ஃபிரண்ட்ஸ்..அது மட்டும் தான் மருந்து … அதற்கான அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனை சென்று விடுங்கள். அலட்சியம் வேண்டாம் …
அந்நேரம் எனக்கு ஆறுதலளித்த நம் தள அட்மின்கள் … தள தோழியர்கள், என்னை ஊக்கப்படுத்திய வாசகர்கள் யாரையும் மறக்க இயலாது … நன்றி நன்றி நன்றி ….
இப்போ எப்படியோ ஆரம்ப காலம் என்பதால் அரசாங்கம் கொரோனா நோயாளிகளை எப்படி கவனித்துக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம் தானே ….
உண்மையில் அது ஒரு கொடுமையான நாட்கள் ஃபிரண்ட்ஸ் … துவக்கத்தில் ஆறேழு நாட்கள் … என்னால் பேசக் கூட முடியவில்லை. மருத்துவர்கள் உங்களுக்கு விருப்பமானதில் மனதைச் செலுத்துங்கள் என்கிறார் .. ம்ஹூம்… என் நாவில் சுவையும் , வாசனையும் திரும்பி வரவும் தான் நான் குணமடைகிறேன் என்ற எண்ணமே. என் கணவரின் தந்தைக்கு இருந்த பத்து நாட்களில் நான்கு நாட்கள் வென்டிலேஷன் தரப்படுகிறது… மொத்தத்தில் நாங்கள் அனைவரும் உயிர் பிழைப்போமா என்ற நினைவுதான் … பதினான்கு நாட்கள் முடிந்து … அனைவரும் குணமடைந்து விட்டீர்கள் .. இனி பிரச்சினை இல்லை என்றதும் தான் .. என்னால் எழுதவும் எழுதியதை சரிபார்க்கவும் முடிந்தது … அப்படியும் என் நெருங்கிய இளவயது உறவினர் ஒருவரையும் கொரானா கொண்டு சென்று விட்டது.
நாங்கள் மீண்டது தெய்வச் செயல்தான்.ஆனாலும் இன்னும் அந்த உணவு முறைகளை கடைப்பிடித்து வருகிறோம் ஃபிரண்ட்ஸ்..அது மட்டும் தான் மருந்து … அதற்கான அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனை சென்று விடுங்கள். அலட்சியம் வேண்டாம் …
அந்நேரம் எனக்கு ஆறுதலளித்த நம் தள அட்மின்கள் … தள தோழியர்கள், என்னை ஊக்கப்படுத்திய வாசகர்கள் யாரையும் மறக்க இயலாது … நன்றி நன்றி நன்றி ….