உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி......
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ.....