பிரியங்கள்-35 (Final)

Advertisement

Sri_Author

Well-known member
Member
நிறைய நிறைய நன்றிகள் மக்களே..

Love தான் தீம் அப்பறம் ஏன் Misunderstanding சண்டை எல்லாம்.. ஒரு Healthy relationship/ healthy marriage ஐ படிக்குறது என்ன சுகம்னு உங்க கமெண்ட்ஸ் ஒவ்வொரு பதிவிலும் காட்டிடுச்சு..

படிங்க கருத்துக்களைப் பகிர்ந்துகோங்க..

[email protected]

https://tamilnovelwriters.com/நிழல்-35/
 
💞💞
அழகான கதையை கொடுத்த உங்களுக்கு நாலு வரியில் கருத்தை மட்டும் சொல்லி செல்ல மனமில்லை..
@Sri_Author இதோ எந்தன் பார்வையில் 👇👇👇

பிரியங்களின் நிழலில் ♥️♥️♥️
பிரியம் மட்டுமே!!!
பிரியத்தோடு மட்டுமே!!!
பிரியாத பிரியமே!!!
பிணைந்த பிரியமே!!!
நிழலும் பிரியமே!!!
நிஜமும் பிரியமே!!!
நினைவும் பிரியமே!!!
நினைத்தாலே பிரியமே!!!
நிகழ்வும் பிரியமே!!!
நிகழ்வதும் பிரியமே!!!

♥️♥️♥️அதிரன் ♥️♥️♥️
பணத்தில் கோடிஸ்வரன்!!!
குணத்திலும் கோடிஸ்வரன்!!!
ஆளுமையான அதி!!!
ஆர்ப்பரிக்கும் அவன் பிரியம்!!!
யாரிடமும் பேசாதவன்!!
அவளில் பேசுபவன்!!!
தந்தையை தொலைத்து விட்டு
தந்தையாய் மாறி நிற்பவன்!!!
தாய் பாசத்தை தேடும் சிறுவன்!!
♥️♥️♥️தேவரஞ்சனா ♥️♥️♥️
தேவதையின் அம்சம்!!!
கண்டிப்பின் உருவம்!!!
நேர்மையின் வடிவம்!!!
பெற்றோரை தொலைத்து விட்டு
சொந்தங்களால் கைவிடப்பட்ட
கன்னி பெண்!!!
துயரங்கள் அனைத்தையும்
மனதில் புதைத்து விட்டு
தாயாய் தனயனை சுமக்கும்
தைரியசாலி ரஞ்சி!!
அவனுக்காகவே
திருமணத்தையும் மறுப்பவள்!!
பணத்தை மதிக்காத
அவள் குணத்தில் கவரப்பட்டவன்
தன்னை அறியாமல்
அவளில் தொலைந்து
அவளிலும் நிறைகின்றான்!!!
பேசாத அவர்களின் பிரியங்கள்
சொல்லாத நேசங்கள்!!
விழி பார்த்தே அவன்
வழி செல்லும் திமிரழகி !!
அவனுக்காய் அவள் யோசிப்பதும்!!
அவளுக்காக அவன் செய்வதும்!!
அவன் குடும்பத்தை
இவள் வழி நடத்த!!!
இவள் தம்பிக்கோ
அவன் தந்தையாய்!!!
தள்ளி வைத்து சோதிக்காமல்
தன் வீட்டில் இருக்க வைத்து
பாசமாய் பேணுபவன்!!!
தாயாய் மாமியாரை
மதிப்பதும், நேசிப்பதும்,
அவர் மடி சாய்ந்து
குழந்தையாய் சிரிப்பதும்
மறு மகளாய் தான் மருமகளே!!!
பிரியங்களின் நிழல்களில்
ஆணி வேராய் பிரியம்!!
விழுதுகளும் பிரியம்!!!
பிரியத்தை கூட
குடும்பத்திற்கு
பிச்சை போட யோசிக்கும்
உலகில் வாழ்கிறோம்!!
நிஜத்தில் இது போல்
நடப்பதில்லை!!
நடந்தால் பேரழகே!!!
கற்பனையில் என்றாலும்
நிறைவாய் காதலை சொல்லி
மனதை நிறைத்து
பிரியம் சொன்ன ஸ்ரீமா
இம்முறையும் போட்டியில்
வாகை சூட
வாழ்த்துக்கள்!!! 💐💐💐
உங்கள் பிரிய கதைகளும்
தொடரட்டும் என்றுமே... ♥️♥️♥️
 
Last edited:
பார்வையில் பேசும்
பாசத்தின் மொழி
பார்வையாலே
புரிதலில் நின்றோம்…


பாதி சொல்லில் கூட
பொருள் முழுதும்
புரியும் பெண்ணே
பாசம் மட்டும் அல்ல
பண்பும்
பகிர்ந்தோம் தானே....

பழகிய நாட்கள் கொஞ்சமே
புரிந்த நிமிடங்கள்தான்
அதிகமே...

பிணைந்து கிடக்கும்
பந்தம் இது
பார்வை, பாசம்
புரிதல் சேர்ந்த
பாதுகாப்பான
சொந்தம் இது.....
 

Advertisement

Advertisement

Back
Top