அடடா... அவ்ளோ அழகு அக்கா உங்கள் வரிகள்நினைவில் நீ இருந்தால்
நிம்மதியாய் இதயம் திளைக்கும்
நிஜத்தில் நீ நெருங்கினால்
நாடி துடிப்பு கூட
நழுவிடுமோ...
நிழலாய் வந்து
நின்ற உன் நினைவு
நீராய் உருகி வழிந்திடுமோ
நின் பார்வையில்....
நேரில் பார்த்த அந்த நொடியில்
நெஞ்சின் ரகசியம் நொறுங்கிடுமா...
நினைவுகள்
நெய்த காதல்
நேரில் வந்தால்
நிறுத்திடுமோ...
நிசப்தம் பேசும் பார்வைகள்
நிமிடத்தில் மொழி மாறிடுமோ...
நினைத்தது போல் இல்லாமல்
நிஜம் வந்து நின்றாலும்,
நெஞ்சுக்குள் பதிந்த காதல்
நிழலாய் என்றும் நீங்காதே…