பூ 4:
அமைச்சர் கனகவேல் வீடு....
வழக்கத்திற்கு மாறாக அந்த வீடு கொஞ்சம் கூட்டத்துடன் காணப்பட்டது.அமைச்சர் கனகவேல் என்று சொல்வதைக் காட்டிலும், தொழில்துறை அமைச்சர் கனகவேல் என்று சொன்னால் தான் அவருக்கே பிடிக்கும். அந்த பதவியின் மேலும், அரசியலிலும் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு.
அரசியலில் அவருக்கு அப்படி ஒரு நல்லபெயர். ஆனால் திரைக்கு பின்னால் என்பதைப் போல, அந்த நல்ல பெயரைக் கூட, சில திரை மறைவு விஷயங்களைச் செய்து தான் அவர் வாங்க வேண்டியிருந்தது.
பார்ப்பதற்கு எதார்த்தமான மனிதர் போல் தெரியும் அவருக்குள், ஊறிப் போன ஒரு விஷயம் உண்டென்றால் அது ஜாதி தான். இன்றைய காலகட்டத்தில் ஜாதி இல்லை என்றால் அரசியல் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர்.
எந்த தீயை மூட்டினால், எங்கு பற்றிக் கொள்ளும், எங்கு வெடிக்கும், எங்கு ஜெயிக்கும் என்று திறம்படக் கணிக்கத் தெரிந்த, ஒரு அரசியல் வாதி. அடுத்ததாக, முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவெல்லாம் அவருக்குக் கிடையாது. அந்த பதவியில் இருந்தால் சில விஷயங்களை அவரால் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் சொன்னால் தான் தலமையிடமே தலையாட்டும் என்கிற நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்.மொத்தத்தில் அரசியல் சாம்ராஜ்யத்தில் அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது.
அவர் தொழில் துறையில் அமைச்சராகி மூன்றாண்டு காலம் நிறைவடைந்ததை அடுத்து, அந்த நிகழ்வைக் கொண்டாட, தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்காகவே அவர் வீட்டின் முன்பு, அன்றைக்கு அப்படி ஒரு கூட்டம். சென்னையில் இருந்து வரும் அவரை வரவேற்பதற்காக, அவர் வீட்டின் முன்பு குழுமியிருந்தனர்.
“தலைவர் எப்ப வருவார்..?” என்று சில விசுவாசிகள் கேட்க,
“தலைவர் வர்ற நேரம் தான்...” என்று சிலர் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே..கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக உள்ளே நுழைந்தன.அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்க, கட்சி வேட்டி சட்டை சகிதம் இறங்கினார் கனகவேல்.சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம், அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி விடுவார்கள் அடிமைகள். ஆம், கண்மூடித்தனமான அடிமைகள்.
“தலைவர் வாழ்க..!” என்ற கோஷங்கள் ஒரு புறம் இருக்க,
“எப்படி இருக்கீங்க தலைவரே..!” என்று வழிந்து கொண்டும், குனிந்து கொண்டும் சென்ற சமயவாதிகள் ஒரு புறம். அனைத்தையும் இறுமாப்புடன் பார்த்த கனகவேல்...அறுபது வயதை முடித்திருந்தார்.
“நான் சொன்ன காரியம் என்ன ஆச்சு...?” என்றார் ஒருவனைப் பார்த்து.
“அதெல்லாம் அசால்ட்டா முடுச்சுட்டோம் தலைவரே..!” என்றான் அவனும்.
“ம்ம்..இனி நம்ம ஜாதிப் பொண்ணைக் காதலிக்கணும், கல்யாணம் பண்ணனும்ன்னு ஒரு பய நினைக்கக் கூடாது. அப்படியே நினைச்சாலும், நம்ம செஞ்சது தான் அவனுகளுக்கு நியாபகத்துக்கு வரணும்..!” என்றார் கனகவேல்.
“கண்டிப்பா தலைவரே...! நான் ஜெயிலுக்குப் போகக் கூடத் தயாரா இருக்கேன் தலைவரே..!” என்றான் அந்த விசுவாசி.
“உன்னை ஜெயிலுக்கு அனுப்புறதுக்கு, இந்த சின்ன விஷயம் எல்லாம் ஒன்னும் செய்யாது. அப்பறம் நான் இருக்குறதுல என்ன பிரயோஜனம்? நம்ம மூச்சு விட சொன்னாத்தான்...சி எம் மூச்சே விடுவார்.இதெல்லாம் எம்மாத்திரம்..?” என்றார் கனகவேல்.
“பொண்ணை அவங்க வீட்டுல ஒப்படைச்சுட்டோம் தலைவரே..!” என்றான் பவ்யமாய்.
“நல்லது..” என்றபடி உள்ளே செல்ல முயன்ற கனகவேலை, உள்ளிருந்து வந்த அவர் மனைவி ராதிகாவின் ஆரத்தித் தட்டு தடுத்தது.
“என்னம்மா இதெல்லாம்...?” என்றார்.
“சும்மா இருங்க..! உங்க மேல நிறைய கண்திருஷ்ட்டி பட்டிருக்கு... அதான்..!” என்றபடி அவர் ஆரத்தியைச் சுற்ற, மனைவியை பெருமை பொங்க பார்த்தார் கனகவேல்.
“இப்ப உள்ள போங்க..!” என்றபடி அவர் ஆரத்தியை வெளியே கொட்ட சென்றார்.
உள்ளே சென்ற கனகவேல் அதற்கு அடுத்து வந்த மூன்று மணி நேரமும், கட்சி ஆட்களுடன் செலவிட்டார்.
“என்னம்மா..? அப்பா எப்ப வந்தார்..?” என்றபடி வந்தாள் திவ்யா.
“அவர் அப்பவே வந்துட்டார்..!” என்ற ராதிகா, அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.ஏனோ அவரின் விலகல் திவ்யாவை கொஞ்சம் பாதித்தது. காரணம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.காசை இழைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா அமைப்பிலான வீட்டில், பாசம் மட்டும் ஏனோ வெளிப் பூச்சாகத்தான் இருந்தது.
அனைவரும் களைந்து சென்ற பின்பு, கொஞ்சம் ஓய்வாக சாய்ந்து அமர்ந்தார் கனகவேல்.
“ஹாய் டாட்..! எப்ப வந்திங்க..? எப்படி இருக்கீங்க..?” என்றாள் திவ்யா.
“வாடா கண்ணு. எப்படி இருக்க..? பிஸ்னஸ் எல்லாம் எப்படிப் போகுது..?” என்றார் மகளை வாஞ்சையுடன்.
“நீங்க இருக்கும் போது, என்ன பிரச்சனை வந்திடப் போகுது டாட்...?” என்றாள். அதற்கு அவருடைய இறுமாப்பான சிரிப்பு மட்டுமே பதிலாய்க் கிடைத்தது.
“எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டாட்..!” என்றாள்.
“சொல்லுமா..? அப்படி என்ன முக்கியமான விஷயம்..?” என்றார் கனகவேல்.
“டாட்..! எனக்கு எதையும் நேராப் பேசித்தான் பழக்கம். அதனால உங்ககிட்ட நேரடியாவே கேட்குறேன்..எனக்கு ஒருத்தரைப் பிடிச்சிருக்கு..!” என்றாள் நேராக.
அவளின் பேச்சில் கனகவேலின் புருவம் இடுங்கியது. ‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்ட உடன், அவருக்கு உள்ளே பற்றிக் கொண்டு எரிந்தது.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“ம்ம்..சரி..! பையன் யாரு..? என்ன பண்றான்..? முக்கியமா என்ன ஜாதி..?” என்றார் சற்று உற்று நோக்கிய கண்களுடன்.
“டாட்..! நான் உங்க பொண்ணு.கண்டிப்பா தப்பான ஆளை சூஸ் பண்ண மாட்டேன். பையன் நம்ம ஜாதி தான். RRS இண்டஸ்ட்ரீஸ் எம்டி விஜய குமார் தான்..!” என்றாள் அசிரத்தையாக.
அவள் அசாதாரணமாக சொல்ல, அதைக் கேட்ட கனகவேலோ அதிர்ந்து நின்றார்.
“நீ என்ன சொல்ற திவ்யா..?” என்றார், அதிர்ச்சி கொஞ்சமும் மாறாமல்.
“நான் சொன்னது உங்களுக்கு புரியலையா டாடி...?” என்றாள் அவளும் குழப்பமாக.
“அந்த பையனும் உன்னை விரும்புறானா..?” என்றார் யோசனையுடன்.
“இல்ல டாடி..! அவன் என்னை ஒருதடவை தான் பார்த்திருக்கான். எனக்கு அவனைப் பார்த்த உடனே பிடிச்சுடுச்சு.ஐ லைக் ஹிம்..” என்றாள்.
“இது நடக்காது திவ்யா..” என்றார்.
“என்ன டாடி சொல்றிங்க...?”
“இதுக்கு அந்த பையனும் சம்மதிக்க மாட்டான். அவங்க வீட்லயும் சம்மதிக்க மாட்டாங்க..!” என்றார் கனகவேல்.
“என்ன டாடி..? உங்களால முடியாததுன்னு எதுவுமே இல்லைன்னு சொல்லுவிங்க. இப்ப என்னடான்னா இப்படி சொல்றிங்க..? எனக்கு எல்லா விதத்துலயும் அவன் மட்டும் தான் பொருத்தமா இருப்பான்..!” என்றாள் விடாப்பிடியாக.
“இது நடக்காது..!” என்றார் உறுதியாக.
“நடந்த எல்லா விஷயமும் எனக்குத் தெரியும் டாட்..” என்ற திவ்யா, மீண்டும் தகப்பனை அதிர வைத்தாள்.
“நீ என்ன சொல்ற திவ்யா..?” என்றார்.
“ஆமா டாட்..! எனக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு சொல்றேன். எனக்கு அவனைப் பழிவாங்கியேத் தீரனும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் அவனுக்கு மிகப் பெரிய தண்டனையா இருக்க முடியும்..!” என்றாள் திவ்யா.
“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு சுத்தமா புரியலை. ஆனா இந்த விஷயம் கண்டிப்பா நடக்காது. அது மட்டும் உறுதி..” என்றார் கனகவேல்.
“எனக்கு விஜய் தான் வேணும்..! நீங்க நடத்திக் குடுக்குறிங்க. இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது..!” என்றபடி, வார்த்தைகளில் முழுக் கோபத்தையும் காட்டி விட்டு சென்றாள் திவ்யா.அவள் சென்ற பின்பு அவருக்குத் தான் தலைவலியாக இருந்தது.அவள் நினைப்பது போல், அது சாதாரண காரியம் அல்ல என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க,
“டீ எடுத்துக்கோங்க..!” என்றார் ராதிகா.
“ம்ம்..தேங்க்ஸ் ராதிகா..!” என்றபடி டீயை எடுத்துக் கொண்டவர், அதே யோசனையுடன் குடிக்க, அவரையேப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குப் புரிந்து போனது அவரின் மனநிலை.
“திவ்யாவுக்கு சொல்லிப் புரியவைக்கலாம். அவளுக்காக ரொம்ப யோசிக்காதிங்க..” என்றார் ராதிகா.
“அது கஷ்ட்டம் ராதிகா..! அவ முடிவுல உறுதியா இருக்கா..!” என்றார் கனகவேல்.
“அதுக்காக, நீங்க அந்த வீட்டுக்குப் போகப் போறிங்களா..? அதனால எவ்வளவு பிரச்சனை வரும்னு உங்களுக்கத் தெரியும் தான..!” என்றார்.
“இது உடனே செய்யக் கூடிய விஷயம் இல்லை. கொஞ்சம் யோசிச்சு தான் செய்யணும். இப்போதைக்கு இதை இப்படியே விடுவோம்..!” என்றார்.
“உங்களால, அவங்க பட்டது போதும்..!” என்றார் ராதிகா உறுதியாக.
“பழசைப் பத்தி இப்ப பேசாத.என்ன பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். நீ தேவையில்லாததை நினைச்சு உடம்பைப் போட்டு வருத்திக்காத...” என்றவர்,
“விமல் எங்க..?” என்றார்.
“வர்ற நேரம் தான்..!” என்றபடி சென்றார் ராதிகா.
கனகவேலின் தங்கை மகன் தான் விமல். விமலின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட, சிறுவயதில் இருந்து தாய்மாமன் வசமே வளர்ந்தான். மாமனுக்கு எல்லாமே அவன்தான்.இப்போது திவ்யாவுக்கும்.
அமைச்சர் கனகவேல் வீடு....
வழக்கத்திற்கு மாறாக அந்த வீடு கொஞ்சம் கூட்டத்துடன் காணப்பட்டது.அமைச்சர் கனகவேல் என்று சொல்வதைக் காட்டிலும், தொழில்துறை அமைச்சர் கனகவேல் என்று சொன்னால் தான் அவருக்கே பிடிக்கும். அந்த பதவியின் மேலும், அரசியலிலும் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு.
அரசியலில் அவருக்கு அப்படி ஒரு நல்லபெயர். ஆனால் திரைக்கு பின்னால் என்பதைப் போல, அந்த நல்ல பெயரைக் கூட, சில திரை மறைவு விஷயங்களைச் செய்து தான் அவர் வாங்க வேண்டியிருந்தது.
பார்ப்பதற்கு எதார்த்தமான மனிதர் போல் தெரியும் அவருக்குள், ஊறிப் போன ஒரு விஷயம் உண்டென்றால் அது ஜாதி தான். இன்றைய காலகட்டத்தில் ஜாதி இல்லை என்றால் அரசியல் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர்.
எந்த தீயை மூட்டினால், எங்கு பற்றிக் கொள்ளும், எங்கு வெடிக்கும், எங்கு ஜெயிக்கும் என்று திறம்படக் கணிக்கத் தெரிந்த, ஒரு அரசியல் வாதி. அடுத்ததாக, முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவெல்லாம் அவருக்குக் கிடையாது. அந்த பதவியில் இருந்தால் சில விஷயங்களை அவரால் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் சொன்னால் தான் தலமையிடமே தலையாட்டும் என்கிற நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்.மொத்தத்தில் அரசியல் சாம்ராஜ்யத்தில் அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது.
அவர் தொழில் துறையில் அமைச்சராகி மூன்றாண்டு காலம் நிறைவடைந்ததை அடுத்து, அந்த நிகழ்வைக் கொண்டாட, தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்காகவே அவர் வீட்டின் முன்பு, அன்றைக்கு அப்படி ஒரு கூட்டம். சென்னையில் இருந்து வரும் அவரை வரவேற்பதற்காக, அவர் வீட்டின் முன்பு குழுமியிருந்தனர்.
“தலைவர் எப்ப வருவார்..?” என்று சில விசுவாசிகள் கேட்க,
“தலைவர் வர்ற நேரம் தான்...” என்று சிலர் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே..கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக உள்ளே நுழைந்தன.அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்க, கட்சி வேட்டி சட்டை சகிதம் இறங்கினார் கனகவேல்.சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம், அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி விடுவார்கள் அடிமைகள். ஆம், கண்மூடித்தனமான அடிமைகள்.
“தலைவர் வாழ்க..!” என்ற கோஷங்கள் ஒரு புறம் இருக்க,
“எப்படி இருக்கீங்க தலைவரே..!” என்று வழிந்து கொண்டும், குனிந்து கொண்டும் சென்ற சமயவாதிகள் ஒரு புறம். அனைத்தையும் இறுமாப்புடன் பார்த்த கனகவேல்...அறுபது வயதை முடித்திருந்தார்.
“நான் சொன்ன காரியம் என்ன ஆச்சு...?” என்றார் ஒருவனைப் பார்த்து.
“அதெல்லாம் அசால்ட்டா முடுச்சுட்டோம் தலைவரே..!” என்றான் அவனும்.
“ம்ம்..இனி நம்ம ஜாதிப் பொண்ணைக் காதலிக்கணும், கல்யாணம் பண்ணனும்ன்னு ஒரு பய நினைக்கக் கூடாது. அப்படியே நினைச்சாலும், நம்ம செஞ்சது தான் அவனுகளுக்கு நியாபகத்துக்கு வரணும்..!” என்றார் கனகவேல்.
“கண்டிப்பா தலைவரே...! நான் ஜெயிலுக்குப் போகக் கூடத் தயாரா இருக்கேன் தலைவரே..!” என்றான் அந்த விசுவாசி.
“உன்னை ஜெயிலுக்கு அனுப்புறதுக்கு, இந்த சின்ன விஷயம் எல்லாம் ஒன்னும் செய்யாது. அப்பறம் நான் இருக்குறதுல என்ன பிரயோஜனம்? நம்ம மூச்சு விட சொன்னாத்தான்...சி எம் மூச்சே விடுவார்.இதெல்லாம் எம்மாத்திரம்..?” என்றார் கனகவேல்.
“பொண்ணை அவங்க வீட்டுல ஒப்படைச்சுட்டோம் தலைவரே..!” என்றான் பவ்யமாய்.
“நல்லது..” என்றபடி உள்ளே செல்ல முயன்ற கனகவேலை, உள்ளிருந்து வந்த அவர் மனைவி ராதிகாவின் ஆரத்தித் தட்டு தடுத்தது.
“என்னம்மா இதெல்லாம்...?” என்றார்.
“சும்மா இருங்க..! உங்க மேல நிறைய கண்திருஷ்ட்டி பட்டிருக்கு... அதான்..!” என்றபடி அவர் ஆரத்தியைச் சுற்ற, மனைவியை பெருமை பொங்க பார்த்தார் கனகவேல்.
“இப்ப உள்ள போங்க..!” என்றபடி அவர் ஆரத்தியை வெளியே கொட்ட சென்றார்.
உள்ளே சென்ற கனகவேல் அதற்கு அடுத்து வந்த மூன்று மணி நேரமும், கட்சி ஆட்களுடன் செலவிட்டார்.
“என்னம்மா..? அப்பா எப்ப வந்தார்..?” என்றபடி வந்தாள் திவ்யா.
“அவர் அப்பவே வந்துட்டார்..!” என்ற ராதிகா, அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.ஏனோ அவரின் விலகல் திவ்யாவை கொஞ்சம் பாதித்தது. காரணம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.காசை இழைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா அமைப்பிலான வீட்டில், பாசம் மட்டும் ஏனோ வெளிப் பூச்சாகத்தான் இருந்தது.
அனைவரும் களைந்து சென்ற பின்பு, கொஞ்சம் ஓய்வாக சாய்ந்து அமர்ந்தார் கனகவேல்.
“ஹாய் டாட்..! எப்ப வந்திங்க..? எப்படி இருக்கீங்க..?” என்றாள் திவ்யா.
“வாடா கண்ணு. எப்படி இருக்க..? பிஸ்னஸ் எல்லாம் எப்படிப் போகுது..?” என்றார் மகளை வாஞ்சையுடன்.
“நீங்க இருக்கும் போது, என்ன பிரச்சனை வந்திடப் போகுது டாட்...?” என்றாள். அதற்கு அவருடைய இறுமாப்பான சிரிப்பு மட்டுமே பதிலாய்க் கிடைத்தது.
“எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டாட்..!” என்றாள்.
“சொல்லுமா..? அப்படி என்ன முக்கியமான விஷயம்..?” என்றார் கனகவேல்.
“டாட்..! எனக்கு எதையும் நேராப் பேசித்தான் பழக்கம். அதனால உங்ககிட்ட நேரடியாவே கேட்குறேன்..எனக்கு ஒருத்தரைப் பிடிச்சிருக்கு..!” என்றாள் நேராக.
அவளின் பேச்சில் கனகவேலின் புருவம் இடுங்கியது. ‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்ட உடன், அவருக்கு உள்ளே பற்றிக் கொண்டு எரிந்தது.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“ம்ம்..சரி..! பையன் யாரு..? என்ன பண்றான்..? முக்கியமா என்ன ஜாதி..?” என்றார் சற்று உற்று நோக்கிய கண்களுடன்.
“டாட்..! நான் உங்க பொண்ணு.கண்டிப்பா தப்பான ஆளை சூஸ் பண்ண மாட்டேன். பையன் நம்ம ஜாதி தான். RRS இண்டஸ்ட்ரீஸ் எம்டி விஜய குமார் தான்..!” என்றாள் அசிரத்தையாக.
அவள் அசாதாரணமாக சொல்ல, அதைக் கேட்ட கனகவேலோ அதிர்ந்து நின்றார்.
“நீ என்ன சொல்ற திவ்யா..?” என்றார், அதிர்ச்சி கொஞ்சமும் மாறாமல்.
“நான் சொன்னது உங்களுக்கு புரியலையா டாடி...?” என்றாள் அவளும் குழப்பமாக.
“அந்த பையனும் உன்னை விரும்புறானா..?” என்றார் யோசனையுடன்.
“இல்ல டாடி..! அவன் என்னை ஒருதடவை தான் பார்த்திருக்கான். எனக்கு அவனைப் பார்த்த உடனே பிடிச்சுடுச்சு.ஐ லைக் ஹிம்..” என்றாள்.
“இது நடக்காது திவ்யா..” என்றார்.
“என்ன டாடி சொல்றிங்க...?”
“இதுக்கு அந்த பையனும் சம்மதிக்க மாட்டான். அவங்க வீட்லயும் சம்மதிக்க மாட்டாங்க..!” என்றார் கனகவேல்.
“என்ன டாடி..? உங்களால முடியாததுன்னு எதுவுமே இல்லைன்னு சொல்லுவிங்க. இப்ப என்னடான்னா இப்படி சொல்றிங்க..? எனக்கு எல்லா விதத்துலயும் அவன் மட்டும் தான் பொருத்தமா இருப்பான்..!” என்றாள் விடாப்பிடியாக.
“இது நடக்காது..!” என்றார் உறுதியாக.
“நடந்த எல்லா விஷயமும் எனக்குத் தெரியும் டாட்..” என்ற திவ்யா, மீண்டும் தகப்பனை அதிர வைத்தாள்.
“நீ என்ன சொல்ற திவ்யா..?” என்றார்.
“ஆமா டாட்..! எனக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு சொல்றேன். எனக்கு அவனைப் பழிவாங்கியேத் தீரனும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் அவனுக்கு மிகப் பெரிய தண்டனையா இருக்க முடியும்..!” என்றாள் திவ்யா.
“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு சுத்தமா புரியலை. ஆனா இந்த விஷயம் கண்டிப்பா நடக்காது. அது மட்டும் உறுதி..” என்றார் கனகவேல்.
“எனக்கு விஜய் தான் வேணும்..! நீங்க நடத்திக் குடுக்குறிங்க. இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது..!” என்றபடி, வார்த்தைகளில் முழுக் கோபத்தையும் காட்டி விட்டு சென்றாள் திவ்யா.அவள் சென்ற பின்பு அவருக்குத் தான் தலைவலியாக இருந்தது.அவள் நினைப்பது போல், அது சாதாரண காரியம் அல்ல என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க,
“டீ எடுத்துக்கோங்க..!” என்றார் ராதிகா.
“ம்ம்..தேங்க்ஸ் ராதிகா..!” என்றபடி டீயை எடுத்துக் கொண்டவர், அதே யோசனையுடன் குடிக்க, அவரையேப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குப் புரிந்து போனது அவரின் மனநிலை.
“திவ்யாவுக்கு சொல்லிப் புரியவைக்கலாம். அவளுக்காக ரொம்ப யோசிக்காதிங்க..” என்றார் ராதிகா.
“அது கஷ்ட்டம் ராதிகா..! அவ முடிவுல உறுதியா இருக்கா..!” என்றார் கனகவேல்.
“அதுக்காக, நீங்க அந்த வீட்டுக்குப் போகப் போறிங்களா..? அதனால எவ்வளவு பிரச்சனை வரும்னு உங்களுக்கத் தெரியும் தான..!” என்றார்.
“இது உடனே செய்யக் கூடிய விஷயம் இல்லை. கொஞ்சம் யோசிச்சு தான் செய்யணும். இப்போதைக்கு இதை இப்படியே விடுவோம்..!” என்றார்.
“உங்களால, அவங்க பட்டது போதும்..!” என்றார் ராதிகா உறுதியாக.
“பழசைப் பத்தி இப்ப பேசாத.என்ன பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். நீ தேவையில்லாததை நினைச்சு உடம்பைப் போட்டு வருத்திக்காத...” என்றவர்,
“விமல் எங்க..?” என்றார்.
“வர்ற நேரம் தான்..!” என்றபடி சென்றார் ராதிகா.
கனகவேலின் தங்கை மகன் தான் விமல். விமலின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட, சிறுவயதில் இருந்து தாய்மாமன் வசமே வளர்ந்தான். மாமனுக்கு எல்லாமே அவன்தான்.இப்போது திவ்யாவுக்கும்.