![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f496.png)
![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f496.png)
பிரகாஷ் - சாலாவுக்கு இப்ப தா ஒன்னோட சாக்கடை புத்தி தெரிஞ்சு இருக்கு.
எல்லாரையும் யோசிச்சேன்னு சொல்லுறியே.... நீ யாரையும். யோசிக்கலை... ஒன்ன மட்டும் தா யோசிச்சு இருக்க.
தப்பு செஞ்சவங்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும்னு சொல்லுவாங்க.....
ஆனா ஓங்கிட்ட இருக்குறது எல்லாம் அநியாயம் .... சுயநலம் தான்.
நீ என்ன நினச்ச.?
சாலா எல்லாத்தையும் மறந்துட்டு ஒங்கூட குடும்பம் நடத்துவாங்க ன்னா....
ஒரு போதும் நீ செஞ்ச துரோகத்தை மறக்க மாட்டாங்க.....
ஷாலினி கிட்ட எல்லாம் கட்டுப்பாடு இல்லாம கிடைக்குமா....
கட்டுப்பாடு இல்லாம இருந்ததால் தா கட்டுப்படுத்துன புருஷன விட்டுட்டு வந்திருக்கா.... இன்னும் ஒங்க பழக்கம் தொடர்ந்தா தெரியும் அவள பத்தி.
ஒன்னோட தேவைகளை மனசு விட்டு சாலா கிட்ட பேசி இருக்கலாம் ல... ஷாலினி ய பத்தியும் சொல்லி இருந்தா சாலா வே ஒரு நல்ல துணைய ஷாலினிக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க. ஆனா இது எல்லாம் நடந்திருந்தாலும் ஒனக்கு காணாது. நீ தா கட்டுப்பாடு இல்லாமல் இருக்க நினச்சு இருந்து இருக்கியே....
என்னோட அப்பா, அம்மா, தம்பி, தங்கை, பொண்டாட்டி, பிள்ளைகன்னு எல்லாத்தையும் நா பாத்தேன்னு சொல்லுறியே....
உண்மையில் எல்லாத்தையும் பாத்தது சாலா தான். காசு பணம் குடுக்குறது மட்டும் பாக்குறது இல்லை. நம்ம குடும்பம்னு எல்லா எடத்துலயும் நிக்கணும். அவங்கள அரவணைக்கணும். அத தான் சாலா செஞ்சி இருக்காங்க ...
எப்பவுமே...... புத்தியில் இருக்க ஒனக்கு இது புரியாது. இத தா சாலா செஞ்ச தப்பா நீ சொல்லுற....
ஒனக்கு தேவையானது கிடைக்கலைன்ன நீ வழி மாறி போவியா... அப்ப ஷாலினி இல்லன்னாலும் நீ ஏதாவது சனிய தேடி இருப்ப. ஒனக்கு பக்கத்துல ஒன்னிய மாதிரி கிடைக்கவும் வச்சிக்கிட்ட. இப்போதைக்கு ஒங்க ரெண்டு பேருக்கும் தேவை ஒன்னே ஒன்னுதான். அதான் கட்டுப்பாடு இல்லாமல் இருக்குறது.
குடும்பம் னா எல்லாரையும் பாக்கணும். அதுலயும் middle age பசங்க இருந்தா ரொம்ப கவனமா இருக்கணும். ஒரு நல்ல அப்பாவா நீ செய்ய வேண்டியத கட்டுப்பாடு மூச்சு முட்டுதுன்னா என்ன சொல்ல....
சாலா பையனுக்கு வீடு வாங்கணும் பொண்ணுக்கு நகை வாங்கணும் னு சொன்னது தப்பா தெரிஞ்ச ஒனக்கு ஷாலினி எல்லாத்தையும் அவளுக்கு வாங்குனது தப்பா தெரியவில்லையா? அதுக்கு பசங்க படிப்புக்கு வச்சு இருந்த காசு எல்லாம் கொட்டுனயே அதுவும் தப்பா தெரியல....
நீ தா ரொம்ப நல்லவன் நியாயமான தைரியமான ஆளாச்சே.... இப்ப பேசுனா ஒன்னோட நியாயத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒன்னோட பிள்ளைகளுக்கு முன்னாடி பேசி இருக்க வேண்டியது தானே.... ஒன்னோட வண்டவாளம் ஒன்னோட பிள்ளைகளுக்கும் தெரிஞ்சு இருக்கும். சாலாவும் பசங்களுக்காகன்னு caseஅ வாபஸ் வாங்கியிருக்க மாட்டாங்க. நீ ஸ்டேஷனில் போலீஸ் கிட்ட ஒன்னோட நியாயத்தை கேட்டு இருந்தா அவங்களும் எது நியாயம் னு சொல்லி குடுத்து இருப்பாங்க...
ஏண்டா அஜய் இந்த ஆள இன்னுமா அப்பன் னு நம்பி கிட்டு இருக்க. இவனுக்காக உண்ணாவிரதம் இருந்த...
ஒனக்காக தானடா ஒங்க அம்மா இவன் விட்டாங்க....
ஒங்கப்பன் காசு பணம் னு பிள்ளைகளுக்காக ன்னு கூட எதுவுமே குடுக்கல. அப்பவும் ஒங்க அம்மா வைராக்கியத்தோட ஓடி ஒளச்சு ஒங்கள பாத்தாங்களேடா.... இனியாவது ஒங்க அம்மாவுக்கு support பண்ணுவியா இல்ல நீயும் ஒங்கப்பனுக்கு ஆதரவாக ஒங்க அம்மா கிட்ட நியாயம் கேப்பியா?
ஆனா சாலா நீங்க ஒரு முட்டாள் தான். ஒங்கள சுத்தி ஒங்க வீட்டுக்குள்ளே இவ்வளவு நடந்திருக்கு... நீங்க இருக்கும் போதே அவ கூட இருந்து இருக்கான். Foreign கூப்பிட்டு போயிருக்கான். கொஞ்சம் கூட ஒங்களுக்கு சந்தேகம் வரலையா? புருசன்னு அப்பிடியா கண்ண மூடி நம்புவீங்க....
ஒங்க குருட்டு நம்பிக்கை இப்ப ஒங்கள தெருவுல நிறுத்தி இருக்கு....