பிரகாஷ் எப்பிடி அயோக்கியனோஅதே அளவுக்கு குமரானும் அயோக்கியன்
பிள்ளை இல்லன்னு இரண்ணடு பெண்களோட வாழ்க்கைய அழிச்சிட்டான் அதுக்கு குடும்பமும் உறுதுணை
பிள்ளை இல்லன்னு இரண்ணடு பெண்களோட வாழ்க்கைய அழிச்சிட்டான் அதுக்கு குடும்பமும் உறுதுணை
குமரன் license எடுத்து தான் இப்படிச் செய்கின்றானாம்…அதனால் அவன் பிரகாஷை விட ரொம்ப ரொம்ப நல்லவனாம்…தூ! என்ன ஒரு மனிதனிவன்… என்ன ஒரு கேவலமான சமூக அமைப்பு எங்களது, இந்த விடயத்தில்.அய்யோ ஏன் இவளோ சோகம்.. தேவி... எனக்கு முன்னாடி தெரியும் சித்ரா மேல பெருசா எந்த தப்பும் இருக்காதுனு.. ஹையோ.. கடவுளே.. இந்த குமரன் என்ன இப்படி ஒரு கெடு கெட்டவனா இருக்கான்.. பாண்டியம்மா அருமையான வளர்ப்பு... வீட்டுக்கு இப்படி ஒரு ஆம்பள புள்ள இருந்தா போதும் நாடு வெளங்கிரும்... ஏன்டா ரெண்டு தங்கச்சி கூட பொறந்த உன்னக்கு ஒரு பொண்ணு மனச புரிஞ்சிக்க முடில.. பிரகாஷ விட கேவலமானவன் டா நீ.. பிரகாஷ் பண்ணது தெரிஞ்ச உடனே கொத்துச்சி போய் அடுச்சில.. உன் தங்கச்சிக்குனா ஒரு நியாயம் உன் வூட்டுகாரிக்கு ஒரு நியாயமா.. அவன் ஸ்ட்ரெஸ்னு போனான் நீ குழந்தை இல்லனு போற பெருசா ஒன்னும் வித்சாயம் இல்லை...
Well saidரொம்ப கஷ்டமா இருக்குது, பெண்களோட நிலை என்னன்னு தெரியலை, பிள்ளைக்காக இரண்டாம் கல்யாணம் அக்கா கணவரை தங்கை கல்யாணம் பண்றது, எங்க தெருவுல இப்ப சமீபத்துல நடந்த விஷயம், அக்காவுக்கு இரண்டு குழந்தை இருக்குது, ஆனா அவுங்களுக்கு உடம்பு சரியில்லையாம், அதனால தங்கச்சிய இரண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டாராம். இல்லை புரியலை, இதே மாதிரி பெண்களால செய்ய முடியுமா? அப்ப ஒரு குடும்பத்துல சம்பாதிக்கிற ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்கிற மாதிரி ஆகுது. இது சரியில்லை. அதைவிட தாம்பத்திய வாழ்க்கைங்கிறது எல்லாருக்கும் முழு திருப்தி தரதில்லை. ஆணுக்கு அது முழு திருப்தி தரலைன்னா அவர் ரொம்ப சுலபமா வெளில பார்த்துக்கிறாரு, இல்லைன்னா இந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறாரு. குடும்பத்துல இருக்குறவுங்க கிட்ட இந்த சூழ்நிலையை நான் பேசினப்ப, அப்பா, அண்ணா எல்லாரும் ஆணோட இந்த இரண்டாம் திருமணத்தை ரொம்ப சாதாரணமா எடுத்துக்கிறாங்க. பெண்கள்தான் இதை ரொம்ப எதிர்த்து பேசினாங்க. என்ன மனநிலை இது. எங்கே போயிக்கிட்டு இருக்கோம். எல்லாத்துக்கும் பெண்ணியம் பேசக்கூடாது. எல்லாத்துக்கும் அடிமையாகவும் இருக்க முடியாது. அந்தந்த சூழ்நிலைல என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்யனும். தேவியோட நிலை குழந்தை இல்லைங்கிறது. அதனால வாழ்க்கை முழுமையடயலை. சித்ராவோட நிலை கணவரோட அன்பு கிடைக்கலங்கிறது. அதனால அவுங்க வாழ்க்கையும் முழுமையடயலை. நான் ஒன்னு கேட்கிறேன். ஏன் நாம எப்பவுமே மத்தவுங்கள சார்ந்தே நம்மோட முழுமையை தேடுறோம். கண்டிப்பாக குழந்தைங்கிறது ரொம்ப முக்கியம்தான். முழுமை தர்றதுதான். ஆனா நமக்கு அது கிடைக்கலன்னா தேவி புரிஞசு விலகுறதுமாதிரி பரந்த மனசோட நாம செயல்படனும். முதல்ல பெண்களைப் பற்றி பெண்களே புறம் பேசுவதை நிப்பாட்டனும். ஒருத்தரோட சூழ்நிலைதான் அவுங்களோட செயல்களை தீர்மானிக்குதுன்னு நாம ஆண்களுக்கு சொல்லனும். நாம புறம் பேசுறதையும் குறை சொல்றதையும் நிப்பாட்டுவோம். அது நல்ல மாற்றத்தை கொண்டு வரும்னு நினைக்கிறேன்.