ஆண்கள் எந்த தவறு செய்தாலும் பெண்கள் அந்த தவறை குடும்பம் குழந்தைகளுக்காக நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.அவளுக்கென்று ஒரு கனவு இருக்கும் என்று அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை.
ஒரு பெண் முதலில் தன்னை பெற்றவர்கள் பின்னர் கணவன் பின் பிள்ளைகளை சார்ந்தே இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் நினைக்கிறது.அதை தாண்டி ஒரு பெண் தைரியமாக வாழ நினைத்தால் பல விதமான நெருக்கடிகளை அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே கொடுக்கின்றனர்.
பிரகாஷ் குமரன் சகுந்தலா பாண்டியம்மாள் மாதிரியான ஆட்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.பெண் தனியாக சுயமாக சிந்தித்து முடிவு எடுத்தால் அவளை இந்த சமூகம் திமிர் பிடித்தவளாகவே பார்க்கும்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற நிலை மாறி ஒரு பெண் சுயமாக வளர்ந்து வரும் போது இந்த சமூகமும் அவளது குடும்பமும் அவளை ஊக்கப்படுத்த வேண்டும்.அப்போது தான் பிரகாஷ் குமரன் மாதிரியான ஆட்களுக்கு நாம் இல்லாமலும் நம் குடும்பம் நன்றாக இருக்கும் என்று புரியும்.
அஜய் அப்பா பாவம் என்று ஏத்துகிட்டான்.சாலா மகனுக்காக பிரகாஷை பார்க்கனுமா.தேவி குமரனை பார்க்கனுமா.அப்போ சித்ராவின் நிலைமை.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.