Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -23

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -23

மென்மலர் உட்கார்ந்திருந்த நேர் டெபிளில் வயதான பெண்மனி கணவர் பேரனோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்... ஜீஜே கத்தி பேசவும் , மலரை ஏறிட்டு பார்த்தார்..

புதுசா கல்யாணமான ஜோடியா நீங்க...

ஆமாம் என்று மலர் தலையசைத்தாள்... சண்டையா என்று மெதுவாக கேட்டார்...

இல்ல.. சும்மா என்றாள்..

சிரித்துக்கொண்டார் அந்த பெண்மணி... இவர்கள் பேசுவதை ஒரக்கண்ணால் பார்த்தபடியே மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்...

ஜீஜே.. காலையில சாப்பிட்டதோடு சரி, நீ மதியம் வேற எதுவும் எடுத்துக்கல..

நாளைக்கு காலையில பொங்கல் செஞ்சு போடுவ, நல்லா சாப்பிட்டு ஆபிஸில தூங்கிட்டு வரேன், ஏன் ஃபீல் செய்யற மலர்...

பட்டர் நானை கிரேவியில் தொட்டு அவன் வாயருகே கொண்டுவந்தாள்..

வேணாம் போ.. என்று வாயை திறக்காமல் தலையை இருபுறமும் ஆட்டினான்...

வாயை திற ஜீஜே... சின்னபுள்ள மாதிரி வீம்பு செய்யற..

வாயை திறந்து அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டான்...

இங்கபாரு மலர் எனக்கு நான்-வெஜ் தான் பிடிக்கும்... வெஜ்ஜே பிடிக்காதுடி..

ப்ச்... ஜீஜேஜே நல்லாதானே இருக்கு.. அப்பவும் அவன் சாப்பிடவில்லை வீம்பாக செல்லையே நோன்டிக்கொண்டிருந்தான்.. மலர் தான் அவனுக்கு ஊட்டியபடி இருந்தாள்..

அவள் தோளை இடிச்சு... அந்த பாட்டி நம்மளையே பார்க்குதுடி. அவர்கள் எதிர் டெபிளில் உட்கார்ந்த குடும்பம், அவர்களின் ஐந்து வயது குழந்தை ஜீஜேவை பார்த்து சிரித்தது..

ப்ளவர்.. எனக்கு ஊட்டாத, எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க.. கூச்சமா இருக்கு..

பப்ளிக்ல பொண்ணுங்களுக்கு கிஸ் அடிப்ப, அப்ப வராத கூச்சம் இப்போ வருதா... மலர் அப்படி சொல்லவும்.

சுர்ரென்று கோபம் வந்தது ஜீஜேவுக்கு,..

அய்யோ கோபம் வந்துடுச்சு போல, நாம்ம இப்படி பேசியிருக்க கூடாதோ மலர் நினைத்தாள்..

பில்லை செலுத்திவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தான்.. காரை ஓட்டும் போது எதுவும் பேசவில்லை... அவனுடைய அமைதியே சொல்லியது கடும் கோபத்தில் இருக்கிறான்னு.. காரும் வேகமாக பறந்தது..

ஜீஜே... கொஞ்சம் மெதுவா போங்க... எதுக்கு இப்படி.. நான் தெரியாம சொல்லிட்டேன்...

இல்ல.. தெரிஞ்சே தான் பேசுற மலர்.. ஆமாம் நான் பொறுக்கி தான்...போதுமா நானே ஒத்துக்கிறேன்... நீ எப்ப பார்த்தாலும் பொண்ணுங்களை காரணம் காட்டி பேசற பார்த்தியா..

என் கேரக்டர் நல்லாவே உனக்கு தெரியும்... திரும்ப திரும்ப சொல்லி என்னை ஹர்ட் பண்ணாதே மலர்... வீடு வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை...

......

நைட் உடையை அணிந்து கண்ணாடியை பார்த்து தலையை கோதிவிட்டான் ஜீஜே.. அவன் பின்னே நின்று கண்ணாடியில் தன்னை பார்த்தாள் மலர்...

நல்லா வொர்கவுட் செஞ்ச உடம்பு, சிக்ஸ் பேக் வேற வச்சிருக்கான்.. இவனுக்கு எந்தவிதத்திலும் நான் பொருத்தமில்ல,,, அந்த பேரர் சொன்னது சரிதானே, வேலைக்காரியா தான் தெரியுறேன்... மலர் தனக்குள் பேசிக்கொள்ள..

அவள்தோளை அனைத்து பக்கத்தில் நிறுத்தினான்... எனக்கு பெர்பெக்ட் மேட்ச் டி நீ... இயற்கையான அழகு, மாசுமில்லாத சருமம்..

அவன் கைகை தட்டிவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள்... யார் அந்த மேக்னா...

அது... என் பிஸினஸ் பிரண்டோட தங்கச்சி பூனேல இருக்கா.. எப்பாவது வருவா.. அப்ப ஹோட்டலுக்கு போவோம்...

அவனை முறைத்தாள்....

எதுக்கு முறைக்கிற... அந்த பேரர் கண்ணத்துல பளாருன்னு ஒரு அடி கொடுத்திட்டு, நான் ஜெய்சிம்மனோட பொண்டாட்டிடா சொல்லிருக்கனும்... நீதான் என்னை புருஷனாவே ஏத்துக்கலையே..

இன்னும் எத்தனை பொண்ணுங்க கூட போயிருக்க..

சரியா கவுன்ட் தெரியல... ப்ளவர்மா..

பொறுக்கி.. உன்னை புருஷன்னு சொல்லனுமா... பக்கத்திலிருந்த தலையனை எடுத்து வீசினாள் ஜீஜேவின் மேல்..

ஏய் வன்முறை வேண்டான்டி... அது க.மு இப்போ நான் அப்படியில்ல..

அதென்ன க.மு... வாயை திறந்தா பொய்யா ஊத்தற ஜீஜே..

அவள் கையை பிடித்துக்கொண்டான், அது கல்யாணத்திற்கு முன்.. சத்தியமா ப்ளவர்குட்டி... யூ நோ என் தலைமூடியிருந்து கால்வரை உனக்கு மட்டுமே சொந்தம்... நோ ஒன் ஷேரிங்..

டயலாக்கா விடாதே ஜீஜே... போய் தூங்கு...

ஜீஜே அவள்பக்கம் திரும்பி படுத்தான்.. மலரை பார்த்து ஷாக்காயி என்னடி இத்தனை பின் குத்தியிருக்க.. இடை தெரியாம இருக்க மூன்று பின்னும், முந்தியை இழுத்து கழுத்து வரை போர்த்தி அதில் இரண்டு செப்டி பின்னும் குத்திருந்தாள்...

ஏன்டி இப்படி போட்டிருக்க...

அதுவா குளிருது ஜீஜே.. இந்த ஊட்டி குளிரில நீ ஏ.ஸி வேற போட்டிருக்க...

பொய் சொல்லுது பாரு, அவ இடுப்பை பார்த்தேன்ல.. அதான் புள்ள உஷாரா படுத்திருக்காம் மக்களே... சில்லி கேர்ள்

அவள் கண்ணையே விழி எடுக்காமல் பார்த்தான்...

புருவத்தை தூக்கி என்ன என்று கேட்டாள்...

ஐந்து நிமிடம் ஆகாது ப்ளவர் , உன்னை மயக்க..

ஓஓ.. ரேப் பண்ணற ஐடியாவேற இருக்கா.. என்மேல கையை வைடா பார்ப்போம்..

தன் தலையை கோதிவிட்டு, ரொம்ப பேசறாளே, அவள் மேல் படர்ந்தான்..

தீடிரென்று ஜீஜேவின் செயலால், பயந்து போனாள் மாது... அரைஅடி ஸ்கேல் மாதிரி இருக்க.. ஓவரா பேசற.. அவளின் முகத்தின் அருகே ஜீஜேவின் முகம்.. அவனுள் மறைந்து போனாள்..

கண்னை இறுக்க மூடிக்கொண்டாள்... அந்தபயம் இருக்கட்டும், சிக்ஸ்ட்டி பைவ் போட்ருவேன்டி... அவளை விட்டு விலகினான்..

மூச்சை இழுத்துவிட்டு கண்ணை திறந்தாள் மலர்.. அய்யோ இவன்கிட்ட வாயை விட்டேனே..மனதில் நினைத்தாள் மாது..

ஆனாலும் சாயங்காலம் பார்த்த ஸீன் இருக்கே... செம்ம, உன் இடையோட அங்கிருந்த ஒரு புள்ளி.. கோலமே போடலாம்டி..

என்னை நம்பி உன் வீட்டில தங்கவச்சியே... அந்த நம்பிக்கை எங்கடி போச்சு... உன் சம்மதம் இல்லாம நமக்குள் எதுவும் நடக்காது...

மலரின் விரலை பிடித்துவிட்ட படியே பேசினான்.. ப்ளவர் நமக்குள் அது நடந்துச்சுன்னா,

எது

அதான் மேட்டரு, ஒருநாளும் என்னைவிட்டு உன்னால பிரிந்து இருக்கமுடியாது பேபி... ஒரு இரவுகூட நான் இல்லாம உன்னால தூங்கமுடியாது.. இது உண்மை.. நீ நீயா இருக்கமாட்ட...

அதெல்லாம் நடக்காது ஜீஜே என்றாள்... அப்படி சொன்னவள் தான்
அவனில் மயங்கி, தன்னை மறந்து அவன் அன்பில், காதலில் கரைந்து இருக்க போகிறாள்
.
பெட்சீட் போட்டுக்கோ மலர் என்று அவள்மேல் பெட்சீட்டை போர்த்தி விட்டான்..
....
ஜீஜே..டைம் 6.00 ஆயிடுச்சு எழுந்திரு.. நீ ஜாங்கிங் போனோம்... தினமும் தோட்டத்தை சுற்றி வருவான்..

ஒருமுறை சுற்றிவிட்டு அங்கே போட்டிருந்த சேரில் உட்கார்ந்தான்..

அவனோட ஜாக்கிங் செய்யும் அபி... என்ன மாமா, ஒரே கவலையா உட்கார்ந்திருக்க.. நேற்று ப்ளான் சொதப்பலா..

போ அபி.. மாமாவே மூட் அவுட்டா இருக்கேன்...

உன் ப்ளவர் இங்க என்ன சொல்லுச்சு.. என்று அவள் நெஞ்சை தொட்டு காட்டினாள்..

சொல்லுச்சு... போடா லூஸூன்னு..

ஹா..ஹா என்று சிரித்தாள் அபி, மாமா எங்க கெமிஸ்ட்ரி மிஸ் உங்க கிட்ட ஏதோ வேலை பற்றி பேசனும் நம்பர் கொடுன்னு கேட்டாங்க..

உங்க மிஸ்ஸா அதுயாரு..

அன்னைக்கு பங்ஷன்ல அறிமுக செஞ்சேனே ஷைலி மிஸ் , மலையாளி.

ஆமாம் அபி, செம பிகரு.. நான் தான் ரிஜக்ட் பண்ணிட்டேன்... எல்லாம் உங்க அக்காவால... அப்ப லவ்வு என் கண்ணை மறைச்சிடுச்சு..

ஜீஜேவுக்கு காபி எடுத்துக்கொண்டு வந்தாள் மலர்.. ஏய் அபி, மாமாவோட போன் நம்பர் யாருக்கும் கொடுக்க கூடாது... புரியுதா.. அவங்க திரும்ப கேட்டா.. மாமா வெளிநாட்டுக்கு போயிட்டாருன்னு சொல்லு.. போய் ரெடியாகு ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சு..

அபி ஜீஜேவை பார்த்து சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் போனாள்..

அவனுக்கு காபியை கொடுத்துவிட்டு ஜீஜேவையே பார்த்தாள்...

உனக்கென்ன பிரச்சனை, நீயும் சைட் அடிக்கமாட்ட, மத்தவங்க என்னை பார்த்து சைட் அடிச்சாலும் விடமாட்டே... ஆண்பாவம் சும்மா விடாதடி...காபியா இது கசக்குது..

கசக்கும்... உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா ஜீஜே.. உனக்கு சைட்டு கேட்குதா, கையிலிருந்த ட்ரேவை எடுத்து அடிக்க வர..

வேணா மலர் என்று தோட்டத்தில் ஓட ஆரம்பித்தான்.. இவள் பின்னாடியே துரத்தி செல்ல... சுவற்றின் பின்னாடி திரும்பும் போது, அங்கே மாயாவின் மேல் மோதி நின்றாள் மென்மலர்...

அறிவில்ல... மேலேவந்து விழற என்று அடிக்க கையை ஓங்கினாள் மாயா.. தன்னை அடித்துவிடுவாளோ என்று பயந்து கண்ணை மூடினாள் , மலரின் முன்னாடி வந்து மாயாவின் கையை தடுத்தான் ஜீஜே...

அவமேல கையை வச்சே, கொண்ணுடுவேன். வா மலர் என்று அவளை அனைத்துக் கொண்டு உள்ளே சென்றான்..

கண்கள் கலங்க, உதடு துடிக்க அவனையே பார்த்தாள் மாது...

ஏய்.. ப்ளவர்குட்டி, அவள பார்த்தெல்லாம் பயப்படாதே, இது உன் வீடுடா..

இல்ல.. இது ஜீஜே வீடு...

அந்த மாயா எருமைக்கு நான் சந்தோஷமா இருந்தாலே மூக்குல வேர்த்திடும் மலர்... நீ ஃபீல் பண்ணுறதை பார்த்து என் இதயம் என்ன சொல்லுது தெரியுமா... கிஸ் அடிச்சு எப்படின்னா ப்ளவரை கரைக்ட் பண்ணிடுடா சொல்லுது.. ஓகேவா..

அவன் கையை தட்டிவிட்டு... வாயே அடங்காதா ஜீஜே.. போய் குளி என்று அவனை பாத்ரூமில் தள்ளிவிட்டாள் மாது..

ஏய் நான் எதுவும் எடுத்துட்டு வரல மலர், அப்படியே குளிச்சிட்டு நீயூடா வருவேன்..

அவன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.. தேவையான அனைத்து உடைகளையும் டெபிள்மேல் எடுத்துவைத்திருந்தாள்... தனக்குள் சிரித்துக்கொண்டே உடையை எடுத்து அணிந்தான்..
.....
காலை டிபன் சாப்பிட டைனிங் டெபிளில் உட்கார்ந்திருந்தார் நரசிம்மன்.. குட்மார்னிங் தாத்தா சொல்லிக் கொண்டு ராக்கியும், ஜீஜேவும் அமர்ந்தார்கள்..

அய்யோ பொங்கல் செஞ்சி வச்சிருக்காளே... முனுசாமியன்னா சின்னவருக்கு பிரட் ஆம்லட், சேலட் எடுத்துட்டு வாங்க என்று மலர் ஆர்டர் போட்டாள்..

மலர் சில்வர் பேஷனில் வடை எடுத்து வந்தாள்... அதிலிருந்து ஒரு வடையை எடுத்தான் ஜீஜே..

முனுசாமி.. ஏன் இந்த வடைக்கு ஓட்டை போட்டிருக்கீங்க.

அது நான் செய்ல ஐயா.. சின்னம்மா தான் போட்டாங்க... அந்த வடையின் ஓட்டை வழியாக மலரை பார்த்தான்..

ஓ.. ஏன் மலர் இந்த வடைக்கு நடுவுல புள்ளி மாதிரி ஒரு ஹோல்...

அது அப்படிதான் செய்யனும்.. மூடிட்டு சாப்பிடு ஜீஜே என்று அவன் காதருகில் சொன்னாள்..

அவனின் மயக்கும் கண்களால் மலரை பார்த்தபடியே சாப்பிட்டான்... ரொம்ப ஸாப்ட்டா இருக்கு ப்ளவர் வடை... ஐ மீன் நீ சுட்ட வடை செம டேஸ்ட்... இந்த வடையை இந்தியாவோட பெஸ்ட் புட் சொல்லனும்..
பாருங்க அன்னி, எங்கண்ண நீங்க சுட்ட வடையில பி.எச்.டியே வாங்கிடுவார் போல.. உங்கமேல அம்புட்டு லவ்வு என்று ராக்கி சொல்ல

அதற்கு நரசிம்மன் ஜெய் , நம்ம பாரம்பரிய உணவும் கூட, தயிர்ல போட்டா தயிர்வடை, சாம்பர்ல போட்டும் சாப்பிடலாம்... விஷேசம் நடந்தா வடை பாயாசம் வைப்பாங்க... ஆமாம் உனக்குதான் பிடிக்காதே...

அது நேற்று ஈவினிங்ல இருந்து பிடிச்சுபோச்சு தாத்தா... அவன் காலை ஓங்கி மிதித்தாள் மலர்விழியாள்...

அய்யோ தாத்தாதா..

.........மயக்கம் தருவான்
 
Top