Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி! -12

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -12


இரவு விளக்கின் ஒளியில் அவன் மார்பில் படுத்துக் கிடந்த ஸ்வப்னா மீண்டும் ஆரம்பித்தாள்.

" நளா.."

"என்னடீ.." என்று தலை கோதினான்.


"இந்த வீடு..?"

"ஓ.. அதுவா.. நம்ம வீடு தான்.. வாங்கி ஒரு ரெண்டு மாசம் இருக்கும். உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு தான்.. சொல்லல.... "

"எவ்வளவு பெரிய விஷயத்த சொல்ல.? இன்னும் என்னலாம் ராஜா சொல்லல...?" கொஞ்சம் கோபப்பட்டாள்.

"அச்சோ.. கூல் பேபி. எங்க அம்மா எப்படியும் உள்ள சேர்த்துக்க மாட்டாங்கனு எனக்குத் தெரியும். அதனால் மட்டும் இல்ல. எனக்கு இப்படி.. என்னோட சம்பாத்தியத்துல வாங்கின வீட்டுல என் ராணி கூட வாழனும்னு ஆசை.. கனவு எல்லாம்.. கொஞ்ச கொஞ்சமா ட்ரை பண்ணி வாங்கினேன். திங்க்ஸ் எல்லாம் அவ்வளவா வாங்கல. பேசிக்கா என்ன தேவையோ அதெல்லாம் இருக்கு. போகப் போக வாங்கிக்கலாம்.. உனக்கு வீடு ஓகே தானே...." என்றான்.

"ஹூம்... அங்க அத்தை மாமா கூட வீட்டு்ல ஒன்னா இருந்திருந்தா நல்லாருக்கும். பட் ஓகே.. அவங்க சமாதானம் ஆகட்டும்... அதுவரை காத்திருப்போம்."

" கொஞ்சம் தூரமா இருக்கதும் நல்லதுக்கு தான் ஸ்வப்னா.. "

"ம்..." என்றாள்.


" என்ன ம்...வீடு ஓகே தானே?"


"இந்த வீடு ஓகே.. ஆனா இந்த புருஷன் தான்....." என்று இழுத்தாள்.

அவன் ஒரே எட்டில் அருகில் வந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"என்ன சொன்ன.... இதுக்கு உனக்கு தண்டனை தந்தே ஆகனும்...."

"என்ன தண்டனை கண்ணா...?" என்றாள்.

"ஏன் உனக்கு தெரியாதாக்கும்...."

"ஹூம், இல்லையே.. நீயே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தாரியா...?"

"ஹோ.. நான் ரெடி..." என்று மீண்டும் ஆயத்தமானான்.

"வெய்ட் வெய்ட்.. நளா இந்த குச்சு குச்சு எல்லாம்.... அப்புறமா.... கொஞ்சம் தூங்குவோம்.. ரொம்ப டயர்டா.." எனத் தயங்கினாள்.

அவனுக்குப் புரிந்தது.

" புரியுது கண்ணே.. "
அவன் மார்பில் அவளை சாய்த்துக்கொண்டான். அவன் தலைகோதி முத்தமிட்டதும் அவள் உறங்கத்தொடங்கினாள்.

நளன் கண் விழித்த போது அருகில் ஸ்வப்னா இருக்கவில்லை. இவன் எழுந்து வெளியே வந்தான். ஸ்வாமி படத்துக்கு விளக்கேற்றிக்கொண்டு இருந்தாள்.


" காலையிலேயே கடவுளுக்கு என்ன ஐஸ் வைக்கிற.." என்று பின்னால் வந்து அணைத்தான்.

" ஹேய்.. என்ன இது.. தள்ளி நில்லு.. முதல்ல போய் குளி.." அவள் விரட்டினாள்.


" உன் பக்கத்துல நின்னா பொறுக்காதே உனக்கு.."

" ம். ம்.. " என்று தலையாட்டினாள்.

" சரி.. வா.. முதல்ல கோவிலுக்கு போயிட்டு வரலாம்.." என்று டவலை எடுத்து கொண்டு குளிக்க ஓடினான்.

ஸ்வப்னா காபி கலக்க சமையலறைக்கு போனாள். சமைக்க தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக்கொண்டாள்.

நளன் குளித்து விட்டு வந்தததும் சுடச்சுட காபி கொடுத்தாள்.

" ம்.. கசப்பான காபி கூட இனிக்குதடி.. உன்னால்.." என்று ஐஸ் வைத்தான்.



"ம்.. ஐஸ் வைச்சது போதும்.. உன் கலாட்டாவெல்லலாம் பிறகு வைச்சிக்கோ.. இப்ப கிளம்புவோம்.. " என்றாள்.


" ம்.. ம்.. போகலாம்... " என அவனும் சந்தோஷமாக கிளம்பினான்.

உண்மையில் காலையிலேயே அவனோடு கோவிலுக்கு போக வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். அதை அவன் புரிந்து கொண்டதில் பெரிதாய் ஆச்சர்யம் இல்லை.

அவள் மனம் புரிந்து அவன் எப்போதும் நடந்துக்கொள்வது அவளுக்கு அவன் மீது அதிக மரியாதையை தோற்றுவித்தது.

நேற்றுவரை கொஞ்சம் அந்நியனாய் தெரிந்த நளன், இன்று தன் கணவன். தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உணர்வு அவளுக்கு தித்திப்பாய் இருந்தது. முதல் தடவையாக ஒரு ஆண்மகனுடன் தனித்து ஒரே வீட்டில் வாழப்போவதை நினைத்து அவளுக்கு இனிப்பூட்டியது.

ராத்திரி இரண்டாவது தடவை அவன் நெருங்கி வந்தபோது, அவள் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவன் ஒதுங்கிச் சென்றதால் அவளுக்கு அவனை இன்னும் பிடித்திருந்தது. தன் மனம் உணர்ந்து நடந்து கொள்பவனை வெகுவாக ரசித்தாள்.




அவர்கள் கோவிலை அடைந்து பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் போது, நளன் ஓடிச்சென்று அவளுக்குப் பிடித்த மல்லிப்பூ சரம் வாங்கி வந்து கொடுத்தான். அவள் புன்னகை ததும்ப வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள்.

அவனை அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பெருமிதமாய் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக்கொண்டே ஸ்வாமி தரிசனம் பண்ணினாள்.

அதை கவனித்தவன், "ஸ்வாமி.. அந்தப் பக்கம் தாயே..." என்று சொல்லிவிட்டு பிரார்த்தனையில் ஆழ்ந்தான். சின்ன சிரிப்போடு அவள் மனமுருகி தரிசனத்தில் ஆழ்ந்துக் கொண்டிருந்தாள்.

காலை உணவை இருவரும் சேர்ந்து ஹோட்டலில் தான் உண்டனர்.

"நளா.. நாளையில இருந்து சமையலை ஆரம்பிக்கலாம். திங்க்ஸ் எல்லாம் வாங்கனும். என் சமையல் சுமாரா தான் இருக்கும். வாழ்க்கை முழுக்க சமாளிச்சுக்குவியா? "

"வேற வழி....." என்று கையை மேலே உயர்த்தி கும்பிட்டு " இறைவா..! இனி வரும் நாட்களில் என்னை காப்பாற்று.." என்றான்.

அவள் கொஞ்சம் முறைப்பு காட்டிவிட்டு சிரித்தாள்.

"ஹேய்... ஸ்வப்பு.. நாம எல்லாரும் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு இருக்கதில்ல.. சோ.. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டாப் போச்சு. எனக்கு தெரிஞ்சத நான் உனக்கு சொல்லித் தாரேன். உனக்குத் தெரிஞ்சத நீ எனக்கு சொல்லித் தா... ஒவ்வொன்னா கத்துக்குவோம்.. ஓகேயா...." என்றான்.

"ம்..." என்றாள்.

" நான் சமையலை மட்டும் சொல்லல.." என்று கண்ணடித்தான்.

அவளோ வெட்கப்பட்டாள்.

"நீ இப்படியெல்லாம் பேசுவியா நளா.."

" ம்.. இதுக்கும் மேல.. இது பொது இடமா போச்சு.. அதான் அடக்கமா பேசுறேன்.." என்று கண் சிமிட்டினான்.

அவள் சிரிப்பு சத்தம் அழகாய் ஒலித்தது.

"ம்... எனக்கு எல்லாம் வித்தியாசமா இருக்கு நளா....."

"ஏன்டி...?" என்று வெளியே வரும் போது அவள் இடையில் செல்லமாய் இடித்தான்.

"இல்ல.. நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா பழகுறோம். பெஸ்ட் ப்ரெண்ட்ஸ், அது அதைத் தாண்டி எப்படி லவ் ஆச்சுனே புரியலப்பா.... இப்ப, கல்யாணம் பண்ணிக்கிட்டு நாம ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அன்ட் வைஃப். பிடிச்ச மாதிரி ஒரு வீடு, அதுல என் செல்ல புருஷன்.. எல்லாம் மேஜிக் மாதிரி இருக்கு."

"ஹூம். எனக்கும் கொஞ்சம் கனவு மாதிரித் தான் இருக்கு. இப்படி திடீர் கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும்னு எல்லாம் நான் நினைக்கவே இல்ல.. ஆனா உன்னை ஒருகட்டத்துல நானும் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதுதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.. நீ இல்லனா எனக்கு கை உடைஞ்ச மாதிரி ஃபீல் ஆகும். ஒருநாள் உன்ன பார்க்காட்டியும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும். அப்பத்தான் ரியலைஸ் பண்ணினேன். இது ப்ரெண்ட்ஷிப் இல்ல.. அதையும் தாண்டி ஏதோ சம்திங் அப்படினு.... நீ முதல்தடவையா என்னை கிஸ் பண்ணின ஞாபகம் இருக்கா...?"

"ம்... என் பர்த்டே அன்னைக்கு...." என்று தலை குனிந்தாள்.

"ஹூம்.. அன்னைக்கு நான் அப்படியே ப்ளாட் ஆகிட்டேன். உடம்புக்குள்ள ஒரு ஆயிரம் வோட்ஸ் கரண்ட் பாய்ந்த மாதிரி இருந்திச்சி.. அப்புறம் நீ என்னை அவாய்ட் பண்ணியதும் தான் லவ் ரியலைஸ் ஆச்சு... அந் நிமிஷம் தான் முடிவு பண்ணினேன். என் லைப் நீதானு...."

"ஹூம்.. இதை எத்தனை தடவை பேசினாலும் நமக்கு போர் அடிக்காது இல்ல..." என்றாள்.

"ஆனால் ஆடியன்ஸ்க்கு போர் அடிக்கும் தங்கம்....."

"நளா.. இன்னொரு முக்கியமான விஷயம்..அது வந்து.. இன்னைக்கு நைட்... "

" என்னடீ...?"

" எனக்கு கொஞ்சம் அவகாசம் தாறியா..?"

" என்னடா.. புடிக்கலயா உனக்கு..?" ஆதரவாய் அவள் கை மீது தன் கையை வைத்தான் நளன்.

" அதில்ல.. நேற்று ஏதோ கிறக்கத்தில்.. எல்லாம் டக்குனு நடந்திருச்சா.. என் மைண்ட் கொஞ்சம் ஓகே ஆகட்டும்.."

"சரிடா.. புரியுது... எனக்கு எந்த அவசரமும் இல்ல.. இதக்கூட புரிஞ்சிக்க முடியாத ஆளாடி நான்... உனக்கு எப்ப சம்மதமோ அப்ப வச்சிக்கலாம்.."

அவனுக்கு புரிந்தது. இரவு அவனுடைய சந்தோஷத்துக்காக தான் தன்னை தந்திருக்கிறாள். அவளிடம் பூவை நெருங்குவது போல அணுக வேண்டும் என்று எண்ணினான்.



" அதெல்லாம்.. ஓகே. ஹேய் அதுக்காக கிஸ் எல்லாம் தர மாட்டேனு அடம் பண்ண மாட்டியே.. நீ என்னை ஒழுங்கா கிஸ் பண்ணி மூணு வருஷம் ஆச்சுடி..." என்று கிறக்கமாகி கன்னத்தை தேய்த்துக்கொண்டான்.

"ஹேய்! அன்னைக்கு உங்க வீட்ல வச்சு தந்தேன் தானே....! நேற்று கூட.." என்று தலை குனிந்தாள்.

"ஆமா இல்ல..." என்று அசடு வழிந்தான்.


அவர்கள் முத்தத்துக்கே ஒரு கதை இருந்தது.

அவள் முதல் தடவையாக தந்த முத்தத்தின் பின் அவனும் முத்தம் கேட்கவில்லை. அவளும் தரவில்லை. கடைசியாக அவள் தந்த முத்தம் இதற்கு விதிவிலக்கு. காதலிக்கும் போது இருவரும் தமக்குள் ஒரு கண்ணியமான இடைவெளியில் நாகரிகமாக காதலித்தனர்.

"ம்.. தருவேன்.. ஆனா ஒவ்வொரு கிஸ்க்கும் பத்து ரூபா சார்ஜ் பண்ணுவேன். ஓகேனா பக்கத்தில வரலாம்..." என்று சொல்லிவிட்டு வீட்டு வாசலில் நிறுத்திய காரிலிருந்து இறங்கி ஓடியே போனாள்.

"அடிப்பாவி... இதுலயும் வியாபாரம் பண்றியா... " என அவளைத் துரத்திப் பிடித்து அவளை இறுக்கினான். அவள் கன்னத்தில் ஒரே ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அவளை விடுவித்தான்.

அவனது அந்த செய்கையில் அவன் மீது அவளுக்கு காதல் தான் கூடியது. அவனை நெருங்கி அவனை இழுத்துப்பிடித்தாள்.

தன் இதழை அவன் இதழில் ஒருதரம் பதித்துவிட்டு கண்ணடித்தாள்.

"எப்போதாவது இப்படி ஒரு கிஸ் உண்டு புருஷா...." என சொல்லிவிட்டு உடை மாற்ற ஓடினாள். அவனோ சந்தோஷத்தில் மிதந்தான். அவளுக்கு கொடுக்க வேண்டிய இடைவெளியை கொடுக்க நினைத்தான்.

இவர்களின் திருமண செய்தியை கேட்டு அங்கு வேறு ஒரு உள்ளம் ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டு இருந்தது.
 
அத்தியாயம் -12


இரவு விளக்கின் ஒளியில் அவன் மார்பில் படுத்துக் கிடந்த ஸ்வப்னா மீண்டும் ஆரம்பித்தாள்.

" நளா.."

"என்னடீ.." என்று தலை கோதினான்.


"இந்த வீடு..?"

"ஓ.. அதுவா.. நம்ம வீடு தான்.. வாங்கி ஒரு ரெண்டு மாசம் இருக்கும். உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு தான்.. சொல்லல.... "

"எவ்வளவு பெரிய விஷயத்த சொல்ல.? இன்னும் என்னலாம் ராஜா சொல்லல...?" கொஞ்சம் கோபப்பட்டாள்.

"அச்சோ.. கூல் பேபி. எங்க அம்மா எப்படியும் உள்ள சேர்த்துக்க மாட்டாங்கனு எனக்குத் தெரியும். அதனால் மட்டும் இல்ல. எனக்கு இப்படி.. என்னோட சம்பாத்தியத்துல வாங்கின வீட்டுல என் ராணி கூட வாழனும்னு ஆசை.. கனவு எல்லாம்.. கொஞ்ச கொஞ்சமா ட்ரை பண்ணி வாங்கினேன். திங்க்ஸ் எல்லாம் அவ்வளவா வாங்கல. பேசிக்கா என்ன தேவையோ அதெல்லாம் இருக்கு. போகப் போக வாங்கிக்கலாம்.. உனக்கு வீடு ஓகே தானே...." என்றான்.

"ஹூம்... அங்க அத்தை மாமா கூட வீட்டு்ல ஒன்னா இருந்திருந்தா நல்லாருக்கும். பட் ஓகே.. அவங்க சமாதானம் ஆகட்டும்... அதுவரை காத்திருப்போம்."

" கொஞ்சம் தூரமா இருக்கதும் நல்லதுக்கு தான் ஸ்வப்னா.. "

"ம்..." என்றாள்.


" என்ன ம்...வீடு ஓகே தானே?"


"இந்த வீடு ஓகே.. ஆனா இந்த புருஷன் தான்....." என்று இழுத்தாள்.

அவன் ஒரே எட்டில் அருகில் வந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"என்ன சொன்ன.... இதுக்கு உனக்கு தண்டனை தந்தே ஆகனும்...."

"என்ன தண்டனை கண்ணா...?" என்றாள்.

"ஏன் உனக்கு தெரியாதாக்கும்...."

"ஹூம், இல்லையே.. நீயே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தாரியா...?"

"ஹோ.. நான் ரெடி..." என்று மீண்டும் ஆயத்தமானான்.

"வெய்ட் வெய்ட்.. நளா இந்த குச்சு குச்சு எல்லாம்.... அப்புறமா.... கொஞ்சம் தூங்குவோம்.. ரொம்ப டயர்டா.." எனத் தயங்கினாள்.

அவனுக்குப் புரிந்தது.

" புரியுது கண்ணே.. "
அவன் மார்பில் அவளை சாய்த்துக்கொண்டான். அவன் தலைகோதி முத்தமிட்டதும் அவள் உறங்கத்தொடங்கினாள்.

நளன் கண் விழித்த போது அருகில் ஸ்வப்னா இருக்கவில்லை. இவன் எழுந்து வெளியே வந்தான். ஸ்வாமி படத்துக்கு விளக்கேற்றிக்கொண்டு இருந்தாள்.


" காலையிலேயே கடவுளுக்கு என்ன ஐஸ் வைக்கிற.." என்று பின்னால் வந்து அணைத்தான்.

" ஹேய்.. என்ன இது.. தள்ளி நில்லு.. முதல்ல போய் குளி.." அவள் விரட்டினாள்.


" உன் பக்கத்துல நின்னா பொறுக்காதே உனக்கு.."

" ம். ம்.. " என்று தலையாட்டினாள்.

" சரி.. வா.. முதல்ல கோவிலுக்கு போயிட்டு வரலாம்.." என்று டவலை எடுத்து கொண்டு குளிக்க ஓடினான்.

ஸ்வப்னா காபி கலக்க சமையலறைக்கு போனாள். சமைக்க தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக்கொண்டாள்.

நளன் குளித்து விட்டு வந்தததும் சுடச்சுட காபி கொடுத்தாள்.

" ம்.. கசப்பான காபி கூட இனிக்குதடி.. உன்னால்.." என்று ஐஸ் வைத்தான்.



"ம்.. ஐஸ் வைச்சது போதும்.. உன் கலாட்டாவெல்லலாம் பிறகு வைச்சிக்கோ.. இப்ப கிளம்புவோம்.. " என்றாள்.


" ம்.. ம்.. போகலாம்... " என அவனும் சந்தோஷமாக கிளம்பினான்.

உண்மையில் காலையிலேயே அவனோடு கோவிலுக்கு போக வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். அதை அவன் புரிந்து கொண்டதில் பெரிதாய் ஆச்சர்யம் இல்லை.

அவள் மனம் புரிந்து அவன் எப்போதும் நடந்துக்கொள்வது அவளுக்கு அவன் மீது அதிக மரியாதையை தோற்றுவித்தது.

நேற்றுவரை கொஞ்சம் அந்நியனாய் தெரிந்த நளன், இன்று தன் கணவன். தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உணர்வு அவளுக்கு தித்திப்பாய் இருந்தது. முதல் தடவையாக ஒரு ஆண்மகனுடன் தனித்து ஒரே வீட்டில் வாழப்போவதை நினைத்து அவளுக்கு இனிப்பூட்டியது.

ராத்திரி இரண்டாவது தடவை அவன் நெருங்கி வந்தபோது, அவள் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவன் ஒதுங்கிச் சென்றதால் அவளுக்கு அவனை இன்னும் பிடித்திருந்தது. தன் மனம் உணர்ந்து நடந்து கொள்பவனை வெகுவாக ரசித்தாள்.




அவர்கள் கோவிலை அடைந்து பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் போது, நளன் ஓடிச்சென்று அவளுக்குப் பிடித்த மல்லிப்பூ சரம் வாங்கி வந்து கொடுத்தான். அவள் புன்னகை ததும்ப வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள்.

அவனை அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பெருமிதமாய் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக்கொண்டே ஸ்வாமி தரிசனம் பண்ணினாள்.

அதை கவனித்தவன், "ஸ்வாமி.. அந்தப் பக்கம் தாயே..." என்று சொல்லிவிட்டு பிரார்த்தனையில் ஆழ்ந்தான். சின்ன சிரிப்போடு அவள் மனமுருகி தரிசனத்தில் ஆழ்ந்துக் கொண்டிருந்தாள்.

காலை உணவை இருவரும் சேர்ந்து ஹோட்டலில் தான் உண்டனர்.

"நளா.. நாளையில இருந்து சமையலை ஆரம்பிக்கலாம். திங்க்ஸ் எல்லாம் வாங்கனும். என் சமையல் சுமாரா தான் இருக்கும். வாழ்க்கை முழுக்க சமாளிச்சுக்குவியா? "

"வேற வழி....." என்று கையை மேலே உயர்த்தி கும்பிட்டு " இறைவா..! இனி வரும் நாட்களில் என்னை காப்பாற்று.." என்றான்.

அவள் கொஞ்சம் முறைப்பு காட்டிவிட்டு சிரித்தாள்.

"ஹேய்... ஸ்வப்பு.. நாம எல்லாரும் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு இருக்கதில்ல.. சோ.. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டாப் போச்சு. எனக்கு தெரிஞ்சத நான் உனக்கு சொல்லித் தாரேன். உனக்குத் தெரிஞ்சத நீ எனக்கு சொல்லித் தா... ஒவ்வொன்னா கத்துக்குவோம்.. ஓகேயா...." என்றான்.

"ம்..." என்றாள்.

" நான் சமையலை மட்டும் சொல்லல.." என்று கண்ணடித்தான்.

அவளோ வெட்கப்பட்டாள்.

"நீ இப்படியெல்லாம் பேசுவியா நளா.."

" ம்.. இதுக்கும் மேல.. இது பொது இடமா போச்சு.. அதான் அடக்கமா பேசுறேன்.." என்று கண் சிமிட்டினான்.

அவள் சிரிப்பு சத்தம் அழகாய் ஒலித்தது.

"ம்... எனக்கு எல்லாம் வித்தியாசமா இருக்கு நளா....."

"ஏன்டி...?" என்று வெளியே வரும் போது அவள் இடையில் செல்லமாய் இடித்தான்.

"இல்ல.. நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா பழகுறோம். பெஸ்ட் ப்ரெண்ட்ஸ், அது அதைத் தாண்டி எப்படி லவ் ஆச்சுனே புரியலப்பா.... இப்ப, கல்யாணம் பண்ணிக்கிட்டு நாம ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அன்ட் வைஃப். பிடிச்ச மாதிரி ஒரு வீடு, அதுல என் செல்ல புருஷன்.. எல்லாம் மேஜிக் மாதிரி இருக்கு."

"ஹூம். எனக்கும் கொஞ்சம் கனவு மாதிரித் தான் இருக்கு. இப்படி திடீர் கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும்னு எல்லாம் நான் நினைக்கவே இல்ல.. ஆனா உன்னை ஒருகட்டத்துல நானும் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதுதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.. நீ இல்லனா எனக்கு கை உடைஞ்ச மாதிரி ஃபீல் ஆகும். ஒருநாள் உன்ன பார்க்காட்டியும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும். அப்பத்தான் ரியலைஸ் பண்ணினேன். இது ப்ரெண்ட்ஷிப் இல்ல.. அதையும் தாண்டி ஏதோ சம்திங் அப்படினு.... நீ முதல்தடவையா என்னை கிஸ் பண்ணின ஞாபகம் இருக்கா...?"

"ம்... என் பர்த்டே அன்னைக்கு...." என்று தலை குனிந்தாள்.

"ஹூம்.. அன்னைக்கு நான் அப்படியே ப்ளாட் ஆகிட்டேன். உடம்புக்குள்ள ஒரு ஆயிரம் வோட்ஸ் கரண்ட் பாய்ந்த மாதிரி இருந்திச்சி.. அப்புறம் நீ என்னை அவாய்ட் பண்ணியதும் தான் லவ் ரியலைஸ் ஆச்சு... அந் நிமிஷம் தான் முடிவு பண்ணினேன். என் லைப் நீதானு...."

"ஹூம்.. இதை எத்தனை தடவை பேசினாலும் நமக்கு போர் அடிக்காது இல்ல..." என்றாள்.

"ஆனால் ஆடியன்ஸ்க்கு போர் அடிக்கும் தங்கம்....."

"நளா.. இன்னொரு முக்கியமான விஷயம்..அது வந்து.. இன்னைக்கு நைட்... "

" என்னடீ...?"

" எனக்கு கொஞ்சம் அவகாசம் தாறியா..?"

" என்னடா.. புடிக்கலயா உனக்கு..?" ஆதரவாய் அவள் கை மீது தன் கையை வைத்தான் நளன்.

" அதில்ல.. நேற்று ஏதோ கிறக்கத்தில்.. எல்லாம் டக்குனு நடந்திருச்சா.. என் மைண்ட் கொஞ்சம் ஓகே ஆகட்டும்.."

"சரிடா.. புரியுது... எனக்கு எந்த அவசரமும் இல்ல.. இதக்கூட புரிஞ்சிக்க முடியாத ஆளாடி நான்... உனக்கு எப்ப சம்மதமோ அப்ப வச்சிக்கலாம்.."

அவனுக்கு புரிந்தது. இரவு அவனுடைய சந்தோஷத்துக்காக தான் தன்னை தந்திருக்கிறாள். அவளிடம் பூவை நெருங்குவது போல அணுக வேண்டும் என்று எண்ணினான்.



" அதெல்லாம்.. ஓகே. ஹேய் அதுக்காக கிஸ் எல்லாம் தர மாட்டேனு அடம் பண்ண மாட்டியே.. நீ என்னை ஒழுங்கா கிஸ் பண்ணி மூணு வருஷம் ஆச்சுடி..." என்று கிறக்கமாகி கன்னத்தை தேய்த்துக்கொண்டான்.

"ஹேய்! அன்னைக்கு உங்க வீட்ல வச்சு தந்தேன் தானே....! நேற்று கூட.." என்று தலை குனிந்தாள்.

"ஆமா இல்ல..." என்று அசடு வழிந்தான்.


அவர்கள் முத்தத்துக்கே ஒரு கதை இருந்தது.

அவள் முதல் தடவையாக தந்த முத்தத்தின் பின் அவனும் முத்தம் கேட்கவில்லை. அவளும் தரவில்லை. கடைசியாக அவள் தந்த முத்தம் இதற்கு விதிவிலக்கு. காதலிக்கும் போது இருவரும் தமக்குள் ஒரு கண்ணியமான இடைவெளியில் நாகரிகமாக காதலித்தனர்.

"ம்.. தருவேன்.. ஆனா ஒவ்வொரு கிஸ்க்கும் பத்து ரூபா சார்ஜ் பண்ணுவேன். ஓகேனா பக்கத்தில வரலாம்..." என்று சொல்லிவிட்டு வீட்டு வாசலில் நிறுத்திய காரிலிருந்து இறங்கி ஓடியே போனாள்.

"அடிப்பாவி... இதுலயும் வியாபாரம் பண்றியா... " என அவளைத் துரத்திப் பிடித்து அவளை இறுக்கினான். அவள் கன்னத்தில் ஒரே ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அவளை விடுவித்தான்.

அவனது அந்த செய்கையில் அவன் மீது அவளுக்கு காதல் தான் கூடியது. அவனை நெருங்கி அவனை இழுத்துப்பிடித்தாள்.

தன் இதழை அவன் இதழில் ஒருதரம் பதித்துவிட்டு கண்ணடித்தாள்.

"எப்போதாவது இப்படி ஒரு கிஸ் உண்டு புருஷா...." என சொல்லிவிட்டு உடை மாற்ற ஓடினாள். அவனோ சந்தோஷத்தில் மிதந்தான். அவளுக்கு கொடுக்க வேண்டிய இடைவெளியை கொடுக்க நினைத்தான்.

இவர்களின் திருமண செய்தியை கேட்டு அங்கு வேறு ஒரு உள்ளம் ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டு இருந்தது.
Nirmala vandhachu ???
 
Top