கருப்பன் chapter 20
கதை போக்கு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை மறக்காமல் கூறுங்கள் வாசக உறவுகளே.!

கதை போக்கு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை மறக்காமல் கூறுங்கள் வாசக உறவுகளே.!
அதனை கதையின் போக்கில் பார்க்கலாம் சகோஎன்னடா இது பாம்புக்கு வந்த சோதனை. அங்க ஒருத்தி இதைப் பார்த்து பயந்து ஒருத்தன் மேல பாய்ந்து ஏறிக்கிட்டா.
இங்க ஒருத்தி அதை பார்த்துக்கிட்டே தர்மன படுத்தி எடுக்கறா. அவனோட மயிலுகிட்ட பழம்?காயா? கானா இருந்தா கனகாவ பார்க்கறேங்கறான்.
கருப்பனையும் மலரையும் முறைச்சி பார்க்கறது யாரு? மயிலோட அண்ணா, இல்ல கவுன்சிலரா?
Thank you so muchIam always love mayil and tharuman conversation
மயிலு நீ தருமன் மேல் கொள்ளை காதல் இருந்தும் அவனை அலைய விடுற, உன் விளையாட்டு வினையாகி இதுக்கு எல்லாம் ஒரு நாள் மொத்தமாக வருத்த பட போற மயிலு...
ஏன் என்றால் ஒரு மனுஷன் பொறுமை ஒரு அளவுக்கு தான்..
கருப்பன் யோசிப்பது ஒரு விதத்தில் சரியே. சாணத்தை கையில் தொடுவதற்கு அறுவெறுப்பு படுபவள் எவ்வாறு கருப்பனை போன்று விவசாயத்தை உயிர் மூச்சாக நினைப்பவன் மனைவியாக வாழ முடியும்.வெறும் காதல் இருந்தால் மட்டும் போதுமா???
மாணவர்கள் சொல்லிய பிறகும் ,கருப்பன் இடுப்பில் இருந்து இறங்காமல் ,மயில் அதட்டிய பிறகு இறங்கும் மலர் மேல் எரிச்சல் தான் வருகிறது..
ஏன் என்றால் எந்த ஒரு விஷயத்திற்கும் இடம் பொருள் ஏவல் முக்கியம்.
மலர் வந்தது ஒரு பேராசிரியராக ,மாணவர்களுக்கு ,அவர்கள் பாதுகாப்பு துணையாக ...
இதுவே கருப்பன் ,தருமன் இருவரும் நல்லவர்கள் ,ஆதலால் பிரச்சனை இல்லை..
இருவரில் ஒருவர் கெட்டவர்களாக இருந்து ,இந்த மலர் பாட்டுக்கு சைட் அடித்து கொண்டு இருந்தாள் ,வந்த பிள்ளைகளின் பாதுகாப்பு என்னவாகும்???
இங்கு மலர் ஒரு பேராசியராக நடந்ததை விட ,சராசரி பெண்ணாக தான் அதிகம் நடந்து கொண்டார்![]()