Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Pre Final

Advertisement

So finally குரு மதியோட கற்பனைப்படி 'கரம்' கொடுத்துட்டான்.

போனா போகுது இதுக்கான புண்ணியமாச்சு சாமுக்கே போய் சேரட்டும். ஏன்னா அவங்க வந்த வேலை ஒன்னுனாலும் அவங்க திருவாயை வழக்கம் போல தொறக்கப்போய் நடந்த வேலை வேற தான். அது இப்ப தான் முதல் முதலா குருக்கு ஆப்பு வைக்காமல் சாதகமா முடிஞ்சுருக்கு. அதுக்கு தான்.

ஏம்மா ஸ்ரீமதி, அவன் தம்பிகிட்ட அவன் ஏன் அப்படி நடந்துக்கறான்னு காரணம் கேட்காமல் நீயே judgemental-ஆ அவனை selfish என்று சொல்லுவியா? (என்ன தான் புருஷனைப் பேச உனக்கு உரிமை இருக்குன்னாலும்)

இப்ப இப்படி பேசற இதே வாய் தான் நாளைக்கு அவன் தம்பிகிட்ட நம்பி பணத்தை இழந்து வந்தா, "நமக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்கறது கண்ணனுக்கு தெரியலையான்னும்"- பேசும்.

முதலில் புருஷன் selfish-ஆ இருக்கானா இல்லை சுதாரிப்பா இருக்கானா என்று அவன்கிட்ட பேசி முடிவுக்கு வா. உன்னை சொல்லியும் குத்தமில்லை, விதி விட்டுருந்தா உன் புருஷன் உன் கிட்ட பேசாமலே 60-ஆம் கல்யாணம் வரை வாழ்ந்துருப்பான். ஏதோ நல்ல விதியா போச்சு உனக்கு. 5 வருஷமா பேசாத பேச்செல்லாம் இப்ப பேசுமா.
 
Top