Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கல்யாணம்..கச்சேரி.. (Teaser)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Makkale!!!

Here is my next story (குறுநாவல்) "கல்யாணம்..கச்சேரி.." ?

Hope you all enjoyyyyy it?

கதைல இருந்து ஒரு குட்டி டீஸர்!!!

Share your thoughts friends?

ப்ரியங்களுடன்
யஞ்ஞா



கல்யாணம்..கச்சேரி..?
(story of a kadhal mannan & a sanda kozhi)


"சர்தான் போடாஆ!!!"

"நீ போடீ!!!"

"என்னையா டீ சொன்ன!!!...உன்ன..."

"நீனும்தான் டா போட்ட அதுவும் அந்த 'டா' வுல எவ்வளோ அழுத்தம்!"

"கொலை காண்டுல இருக்கேன் மரியாதையா ஓடிரு!"

"அது எப்படி மரியாதையா ஓடுதறது மேடம்...???" என்று தீவிரமான முக பாவத்துடன் வினவியவனை கொலை வெறியுடன் பார்க்க

"ரைட்டூ....இதோ வரேனத்த!!!" என்று அங்கிருந்து பறந்திருந்தான் மகி...மகிழன்...!

"என்னடா இது சிங்கமும் சிறுத்தையும் இப்படி அடிச்சுக்குது...?" என்று வினவிய சஞ்சுவிடம்

"நீ வேற...ரெண்டும் காலைல இருந்து இப்படிதானிருக்கு...உன் பர்த்டே பார்ட்டீ நடந்தா மாதிரிதான்" என்று அவன் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான் ஜீவா.

"எல்லாம் இந்த முகியால வந்த வினை...அவதான் ஏதாவது பண்ணிருப்பா" என்றது சஞ்சு

ஜீவாவோ "ஏண்டா முகிய திட்டுற இந்த மகி தான் ஏதாவது வம்பிழுத்திருப்பான்.."

இவன் அக்காவிற்காக அவனும், அவன் அண்ணனுக்காக இவனும் வாதாடிக் கொண்டிருக்க அங்கிருந்த டேபிள்மேல் ஏறி லாஃப்டிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த மகி அங்கிருந்த வாண்டுகளில் ஒன்று ஓடியதில் தட்டிவிட தடுமாறி விழப்போனான்.

டேபிளிலிருந்தவன் தரையில் லாண்டாவதற்கு முன் அவனை தாங்கியிருந்தது இரு கரங்கள்...!!

அந்த பக்கம் டெகரேஷன்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த முகி அவனை தாங்கி பிடித்திருக்க...

ஜீவாவும் சஞ்சுவும் அதிர்ச்சியில்...!!

"டேய்...இதே மாதிரிதான மூணு வருஷம் முன்னாடி மகி முகிய பிடிச்சான்..." என்று வாய் பிளக்க

"ஆமாண்டா...பட் இப்போ முகி மகிய பிடிச்சிருக்கா..." என்றிருவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க

"எரும எரும கீழ விழுந்து சிதறிருப்ப...உன்ன எவன் ஏற சொன்னான் கூப்பிட்டிருக்கலாம்ல?? கைய காட்டு...கால காட்டு...எங்கயாவது பட்டுச்சா...???" என்றவளின் அதட்டலில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு

"ஹ்ம்ம் புருஷன்ற மரியாதை இருக்கா பாரேன் உனக்கு..."

"ஹ்ம்ம் அது ஒன்னுதான் கொறச்சல் இப்போ...மரியாதையா இப்போ ஒரு இடத்துல உக்காருற நீ...பாரு கையில லேசா சிராய்ச்சிருக்கு..." என்றவள் ஆயின்மெண்ட்டை தடவி விட்டு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றாள்.

"ஜீவா...இவங்க சமாதானம் ஆகிட்டாங்களா...?"

"தெரிலையே சஞ்சு"
என்றிருவரும் தீவிரமான யோசனையிலிருக்க

"அங்கு என்ன தெரிகிறது???" என்று தோளை தொட்ட மகியிடம் ஒரு அசட்டுச் சிரிப்பை தந்துவிட்டு ஓடியிருந்தனர் இருவரும்.

"உன்ன உக்கார தானே சொன்னேன்!!!" என்று கையில் ஜுஸ் டம்ளருடன் நின்றிருந்தவளைப் பார்த்து 'ஈஈஈ' என்பது இப்பொழுது அவன் முறையானது.

***************************************

"சரி....அப்போ பாடு!" என்றவளையே உற்று நோக்கியவனுக்கும் உள்ளுக்குள் ஆசைதான்...அவளை பார்த்து

'ஏ!!! சண்டிக் குதிரை...வாயேண்டி எதிரே'னு பாட... ஆனால் எங்கு தான் பாடி அவள் அதை கேட்டப் பிறகு,

'திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா'னு வந்துட்டா...என்ன பண்ணறது??? என்றெண்ணியவனோ
சமாளிப்பாய் சிரித்தான்,தப்ப வேண்டுமே?!
 

Attachments

  • IMG-20190629-WA0000.jpg
    IMG-20190629-WA0000.jpg
    134.6 KB · Views: 14
Top