Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!- 16

Advertisement

Miloni

Active member
Member
டக் டக் என செருப்போசை வீடு முழுவதும் அதிரும்படி வந்து சேர்ந்தாள் வீணா.. சக்கரவர்த்தியின் அக்கா வசந்தாவின் மகள் தான் வீணா..

ஏனோ முதல் பார்வையிலேயே சைதன்யாவுக்கு அவளை பிடிக்கவில்லை..

அவள் வந்ததும் எல்லோருடைய முகமாறுதல்களிலும் யாருக்குமே அவள் வருகை பிடிக்கவில்லை என்பது தெரிந்தது..

ஆனால் ஏன்..

ஏனென கொஞ்ச நேரத்திலேயே சைதன்யா தெரிந்துகொண்டாள் வந்ததும் அமர்த்தலாக அவர்களை ஒரு பார்வை பார்த்து கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்தாள்..

முதல் அண்ணி மாலினியை கேவலமான ஒரு பார்வை பார்த்து என்ன இப்படி தொப்பையை ஏற்றி வைத்திருக்கிறாய் இதனால்தான் மதன் வேலை வேலை என வீட்டுக்கே வருவதில்லை போல எதற்கும் உங்கள் வீட்டு கிரைண்டரின் அருகில் நிற்காதே எது நீ என மதன் குழம்பிப் போய் விடுவார்..

இரண்டாவது அண்ணி சுதாவை பார்த்தவள் நீ ஏன் இப்படி எலும்பும் தோலுமாய் இருக்கிறாய் உனக்கு என்ன சாப்பாடுக்கா பஞ்சம் என்னை போல கச்சிதமாய் யாராவது உடம்பை வைத்திருக்கிறீர்களா அதற்காகத்தான் எக்ஸர்சைஸ் செய்யச் சொன்னேன் சரியான சோம்பேறியாக இருக்கிறீர்கள்..

குடும்பம் குழந்தைகளுடன் உங்கள் கடமை முடிந்துவிட்டது என சாப்பிட்டு தூங்கி விடுகிறீர்கள்..

உடை உடுத்துவதை பாரு ஏய் பல்லவி இது என்ன டிரஸ் ஏதோ கடமைக்கு உடுத்தி இருக்கிறாய்..

நமக்கு நம் மேல் ஒரு அக்கறை எப்போதும் இருக்க வேண்டும் என்னை பாருங்கள் இந்த உடை இந்தியாவின் டாப் டிசைனர் செய்தது என ஸ்லீவ்லெஸ் கையுடன் ஜிகுஜிகுவென இடைவரை டாப்ஸும் ஜீன்சும் முகம் சுளிக்க வைத்தது..

என்னைப்போல கச்சிதமான உடலும் இல்லை அழகும் இல்லை சரியான பட்டிக்காடுகள் என சொல்லி நிமிர்ந்தபோது எல்லா பெண்களும் சைதன்யாவை பார்த்திருந்தனர்..

அவளுடைய கொடியுடலும் அலட்டலில்லாத அழகும் மிதமான அலங்காரமும் கண்சிமிட்ட முடியாத கொள்ளை அழகுடன் நின்றிருந்தாள்..

அவளுடைய மான் விழிகள் துருதுருவென்றிருந்தது உதடுகள் இயல்பாகவே சிவந்திருந்தது அவள் முகம் நிலவைப் போன்று பிரகாசித்தது ஒரு பெண்ணிடம் இத்தனை அழகா இப்படி ஒரு பேரழகியை இதுவரை அவள் கண்டதேயில்லை சைதன்யாவையே விழிவிரிய பார்த்தாள் வீணா.. யார் இவள் இங்கே எப்படி வந்தாள்..

அவளை ஒரு நமுட்டு சிரிப்புடன் எல்லோரிடமும் காட்டிய மாலினி வேண்டுமென்றே தொண்டையை கனைத்து வீணாவை சுய நினைவுக்கு கொண்டு வந்தவள் சைதன்யா நீங்கள் எப்படி உடலை மெயின்டெய்ன் செய்கிறீர்கள் டெய்லி எக்சர்சைஸ் செய்வீர்களா..

இல்லை அக்கா எனக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்காது எப்போது நேரம் கிடைக்குதோ அப்போ ஒரு சில நிமிடம் தியானம் செய்வேன்..

செய்யும் வேலைக்கு தகுந்த அளவான சாப்பாடு தான் காரணம் என கூற வீணா முகம் கறுத்தாள்..

எவ்வளவு திமிர் நான் எல்லோரையும் கிண்டல் செய்ததற்கு எனக்கு பதிலடி கொடுக்கிறாள் முதலில் யார் இவள் இவ்வளவு அழகாக இங்கு என்ன செய்கிறாள் என யோசித்து அவர்கள் இருவரையும் பார்த்து யார் இவர்கள் நம் குடும்ப பூஜையில் இவர்களுக்கு என்ன வேலை என கேட்கவும் பல்லவி தயக்கத்துடன் அவளைப் பற்றி சொன்னாள்..

வீணாவிடம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது கூடவே ஒரு ஏளனமும் அவளையே பார்த்து ஓ கூலிக்கு மாரடிக்கிற கூட்டமா எனக்கு இவர்களைப் பார்த்தாலே அலர்ஜி அதோடு பாலும் பழமும் தேனும் நெய்யும் என நாவிற்கு சுவையான உணவை தினமும் உண்டு ஒவ்வொரு பிட்னஸ் சென்டருக்கு அலைந்து எக்சர்சைஸ் செய்யவேண்டியிருக்கிறது..

உனக்கு அந்த கவலை இல்லை எப்படியும் இது போல உணவை தினமும் நீ சாப்பிட முடியாது அதனால் உனக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது எனவும் சைதன்யாவிற்கும் கிறிஷ்டிக்கும் முகம் கடுத்தது..

கிறிஸ்டி உடனே " மேடம் நாங்கள் இருப்பதனால்தான் நீங்கள் இப்படி சொகுசாக கால் மேல் கால் போட்டு அமர முடிகிறது நீங்கள் ஆடம்பரமாக வாழ்வது எங்களை போன்றவர்களால் தான் " என முகத்தில் அடிக்கிற மாதிரி சொல்லவும் சைதன்யா வாய்மூடி நமட்டு சிரிப்பு சிரித்தாள்..

கழுதைகள் சிரிக்கிறீர்களா உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என கறுவவும் மிதுவின் சிரிப்பொலி கேட்டு ஆண்கள் பகுதியை பார்த்தாள்..

அவனின் சிரிப்பில் மயங்கியவள் அப்படியே எழுந்து அவனை நோக்கி சென்றாள் பெண்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

வீணாவின் அம்மா வசந்தாவும் அப்பா கனகநாதனும் சில நிமிடமே பழகி இருந்தாலும் அவளிடம் நல்ல முறையில் பேசினார்கள் தன்யாம்மா என அழைத்து அவர்கள் பேசியது சைதன்யாவிற்கு அவர்களிடம் ஒரு பிடிப்பை கொண்டு வந்திருந்தது பணக்காரர்களாக இருந்தாலும் இப்படி தன்மையுடன் பழகுகிறார்கள் என அவர்களைப் பற்றி பெருமையாக நினைத்தாள்..

அப்படி ஒரு பெற்றவர்களுக்கு இப்படி ஒரு பெண் என சைதன்யா மனதில் நினைத்ததை சுதா வாய்விட்டே சொன்னாள்..

அவர்களுக்காக தான் பொறுத்துப் போக வேண்டியிருக்கிறது இல்லையேல் இவள் பேச்சுக்கு இன்னேரம் உண்டு இல்லை என பண்ணியிருப்பேன்..

சைதன்யாவை பார்த்து பாவம் அவர்களுக்கு ரொம்ப வருடம் குழந்தை இல்லாமல் பிறந்தவள் வீணா அதனால் அவளுக்கு பிடிவாதமும் திமிரும் அதிகம் சொல்லிக்கொண்டே போனவள் முகம் மாறினாள்..

என்னவென்று பார்க்க அங்கே மிது அருகில் அமர்ந்து அவன் தொடையில் கை வைத்து அவனை கவர முயற்சி செய்தாள் அவ்வப்போது எல்லா ஆண்களிடமும் தொடையில் அடித்தும் தோளில் தட்டியும் பேசினாள் கடுப்பான மாலினி எழுந்து அவள் கணவனுக்கு கண் காட்ட அவன் எழுந்து வந்தான்..

அதேபோல் அனைவரும் எழுந்து அவரவர் துணைவியுடன் கெஸ்ட் ரூமுக்குள் சென்றனர்..

நிரஞ்சனாவும் தான் போவதாக கண்ணனுக்குப் கண்ஜாடை காட்டி விட்டு அவளுடைய ரூமுக்கு சென்றாள் போகும்போது சைதன்யாவையும் கிறிஸ்டியையும் ரூமுக்கு வரச் சொல்லிவிட்டு சென்றாள்..

சரி என தலையாட்டிவிட்டு அவர்கள் இருவரும் சோபாவில் அமர்ந்து எல்லோருக்கும் தேவையான உடையை அவரவர் ஜோடியுடன் தனியாக பைல் பண்ணிக் கொண்டிருந்தனர்..

கணவன் மனைவியிடையே உடையில் ஏதாவது ஒரு பொருத்தம் கொண்டுவர அதற்கேற்றவாறு சிறுசிறு சின்ன வேலைகள் செய்ய முடிவு செய்தனர்..

சிறியவர்கள் எல்லோரும் அறைக்குச் சென்றுவிட ஹாலில் பெரியவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்..

மிதுவும் சைதன்யாவிடம் தலையாட்டிவிட்டு அவனுடைய ரூமுக்கு சென்றிருந்தான்..

வீணாவுக்கு எரிச்சலாக வந்தது அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவரவர் அவர்கள் வேலையை பார்த்தனர் இளையவர்கள் எல்லோரும் சென்றுவிட்டார்கள் பெரியவர்கள் பேச்சு அவளுக்கு போரடித்தது..

வீணா நீயும் போய் ரூமில் ரெஸ்ட் எடு என சொன்ன அவள் அம்மா வசந்தாவிடம் மொத்த எரிச்சலையும் காட்டி போகத்தான் போகிறேன் போகாமல் உங்கள் அறுவையை உட்கார்ந்து கேட்டுக் கொண்டா இருக்கப் போகிறேன் என எழுந்து சென்றாள் எல்லோருக்கும் முன்னால் அவள் அப்படி பேசி சென்றதால் அவமானத்தில் அவருக்கு முகம் மாறியது..

கிறிஸ்டி தோட்டத்தை சுற்றி பார்ப்பதாக கூறி சென்றுவிட சைதன்யா நிரஞ்சனாவின் அறைக்குச் செல்ல படியேறினாள்..

அங்கு சென்றவுடன் அவள் அறை எதுவென கேட்காமல் வந்துவிட்டோமே இதில் எது அவள் அறையாய் இருக்கும் என யோசித்தாள்..

சரி உள்ளே போய் பார்ப்போம் என ஒரு அறையின் கதவை திறக்க அது திறந்து கொண்டது மிகவும் பெரியதாக பணக்கார களையுடன் அந்த அறை இருந்தது அவளுடைய வீட்டை விட அது பெரியதாக இருந்தது..

அவர்கள் வீட்டிலேயே இந்த ரூம் ரொம்ப பெரியதாக இருக்கும் போல முன்னால் சோபா போட பட்டு அதற்கு அடுத்ததாக படுக்கையறை டைனிங் டேபிள் அடுத்ததாக உள்ளே சென்றால் உடைமாற்றும் அறை என ஒரு குட்டி வீடு போல காட்சியளித்தது..

படுக்கை அறையில் இருந்து வலது பக்கம் திரும்பினால் பால்கனிக்கு போகும் பாதை இருந்தது அவள் ஆசையுடன் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தபோது பால்கனியில் ஒரு ஊஞ்சல் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது..

பால்கனியின் கதவு திறந்து இருந்ததால் அங்கிருந்து வந்த காற்றில் உடல் சிலிர்த்தது படுக்கையறையில் எதிர்ப்புறம் இருந்த போட்டோவை பார்த்தவுடன் புரிந்து போனது இது யாருடைய அறையென..

படுக்கையறையில் நடுநாயகமாக ஆளுயர போட்டோவில் அழகான வசீகரமான புன்னகையுடன் ஹாண்ட்சமாய் இருந்தான் மிதுர்வன்..

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக வெளியில் செல்ல திரும்பினாள் சைதன்யா..
 
இப்போ மிதுவின் ரூமில் ஒரு வாய்ச்சண்டை நடக்கப் போகுதா?
எங்கேப்பா உங்களைக் காணோமே
இப்படி ஆப்சென்ட் ஆனால் கதை மறந்து விடுமே, மிலோ டியர்
 
இப்போ மிதுவின் ரூமில் ஒரு வாய்ச்சண்டை நடக்கப் போகுதா?
எங்கேப்பா உங்களைக் காணோமே
இப்படி ஆப்சென்ட் ஆனால் கதை மறந்து விடுமே, மிலோ டியர்
கண்டிப்பா அது இல்லைனா ரொமான்ஸ் நாவல்னு சொல்ல முடியாதே
 
இப்போ மிதுவின் ரூமில் ஒரு வாய்ச்சண்டை நடக்கப் போகுதா?
எங்கேப்பா உங்களைக் காணோமே
இப்படி ஆப்சென்ட் ஆனால் கதை மறந்து விடுமே, மிலோ டியர்
லேப்டாப் கையில வரவே மாட்டேங்குது sis போராட வேண்டியிருக்கு.. இனி தொடர்ந்து போடுறேன் sis..
 
Top