Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!- 17

Advertisement

Miloni

Active member
Member
கதவு திறக்கும் ஓசை கேட்டு வெளியில் செல்ல திரும்பிய சைதன்யா புடவை கட்டி பழக்கம் இல்லாததால் அது தட்டி விட கீழே விழப்போனாள்..

அவளை தாங்கிய மிது அவள் வெற்றிடையை அழுந்த பற்றினான் கூச்சத்துடன் அவனை பார்க்க தினமும் உடற்பயிற்சி செய்கிறவன் போலும் அவனுடைய சட்டை இல்லாத உடம்பும் தினவெடுத்த தோள்களும் அவளுக்கு மயக்கத்தை உண்டு பண்ணியது..

அவளை நிமிர்த்தி என்னவென புருவம் உயர்த்தி கேட்க வார்த்தைகள் தொண்டை குழியிலிருந்து வர மறுத்தது மெதுவாக வந்து.. நான்.. ரூம் மாறி.. தெரியாமல் என உளற என்ன வந்து என அருகே வந்தான் மிது..

அவள் பின்புறம் நகர நகர மிது அவளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்..

தோள் தட்டிய சுவரைப் பார்த்து பயத்துடன் வெளியில் செல்ல திரும்பிய சைதன்யாவை இழுத்து மறுபடியும் சுவற்றில் சாய்த்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி எனக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே அதற்குள் எங்கே செல்கிறாய் பதற்றத்தில் உடல் நடுங்க நடுங்கிய உதட்டை பற்களால் கடித்தாள்..

அவளின் உதட்டில் நிலைத்த அவனது பார்வை இதற்கு தண்டனையை நான் தான் கொடுப்பேன் என சொல்லியிருக்கிறேன் இல்லையா என உதட்டை தொட்டுக் காட்டினான்..

அவள் விழி விரித்துப் பார்க்கவும் அதற்குமேல் முடியாதென அவளுடைய உதட்டை சிறைபிடித்தான்..

அவளும் அவனுக்கு இசையவே முதல்முறை போல அல்லாமல் மென்மையாகவும் அழுத்தமாகவும் இதழ் பற்றினான் இருவருக்கும் மயக்கமாகவும் கிறக்கமாகவும் இருந்தது..

அவளை இடைவெளி இல்லாது இறுக்கி அணைத்திருந்தான் அது அவளின் உடலில் கதகதப்பை உண்டுபண்ணியது இப்பொழுதுதான் குளித்து வந்திருந்த அவனின் தலையில் இருந்து ஈரம் சொட்டி அவள் முதுகில் இறங்கியது அதில் அவள் மேனி சிலிர்த்தடங்கியது..

எவ்வளவு நேரம் நின்றார்களோ நிரஞ்சனாவின் குரல் எங்கேயோ தூரத்தில் கேட்டது அவள் சுயநினைவுக்கு வரவும் அவன் அவளை விட போவதில்லை என அவளே அவனை விலக்கினாள்..

ஆனால் அவனுக்கு பாதியில் நின்றது போல் தோன்றியது போலும் அவளை விட மறுத்தான் அங்கிருந்து நகர்ந்தவளை பின்னாலிருந்து இறுக்கி அணைத்து அவள் முதுகில் சொட்டியிருந்த தண்ணீரை உதடுகளால் ஒற்றி எடுத்தான்..

அவளுக்கு மூச்சுவிட மறந்து போனது அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கழுத்தில் முகம் புதைத்தான்..

அவள் மெதுவாக நிரஞ்சனா என்க அவன் இன்னும் மயக்கத்திலேயே என்ன எனக்கேட்டான்..

கூப்..கூப்பிடுகிறாள் என சொல்ல ஹூம் என்றான்..

நிரஞ்சனாவின் குரல் அடுத்த அறையில் கேட்டது இதற்குமேல் நின்றிருந்தால் நன்றாக இராது என எண்ணிய அவள் நான் போக வேண்டும் என்று அவன் கையை விலக்க அவனுக்கு எரிச்சலாக வந்தது..

அவன் திரும்பி நின்று கொண்டான் அவன் உடல் மொழியிலேயே கோபமாக இருப்பது தெரிந்தது..

நான் போகவா எனக் கேட்க வேண்டாம் என்றால் இருந்து விடப்போகிறாயா வெடுக்கென கேட்டான்..

ஆனால் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது கதவு வரை போனவள் திரும்பி அவனைப் பார்த்தால் இன்னும் அவன் அப்படியே நின்றிருந்தான்..

பிடிவாதம் என சிரித்து அவனருகில் சென்று கன்னத்தில் இதழ் பதித்து கதவு திறந்து வெளியே ஓடிவிட்டாள்..

அவளுக்கு முகச்சிவப்பு இன்னும் அடங்கவில்லை அதற்குள் நிரஞ்சனா அவளை தேடி வந்து விட்டாள் அவளுடைய சிவந்த முகமும் அண்ணன் அறையிலிருந்து வந்தவளையும் பார்த்து என்ன நடந்திருக்கும் என அவளால் யூகிக்க முடிந்தது..

என்ன அண்ணி அதற்குள் நீங்களே அண்ணன் அறையைக் கண்டுபிடித்து சென்று விட்டீர்களா என கேட்க "என்ன" என திருதிருவென விழித்தாள்..

இல்லை அண்ணனிடம் டிசைன் பைலை காட்ட வேண்டும் அல்லவா அதை காட்டி விட்டீர்களா என கேட்டேன் குறும்புடன் புன்னகைத்தாள்..

அவள் அண்ணி என அழைத்ததையோ கேலி செய்ததையோ அவள் உணரக்கூடயில்லை..

"ஆம் " என தலையாட்டி வைத்தாள்..

அண்ணன் இவளை என்ன செய்தானோ பித்து பிடித்தது போல நிற்கிறாளே என நினைத்து அவளின் அறைக்கு கூட்டிச்சென்றாள்..

அவளின் அறை மிதுவுடையது போல பெரிது இல்லை என்றாலும் ஓரளவு பெரியதாக தான் இருந்தது..

சைதன்யாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுக் கொடுத்து சகஜமாக்கினாள் நிரஞ்சனா..

ஒருமுறை மணியை பார்த்து விட்டு சனா நான் இப்பொழுது கிளம்பினால் தான் சீக்கிரம் வீடு போய் சேர முடியும் என எழுந்தவள் அவள் ஆச்சரியமாக பார்ப்பதை பார்த்து என்ன என கேள்வியாக நோக்கினாள்..

அண்ணனும் என்னை "சனா" என்றுதான் கூப்பிடுவார் என சொல்ல "ஓ" என தலையசைத்து விட்டு அவளைப் பார்த்து அப்படியானால் உங்கள் கண்ணன் எப்படி கூப்பிடுவார் என குறும்புடன் புன்னகைக்க அவள் முகம் சிவந்து அவர் "ரஞ்சு" எனக் கூப்பிடுவார் என சொன்னாள்..

சைதன்யா அவளை கிண்டலாக ஏதோ சொல்ல இருவரும் சிரித்தபடி வெளியில் வரவும் மிதுவும் அவனுடைய ரூமில் இருந்து விசிலடித்தபடியே வெளியில் வரவும் சரியாக இருந்தது..

அவனைப் பார்த்த நிரஞ்சனா என்ன அண்ணா ரொம்பவும் சந்தோசமாய் இருக்கிறாய் போலிருக்கிறது..

ஆமாம் சனா ரொம்ப நாள் கழித்து ரொம்பவும் அருமையான ஸ்வீட் ஒன்று சாப்பிட்டேன் அதனால்தான் என சைதன்யாவை பார்த்ததும் அவள் பதற்றத்துடன் நான் முதலில் போகிறேன் நீங்கள் பிறகு வாருங்கள் என கீழே இறங்கி ஓடினாள்..

ஓடிய அவளைப் பார்த்து உல்லாசமாக நகைத்தான் அவளுக்கும் அந்த நகைப்பொலி கேட்டது அதனால் வெட்கம் பிடுங்கி தின்றது..

என்ன அண்ணா அண்ணியிடம் சம்மதம் வாங்கி விட்டாயா..

இல்லை ஆனால் அவளுக்கும் விருப்பம் தான் என தெரிந்துகொண்டேன்..

எப்படி என அவள் வினவ அவனோ தன் மனதிற்குள் நான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டும் என்னை அவள் வெறுக்கவில்லையே அதிலிருந்தே தெரிந்துகொண்டேன் என நினைத்தவன் வெளியில் அவளிடம் முன்பே எனக்கு நிச்சயம் தான் ஆனால் இன்று அவள் மூலமாகவே உணர்ந்துகொண்டேன்..

நீயே சொன்னாயா..

நான் சொல்வதற்கு இன்னும் நேரமிருக்கிறது சனா நான் விழாவன்று தான் சொல்வேன் என ஏற்கனவே சொன்னேனே..

அப்படி எனில் அவளே வாயைத்திறந்து சொன்னாளா..

வாய் வழியாகத்தான் ஆனால் வாய் மொழியாக அல்ல என மனதிற்குள் நினைத்தவன் ஆமாம் ஆனால் இல்லை என்றான்..

அண்ணா என்ன சொல்கிறாய் புரியும்படி சொல்லு என அவள் குழப்பத்துடன் கேட்கவும் உனக்கு கூடிய சீக்கிரமே நல்ல பதிலை சொல்கிறேன் இதை இதோடு விடு சனா என அவன் பேச்சை மாற்றி வேறு பேசிக்கொண்டிருந்தான்..

வீணா அப்பொழுதுதான் ரூமில் இருந்து வெளியே வந்தவள் சைதன்யாவின் சிவந்த முகமும் மிதுவின் சிரிப்பும் பார்த்து அவளுக்கு உள்ளம் கொதித்தது..
 
அருமையான பதிவு

வில்லி என்ன செய்ய போறாளோ
 
உள்ளம் கொதித்தால் இரண்டு ஐஸ் க்ரீம் சாப்பிடுடி வீணாப் போனவளே வீணா
 
Top