Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! -05

Advertisement

மதிய நேரம் கடந்தும் உறங்கிக்கொண்டிருந்தான் இன்பன். ஒண்டிவீரர் அறை வாசலில் நின்று, “இன்பா... இன்பா...” என இருமுறை அழைக்க, உடனே விழித்துக்கொண்டான் இன்பன்.

“தாத்தா?”
“சாப்பிட வா!!”
‘ஐயோ!! எல்லாரும் இருப்பாய்ங்களே!’ என மனம் அலற, தாத்தனே வந்து அழைத்ததால் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.

தங்கம் பார்த்து பார்த்து உணவு வைக்க, இவன் யாரையும் பாராமல் விழுங்கிக்கொண்டிருந்தான். உணவு வேளை முடிந்ததும் அறைக்குள் புகுந்துக்கொள்ள பார்த்தவனை, “நில்லுடா” என்ற ஒண்டிவீரரின் அதட்டல் நிறுத்த, ‘போச்சே!!!!’ என நின்றான் இன்பன்.

“என்ன நடந்துச்சு, எங்க போன, யார் காரணம்...! வரிசையா இப்போ சொல்ற!!” அவர் அதட்டலில் ‘சொல்லியே ஆக வேண்டும்’ என்ற கட்டளை இருக்க, இன்பனால் தவிர்க்க முடியவில்லை.

“தாத்தா...!! அது... காண்டீபனுக்கு அடின்னு...” அவன் தொடங்கும்போதே, “நடந்ததை சொல்லு...” என்றார் ஒண்டிவீரர்.

நா வரண்டது அவனுக்கு. இத்தனை வயதிலும் என்ன ஒரு கம்பீரம்! எதிரில் நிற்பவனை வியர்த்து போக செய்யும் அளவுக்கு? என இன்பனால் தன் தாத்தனை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

இருந்தும், அவரது பேரனல்லவா? பயப்படாமல் மீண்டும் அதே சுருதியை பாடினான்.

“காண்டீபனுக்கு அடி பட்டுடுச்சுன்னு....”

“நடந்ததை சொல்லுன்னு சொன்னேன் பேரின்பா!!” அவர் தீப்பார்வை அவனை ஐந்தடி தூரத்தில் நின்றபோதும் சுட, ‘கடவுளே!! காப்பாத்து!!!’ என புலம்பினான் இன்பன்.

“அதான் தாத்தா, காண்டீபனுக்கு....” என இன்பன் தொடங்கும்போது, அமர்ந்திருந்த ஊஞ்சலில் இருந்து உக்கிரமாய் எழுந்தே விட்டார் ஒண்டிவீரர்.

‘அடிச்சுடுவாரோ!!’ என இன்பன் மனம் அழுத சமயம், வாசலில் இருந்து கேட்டது ஓர் அபய குரல்.

“பெரியய்யா....!!!”

‘யப்பா! எவனோ வந்துட்டான்!! எஸ்கேப் ஆகிடுடா கைப்புள்ள’ கிடைத்த கேப்பில் அறைக்குள் ஓடிவிட்டான் பேரின்பன்.

வெளியே எட்டிப்பார்த்த காண்டீபனுக்கு, தன் வருங்கால மாமனாரை கண்டதும், ‘பத்து நாளு அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா?’ என்றானது.

மாணிக்கம் நிற்பதை கண்டு, மனம் திடுக்கிட்டாலும், ‘என்றைக்காய் இருந்தாலும் இதை எதிர்க்கொண்டு தானே ஆக வேண்டும்!’ என்ற எண்ணத்தில் “வாங்க மாணிக்கம்! வாங்க” என்றார் ஒண்டிவீரர். சிவகாமியும் உடன் சென்று அழைக்க, மாணிக்கம் தன் மனைவி மகளோடு வந்திருந்தார்.

உள்ளே வந்தவர்களை அமர செய்து உபசரித்தபின், எப்படி ஆரம்பிப்பது? என ஒருவருக்கும் விளங்கவில்லை.

மாணிக்கமே, “பேத்தி கல்யாணம், இப்படி சட்டுன்னு வைப்பீங்கன்னு எங்களுக்கு தெரியாது! இல்லனா நாங்க வெளியூர் போயிருக்க மாட்டோம்! போன இடத்துல என் போனை தண்ணில வேற போட்டு தொலைச்சுட்டேன், வேலை செய்யாம போச்சு! உங்க யார்க்கிட்டயும் தொடர்புக்கொள்ள கூட முடியல!” என்று நிறுத்தியவர்,

“இன்னைக்கு காலைல வந்ததும் தான் எல்லாரும் நடந்ததை சொன்னாங்க!! வருத்தமா இருந்துச்சு!!!” என்றார் மாணிக்கம்!

ஒண்டிவீரர் அடுத்து நடந்தவற்றை எப்படி சொல்லவென யோசிக்கும்போதே, “உங்க பேத்தி, இன்பன் மாப்பிளையை தான் விரும்புறதா ஊரு முன்னாடி சொல்லிடுச்சாமே? நிசமா?” என்றார் அவர்.

‘ஆம்’ என சொல்ல அங்கே ஒருவருக்கும் வாய்வரவில்லை.

“மௌனமா இருக்குறதுலையே தெரியுது, அதான் உண்மைன்னு! இன்பன் தம்பிக்கும் உங்க பேத்தி மேல இஷ்டமா?” என்றார் மாணிக்கம். ‘மாப்பிள்ளை, தம்பியாக மாறியிருந்தது’

அறைக்குள் இருந்த இன்பனுக்கு நன்றாக கேட்டது. தான் வெளியே செல்ல வேண்டியதின் முக்கியத்துவம் உணர்ந்து அவன் வெளியே வர, முதலில் அவனை கண்டது சுசீலா தான்!

வந்ததில் இருந்து சிலை போல நின்றிருந்தவள் இன்பன் வந்ததும் அவனை வேகமாய் நிமிர்ந்து பார்க்க, அவளையே பத்து நாட்கள் காணாத தவிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காண்டீபனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“வாங்க மாமா, வாங்கத்தை!!” என்றான் இன்பன் உபசரிப்பாய்.

“தம்பி...” என அவர் தொடங்க, “தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்கும் கோகிலாவுக்கும் நேத்துதான் வீட்டோட கல்யாணம் ஆச்சு! உங்களுக்கு வாக்கு குடுத்துட்டு ஏமாத்துறதா நினைக்க வேண்டாம்” என்றான் ‘கண்டேன் சீதையை’ என்பதை போல பட்டென!

வந்த மூவருக்குமே இது பேரதிர்ச்சி தான்! இன்பனையும் கோகிலாவையும் சேர்த்து வைத்து ஊரார் புரளி பேச, விரைவிலேயே சுசீலா இன்பன் திருமணத்தை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று வந்தவர்களுக்கு ‘திருமணமே முடிந்துவிட்டது’ என்ற செய்தி அதிர்வாய் தான் இருந்தது.

மாணிக்கம் சமாளித்துக்கொண்டு, “ஹோ!!” என்றார்.

சுசீலா கோகிலாவையும் அவள் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிறையும் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மாமா...!!?” என்றாள் சுசீலா அவளை மீறி!
இன்பனுக்கு சுசீலாவை நிமிர்ந்து பார்க்கவும் சங்கடமாய் போனது. தம்பி மனைவியாய் வீட்டிற்கு வர போகிறவள், அனைவர் முன்னும் எதையாவது இவனிடம் ஏடாகூடமாய் பேசிவிட்டால் என்ன செய்வது? காலம் முழுதும் சங்கடம் இன்றி முகம் பார்க்க வேண்டுமே என்ற பதைப்பு!

அடுத்து அவள் பேசும்முன், “சுசீலா, அமைதியா இரு” என அதட்டினார் மாணிக்கம்.

“ஊரைக்கூட்டி நிச்சயம் செய்யலன்னாலும் மாணிக்கம் மவ பெரியவீட்டுக்கு மருமவளா போக போறான்னு ஊரே பேசிட்டு இருந்துச்சு! நம்ம சனங்க எல்லாருக்குமே ஒப்பு தாம்பூலம் மாத்துனதும் தெரியும்! இந்த நிலைல கல்யாணம் நின்னுடுசுன்னா, அடுத்து எப்படி மாப்பிள்ளை தேடுவேன், எந்த முகத்தோட இன்னொரு வீட்டு படியேருவேன்னு தெரியல அய்யா” என்றார் ஒரு பெண்ணை பெற்றவர் என்ற இயல்பான கவலையில்.

ஒண்டிவீரருக்கும் சிவகாமிக்கும் தர்மசங்கடமாய் போனது.

இன்பனும் கோகிலாவும் காண்டீபனை தான் ‘இப்போவாது பேசித்தொலடா’ என்ற ரீதியில் உறுத்து நோக்க, அவனோ சுசிலாவின் கசங்கிய முகத்திலேயே கவனமாய் இருந்தான்.

தலை குனிந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த மாணிக்கம், “சரிங்கைய்யா, நாங்க கிளம்புறோம்!! இந்த குடும்பத்துல வாழ எங்க பொண்ணுக்கு குடுப்பினை இல்ல, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்!!” என்றவர் எழுந்து நின்று வணக்கத்தோடு விடைபெற செல்ல,
“மாமா... ஒரு நிமிஷம்!!” என்றான் காண்டீபன்.

“நானும் இந்த வீட்டு வாரிசு தான்!! உங்க பொண்ணை எனக்கு கட்டிக்குடுத்தாலும் அவ இந்த வீட்டு மருமக தான்! உங்க கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேனா?” என்று கேட்க, இன்பன் கோகிலாவுக்கு, ‘ஹப்பாடா!’ என்றிருந்ததென்றால் அவர்களை தாண்டி அனைவருக்கும், ‘என்ன பேசுறான் இவன்?’ என்றிருந்தது.

‘அண்ணனுக்கு பேசுன பொண்ணை தம்பிக்கு கட்டுறதா?’ இதுவே அவர்கள் எண்ணம்!!!

சுசீலாவுக்கு, ‘இந்த வெள்ளை காண்டாமிருகத்துக்கு நானா?’ என தோன்ற தலை கிறுகிறுவென சுற்றியது.

“கல்யாண தேதி குறிங்க மாமா! நான்தான் உங்க மருமகன்” என்றான் ஆணித்தனமாய்.

மேற்கொண்டு அவன் பேசியதை கேட்டதும், கிறுகிறுத்த தலை, வேகமாய் சுற்ற, தடுமாறி சரிய போனவளை வேகமாய் தன் வலிய கரத்தில் தாங்கிக்கொண்ட காண்டீபன், அரைகுறை கண்களில் அவனை கண்ட சுசீலாவுக்கு ரகசிய பறக்கும் முத்தம் ஒன்றை அவசரமாய் கொடுக்க, திறந்திருந்த அறைக்கண்ணும், அவசரமாய் மூடிக்கொண்டது.


-வருவான்...


Super llloonnnngggg epi sis, Worth for waiting :love::love::love::love::love:

Thanks dear ....
 
Super Super Super pa... semma semma episode.....ஏன் intha kokila அவன் kita பேசாமல் இப்படி பண்றா.. மற்றவங்க kita எல்லாம் பேசுற அவன் kita pesa maatengiraa... Ha ? ? ? ? nighty vennum ah ha ? ? ? ? என்ன kalaai kalaaikiraan பாருங்க avala அவளே oru நிமிஷம் Nizamaa தான் kekuraan போல nu nenaikka vechitaan.... Ha ? ? ?... Kandipan தான் அவன் அம்மா photo va எடுத்து vechi kitu இருந்தான் ah nalavelai kokila பாத்து கொண்டு vanthutaa avan mela irukara பாசம் ah kaamichika maatengiraan... Sulo va இப்போ வாவது கல்யாணம் பண்ணுகிறேன் nu வாய் ah திறந்து sonaane அப்பா.... தாத்தா உண்மை ah ketathu kuda sollamal irukaan ah etho something fishy... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Super sis. Cycle sema speed ah poiruchu. Inban nighty varalaru super. Seekirama adutha epi eluthunga parpom. Eagerly waiting for next episode.??
 
மதிய நேரம் கடந்தும் உறங்கிக்கொண்டிருந்தான் இன்பன். ஒண்டிவீரர் அறை வாசலில் நின்று, “இன்பா... இன்பா...” என இருமுறை அழைக்க, உடனே விழித்துக்கொண்டான் இன்பன்.

“தாத்தா?”
“சாப்பிட வா!!”
‘ஐயோ!! எல்லாரும் இருப்பாய்ங்களே!’ என மனம் அலற, தாத்தனே வந்து அழைத்ததால் வேறு வழியின்றி எழுந்து சென்றாள்.

தங்கம் பார்த்து பார்த்து உணவு வைக்க, இவன் யாரையும் பாராமல் விழுங்கிக்கொண்டிருந்தான். உணவு வேளை முடிந்ததும் அறைக்குள் புகுந்துக்கொள்ள பார்த்தவனை, “நில்லுடா” என்ற ஒண்டிவீரரின் அதட்டல் நிறுத்த, ‘போச்சே!!!!’ என நின்றான் இன்பன்.

“என்ன நடந்துச்சு, எங்க போன, யார் காரணம்...! வரிசையா இப்போ சொல்ற!!” அவர் அதட்டலில் ‘சொல்லியே ஆக வேண்டும்’ என்ற கட்டளை இருக்க, இன்பனால் தவிர்க்க முடியவில்லை.

“தாத்தா...!! அது... காண்டீபனுக்கு அடின்னு...” அவன் தொடங்கும்போதே, “நடந்ததை சொல்லு...” என்றார் ஒண்டிவீரர்.

நா வரண்டது அவனுக்கு. இத்தனை வயதிலும் என்ன ஒரு கம்பீரம்! எதிரில் நிற்பவனை வியர்த்து போக செய்யும் அளவுக்கு? என இன்பனால் தன் தாத்தனை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

இருந்தும், அவரது பேரனல்லவா? பயப்படாமல் மீண்டும் அதே சுருதியை பாடினான்.

“காண்டீபனுக்கு அடி பட்டுடுச்சுன்னு....”

“நடந்ததை சொல்லுன்னு சொன்னேன் பேரின்பா!!” அவர் தீப்பார்வை அவனை ஐந்தடி தூரத்தில் நின்றபோதும் சுட, ‘கடவுளே!! காப்பாத்து!!!’ என புலம்பினான் இன்பன்.

“அதான் தாத்தா, காண்டீபனுக்கு....” என இன்பன் தொடங்கும்போது, அமர்ந்திருந்த ஊஞ்சலில் இருந்து உக்கிரமாய் எழுந்தே விட்டார் ஒண்டிவீரர்.

‘அடிச்சுடுவாரோ!!’ என இன்பன் மனம் அழுத சமயம், வாசலில் இருந்து கேட்டது ஓர் அபய குரல்.

“பெரியய்யா....!!!”

‘யப்பா! எவனோ வந்துட்டான்!! எஸ்கேப் ஆகிடுடா கைப்புள்ள’ கிடைத்த கேப்பில் அறைக்குள் ஓடிவிட்டான் பேரின்பன்.

வெளியே எட்டிப்பார்த்த காண்டீபனுக்கு, தன் வருங்கால மாமனாரை கண்டதும், ‘பத்து நாளு அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா?’ என்றானது.

மாணிக்கம் நிற்பதை கண்டு, மனம் திடுக்கிட்டாலும், ‘என்றைக்காய் இருந்தாலும் இதை எதிர்க்கொண்டு தானே ஆக வேண்டும்!’ என்ற எண்ணத்தில் “வாங்க மாணிக்கம்! வாங்க” என்றார் ஒண்டிவீரர். சிவகாமியும் உடன் சென்று அழைக்க, மாணிக்கம் தன் மனைவி மகளோடு வந்திருந்தார்.

உள்ளே வந்தவர்களை அமர செய்து உபசரித்தபின், எப்படி ஆரம்பிப்பது? என ஒருவருக்கும் விளங்கவில்லை.

மாணிக்கமே, “பேத்தி கல்யாணம், இப்படி சட்டுன்னு வைப்பீங்கன்னு எங்களுக்கு தெரியாது! இல்லனா நாங்க வெளியூர் போயிருக்க மாட்டோம்! போன இடத்துல என் போனை தண்ணில வேற போட்டு தொலைச்சுட்டேன், வேலை செய்யாம போச்சு! உங்க யார்க்கிட்டயும் தொடர்புக்கொள்ள கூட முடியல!” என்று நிறுத்தியவர்,

“இன்னைக்கு காலைல வந்ததும் தான் எல்லாரும் நடந்ததை சொன்னாங்க!! வருத்தமா இருந்துச்சு!!!” என்றார் மாணிக்கம்!

ஒண்டிவீரர் அடுத்து நடந்தவற்றை எப்படி சொல்லவென யோசிக்கும்போதே, “உங்க பேத்தி, இன்பன் மாப்பிளையை தான் விரும்புறதா ஊரு முன்னாடி சொல்லிடுச்சாமே? நிசமா?” என்றார் அவர்.

‘ஆம்’ என சொல்ல அங்கே ஒருவருக்கும் வாய்வரவில்லை.

“மௌனமா இருக்குறதுலையே தெரியுது, அதான் உண்மைன்னு! இன்பன் தம்பிக்கும் உங்க பேத்தி மேல இஷ்டமா?” என்றார் மாணிக்கம். ‘மாப்பிள்ளை, தம்பியாக மாறியிருந்தது’

அறைக்குள் இருந்த இன்பனுக்கு நன்றாக கேட்டது. தான் வெளியே செல்ல வேண்டியதின் முக்கியத்துவம் உணர்ந்து அவன் வெளியே வர, முதலில் அவனை கண்டது சுசீலா தான்!

வந்ததில் இருந்து சிலை போல நின்றிருந்தவள் இன்பன் வந்ததும் அவனை வேகமாய் நிமிர்ந்து பார்க்க, அவளையே பத்து நாட்கள் காணாத தவிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காண்டீபனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“வாங்க மாமா, வாங்கத்தை!!” என்றான் இன்பன் உபசரிப்பாய்.

“தம்பி...” என அவர் தொடங்க, “தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்கும் கோகிலாவுக்கும் நேத்துதான் வீட்டோட கல்யாணம் ஆச்சு! உங்களுக்கு வாக்கு குடுத்துட்டு ஏமாத்துறதா நினைக்க வேண்டாம்” என்றான் ‘கண்டேன் சீதையை’ என்பதை போல பட்டென!

வந்த மூவருக்குமே இது பேரதிர்ச்சி தான்! இன்பனையும் கோகிலாவையும் சேர்த்து வைத்து ஊரார் புரளி பேச, விரைவிலேயே சுசீலா இன்பன் திருமணத்தை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று வந்தவர்களுக்கு ‘திருமணமே முடிந்துவிட்டது’ என்ற செய்தி அதிர்வாய் தான் இருந்தது.

மாணிக்கம் சமாளித்துக்கொண்டு, “ஹோ!!” என்றார்.

சுசீலா கோகிலாவையும் அவள் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிறையும் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மாமா...!!?” என்றாள் சுசீலா அவளை மீறி!
இன்பனுக்கு சுசீலாவை நிமிர்ந்து பார்க்கவும் சங்கடமாய் போனது. தம்பி மனைவியாய் வீட்டிற்கு வர போகிறவள், அனைவர் முன்னும் எதையாவது இவனிடம் ஏடாகூடமாய் பேசிவிட்டால் என்ன செய்வது? காலம் முழுதும் சங்கடம் இன்றி முகம் பார்க்க வேண்டுமே என்ற பதைப்பு!

அடுத்து அவள் பேசும்முன், “சுசீலா, அமைதியா இரு” என அதட்டினார் மாணிக்கம்.

“ஊரைக்கூட்டி நிச்சயம் செய்யலன்னாலும் மாணிக்கம் மவ பெரியவீட்டுக்கு மருமவளா போக போறான்னு ஊரே பேசிட்டு இருந்துச்சு! நம்ம சனங்க எல்லாருக்குமே ஒப்பு தாம்பூலம் மாத்துனதும் தெரியும்! இந்த நிலைல கல்யாணம் நின்னுடுசுன்னா, அடுத்து எப்படி மாப்பிள்ளை தேடுவேன், எந்த முகத்தோட இன்னொரு வீட்டு படியேருவேன்னு தெரியல அய்யா” என்றார் ஒரு பெண்ணை பெற்றவர் என்ற இயல்பான கவலையில்.

ஒண்டிவீரருக்கும் சிவகாமிக்கும் தர்மசங்கடமாய் போனது.

இன்பனும் கோகிலாவும் காண்டீபனை தான் ‘இப்போவாது பேசித்தொலடா’ என்ற ரீதியில் உறுத்து நோக்க, அவனோ சுசிலாவின் கசங்கிய முகத்திலேயே கவனமாய் இருந்தான்.

தலை குனிந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த மாணிக்கம், “சரிங்கைய்யா, நாங்க கிளம்புறோம்!! இந்த குடும்பத்துல வாழ எங்க பொண்ணுக்கு குடுப்பினை இல்ல, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்!!” என்றவர் எழுந்து நின்று வணக்கத்தோடு விடைபெற செல்ல,
“மாமா... ஒரு நிமிஷம்!!” என்றான் காண்டீபன்.

“நானும் இந்த வீட்டு வாரிசு தான்!! உங்க பொண்ணை எனக்கு கட்டிக்குடுத்தாலும் அவ இந்த வீட்டு மருமக தான்! உங்க கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேனா?” என்று கேட்க, இன்பன் கோகிலாவுக்கு, ‘ஹப்பாடா!’ என்றிருந்ததென்றால் அவர்களை தாண்டி அனைவருக்கும், ‘என்ன பேசுறான் இவன்?’ என்றிருந்தது.

‘அண்ணனுக்கு பேசுன பொண்ணை தம்பிக்கு கட்டுறதா?’ இதுவே அவர்கள் எண்ணம்!!!

சுசீலாவுக்கு, ‘இந்த வெள்ளை காண்டாமிருகத்துக்கு நானா?’ என தோன்ற தலை கிறுகிறுவென சுற்றியது.

“கல்யாண தேதி குறிங்க மாமா! நான்தான் உங்க மருமகன்” என்றான் ஆணித்தனமாய்.

மேற்கொண்டு அவன் பேசியதை கேட்டதும், கிறுகிறுத்த தலை, வேகமாய் சுற்ற, தடுமாறி சரிய போனவளை வேகமாய் தன் வலிய கரத்தில் தாங்கிக்கொண்ட காண்டீபன், அரைகுறை கண்களில் அவனை கண்ட சுசீலாவுக்கு ரகசிய பறக்கும் முத்தம் ஒன்றை அவசரமாய் கொடுக்க, திறந்திருந்த அறைக்கண்ணும், அவசரமாய் மூடிக்கொண்டது.


-வருவான்...
Amarkalam

Next epi seikeram Thagha
 
காண்டீபன் வாயை திறந்து சுசீலாவை கேட்டுட்டான்
 
Top