Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ....SMKN - INTRO

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
வணக்கம் ..... இது உங்களோட தளிர் ...இந்த கதை என்னோட வாழ்க்கையில் சந்தித்த ரம்மியமான ஒருத்தர் பற்றியது ........ இப்டிலாம் நடந்தா எப்படி இருக்குனு நான் நெனச்சதை உங்களுக்கு கொஞ்சம் கற்பனை சுவை கலந்து எழுதியிருக்கிறேன் ...... இதுல இருக்குற நிறை குறைகளை உங்களோட கமெண்ட்ஸ் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்க ...அது நிறைகளாக இருந்தாலும் குறைகளாக இருந்தாலும் என்னோட வளர்ச்சிக்கு பயன்படுத்திக்குறேன் .....

என்னதான் கடவுள் நமக்கு எல்லா நிறைகளையும் கொடுத்திருந்தாலும் நாம அதை சரியா பயன்படுதிக்குறது கிடையாது .....ஆனா சிலர் ......கடவுள் அவங்களுக்கு கொடுத்த குறைகளைக்கூட நிறைகளாக மாற்றி அவங்களோட வாழ்க்கையை செம்மயா வாழுறாங்க ... அப்படி பட்டவங்க தாங்க நம்ம சுடர் ..... வாங்க அவங்களை எங்க சந்திச்சேன்னு சொல்லுறேன் ...................

ரயில் பயணம் என்றாலே 6 வயசு குழந்தைகளில் இருந்து 60 வயசு கடந்தவங்க வரைக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் .... எனக்கும் ரயிலில் பயணம் செய்யுற ஒவ்வொரு தடவையும் ஏதோ என் மனசுல இருக்குற பாரம் எல்லாம் குறைஞ்சு ஏதோ ஒரு சொல்ல முடியாத சந்தோசம் பிறக்கும் ..... அதுனாலயே நான் சின்ன வயசுல இருந்து சென்னைல படிக்கனுன்னு ஆசைப்பட்டேன் ..... ஆசை பட்ட அதே மாதிரி நல்ல கோர்ஸ் சேர்ந்து இப்போ மூனாவது வருஷம் படிக்கிறேன் ,.. பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தேன் , .... பொங்கல விடுமுறை எல்லாம் முடிஞ்சு காலேஜ் போக டிக்கெட் கிடைக்கலை .....அதுனாலே , ஒருவாரம் காத்திருந்து ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணேன் ..அப்போதெரியாது ... இந்த பயணம் என்னோட வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு பரிசை எனக்கு கொடுக்க போகுதுனு .....

எப்போவும் போல ...... .ட்ரெயின் டிக்கெட் காலையில் 8 .30 மணிக்கு புக் பண்ணிருந்தேன் ...... ட்ரெயின் சரியா 8.50 க்கு என்னோட ஜங்ஷன் வந்துச்சு ...அதுல ஏறி என்னோட சீட் எதுன்னு தேடி பிடிச்சு ஒரு வழியா உக்காந்துட்டேன் .....சுத்தி பார்த்தேன் ..... அது ஒரு வாரத்தின் இடைப்பட்ட நாள் ..அதுனால அவ்ளோ கூட்டம் இல்லை ...... அங்க ஒருத்தர் இங்க ஒருத்தரா இருந்தாங்க ......

என்னதான் ... நான் பெரிய பொண்ணு ...எனக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியும் .. நான் பத்திரமா இருந்துக்குவேன் ..... நீங்க இன்னும் உங்ககூடவே வெச்சுக்க நான் சின்ன பொண்ணு இல்லைனு அம்மாகிட்ட சீன் போட்டாலும் ...... அப்டியே ட்ரெயின் மெதுவா நகருறப்போ ...அம்மாவை நினைச்சு வரும்பாருங்க ஒரு சில கண்ணீர் துளிகள் ...அதை உணர்ந்தவர்களுக்கு நான் சொல்றது புரியும் ..... அப்படியே கண்ணிலிருந்து கன்னத்திற்கு இறங்கி வந்த கண்ணீர் துளிகளை கைக்குட்டையில் துடைத்துவிட்டு என்னை சுற்றி இருப்பவர்களை நோக்கி கண்களை சுழலவிட்டேன் .........

நாம ஏதாவது ஒரு பொது இடத்துல எதாவது பண்ணிட்டு எப்போவும் இப்படித்தானே பாப்போம் ..அதையேதான் நானும் பண்ணுனேங்க ...........


அப்பொழுது ........

என்னங்க ...கொஞ்சம் பாப்பாவை பிடிக்குறிங்களா ????? என்று கேட்டவாறே என்னருகே பாப்பாவை நீட்டுனாங்க ஒரு அக்கா ...பாப்பாவும் என்கிட்ட தாவி வந்துச்சு ...என்னோட கை தன்னிச்சையாக பாப்பாவை இறுக்கமாக பிடிச்சுது .... ஆனா , என்னோட உணர்வு மொத்தமும் அந்த அக்காவோட முகத்துலயே நிலைத்து இருந்துச்சு ......

நான் அவங்கள விழுங்குற மாதிரி பார்த்தேன் ......அவங்க சிரிச்சுட்டே ...பயப்படாத ...நான் ஒன்னும் உன்னை கடிச்சு சாப்பிட மாட்டேன் .....அப்டினு சொல்லிகிட்டே ..என்கிட்ட இருந்து பாப்பாவை வாங்கி அவங்க வெச்சிருந்த பால்புட்டியை எடுத்து பாப்பாக்கு பால் கொடுத்துட்டு இருந்தாங்க .... பாப்பா என் கையை பிடிச்சு இழுத்த உடனே தான் எனக்கு சுயநினைவே வந்துச்சு ...அப்போதான் என்னை சுத்தி எல்லாரும் என்ன பண்றாங்கனு பாத்தேன் ... எல்லாரும் அவங்களையே தான் வெறிச்சு பாத்துட்டு இருந்தாங்க ....ஆனா , அவங்க யாரையும் பொருட்படுத்தாம கடமையே கண்ணா பாப்பாக்கு சிரிப்பு காட்டிட்டு இருந்தாங்க ....
நான் அவங்களையே வெறிச்சு பார்ப்பதை கவனிச்சு ...." என்கிட்ட எதாவது கேட்கணுமா ???" அப்டினு கேட்டாங்க ....கேக்கலாமா வேண்டாமான்னு கொஞ்சம் கூட யோசிக்காம ..."ஒன்னும் இல்லைனு " சொல்லிட்டேன் ....ஆனா ,மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி ஓடிட்டு இருந்துச்சு ....... ஏற்கனவே இருந்த பிரச்சனை பத்தாதுன்னு நம்ம ஹீரோ வந்து சேர்ந்தார் ..... அவரை பார்த்த உடனே எனக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆட ஆரம்பிசுடுச்சு ...... எனக்கு குப்புனு வேர்க்குறது எனக்கே தெரிஞ்சிது .........ஆனா என்னாலே தடுக்க முடியலை ....காலைல சாப்பிடாம ஏன்டா வந்தோம்னு ஆகிடுச்சு ....மெதுவா மயக்கம் வரமாதிரி இருக்கப்போ ....
என்ன பண்றதுனு தெரியலையே அப்டினு யோசிச்சுட்டு ...தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடன்னு உள்ளே செலுத்தினேன் .... கொஞ்சம் கொஞ்சமா என்னோட உணர்வுகள் மட்டுப்பட ஆரம்பிச்சுது .......
நான் முழிக்குறத பார்த்து அந்த அக்காவும் அண்ணாவும் சிரிச்சுக்கிட்டாங்க ....... எனக்கு எதிர்ல இருந்த சீட்ல அவரு உக்காந்தாரு .... அவரு உக்காந்தா உடனே அந்த அக்கா அவரு கையில இருந்த கொழந்தையும் வாங்கி ஒரு மடில வெச்சுக்கிட்டாங்க ...... ரெண்டு கையிலயும் ரெண்டு குழந்தையை அந்த அக்கா வெச்சுருக்குறதை பாக்குறப்போ செம்ம அழகா இருந்துசுங்க ........... அப்போ அவரு பேச ஆரம்பிச்சாரு ...." ஹாய் ..என் பெயர் சுடர் .... இவ பெரு ஆது ..... அஷ்வரூதா தீக்ஷித் ..... என்னோட ஒரே ஒரு செல்ல பொண்டாட்டி .... அப்டினு சொல்றப்போ அக்கா அவங்க முழங்கையை வெச்சு அவங்க இடுப்புல ஒரு இடி இடிச்சாங்க .... பாக்குறதுக்கு செம்ம அழகா இருந்துச்சு ..... அதுக்கு அப்புறம் என் பக்கத்துலே இருந்தவங்கள பார்த்து சுடர் ஹாய் சொன்னாங்க ..... அவங்க முகத்தை திருப்பிக்கிட்டாங்க ....... அப்போதான் , நீ என்ன நினைக்குறேன்னு புரியுது டா ...உங்கிட்ட நான் எங்க கதையை சொல்லட்டுமா ??? அப்டினு என்னை பாத்து கேட்டாங்க .....
நான் சரினு சொல்றதுக்குள்ள சுடர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க ...... வாங்க கதைக்கு போகலாம் .....
 
Last edited:
உங்களுடைய "சர்க்கரை மட்டும்
கலப்போம் நாம்"-ங்கிற புதிய
அழகான அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இளந்தளிர் வெண்பா டியர்
 
Last edited:
கதையின் பெயரே ரொம்ப நல்லா
ஸ்வீட்டா இருக்கு, இளந்தளிர் டியர்
உண்மைதான்
அடுத்தவங்களிடம் பேசும் பொழுது சர்க்கரை மட்டும் கலந்து இனிப்பான வார்த்தைகளை பேசலாம்
அடுத்தவங்க லைப்-ல சர்க்கரை மட்டும் கலந்து இனிப்பானவைகளை மட்டும் செய்யலாம்
 
முழுவதும் எழுதுவதற்குள் ஒய் அவசரம், வெண்பா பேபி?
எழுதியதை இப்போப் பாருங்க
naan thaan first nu comment lam en vaazh naal la ipothaan 1st time paakuren ..unmaiyave romba santhosama iruku ... malli mam ku spl thanks ...ungalala thaan intha site la enakku oru chance kidaichiruku..... thanks a lot
 
பெஸ்ட் விஷஸ் :love: :love:
நீங்க வெறிச்சு பார்க்குற அளவு அவங்க கிட்ட அப்படி என்ன விஷேசம் ??
கதை பேரு வித்யாசமா இருக்கு....
 
அருமையான ஆர்வத்தை தூண்டும் ஆரம்பம் தலைப்பே வித்யாசமாக உள்ளது.... அருமை வாழ்த்துக்கள்
 
Top