Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-12

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-12



பின்னாடி சீட்டில் சுந்தரி பக்கத்தில் உட்கார்ந்தான் பூவரசு.

என்னடா அதிசியமா இருக்கு அமைதியா செல்ல நோண்டிட்டு இருக்கா நம்மள பார்க்கவே இல்லை, எட்டி அவள் செல்போனை பார்த்தான்.

“அடிப்பாவி“ , சொல்லி வாயில் கையை வைத்தான்,

“என்ன இவ்வளவு ரியாக்க்ஷன் பூவா“

“என்னடி இப்படி ரோமன்ஸ் சீன பார்க்கற ,அதுவும் அந்த ஆக்டர் லிப் டு லிப் அடிக்கிறான் இவ்வளவு பேட் கேர்ள்லாடி நீ. “

“அய்யே , அன்னிக்கு நைட் உனக்கு டௌட் வந்துச்சுன்னா, பக்கத்து வீட்டிலையா கேட்க முடியும், சின்ன வயசிலதான் சைட் அடிக்க விடல , படி படி உயர வாங்கன“

“எதுக்கு இப்ப கத்தி பேசறவ“

“பின்ன பேசிக்கா எனக்கு எதுவும் தெரியாது“,

“உனக்கு நம்பிட்டேன்டி , ஓண்ணும் தெரியதா தான் பத்தாவது படிக்க சொல்ல குடுத்தியே அது“.

ரொம்ப பேசிறீயே உன்ன என்ன செய்யலாம் மைன்ட் வாய்சிலே பேசினால்.

“காத்து சரியா வரல நீ இந்த பக்கம் வா நான் அந்த பக்கம் போறேன் மாமா“ சொல்லி அவன்மேலே ஏறினாள், ஆரம்பிச்சிட்டா நான் செத்தேன் இன்னிக்கு.

“ஏய் சீக்கீரம் அந்தபக்கம் உட்காருடி எவ்வளவு நேரம் என்மேலே இருப்பே. “

“அய்யோ ரொம்பதான் அலட்டிக்கிறே“, வாலி படம் பாட்டு “இன்று முதல் இரவு பாட்டு” வைத்து கேட்டுக்கொண்டு வந்தாள்.

“ஏய் அம்மா, அக்கா எல்லோரும் இருக்காங்கடி, பாட்ட நிறுத்து. “

“உங்க அம்மாவ முன்னாடி போக சொன்னதே நான்தான், நானும், உன் மவனும் லவ் பண்ண போறோம் நீ முன்னாடி போ பாட்டி சொன்னே. “

“ஏன்டி எங்க அம்மாகிட்ட இப்படி பேசுவியா“, உன்ன கையை ஓங்க. கண்ணை அடித்து “இழுத்து வச்சி ஒரு கிஸ் குடு மாமோய். “

“நான் மாட்டேன், இன்னும் நாலு நாள்தான் இருக்கு கல்யாணத்து அதுக்குள் என்ன“ .

“டேய் சாமியாரே, திருட்டு கிஸ்தான் கிக்கா இருக்குமா, அப்படின்னு கிக்காநந்தா சாமியார் சொன்னது. நைட் 12 மணிக்கு டிவியில வராரே பார்க்கிறதில்லை“.

“ஏய் ரௌடி என்னடி என்னன்னவோ பேசிற. “

“மாமோய் நான் படிச்சது மெடிக்கல்ல, போன முதல் வருஷமே எல்லாமே தெரிஞ்சிடுச்சி, உன்னைய அப்பவே ரேப் பண்ணிருப்பேன், கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சிட்டு போகவா போது விட்டு வைச்சேன்.

உன்ன உங்க அக்கா எனக்கிட்ட நேத்தி விட்ருக்கா. என்ன ஸ்டார்ட் பண்ணட்டா“ சொல்லி தன் கால் விரல்லால், அவன் காலை சீண்டினாள்.

என்னடி பண்ணற, கால எடுடி.

தீடிரென்று சடன் பிரேக் போட்டான் பரதன், பூவரசன் மேலே விழுந்தாள் சுந்தரி. பரதன் லைட்டை போட்டு வண்டியை டீக்கடையின் முன்னே வண்டியை நிறுத்தினான். கார் நின்னுச்சு, “ எல்லாரும் பார்ப்பாங்க சுந்தரி எழுந்திருடி“. பவி மட்டும் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே தூங்குவது போல் நடித்தாள்

சிறுதூறல் தூவிக்கொண்டிருக்க அந்த குளிருக்கு இதமாக டீ வாங்கி குடித்தார்கள், கார் பக்கத்திலிருந்து டீ குடித்து கொண்டிருந்தார்கள் பூவரசும்,பரதாவுக்கு “மாமா எனக்கு டீ வேணும்“. நீ வேணா சொன்னே இப்ப வேணும் சொல்லுற.

சரி வாங்கிட்டு வரேன், டீயை கார்மேல வைத்து போனான்.

டீயை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் அவன் டீயை குடித்துக்கொண்டிருந்தாள். இவ திருந்த மாட்டா நினைத்து வாங்கி வந்த டீயை குடித்தான்.

“மாப்பிள்ள , நல்ல ரொமன்ஸ் சீனா ஓடுது போல“-பரதன்.

“நீ வேற வெறுப்பேத்தாத மாமா , இவ பண்ணுற அலும்பல் தாங்க முடியில அக்கா,பவி , அம்மா என்ன நினைப்பாங்க, படிச்சு என்ன பிரயோஜனம் எங்கன்னா காமன் சென்ஸ் இருக்கா“. கார் கிளம்பியது.

“அப்ப இவங்கல்லாம் இருங்காங்க தான் நீ ஃபில் பண்ணுறீயா மாமா“. பூவரசன் முறைக்க.

“ரொம்ப முறைக்காதடா முறைமாமா, ச்சீ உங்கிட்ட போய் பேசினேன் பாரு“.முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“பொம்மி கோவமாடா“,

“எங்கிட்ட பேசாத மாமா, உனக்கு என்னைய பிடிக்கல சரிவிடு கல்யாணம் ஆயிட்டா சரியா போயிடும். “

இப்படியெல்லாம் செஞ்சாதான் நான் உன்னைய விரும்புறேன் அர்த்தமா. அவள் கையை பிடித்தான் டைட்டாக, அப்படியில்ல பொம்மி இந்த உலகத்திலே உன்னைய தவிர வேற யாரும் பிடிக்காது. சின்ன வயசில இப்படித்தான் டைட்டா மாமா கையை பிடிச்சிட்டே நடப்ப. அப்பவே தோணும் இந்த குட்டிப்பொண்ணை வாழ்நாள் முழுக்க இப்படியே விடாத பிடிச்சிட்டே இருக்குணும். புரியுதா, ஆனா நான் கோவத்தில உன்னைய வேறுத்திட்டா, இல்ல நீ நல்ல படிச்சி உனக்கு புடிச்சவன தேர்ந்தேடுத்திட்டா என் நம்பிக்கை தப்பா ஆயிடுமில்ல. அதான் டிஸ்ட்டன்ஸ் கீப்பப் செஞ்சேன்.

கண்களை விரித்து , “நிஜமாவா பூவா“.

ஆமாம் என்று தலையை ஆட்டினான். “ஐ லவ் யூ பூவா“.

“சொல்லிட்டாளே அவ காதல்ல , சொல்லும் போதே“ பாட்டு போட்டுவிட்டான் பரதன்,

“என்னடி இது“, அதெல்லாம் கண்டுக்காத மாமோய். தூக்கம் வருது மாமா உன் மேல சாஞ்சிக்கவா , அவன் கண் அசைக்க அவன் தோள்மேல் தன் தலையை வைத்தாள். “சாமியாரே ,கடைசி வரைக்கும் நீ கிஸ் குடுக்கல பேசியே ஒட்டிட்ட“ சொல்லி அவன் இதழ் ஓற்றி இதழை ஒரு நொடியில் எடுத்தாள். பூவரசன் சுதாரிப்பதற்குள் ,

எப்படியிருந்துச்சு மாமா, கிக்கா இருந்துதா முதல் முத்தம்.

“இது ஓண்ணும் முதல் முத்தம் இல்ல, சின்ன வயசில கண்ணத்த காட்டினா நீ என் முகத்தை திருப்பி லிப்பில தான் கொடுப்ப“.

“அய்யோ மாமா அப்பவே நான் பேட் கேர்ள்லா. “

“இப்பவும் கூட“. வீடு வந்துவிட அனைவரும் இறங்கினார்கள்.

“ஐயா“ என்று பக்கத்து வீட்டிலிருந்து ஆள் ஓடி வர.

என்ன செவல சித்தப்பா, தம்பி என் பொண்ணுக்கு பிரசவ வலி வந்துடுச்சி, இந்த காத்து மழையில ஒரு வண்டியும் கானோம். என்ன செய்யறது தெரியில.

வாங்க நம்ம வண்டியை எடுத்திட்டு போலாம். மாமா நானும் கூட வரேன் சுந்தரி சொல்ல,ஓரு நிமிஷம் என் கிட் எடுத்துட்டு வரேன்.

“இன்னும் தேதி 25 நாள் இருக்கு அதுக்குள் பிரசவ வலி வந்துடுச்சு எனக்கு பயமா இருக்கு பூவரசு, ஆஸ்பிட்டல உடனே சேர்க்கனும். “

வீட்டிற்குள் நுழைந்தார்கள், செக் செய்து பார்த்துவிட்டு சுந்தரி வெளியே வந்து சொன்னான்.மாமா தலை கீழே வந்துடுச்சு பனிக்குடம் உடைஞ்சிடுச்சு. இப்ப ஆஸ்பிட்டல் போவறதுக்குள் டெலிவரி ஆயிடும் .

இவள் பேசுவதை ஆச்சிரியமாக பார்த்தான் பூவரசன். என் பொம்மி டாக்டர் இல்ல.

பாட்டி சுடுத்தண்ணி எடுத்துட்டு வாங்க சொல்லி ரூமுக்குள் சென்றாள், நல்லா பூஷ் பண்ணுங்க பயப்படாதீங்க, என்னால வலி தாங்க முடியில சுந்தரி , ஓண்ணுமில்லக்கா உங்க குழந்தை ஆழகாக இருக்கு பாருங்க.

ஐந்து நிமிடத்தில் பெண் குழந்தை பிறந்தது.மற்ற பார்மலிடிஸ் அவள் செய்து கொண்டிருக்க பாட்டி குழந்தையை எடுத்துவந்து காண்பித்தாள்.

பூவரசணுக்கு கண்கள் கலங்கின.அந்த பிஞ்சை தொட்டு தடவ.

“சுந்தரிம்மா நீ இல்லைன்னா என்ன ஆயிருப்போம், நீ எங்க வீட்டு குல தெய்வம்டா என்று செவல கையை பிடித்து அழ“. அதையே பார்த்துக்கொண்டிருந்தான் பூவரசு.

மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பொம்மியை தூக்கி வைத்து சுற்றினான் பூவரசு. பொம்மி ஒர் உயிர இந்த பூமியில பொறக்க வைச்சிருக்க. எல்லோரும் உன்னய கடவுள் சொல்ல சொல்ல எனக்கு எப்படியிருக்கு தெரியுமா.

“இந்த ஊரிலே கிளினிக் வைக்கணும். குழந்தை மாதிரியே என் கண்ணுக்கு தெரியிற ஆனா நீ பிரசவம் பார்த்து குழந்தையை கொடுத்திருக்க. என்ன வேனும் பொம்மிம்மா கேளு நான் சந்தோஷமா இருக்கேன். “

“எதுவும் வேணா, “

“கிஸ் கேட்டியே நான் தரவா“.

“ஓண்ணும் தேவையில்ல இதுக்கு எவ்வளவு டயலாக் பேசின போடா எனக்கு தேவையில்ல நான் ரொம்ப டயர்டு“.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
பூவுக்கிட்டே ஒரு உம்மா வாங்கறதுக்குள்ளே பொம்மியின் தாவு தீர்ந்து விடும் போலிருக்கே
அடேய் பூவரசன்
சுந்தரி சொன்ன மாதிரி நீ என்னடா சரியான சாமியாரா இருக்கே
ஹா ஹா ஹா
தூங்குவது போல நடித்து ஒட்டுக் கேட்கும் பவித்ராவால் ஏதாவது பிரச்சனை வருமோ?
பரதனும்தான் ஒட்டுக் கேட்டான்
ஆனாலும் அவன் நல்லவன்
இதைப் பார்றா
சுந்தரி கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் தராத உம்மாவை ஒரு டெலிவரி பார்த்தவுடனே தர்றேங்கிறானே பூவரசன்
ஹா ஹா ஹா
 
Last edited:
Top