Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 16A)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-16 - A

பின் மண்டையில் ..பலமாக தாக்கியதால் .. .. மிக ஆழமாக வெட்டப்பட்டு உள்ளதால் .... ஸ்கெல் உடைந்து....மூளை நரம்புகள் .... பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஆபரேஷன் செய்து முடிந்தளவு....அதை சரி செய்து விட்டோம்.. ஆனாலும், மூளையின் நினைவுப் பகுதியில் .. நினைவுச் செல்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.. அதை சரி செய்ய சிறிது காலம் எடுக்கும் ".. என முழுவதையும் முடிக்க, முடியாமல் ... தயக்கமாக ..மாறனைப் பார்த்தார் .. மருத்துவர் ..

இது போல்....நிறைய... சந்தர்ப்பங்களைத் தாண்டி வந்தவனுக்கு அடுத்ததாக என்ன கூறுவார்.. என தெரிந்திருந்தும்.. மனம் பிசைய..... மேற்கொண்டு சொல்லுங்க.. என்பதைப் போல் ... மருத்துவரைப் பார்த்தான்.. மாறன் ..

"பேஷண்ட்...கோமா..ஸ்டேஜ்ஜுக்கு போக.... 100- சதவீதம் வாய்ப்பு உள்ளது... ட்ரிட்மெண்ட் போகட்டும், உடனே சரியாகலாம், 1 ...வருஷம்.,,,,
.2-வருஷம்.. ஏன்? சரி ஆகாமல்?... கூட போகலாம்.காட் (God) கிரேஸ்". . என்றவர் .. மாறனின் தோளை ஆறுதலாகத் தட்டி விட்டுச் சென்றார்..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரதி.. தன்னுயிராக.. நேசிப்பவனை கேவலம்.. சொத்திற்காக... தன் கண் முன்னே .. உயிரைப் பறிக்க... தன் தந்தையே முயன்றதில் .. குலை நடுங்க நின்றிருந்தவள் ... மருத்துவர் கூறிய கோமா.... சொல்லில் ..வேரற்ற மரம் போல் .. மயங்கி சரிந்து விழுந்தாள்.

எத்தகைய சூழ்நிலையிலும் ..எதிரியைத் தாக்கும் வண்ணம் ..தந்தைப் போல் .. அனைத்து தற்காப்புக் கலைகளையுமே.. கற்றவனை.. குயபுத்திக் கொண்ட
மருதவேல்.... தாக்கும் வண்ணம் ... அவ்வளவு .அஜாக்கிரதையாகவாக?.. இருந்தான்.,,, உடலில் எவ்வளவு அடிபட்டிருந்தாலும்.. தாக்கியிருப்பானோ?.. பாவி.. மடையன்.. என்னைக் காப்பாத்த தெரிஞ்ச உனக்கு.. உன்னை.. காப்பாத்திக் முடியாம.... அப்படி என்ன .. நினைப்பில் .. இருந்தா.. டா .. என... மருத்துவர் கூறியதைக் கேட்டு...கலங்கிக் கொண்டிருந்த... சத்யா.. தன்னருகே .. நின்றிருந்த ரதி... மயங்கி விழவும் .. அவளைத் தாக்கி .. அங்கேயே சேர்ப்பித்தான்..

இந்நிகழ்வு...நடந்து... ஒரு மாதம் ஆயிற்று.... இன்னுமே மீளாத் தூக்கத்தில் பாண்டியன் தூங்கிக் கொண்டிருக்க.. அன்று மயங்கி விழுந்த ரதி .. இரண்டு நாட்களுக்குப் பிறகு.. தன் உடல் நிலை தேற..தன்னவனின் .. முகத்தைப் பார்த்து.. தன்னை தேற்றிக் கொண்டவள்..

அவன் தன் பெயரில் எழுதி வைத்த ... " தெய்வா ஆட்டோமொபைல்ஸ் மேனு பேக் சரிங்.. கம்பெனி ..
தெய்வா... கன்ஸ்ட்ரக்ஷன் ...
தெய்வா... ஸ்கூல் அண்ட்
காலேஜ்ஜஸ் ..
தெய்வாட் டிரஸ்ட் ...
இயற்கை உயிர் வேளாண் பண்ணை ... போன்ற அனைத்தையுமே.. திறம்பட ...
நிர்வகித்து.... அவன் .... நிச்சயம் ... உணர்வுமீண்டு.. வருவான் ... அப்படி அவன் வந்ததும் ... அவனிடம் ..அவன் .. சொத்தை சேர்ப்பித்து விட்டு... நாம் விலகிவிட வேண்டும் ..

.. தன் தந்தை கொடுத்த இன்னல்களே... தன்னை பார்க்கும் சமயம் ... தன் தந்தையின் கொடுமை செயல்களே அவன் நினைவுக்கு வந்து வாட்டும்... அத்தகைய துன்பத்தை எந்த நிலையிலும் ... நானும், என் காதலும்.. அந்நிலையை... அவனுக்கு....கொடுக்க விரும்பவில்லை. இத்தகைய துன்பத்தினால தானோ?.... பெண் பித்தனாக மாறிவிட்டானோ?... அதற்கும் தாங்கள் தான் காரணம் ....என வருந்தியவள்.. ....

கடைசியாக, ....அவனின் நினைவுகளே.. போதும்.. மீதி வாழ்க்கையை... தான் வாழ..எனத் திடமாக முடிவெடுத்து ... தன் முடிவை ...செயல்படுத்த ஆரம்பித்திருந்தாள். இங்கே.சாதாரண லாஜிக்கை மறந்திருந்தாள் ரதி.. ( பின்னால் வரும்)

விதியோ.. திரும்ப, திரும்ப ..
தப்பாவே.. முடிவெடுக்குற ... ரதி.. என புலம்பிக் கொண்டே தன் தலையில் கை வைத்துக் கொண்டது....

நிர்மலமான... ஆண்மை ததும்பும் பாண்டியனின் முகத்தை பார்த்தவள்.. அவன் அறையில் ஓரத்தில்
போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து .அவனை அவ்வப்போது பார்த்தவாறே ....அவனின் கம்பெனி கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முன்...பாண்டியனைப் பார்த்து. . அவன் நெற்றியில் முத்தமிட்டு .... பின், அவளின் முன்.....வந்து நின்ற சத்யா... அவளை உக்கிரமாக முறைத்து விட்டு .. உன்கிட்ட .. தனியாப் பேசணும் எழுந்து.வெளியே வா.... என்றான்..

பாண்டியனைப் பார்த்துக் கொள்ளுமாறு வெளியே இருந்த நர்ஸ்ஸிடம் .. சொல்லிவிட்டு .. மருத்துவனை கீழே இருந்த பூங்காவிற்கு சென்றவள் .... அங்கு
மர நிழலில்...போட்டப்பட்டு இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து .." என்ன பேசணும்'' என்றிருந்தால் எதிரே நின்றிருந்த சத்யாவிடம் ...

அவளின் செயலில் பல்லைக் கடித்தவன்.. "உங்க கம்பெனிக்கு எப்படி.. எல்லாமுமா இருந்தேனோ .. அதேப்போல தான் பாண்டியன் கம்பெனிக்கும் நான் .. நீயே எல்லாத்தையுமே.. பார்த்துக்கிற .... என்னை எதுக்கும் விடுறதில்லை ... எதையும் என்கிட்ட கேட்கிறதில்லை .. . என்ன நினைச்சுட்டு இருக்குற உன் மனசில ".. என பொரிந்துத் தள்ளினான் சத்யா...

அது தான் "எனக்கு பயமே... அழகன் திரும்பி வரும் வரை .. என் பேரில், இருக்கும் சொத்தை... பாதுகாக்க வேண்டும் இல்ல... அரக்கனாக என் அப்பனையே ஏமாத்தி.. பொய் கையெழுத்து வாங்கி..எங்க சொத்தை ... பாண்டியனுக்கு கொடுத்தவன் தானே.. நீ... என்னையும் ஏமாத்தி கையெழுத்து.... வாங்கிட்டினா?
அதுக்குதான் .. உன்னை அவாய்டு பண்றேன்.... நானே... இனி அவனைப் பார்த்துப்பேன்.. இவ்வளவு நாளா... எங்களுக்கு உதவினதுக்கு .. தேங்க்ஸ் .. நீ போலாம்.. போ... என கூறி விட்டு .. எழுந்துச் செல்லப் போனவளின் .. கையைப் பற்றி..

"நான் யாரு?... உனக்கும்... எனக்கும் என்ன உறவு என்று உனக்கு தெரியுமாடா.." அவளின் சந்தேகபேச்சினால் விழைந்த வேதனையில் ... அவன் குரல் கரகரத்து ஒலித்தது....

சத்யாவின் கையை உதறி மீண்டும் அமர்ந்தவள்" அப்படி தான் .... அவன்.. அன்னிக்கு ( பாண்டியன் ) ஒரு கதை சொல்லி என் இதயத்தில் உன் அப்பன் ... கொலைக்காரன்னு .. பாரத்தை
ஏத்தி விட்டுட்டு.. என் உயிரை எடுத்துக்கிட்டு.. படுத்துக் கிடக்கான்...மீதி கொஞ்சமா.. என் உடலில் ஒட்டிட்டு .. மீதியிருக்குற...உயிரை எடுக்குற மாதிரி நீ என்ன சொல்லப்போற " .. கசந்தப் பார்வையை அவன் மீது வீசினாள்.

"தாமதமாக வழங்கப்படும் .. நீதி மட்டும் இல்லை.. மறைக்கப்படும் உண்மை கூட அநீதி... தான் என்றவன். அவளருகே அமர்ந்து... அன்னிக்கு .. நடந்ததை எதுவரை... உன்கிட்ட சொன்னான் பாண்டியன் .. என அவள் முகம் பார்க்க...

இம்முறை புலியோ..சிங்கமோ.. எது....வரும்னு தெரியலையே எனப் பயந்தவள்.. அன்று அவன் கூறியது வரை கூறி ... அதன் பின் எப்படி அடிபட்டது ... என்பது வரை ..கூறிவிட்டு .. நிறுத்தினாள்.

இங்ஙனம், சத்யாவிற்கு தெளிவாகப் புரிந்தது ..பாண்டியனின் .
. புறக்கவனம் .. அன்று...எப்படி கலைந்தது என்று .. அந்நிலையிலும், அவனின்... எண்ணத்தைப் பற்றி மெலியதாக சிரித்துக் கொண்டவன்...

பெருமூச்சை வெளியேற்றி விட்டு ... அன்றைய நாளின் மீதிக் கதையை கூற ஆரம்பித்தான்.

.."உனக்கு பேர் வைத்து . விழா முடிய இரவு நேரமாக .. அரண்மனைக்கு.. ஆள் வேண்டுமென.. அந்த இரவு நேரத்தில்... தெய்வாவையும், 5 வயது வீர்-ரையும் ( இவனுக்கு வீர் ) .. காரில் தனியே... காட்டுப் பகுதி வழியே அனுப்பி வைத்தார் .... மருதவேல் ..

ஓரிடத்தில் கார் நிற்கவும், டிரைவர் .. இறங்கி ஓடிவிட்டார். முன்னமே ...,
மருதவேல் .. "நான் சொல்லறதைக் கேட்கலானா.. உன்னை கொன்னுட்டு .. உன் பொண்டாட்டி, பிள்ளையை நான் வைச்சுக்குவேன்" என .. டிரைவரை...மிரட்ட....ஜமினின் மொத்த சொத்தையும் தன் வசம் வைத்திருப்பவரை .. எதிர்க்க முடியாமல் .. மருதவேல் சொன்னது போல் டிரைவர் .. காட்டில் நடு இரவில், காரை நிறுத்திவிட்டு .... ஓடி விட்டார்.

அச்சமயம், ....இருளில் மறைந்திருந்த நான்கு முரடர்கள் . காரிலிருந்த... தெய்வாவை.. வெளியே.. இழுத்துக் கீழே தள்ளி .. பின், அவரின் முடியைப் பற்றி ..காட்டிற்குள் அடித்து ..இழுத்துச் செல்ல... அவர் அருகே அமர்ந்து .. இவ்வளவு நேரம், ... தாயுடன் பேசியப்படியே வந்தபாண்டியன். தாயை ..யாரோ.. இழுத்துச் செல்ல .. கார்க் கதவை திறந்து .. அவர்களின் பின்னே.. ஓடியவன் ..தாயை கயவர்களிடமிருந்து .. பிரிக்க போராட ..

தங்கள் செயலுக்கு இடையூறாக இருக்கும்.சின்னச் சிறு பாலகனை .. ஒருவன் தூக்கி மரத்தின் மீது வீச... மரத்தில்.. முன் நெற்றிப்பட்டு... குருதி வழியே கீழே விழுந்தான் .. குழந்தை.. பின், தாயின் கதறலில் ..உடனே ..

குருதி வழிய... எழுந்து நின்றவன்... இருட்டில் ... கீழே அமர்ந்து, தரையைத் தடவி... கல்லை எடுத்து ... அன்னையை நோக்கி ஓடிச் சென்றவன். . அவரை ...இழுத்து செல்லுபவனின் ..முன்னே சென்று.. அவனின் கண்ணை குறிப்பார்த்து கல்லை... விட்டெறிய... அந்தக் கல், கயவனின் கண்ணை சரியாக தாக்கியதில் .அவன் .வலியால் துடித்து .... அவரின் ..முடியைவிட்டு விட்டு .. .. அங்கே, அமர்ந்துக் கொண்டான். அவன் தெய்வாவை விட்டதும்.. 3-வது நபர் அவரைப் பிடித்துக் கொள்ள .4-ம் நபர் பாண்டியனைப் பிடித்துக் கொண்டார்.மேலும், அவன் தாக்கா வண்ணம் .... ( 2-வது கயவன் அந்த இடத்திற்கு பந்தம் பிடித்துக் கொண்டே)..

"ஏண்டா.. வந்தோமா..
கொன்ேனாமான்னு இல்லாம.. என்னடா.. பெண் ஆசை ?... இவ அண்ணன்.. அதை தானே சொன்னான்.. என்றான் இரண்டாமவன்..

கொல்ல தான் காரைத் திறந்தேன் .. வெள்ளைத்தோளைப் பார்த்ததும்.. வெறி வந்துடுச்சி.. இது பத்தி தெரிஞ்சா ..அவ .. அண்ணன் .. என்ன?.. சண்டைக்கா வரப் போறான் .. என கூறி விட்டு .... அவன் ( 3-வது நபர் ).. 4 - காம் நபரின் பிடியில் இருந்த ..பாண்டியனைக் காட்டி ..முதலுல இந்த சனியனை குத்தி தூக்கி போடு.. ஆசையில...கல்லைப் போட்டுட்டு .. எனவும்....

4 - வது கயவன் .. மடியில் இருந்த கத்தியை எடுத்து... பாண்டியனின் வயிற்றில் குத்தி .. குழந்தையை தூக்கி எறிந்து விட்டு ..

அனைவரும் சேர்ந்து...... என முடிக்க முடியாமல.... வார்த்தைத் தேடி.. சத்யா..திணற....

அய்யோ.. அம்மா.. என்னால கேட்க கூட முடியலையே.. அத்தை.. எப்படி.. அந்தக் கொடுமையை தாங்கினிங்க.,,

..ம்ம்.. என தேம்பியவள்.. அடுத்ததாக ..அய்யோ.. சின்ன குழந்தை.. அவனை.... எனத் துண்டு துண்டாக .. பிதற்றியவளுக்கு .... ஓடிச் சென்று .. நீர் எடுத்து வந்து . அவளைத் . தன் தோளில் சாற்றிப் புகட்டினான் சத்யா...

குழந்தை.. பாவம்... அத்தை... கொடுமை.. என மேலும்.. பிதற்றியவளைப் பார்த்து ... அவளிடம் .. ....ஒன்னும் இல்லாடா .. அண்ணா நானிருக்கேன். எல்லாம்.. சாரியாப் போச்சு... எனத் தட்டிக் கொண்டே இருந்தான்.

நாச்சி.. இதைக் கேட்டதுக்கே... தைரியம் இல்லாமல் துடிக்கிறியே.. இதையல்லாம், கடந்து ..தெய்வா அத்தை.. பெண் .. சிங்கமாக .. எப்படி.. தலை நிமிர்ந்து நின்னாங்க.. தெரியுமா? அவங்க , பேர் .. வைச்ச .. உனக்கு.. கொஞ்சம் தைரியம் கூட இல்லை என்று ... அவளின் மனநிலையை மாற்ற...அவளின் தைரியத்தை தூண்டினான்.

அதில் ..அவள் வீரம் ., வெளிப்பட....
சிறிது .. சிறிதாக ... சமநிலை அடைந்தவள்.. குழந்தையை காப்பாத்திட்டீங்களா.. அத்தைக்கு எதுவும்.. ஆகலைதானே..

அடப்பாவமே.. அப்போ ..
காப்பாத்தவுந்தான்.... இப்ப இவ்வளவு பெரிசாக... வளர்ந்து .. இருக்கிறான். என யோசித்தவன்... "ம்ம்". .. எனத் தலை ஆட்டினான்.

யார் .. காப்பாத்தினாங்க.?.....


என்னோட ... அம்மாவும், மாமாவும்.. ...

ஓஹோ.... அவங்களுக்கு.. எப்படித் தெரியும்.. "அவர்களை காப்பாற்றியாச்சு" .. என சத்யா.. கூறியதும் .. மனம் முழுவதுமாக தெளிவாக ........." மேற்கொண்டு சொல்" என்பது .. போல் .. சத்யாவின் முகம் பார்த்தாள் ... ரதி..
 
Hi dears,, nxt epi pottutaen,,,,padijuttuuu,,, rendu varthaila vallthittu ponga sagoes,,,, pona epi ku like,,, comment potta natpukuuu ennodaaa nandrigal
 
Epi 15 எங்கே சிஸ்...நான் தான் கவனிக்காமல் விட்டேனா...
Thread la கூட இல்லையே...
 
Epi 15 எங்கே சிஸ்...நான் தான் கவனிக்காமல் விட்டேனா...
Thread la கூட இல்லையே...
Sis sry 13 nu two times pottutaen, epi_13(14 part) irukum
 
Top