தூது போ மேகமே
“வடிவம் மாறும்
மேகக்கூட்டமே
என் எண்ணம்
யாவும்
மன்னனிடத்தில்
உரைக்க
என் இதயவடிவம்
கொள்ளடி
என் இதயத்தில்
இருக்கும்
அவன் முகத்தை
எடுத்தியம்பிடவே
நீரோடை
அருகில்
அவனை அழைத்துச்செல்லடி
நிரம்பி வழியும்
நீரோடையில்
நிறைந்திருக்கும்
அவன் முகம்
நீக்கவில்லை
என் அகம் எனும்
ரகசியத்தை எடுத்துச்சொல்லடி
கன்னியிவளை கரம்பிடிக்க
அவனை
காலத்தோடு வரச்சொல்லடி”