வணக்கம் அன்பர்களே!
மீனாட்சி சுந்தரேஸ்வரரை ரசித்து வாசித்த தாங்கள் மதுர நங்கை சுந்தரராஜனையும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களின் ஆவலும் எதிர்பார்ப்பும் அடுத்தக் கதையில் நிறைய ஈஸ்வரன் மீனாட்சி காட்சிகளைத் தேட வைக்கும் என்று புரிகிறது. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடக் கூடாதே என்பதனால் இந்த முன்னுரையை அளிக்கிறேன்.
நனிமதுர நங்கை முற்றிலும் வேறு கதையாக இருக்கும்.
சுந்தரேஸ்வரனை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கியதும் ராஜன் பெற்றோர்கள் மீதும் இவன் மீதும் இருக்கும் கோபத்தினால் வெளிநாடு சென்றதாய் கூறியிருப்பேன். அந்த கால நேரத்தில் அவன் வெளிநாட்டில் இருந்தப்போது நடந்த நிகழ்வுகள் தான் ராஜனின் கதையாக வரப் போகிறது.
நனிமதுர நங்கை - நனி என்றால் மிக/ரொம்ப
மதுரம் - இனிமையான
நங்கை - பெண்
மிகவும் இனிமையான பெண் என்கின்ற பொருளில் வைக்கப்பட்டத் தலைப்பு இது!
இது ராஜனின் கதை என்று நான் கூறியிருந்தாலும், நங்கையின் கதையாக தான் இது பயணிக்கப் போகிறது. நங்கை என்னும் பெண் பணியில் சேர்ந்தது முதல் திருமணமாகும் வரை அவள் வாழ்வின் நிகழ்வுகளும் ஏமாற்றங்களும் அனுபவங்களும் சந்திக்கும் மனிதர்களும் எனப் பயணிக்கும் இக்கதையில் அனைத்திலும் அவளுடன் சுந்தரராஜன் இருப்பான்.
இக்கதையின் களமும் கருத்தும் கருப்பொருளும் பெரியது என்பதால் கதையும் பெரியது தான்.
சொக்கனின் மீனாள் போன்று விரைவில் சட்டென முடிந்து விடாது. இவர்கள் இருவரின் வாழ்வை அலசி ஆராய்ந்து பார்த்து விடலாம் வாருங்கள்!
ஈஸ்வரனும் மீனுவும் கடைசி சில அத்தியாயங்களில் தான் வருவார்கள்.
அதற்கு அடுத்த பாகமான அழகிய அன்னமே கதையில் அவர்களுக்கான பிரத்யேக காட்சிகள் இருக்கும்.
ஞாயிறு முதல் வாசிக்கலாம் ராஜனின் நங்கையை!
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
மீனாட்சி சுந்தரேஸ்வரரை ரசித்து வாசித்த தாங்கள் மதுர நங்கை சுந்தரராஜனையும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களின் ஆவலும் எதிர்பார்ப்பும் அடுத்தக் கதையில் நிறைய ஈஸ்வரன் மீனாட்சி காட்சிகளைத் தேட வைக்கும் என்று புரிகிறது. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடக் கூடாதே என்பதனால் இந்த முன்னுரையை அளிக்கிறேன்.
நனிமதுர நங்கை முற்றிலும் வேறு கதையாக இருக்கும்.
சுந்தரேஸ்வரனை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கியதும் ராஜன் பெற்றோர்கள் மீதும் இவன் மீதும் இருக்கும் கோபத்தினால் வெளிநாடு சென்றதாய் கூறியிருப்பேன். அந்த கால நேரத்தில் அவன் வெளிநாட்டில் இருந்தப்போது நடந்த நிகழ்வுகள் தான் ராஜனின் கதையாக வரப் போகிறது.
நனிமதுர நங்கை - நனி என்றால் மிக/ரொம்ப
மதுரம் - இனிமையான
நங்கை - பெண்
மிகவும் இனிமையான பெண் என்கின்ற பொருளில் வைக்கப்பட்டத் தலைப்பு இது!
இது ராஜனின் கதை என்று நான் கூறியிருந்தாலும், நங்கையின் கதையாக தான் இது பயணிக்கப் போகிறது. நங்கை என்னும் பெண் பணியில் சேர்ந்தது முதல் திருமணமாகும் வரை அவள் வாழ்வின் நிகழ்வுகளும் ஏமாற்றங்களும் அனுபவங்களும் சந்திக்கும் மனிதர்களும் எனப் பயணிக்கும் இக்கதையில் அனைத்திலும் அவளுடன் சுந்தரராஜன் இருப்பான்.
இக்கதையின் களமும் கருத்தும் கருப்பொருளும் பெரியது என்பதால் கதையும் பெரியது தான்.
சொக்கனின் மீனாள் போன்று விரைவில் சட்டென முடிந்து விடாது. இவர்கள் இருவரின் வாழ்வை அலசி ஆராய்ந்து பார்த்து விடலாம் வாருங்கள்!
ஈஸ்வரனும் மீனுவும் கடைசி சில அத்தியாயங்களில் தான் வருவார்கள்.
அதற்கு அடுத்த பாகமான அழகிய அன்னமே கதையில் அவர்களுக்கான பிரத்யேக காட்சிகள் இருக்கும்.
ஞாயிறு முதல் வாசிக்கலாம் ராஜனின் நங்கையை!
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்