நீ தானா நீ தானா சொன்னது நீ தானா??? நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை... இன்னிக்கி லீவ் ஆச்சே நீ!!!!... நிழலாய் இருந்து, நிழலாய் இருந்தவளை இழந்து நிஜத்தில் துடித்தவனின் வெற்றியை மிக அழகாய் வடித்து உன் மேல் மேலும் மேலும் மையல் கொள்ள வைத்தாய் பெண்ணே... வாழ்க வளமுடன்.... உன் டென்ஷன் எல்லாம் ஓடி போகட்டும்... கண் ஜாடை பெண் , அவளின் தேனரசன் அக அழகு அருமையோ அருமைஹாய் அன்பூக்களே
ரிசல்ட் வந்த அன்னைக்கே வந்திருக்கனும். ஆனா சிலபல விஷயங்களால டென்ஷன். வரமுடியாம போயிருச்சு. தாமதத்திற்கு எனது வருத்தங்கள். ? ? ?
நிழலாய் மயங்கும் மையல் கதைக்கு உங்கள் ஆதரவிற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள் பல. ???
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. திரும்பவும் பெயர் சொல்லாமல் ஒரு கதை, அதுவும் சின்னதா எழுதியிருக்கேன். ???
அதுக்கு உங்களுடைய ஆதரவும், கருத்துக்களும் எனக்கு ரொம்பவே உற்சாகமா இருந்தது. ???
இந்த கதை அழுத்தமான கதைக்களம். எனக்கும் கஷ்டமா இருந்துச்சு. நிறைய இடங்கள்ல அழுதுட்டே டைப் பண்ணியிருந்தேன்.???
இப்டி அழ வச்சிட்டீங்க நீங்கன்னு நிறைய திட்டுக்கள் வாங்கிட்டேன். ஆனாலும் சந்தோஷமா இருக்கு.???
கதைக்கான விமர்சனங்களும், கருத்துக்களும் வந்துகொண்டே தான் இருக்கு. அதற்கு எண்ணிலடங்கா நன்றிகள் அன்பூக்களே ???
இந்த கதையில் சட்ட சிக்கல்கள், அதை பற்றிய விவரங்களையும், விளக்கங்களையும் சொல்லி தெளிவுபடுத்தி உதவிய சகோதரி வழக்கறிஞர் சரண்யா லக்ஷ்மணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ☺☺☺
நாளைல இருந்து இன்னொரு புது கதை காலை 11 மணிக்கு வர ஆரம்பிக்கும் அன்பூக்களே. ???
தலைப்பு - பௌர்ணமி அலைகள் சதிராட???
வாரம் நான்கு பதிவுகள்ன்னு ஒருநாள் விட்டு ஒருநாள் பதிவுகள் வரும். அதன் பின் வசதி, நேரம் பார்த்து தர முயற்சி பன்றேன்.???
நாளை காலை 11 மணிக்கு சந்திப்போம் அன்பூக்களே???
இணைந்திருங்கள் என்னுடன்?????