நான் கண்டிப்பாக மிகவும் கண்கூடாக உங்களில் ஒன்று தான்
ஆனால் நிச்சயமாக நான் வேறு ஒரு ஊரிலுள்ள பசுங்கன்று
உடலளவில் ஓரளவு மற்றவர்கள் போல் தான் தெரிகிறேன்
மனதளவில் கிட்டத்தட்ட மற்றவர்கள் போல் புலப்படுகிறேன்
ஆனால் என் உள்ளே நிகழப்பவை எல்லாம் மிக அலாதியானவை
என் மனம் உங்கள் மனத்தினின்று முழுவதும் வேறுபட்ட ஒன்று
கோடான கோடியில் ஒன்று என்றாலும் நான் ஒரு தனி மனிதன்!
மூச்சு , உண்ணுவது, உரைப்பது இவை ஒன்று போல் இருக்கிறது
ஆனால் எப்படி நாம் மூச்சு விடுகிறோம், உண்கிறோம், பேசுகிறோம்
இதில் ஒவ்வொருவருக்கும் இடையே பல பெரும் வித்தியாசங்கள்!
ஒரு மனிதரையோ காட்சியையோ பொருளையோ காணுகையில்
நீங்களும் நானும் அதை அணுகுவதும் நோக்கும் முறையும் தனி!
நீங்கள் கடலின் அலைகளை கண்டு ரசிக்கயிலே நான் கடலின்
மூழ்கடிக்கும் செய்கைகளை நினைத்து வேதனை கொள்கிறேன்!
நீங்கள் ஒரு தொலை காட்சி பெட்டியை கண்டு உற்சாகம் கொள்வீர்
அதை, என் எண்ணம் நேரத்தை கெடுக்கும் பகைவனாக கருதுகிறேன்!
நீங்கள் ஒரு நடிகரை அவர் தலையில் கிரீடம் வைத்து புகழ்கையில்
நான் அவரை என் மனதில் ஒரு சமுதாய பிரச்சினையாக காண்கிறேன்!
நீங்கள் ஒரு சில கலைஞர்களை மட்டும் எப்போதும் தூக்கி விட்டால்
நான் மெலிந்து போகும் மற்ற கலைஞர்களுக்காக மனம் வருந்துகிறேன்!
நீங்கள் வாட்சப்பில் மற்றவர் அனுப்புவதை மற்றவர்களிடம் பகிர்ந்தால்
நான் என்னுடைய எண்ணங்களை மட்டும் பகிர்வதை விரும்புகிறேன்!
ஒருவரிடம் பணம் திறமை இருந்தால் நீங்கள் அவரை மதிக்கலாம்
அவரிடம் தரும் குணம் இருந்தால்தான் நான் அவரை விரும்புவேன்!
இதை எல்லாம் போட்டு குழப்பி கொள்ளாதீங்க, ஜாலியா இருங்க !
ஏனெனில் நான் இருக்கிறேனே இதுபோல குழம்பிக்கொண்டிருக்க!
Joyram
ஆனால் நிச்சயமாக நான் வேறு ஒரு ஊரிலுள்ள பசுங்கன்று
உடலளவில் ஓரளவு மற்றவர்கள் போல் தான் தெரிகிறேன்
மனதளவில் கிட்டத்தட்ட மற்றவர்கள் போல் புலப்படுகிறேன்
ஆனால் என் உள்ளே நிகழப்பவை எல்லாம் மிக அலாதியானவை
என் மனம் உங்கள் மனத்தினின்று முழுவதும் வேறுபட்ட ஒன்று
கோடான கோடியில் ஒன்று என்றாலும் நான் ஒரு தனி மனிதன்!
மூச்சு , உண்ணுவது, உரைப்பது இவை ஒன்று போல் இருக்கிறது
ஆனால் எப்படி நாம் மூச்சு விடுகிறோம், உண்கிறோம், பேசுகிறோம்
இதில் ஒவ்வொருவருக்கும் இடையே பல பெரும் வித்தியாசங்கள்!
ஒரு மனிதரையோ காட்சியையோ பொருளையோ காணுகையில்
நீங்களும் நானும் அதை அணுகுவதும் நோக்கும் முறையும் தனி!
நீங்கள் கடலின் அலைகளை கண்டு ரசிக்கயிலே நான் கடலின்
மூழ்கடிக்கும் செய்கைகளை நினைத்து வேதனை கொள்கிறேன்!
நீங்கள் ஒரு தொலை காட்சி பெட்டியை கண்டு உற்சாகம் கொள்வீர்
அதை, என் எண்ணம் நேரத்தை கெடுக்கும் பகைவனாக கருதுகிறேன்!
நீங்கள் ஒரு நடிகரை அவர் தலையில் கிரீடம் வைத்து புகழ்கையில்
நான் அவரை என் மனதில் ஒரு சமுதாய பிரச்சினையாக காண்கிறேன்!
நீங்கள் ஒரு சில கலைஞர்களை மட்டும் எப்போதும் தூக்கி விட்டால்
நான் மெலிந்து போகும் மற்ற கலைஞர்களுக்காக மனம் வருந்துகிறேன்!
நீங்கள் வாட்சப்பில் மற்றவர் அனுப்புவதை மற்றவர்களிடம் பகிர்ந்தால்
நான் என்னுடைய எண்ணங்களை மட்டும் பகிர்வதை விரும்புகிறேன்!
ஒருவரிடம் பணம் திறமை இருந்தால் நீங்கள் அவரை மதிக்கலாம்
அவரிடம் தரும் குணம் இருந்தால்தான் நான் அவரை விரும்புவேன்!
இதை எல்லாம் போட்டு குழப்பி கொள்ளாதீங்க, ஜாலியா இருங்க !
ஏனெனில் நான் இருக்கிறேனே இதுபோல குழம்பிக்கொண்டிருக்க!
Joyram